Showing posts with label ஆக்சன் சினிமா. Show all posts
Showing posts with label ஆக்சன் சினிமா. Show all posts

Wednesday, February 04, 2015

என்னை அறிந்தால் (2015) - எமோஷனல் த்ரில்லர்

 தன் காதல் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் படலத்தில் அஜித் எடுக்கும் பல அவதாரமே என்னை அறிந்தால்.  அஜித்தின் ரசிகர்களை நன்கு அறிந்து, அவர்களுக்கு அஜித்தை எப்படி வழங்க வேண்டுமோ அப்படி வழங்கி ஹாட்ரிக் வெற்றியை அஜித்துக்கு வழங்கி இருக்கிறார் கௌதம்மேனன். அஜித்தின் கேரியரில் என்னை அறிந்தால் மிக பெரிய திருப்புமுனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிங் ஆப் ஓபனிங் என்கிற பட்டதை மீண்டும் தக்க வைத்து உள்ளார் ஆசை நாயகன்.


 சத்யதேவ் (அஜித்) நேர்மையான் காவல் துறை அதிகாரி. அண்டர்கவரில் இருக்கிறார். இந்த பணியில் இருக்கும் போது விக்டர் (அருண் விஜய்) நண்பன் ஆகிறான். சந்தரபவசத்தில் சத்யதேவ் எடுக்கும் சில முயற்சிகளால் விக்டர் காயம் அடைகிறான். வழக்கமான கெளதம் படத்தில் வருவது போல், கடமை தவறாத காப் காதலில் விழுகிறார். வே.விளை போல் டைவர்ஸ் ஆகி பெண் குழந்தையுடன் வசிக்கும் ஹேமானிக்கா (திரிஷா) மீது காதல் கொள்கிறார். திருமணத்தின் போது ஹேமா கொல்ல பட, இந்த கொலைக்கான காரணத்தை தேவ் தேடி போகும் போது பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது வருகிறது. இறுதியில் ஹேமாவின் மரணத்திருக்கு தேவ் பழி வாங்கினாரா இல்லையா என்பதை விறுவிறுப்பாய் சொல்லி இருக்கிறார் கௌதம்மேனன்.



அஜித்: வெள்ளை தலைமுடியுடன் கோட் அணிந்து கெக்கே பிக்கே என்று ஆடிய வீரம் படத்தையே ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்தார்கள். இதில் இளமையான ஸ்டைலிஷான அஜீத். தாடியுடன் கரடுமுரடான கெட்டப், தாடி இல்லாமல் கறுத்த தலைமுடி மீசையுடன் ஒரு அமுல்பேபி லுக், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் மீசையில்லாமல் ஒரு அதிரடி தோற்றம். ரசிகர்கள் வலிக்க வலிக்க விசிலடித்தே ஓயப்போகிறார்கள். ஸ்டைல் மட்டும் இல்லாமல் நல்ல தரமான நடிப்பையும் வழங்கி உள்ளார். படத்தின் பாதி பாரத்தை ஒத்தை ஆளாய் தாங்கி பிடித்து இருக்கிறார். கெளதம் போன்ற நல்ல தரமான டைரக்டருடன் அஜித் இணைவது அவரது ரசிகர்களுக்கு மிகவும் நல்லது. காக்க காக்க படத்தில் அஜித் தான் நடித்து இருக்க வேண்டியது, அதில் மிஸ் பண்ணியதை இப்பொழுது மொத்தமாய் பிடித்து இருக்கிறார்.

அருண் விஜய்: வில்லன் கதாபாத்திரம். பொதுவாக பிரபலமாக இருக்கும் வில்லன் நடிகரைத்தான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள். இதில், ஹீரோவாக நடித்துவரும் அருண் விஜய்யை வில்லனாக்கியிருக்கிறார் கௌதம். இந்தத் தேர்வே, படத்தில் வருவது வழக்கமான வில்லன் கதாபாத்திரம் இல்லை என்பதை உணர்த்துகிறது. அதற்கேற்ப சிக்ஸ்பேக் வைத்து நாயகனின் நண்பனாக வருகிறார் அருண் விஜய். அவர் ஏன், எப்படி எதிரியாகிறார்? இந்தக் கேள்விகள் உங்களை நிச்சயம் சீட் நுனியில் உட்கார வைக்கும்.



திரிஷா: கெளதமின் படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் மிகவும் அழகாக செதுக்க பட்டு இருக்கும். ஹேமானிக்காவும் அதருக்கு விதிவிலக்கு அல்ல. பெண்களை எப்படி காட்சி படுத்த வேண்டும், என்பதில் கெளதம் மகா திறமைசாலி. சமீரா ரெட்டியை கூட மிக அழகாய் காட்டிய கெட்டிக்காரர் கெளதம், திரிஷாவை நன்றாக பயன்படுத்தி உள்ளார். அனுஷ்காவிற்க்கு பெரிய ரோல் இல்லை.

கெளதம்: அஜித்தின் கதாபாத்திரத்தை அறிந்து கொண்டு செம்மையாய் செதுக்கி இருக்கிறார் கௌதம். தனக்கென்று தனி ஸ்டைல் உடையவர். ஸ்டைலிஷான மேக்கிங் அவருக்கு கைவந்த கலை. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்கள் அந்த நடிகர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இல்லாமல் கௌதமின் கிரியேடிவிட்டியுடன் இருந்ததே அதற்கு சான்று. என்னை அறிந்தால் படத்திலும் அந்த முத்திரைதான் மற்ற அஜீத் படங்களிலிருந்து அதனை வேறுபடுத்தி காட்டி இருக்கிறது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா படத்தின் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது என்பதில் கௌதமுக்கு உதவியிருக்கிறார்.



கௌதம், ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணி. மின்னலேயில் அறிமுகமான இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இசை பங்களிப்பை ஆற்றியுள்ளது. அவர்கள் பிரிந்துபோனது துரதிர்ஷ்டம். இனி ஒருபோதும் இணைய மாட்டார்கள் என்று நினைத்தவர்களை என்னை அறிந்தால் ஒன்றிணைத்துள்ளது. நான்கு டியூன்களை வைத்து இன்னும் எத்தனை வருஷங்கள் தான் ஒப்பு எத்துவாரோ. ஆனால் இந்த முறை அதிசியமாய் பின்னணி இசை நன்றாக பொருந்தி இருக்கிறது.

என்னை அறிந்தால் - எமோஷனல் த்ரில்லர்

My Rating : 8.5


Friday, January 10, 2014

வீரம் (2014) - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ் !!

ஜில்லா முடித்த கையோடு வீரம் ஹாலில் நுழைந்தோம். ஜில்லா ஹேங்ஓவரில் இருந்து வெளி வந்து வீரத்தில் நுழைய சிறது நேரம் பிடித்தது என்னவோ உண்மை தான். ஆனால் லா லா லா இயக்குனர் விக்ரமன், மாற்றும் அக்ஷன் இயக்குனர் தரணி படத்தை ஒரே மூச்சில் பார்த்த அனுபவத்தை வழங்கியது வீரம். சாதாரன கதையை, சாரி கதையே இல்லாமல் கூட படத்தை பக்கா திரைக்கதை மூலம் சுவாரிசியமாய் குடுக்க முடியும் என்று நிருபித்து இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.


கல்யாணமே வேண்டாம் என்று தன் தம்பிகளுடன் வாழும் விநாயகம் காதலில் விழுந்து அதில் ஜெயிப்பது தான் படத்தின் ஒன் லைனர். விநாயகம் (அஜித்) ஒட்டன்சத்திரம் மார்க்கட்டில் தன் நான்கு தம்பிகளுடன் வியாபாரம் செய்து வருகிறார். கல்யாணமே வேண்டாம் என்று வைராக்கியமாய் வாழ்ந்து வருகிறார். கல்யாணம் ஆகி பெண் ஒருத்தி வீடிற்குள் வந்தால் தம்பிகள் ஒற்றுமை குலைந்துவிடும் என்று நம்புகிறார். அதனால் தானும் கல்யாணம் பண்ண கூடாது, தன் தம்பிகளும் கல்யாணம் பண்ண கூடாது என்கிற எண்ணத்தில் உறுதியாய் இருக்கிறார். ஆனால் விநாயகத்தின் இரண்டு தம்பிகள் காதலில் விழ, அவர்கள் எப்படியாவது  விநாயகத்தின் மனதில் காதலை விதைத்து விட முயற்சி மேற்கொள்ளகிறார்கள். அதன் படி கோப்பெரும்தேவியை (தமன்னா) விநாயகத்துடன் முடிச்சு போட ப்ளான் செய்கிறார்கள்.

இவர்கள் காதல் சந்திக்கும் பிரச்சினை என்ன, அந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபட்டு ஒன்று சேர்ந்தார்கள் என்பதை செண்டிமெண்ட் மற்றும் அக்ஷன் காட்சிகளை சரியான விகிதத்தில் கலந்து கட்டி அடித்து உள்ளார் இயக்குனர். சால்ட் பெப்பர் லுக்கில் வெள்ளை வேஷ்டி சட்டையில் தன் நடையை (எடையை அல்ல) குறைத்து அசத்தி உள்ளார் அஜித். அக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் அளவுக்கு கோபத்தை காமித்து உள்ளார். ரிஸ்க் எடுத்து ட்ரைன் சண்டை காட்சியில் உயிரை துச்சமென மதித்து நடித்து உள்ளார். நடன புயல் பாக்கியராஜ், அளவுக்கு வர வில்லை என்றாலும், தன்னாலும் ஈடு குடுத்து டான்ஸ் ஆட முடியும் என்று நிருபித்து உள்ளார். முந்திய அஜித் படங்களில் டுயட் பாடல்கள் இல்லாமல் இருந்து பெரிய ஆறுதலாக இருந்தது. இதில் அஜித் ஆடும் நடனங்களில் இருந்து யாரும் தப்ப முடியாது. 


படத்தை ஒற்றை தூண் போல் தாங்குவதும் அஜித் தான். தமன்னாவுக்கு மாஸ் படங்களில் வரும் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் வெயிடான் ரோல். இவரை சுற்றி தான் மையின் கதை (!?) பின்ன பட்டு இருக்கும். இணையத்தில் அஜித் - தமன்னா ஸ்டில்ஸ் போட்டு அபியும் நானும் - 2 என்று  கலாய்த்து இருந்தார்கள். அந்த அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் அஜித் - தமன்னா ஜோடி கொஞ்சம் உறுத்தவே செய்கிறது. 

படத்தின் மிக பெரிய பலம் முதல் பாதி சந்தானம் மற்றும் இரண்டாம் பாதி ராமையா தான். சந்தானம் மற்றும் அஜித்தின் தம்பிகள் பண்ணும் அளப்பறைக்கு தியேட்டரே அதிருகிறது.  வெகு நாட்கள்கழித்து சிரித்து மகிழ்ந்தது இதில் வரும் காமெடி எபிசோடுக்கு தான். இரண்டாம் பாதி லா லா லா செண்டிமெண்ட்க்கு நாசர் குடும்பம். இவர்கள் பண்ணும் செண்டிமெண்ட் டிராமா எரிச்சலை கூட்ட வில்ல என்பது பெரிய ஆறுதல். அஜித் எதன்னை பேரை வெட்டினார் என்பதை எண்ணுவது சிரமம். ஆனால் மருந்துக்கு கூட போலீஸ் வர வில்லை. 


இரண்டு வில்லன்கள். இருவருமே நன்றாக செய்து உள்ளார்கள். ஆனால் தெலுங்கு வாடை ஜாஸ்தி. தேவி ஸ்ரீ பிரசாத்தை இனிமேல் பிண்ணனி இசையமைக்க மட்டும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். பாடல்கள் எதுவுமே மனதில் தங்க வில்லை. பிண்ணனி இசை தான் டெம்போவை குறைக்காமல் கதையை நகர்த்துகிறது. டூயட் பாடல்களை முன்று நிமிடங்களுக்கும் குறைவாக வைத்ததும் பெரிய ஆறுதல். அஜித்குமார் படம் எல்லாம் குடும்பத்தோட பார்த்து எத்தனை காலம் என்று, பெருமூச்சு விடுபவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். எண்பதுகளில் வந்த முரட்டுகாளை படம் போல் ரொம்ப சாதாரண கதையில் அக்ஷன், செண்டிமெண்ட், காமெடி ரொமான்ஸ் என்று எல்லா வஸ்துகளையும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி ஜெயித்து இருக்கிறார் இயக்குனர்.

வீரம்  - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ்.

My Rating: 7.8/10.


Sunday, December 22, 2013

Dhoom 3 (2013) - ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட் !!

இந்த வருடத்தில் இறுதியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான தூம் -3 எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா இல்லையா என்பதை பார்போம்.  ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு என்று ஒரு பார்முலா உண்டு. முதல் பத்து நிமிட சாகச காட்சி, படத்தின் பெயர் போடும் போது பிரபல பாப் பாடகியின் பாடல், ஜேம்ஸ்பாண்ட் M மை சந்தித்து வில்லனை பற்றி அறிந்து கொள்வார், பிறகு பாண்ட் வில்லனை தேடி அவனது இடத்துக்கு செல்வார், முதல் முயற்சியில் தோல்வி, பிறகு இரண்டாம் முயற்சியில் வில்லனை விழ்த்தி வெற்றி பெறுவார். இது போன்ற பிக்ஸ்டு டெம்ப்ளேட் தான் அணைத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் காண கிடைக்கும். 

இதே போல் தான் தூம் சீரீஸ்க்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. அது திருடன் - போலிஸ் விளையாட்டு. முதலில் திருடன் ஒரு கொள்ளையை வெற்றிகரமாக நடத்தி விடுவான். பிறகு இரண்டாம் கொள்ளை, அதில் போலீஸ் திருடனை பிடிப்பது போல் அருகில் வரும், ஆனால் திருடன் தப்பித்து விடுவான். கடைசியாக முன்றாவது கொள்ளை. அதில் போலீஸ் திருடனை பிடித்து விடும். இடையில் மானே தேனே போல் திருடனுக்கு அழகிய காதலி என்ற கதைக்கு திரைக்கதை எழுதினால் தூம் ரெடி.


இதில் போலீஸ் கேரக்டருக்கு அபிஷேக் பச்சன் என்று பிக்ஸ் செய்து கொண்டு, திருடன் கேரக்டருக்கு ஹீரோக்களை மாற்றி கொண்டே இருப்பார்கள். தூம் -1 திருடன் கேரக்டர் செய்தது ஜான் ஆபிரகாம், தூம் -2 க்கு ரித்திக் ரோஷன். இந்த முறை திருடனுக்கு அமீர்கான் என்ற அறிவுப்பு வந்தவுடனே படத்தை ரொம்பவே எதிர்பார்த்து விட்டேன். ஆனால் பலவீனமான் திரைக்கதையால், ஆபரேஷன் (வசூல்) சக்சஸ், பேஷன்ட் (படம்) கவலைக்கிடம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. அமீர்கான் தூம் ப்ரண்ட்க்காக மட்டுமே நடிக்க ஒத்து கொண்டு உள்ளார் என்று நினைக்கிறன். முழு கதையை கேட்டு இருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறன்.

சிகாகோவில் சர்கஸ் கம்பெனி நடத்தி வருபவர் ஜாக்கி ஷெராப். அவரது மகன் தான் ஆமிர்கான். வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோ மூலமாக கடன் வாங்கி சர்கஸ நடத்தி வருகிறார். வாங்கிய கடனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். கடைசியாக தன்னிடம் உள்ள ஒரு மேஜிக் ஆக்ட்டை வங்கி ஆட்களுக்கு செய்து காட்டுகிறார். அதில் திருப்தி ஏற்பட்டால் வங்கி சர்கஸ் நடத்த தொடர்ந்து இடமும் பணமும் குடுக்கும். ஆனால் அந்த மேஜிக் ஆக்ட் வங்கி ஆட்களை கவரவில்லை. கடன் நிறுத்தப்படுகிறது. விரக்தியில் தன் மகன் முன்னாலே ஜாக்கி தற்கொலை செய்து கொள்கிறார். 


ஆமிர்கான் வளர்ந்துவுடன் வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோவை பழி வாங்க புறபடுகிறார். வங்கி கிளைகள் கொள்ளை அடிக்கிறார். முதல் கொள்ளை வெற்றி. இரண்டாம் கொள்ளையில், அபிஷேக் என்ட்ரி. இறுதி கொள்ளை என்னவானது என்பதை வெண்திரையில் கண்டு கொள்ளுங்கள். படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த மேஜிக் ஆக்ட்டை பார்த்தவுடனே அதன் ப்ரெஸ்டிஜ் எபெக்ட் தெரிந்து விடுகிறது. அதன் பிறகு வரும் இடைவேளை ட்விஸ்ட் பெரிய ஆச்சிரயத்தை குடுக்கவில்லை. வங்கியை கொள்ளை அடித்து ஆமிர்கான் தப்பிக்கும் காட்சியில் கிலோ கணக்கில் பூ கடையை காதில் சுற்றுகிறார்கள். வெறுமென சேசிங் காட்சிகள் மட்டுமே படம் முழுக்க வருகிறது. புதிசாலிதனமான காட்சிகள் மிஸிங், ஓசோன் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் படம் முழுக்க பரவி கிடைக்கிறது. 

படத்தில் கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது ஆமிர்கான் மட்டுமே. மனிதர் பின்னி உள்ளார். வில்லத்தனம் அவருக்கு பக்காவாய் பொருந்துகிறது. குறை சொல்ல முடியாத நடிப்பு. அபிஷேக் பச்சன் வழக்கம் போல் தன் போலீஸ் பணியை செய்து விட்டு போகிறார். அலட்டல் இல்லாத நடிப்பு. பிரேம்ஜியை  எப்படி நாம் எல்லா வெங்கட் படங்களிலும் சகித்து கொள்கிறோமோ, அதே போல் தூம் படங்களில் நாம் உதய் சோப்ரா என்கிற கோமாளியை நாம் சகித்து கொள்ள தான் வேண்டும். இந்த முறை அந்த கோமாளியின் கடி ரொம்பவே ஜாஸ்தி. ஸ்கின் ஷோவுக்கும் லிப் கிஸ்க்கும் கத்ரீனா கைப், அவ்வளவு தான்.


ஜேம்ஸ்பாண்ட் தீம் மியூசிக் போல், தூம் தீம் மியூசிக் ஒன்று உள்ளது. எதன்னை வருடம் கேட்டாலும் அலுக்காது. தீம்மை கொஞ்சம் மெருகேற்றி உள்ளார்கள். ஆனால் பாடல்கள் சுமார், பின்னணி இசையும் ஓகே ரகம் தான். ஒளிப்பதிவு ரொம்பவே ஸ்லோவாக இருக்கிறது. ஸ்லோ மோஷன் காட்சிகளில் குட்டி துக்கம் போட்டு எழுந்து விடலாம். ஹிந்தி ஆடியன்ஸ் எந்த பெரிய ஹீரோ படம் வந்தாலும் விழுந்து எழுந்து பார்ப்பார்கள். இந்த படத்தையும் கண்டிப்பாய் பார்ப்பார்கள். சமிபத்தில் மெகா மெகா ஹிட் என்று சொல்ல படுகிற ஹிந்தி படங்களில் தரத்தை வைத்து பார்க்கும் போது, தூம் மெகா மெகா மெகா ஹிட் ஆகும் என்று நான் நினைக்கிறன். ஆந்திரா மக்களுக்கு இருக்கும் குறைந்த பச்ச லாஜிக் சென்ஸ் கூட ஹிந்தி ஆடியன்ஸுக்கு கிடையாது என்பது பல முறை நிருபணம் ஆகி உள்ளது. இந்த படம் வெற்றி அடைந்தால், அது மீண்டும் உறுதி படுத்த படும்.

Dhoom-3 ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட்!!
My Rating: 6.4/10.

சமிபத்தில் எழுதியது: பிரியாணி (2013) 


Tuesday, December 17, 2013

இவன் வேற மாதிரி (2013) - ஒன்னும் புதுசா இல்ல.

கெட்ட அரசியல்வாதியை பழி வாங்க புறப்படும் சராசரி காமன்மேன் சந்திக்கும் பிரச்சனைகள் தான் "இவன் வேற மாதிரி". கெடுதல் செய்யும் அரசியல்வாதியை கடத்தி கொண்டு போய் அவர்களுக்கு பாடம் புகட்டுவது தமிழ் சினிமாவிற்க்கு பழைய கள் என்றாலும், அதையே புதிய பாட்டிலில் அடைத்து தர முயற்சி செய்து உள்ளார் இயக்குனர் எம் சரவணன். சிட்டிசன் படத்தில் அஜித் அத்திப்பட்டிகாகவும், சமுராய் படத்தில் விக்ரம் தன் காதலி கவிதாவிற்காக செய்த கடத்தல் பணியை போன்றே, விக்ரம் பிரபு சட்ட கல்லூரியில் குழப்பம் விளைவித்த சட்ட அமைச்சரின் தம்பியை கடத்தி நீதியை நிலைநாட்டுகிறார்.


தமிழ் நாட்டிற்கு பழக்கமான சட்ட கல்லூரி கலவரத்துடன் படம் ஆரம்பிகிறது. கலவரத்தை தூண்டி விட்டது சட்ட அமைச்சர். போலீஸ் வேடிக்கை பார்க்க நடந்த கலவரத்தில் 3 மாணவர்கள் கொல்ல படுகிறார்கள். அதை செய்தியில் பார்த்த குணசேகரன் (விக்ரம் பிரபு) ஆத்திரம் தாங்காமல் அமைச்சரை பழி வாங்க புறப்படுகிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்து வழி, 15 நாள் பரோலில் வந்த அமைச்சரின் தம்பியை (ஈஸ்வரன்) கடத்தி கொண்டு போய் அமைச்சரை சிக்கலில் மாட்டி விடுவது தான். குணசேகரன் எதிர்பார்த்தது போலவே அமைச்சரின் பதவி பறி போகிறது. பிறகு ஈஸ்வரனை ரீலீஸ் செய்கிறார். தன் அண்ணனின் பதவியை பறித்த விக்ரம் பிரபுவை தேடி கண்டுபிடித்து பழி வாங்க புறபடுகிறார், ஈஸ்வரன் விக்ரம் பிரபுவை கண்டுபிடித்து பழி வாங்கினாரா என்பது தான் மீதி கதை.

எம் சரவணனின் "எங்கேயும் எப்போதும்" எனக்கு மிகவும் பிடித்த படம். இரண்டு ட்ராக்கில் செல்லும் சாதாரண காதல் கதையை செம த்ரில்லர் போல் சொல்லி இருப்பார். பார்வையாளர்களை இறுதி காட்சியில் சீட்டின் நுனியில் கொண்டு வந்து விடுவார். ஆனால் பக்கா த்ரில்லர் ப்ளாட்டில் கோட்டை விட்டு விட்டார் என்றே நான் சொல்வேன். "தடையற தற்க்க" போல் பக்கா அக்ஷன் த்ரில்லர் மாதிரி வந்து இருக்க வேண்டிய படம், எளிதாக யூகிக்கக்கூடிய திரைக்கதை, பழக்க பட்ட கிளிஷேக்கள் என்று நிறைய இடங்களில் நொண்டி அடிக்கிறது. காதல் காட்சிகளில் மட்டுமே எங்கேயும் எப்போதும் சரவணன் தெரிகிறார். மற்ற காட்சிகளில் அவரின் ஸ்டைல் மிஸ்ஸிங்.


இது வரை மிர்ச்சி சிவா மட்டுமே "நோ எக்ஸ்பிரஷன்" நடிகர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் விக்ரம் பிரபு வாசன் ஐ கேர் விளம்பரம் போல் "நான் இருக்கிறேன்" என்று சொல்கிறார். படம் முழுக்க ஒரே முகபாவனைகைகள், முடியல பா. கும்கி யானை இவரை விட சிறப்பாக நடித்து இருந்தது, முதல் படம் என்பதால் ஓகே. ஆனால் இதில், முதல் படத்தை விட மோசமாக நடித்து உள்ளார் விக்ரம் பிரபு. அக்ஷன் காட்சிகளில் நன்றாக செய்து உள்ளார், ஆனால் ரொமான்ஸ், எமோஷனல் காட்சிகளில் தான் நன்றாக சொதப்பி உள்ளார். 

எங்கேயும் எப்போதும் படத்தில் வந்தது போன்றே இதிலும் செம க்யூட் கதாநாயகி சுரபி. ஒரு சதவிதம் கூட ஆபாசம் இல்லாமல், செம க்யூடாய் ஹீரோயின் கதாபாத்திரத்தை வடிவைமைத்து மீண்டும் தனது ரசனையை நிருபித்து உள்ளார் சரவணன். ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்துக்கு காமெடியன் வைக்க வாய்ப்பு இருந்தும், வைக்காமல் கதையில் அதித நம்பிக்கை வைத்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் ஹீரோ தேர்வில் இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. அக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு அட்டகாசம். பாடல்கள் ஓகே ரகம். இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருந்தால், இந்த வருடத்தின் பக்கா அக்ஷன் த்ரில்லராக வந்து இருக்க கூடும். அடுத்த படத்துல பார்த்துக்கலாம் சரவணன்.

My Rating: 6.8/10.
இவன் வேற மாதிரி - ஒன்னும் புதுசா இல்ல.


Thursday, October 31, 2013

ஆரம்பம் (2013) - மாஸ் ஒன் மேன் ஷோ !!!

சான்டியாகோவில் எந்த தமிழ் படம் ரீலீஸ் ஆனாலும், தவறாது முதல் காட்சியே அட்டென்டன்ஸ் போடும் நாங்கள், அஜித்தின் ஆரம்பத்தை மட்டும் தவற விட்டு விடுவோமா என்ன ? வழக்கம் போல் முதல் நாள் முதல் காட்சியே தியேட்டரில் ஆஜர் ஆனோம். வீக் டே என்ற போதிலும் நிறைய தமிழ் மக்களை தியேட்டரில் காண முடிந்தது. அதில் முக்காவாசி தீவிர அஜித் ரசிகர்கள், மீதி பேமலி ஆடியன்ஸ். தியேட்டர் 70% நிரம்பியது. படம் எப்படி என்று இப்பொழுது பார்போம். ஆரம்பம் படத்தின் ட்ரைலர் என்னை பெரிதாய் கவரவில்லை. அதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் சென்றேன். எதிர்பார்ப்பு இல்லாத படங்கள் என்னை என்றுமே ஏமாற்றியது இல்லை. ஆரம்பமும் என்னை ஏமாற்றவில்லை. பில்லா -2 வில் சராசரி ரசிகனை கவர தவறிய அஜித், இதில் நின்று மங்காத்தா ஆடி உள்ளார். 


மும்பை நகரில் முன்று முக்கிய இடங்களில் வெடி குண்டு வெடிக்கிறது. குண்டும் வைத்து, அதை போலீஸ்க்கும் தகவல் குடுக்கிறார் அஷோக் (அஜித்). இதற்க்கு இடையில் கம்ப்யூட்டர் ஹேக்கரான ஆர்யாவை கடத்தி கொண்டு வந்து, அவர் மூலமாக மும்பை நகரில் இயங்கி வரும் முக்கிய டிவி சேனலான "பிளாஷ் டிவியை" ஹேக் செய்து அதன் ஒளிபரப்பை தடுத்து நிறுத்துகிறார் அஜித். அது போக ஆர்யாவை வைத்து கொண்டே சில கொலைகளை வேறு செய்கிறார். அஜித் குறிவைப்பது மகாராஷ்டிரா ஹோம் மினிஸ்டர் மகேஷ் மஞ்ச்ரேகர் சாம்ராஜியத்தை. அஜித் யார் ? அவருக்கும் ஹோம் மினிஸ்டர்ருக்கும் என்ன தொர்பு. ஏன் குண்டுவெடிப்பு, டிவி சேனல் ஹேக்கிங் மற்றும் கொலைகளை செய்கிறார் என்கிற மர்ம முடிச்சுகளை முதல் பாதியில் போட்டு, அத்தனை முடிச்சுகளையும் பக்கா ஒன் மேன் அக்ஷன் பேக்கேஜ் முலம் அவிழ்த்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

ஊருக்கே பிடிக்காதா பில்லா-2 எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, காதல், காமெடி என்ற வழக்கமான தமிழ் சினிமா போல் இல்லாமல் வித்தியாசமான முயற்சியாய் எனக்கு தெரிந்தது. பில்லா-2 தோல்வி அஜித்தை பழைய குருடி கதவை திறடி என்பது போல் வழக்கமான் தமிழ் சினிமாவிற்குள் இழுத்து விடும் என்று நினைத்தேன். அதற்க்கு இடம் தராமல், மீண்டும் ஒரு சோதனை முயற்சியில் இறங்கிய அஜித்தை பாராட்டியே ஆக வேண்டும். தனது பலம் என்ன வென்று மிக சரியாக புரிந்துவைத்து உள்ளார். டான்ஸ், ரொமான்ஸ் என்று எந்த விஷ பரிட்சையும் செய்யாமல், மங்காத்தாவில் செய்ததை போல், தனக்கு மிக கச்சிதமாய் பொருந்திய நெகடிவ் கதாபாத்திரத்தை சரியாய் செலக்ட் செய்தது மறுபடியும் ஜெயித்து காட்டி இருக்கிறார்.


அஜித் செம ஸ்மார்டாக இருக்கிறார். அவருக்கு என்றே சில டிரேட் மார்க் மேனரிசம் உண்டு. படம் நெடுக்க கூலிங்கிளாஸ் சகிதம் தான் வலம்வருகிறார். பல காட்சிகளில் பிட்டாக தெரிகிறார். பாடல் காட்சிகளில் ரொம்பவே குண்டாய் தெரிகிறார். டான்ஸ் பற்றி ரெண்டே வார்த்தையில் சொன்னால் ஹீ..ஹீ...பஞ்ச் டயலாக் பேசாமல் மாஸ் காட்சி குடுக்க ரஜினிக்கு பிறகு அஜித் தான் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார். நடிப்பு பற்றி சொல்ல வேண்டுமென்றால், "மேக் இட் சிம்பிள்" என்று அதிக அலட்டல் இல்லாமல், சிம்பிள் பட் பவர்புல் பெர்பார்மனஸ் வழங்கி உள்ளார். சரியாய் சொன்னால் ஒத்தை ஆளாய் படத்தை முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் தாங்கி உள்ளார். 

ஸ்க்ரீன் முழுக்க அஜித் ராஜ்ஜியம் செய்வதால், ஆர்யா அமெரிக்க மாப்பிளை போல் வந்து செல்கிறார். செகண்ட் ஹீரோ என்று கூட சொல்ல முடியாது. ஆனால் தனக்கு குடுத்த வேலையை மிக சரியாய் செய்து இருக்கிறார். அஜித்திடம் மாட்டி முழிக்கும் காட்சிகளிலும், அங்கிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளும் செம த்ரில்லர். ஆர்யா குண்டு பாய்யாய் தாப்ஸியிடம் லவ்வை சொல்லும் காட்சிகள் தான் காமெடி காட்சிகள் என்று இயக்குனர் நினைத்து விட்டார் போல் இருக்கிறது. பாவம் இயக்குனருக்கும் காமெடிக்கும் வெகு தூரம் என்று மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. ஆர்யா, தாப்ஸி கெமிஸ்ட்ரி சுத்தமாய் வொர்க் அவுட் ஆகவில்லை. நயன்தாரா அஜித்திற்கு உதவி புரிகிறார். அஜித் யார் தெரியுமா என்று பிளாஷ்பேக் சொல்கிறார். மற்றபடி எந்த வேலையும் இல்லை. அதுல் குல்கர்னி, கிஷோர், ராணா என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் படத்தில் காண கிடைக்கிறது. ஆனால் அஜித் என்னும் திமிங்கலம் முன்பு இவர்கள் எல்லாம் சிறு சிறு மீன்கள் போல் தான் தெரிகிறார்கள். 


பாடல்கள் செம சொதப்பல். அஜித்திருக்கு என்று வரும் போது மட்டும் எப்படி தான் யுவனுக்கு பின்னணி அமைகிறதோ தெரியவில்லை. பிரமாத படுத்தி இருக்கிறார். யுவனின் பின்னணி இசை அட்டகாசம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் மும்பை மிக அழகாக தெரிகிறது. இமையமலை கிளைமாக்ஸ் கன் பைட் அதகளம். ATF க்கு வழங்க பட்ட புல்லெட் ப்ரூப் ஜாக்கெட்டில் நடைபெற்ற ஊழலை பற்றி சொல்ல ஆரம்பித்து, படம் எங்கெங்கோ செல்கிறது. லாஜிக் ஓட்டை ஓசோன் மண்டல ஓட்டையை விட மிக பெரிதாக இருக்கிறது. ஆனாலும் பரபரப்பான அக்ஷன் காட்சிகள் முலம் லாஜிக் ஓட்டைகளை பற்றி அதிகம் சிந்திக்க விடாமல் படம் மிக வேகமாய் நகர்கிறது. மொத்தத்தில் கூட்ஸ் வண்டி போல் மெதுவாய் ஆரம்பிக்கும் படம், பிறகு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணம் செய்து, பிளாஷ்பேக்கில் கொஞ்சம் வேகம் குறைந்து, பிறகு சூப்பர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிகிறது. 

சமிபத்தில் எழுதியது : New World (2013) 
ஆரம்பம் - மாஸ் ஒன் மேன் ஷோ !!!
My Rating: 7.9/10.


Friday, August 16, 2013

555 (2013) - உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது !!!

கண்ணாமுச்சி ஆட்டம் காட்டும் முகம் தெரியாத வில்லனிடம் இருந்து தனது காதலை கதாநாயகன் காப்பாற்றும் கதை தான் 555.

மோசமான கார் விபத்தில் மாட்டும் அரவிந்த் (பரத்) மன ரீதியாக பாதிப்பு அடைகிறார். விபத்திருக்கு முன்பு தனக்கு லியானா என்கிற காதலி இருந்ததாகவும், விபத்தில் அந்த காதலி இறந்து விட்டதாகவும் நம்பி வாழ்கிறார். அவரை சுற்றி இருக்கும் சைக்கியாட்டிரிஸ்ட் டாக்டரும், அவரது அண்ணன் சந்தானமும் லியானா என்கிற பெண் இல்லவே இல்ல, பரத்  இல்லாத ஒன்றை இருப்பாதாய் கற்பனை செய்து கொண்டு வாழ்கிறார் என்று அடித்து சொல்கிறார்கள். அவர்களது கருத்திருக்கு வலு சேர்ப்பது போல நிறைய சம்பவங்கள் நடைபெறுகிறது. 

சிறிது சிறிதாக பரத் தனக்கு ஏதோ பிரச்னை என்பதை உணர்கிறார். தன் பிரச்சனையை உணர்ந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பும் போது தன்னை சுற்றி நடப்பது எல்லாமே நாடகம் என்பதை அறிந்து கொள்கிறார். யார் அந்த நாடகத்தை நடத்துகிறார்கள் என்பதை தேடி செல்லும் போது அவருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. தன்னை சுற்றி பின்ன பட்ட முடிச்சுகளை பரத் அவிழ்க்கும் போது முகம் தெரியாத வில்லன் கும்பல் அவருக்கு இடைஞ்சல் குடுக்கிறது. யார் அந்த வில்லன், அவன் ஏன் பரத் வாழ்கையில் விளையாட வேண்டும் என்பதை பர பரப்பாய் சொல்ல ஆசை பட்டு ஏனோ தானோ என்று சொல்லும்  படம் தான் 555.


படத்தில் வரும் சில தீடீர் திருப்பங்கள் நம்மை அட போட வைக்கின்றன. ஆனால் படத்தின் மிக பெரிய லெட் டவுன் வில்லன் மற்றும் அவனது படு மொக்கையான பிளாஷ்பேக் தான். நிறைய ஹைப் ஏற்றி விட்டு கடைசியில் படத்தை சப் என்று முடிந்து விடுவது தான் இயக்குனர் செய்த மாபெரும் தவறு. இதே குறை தான் "சமர்" படத்திலும் இருந்தது. இதிலும் அதே தவறு இருப்பதால் நல்ல படமாக வந்திருக்க வேண்டிய படம் சுமாருக்கும் கீழ் லிஸ்டில் சேர்ந்து விட்டது. 

இயக்குனர் சசி, சொல்லாமலே,ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ போன்ற மென்மையான படங்களை குடுத்தவர். முதல் முறையாக அக்ஷன் த்ரில்லர் முயற்சி செய்து உள்ளார். கதையை சரியாக தான் தெரிவு செய்து உள்ளார், ஆனால் கதைக்கான கதாபாத்திர தேர்வில் ஆரம்பிகிறது இவரது முதல் சறுக்கல். முதல் மற்றும் இரண்டாம் கதாநாயகி, வில்லன் மற்றும் அவனது அடியாட்கள் கூட்டம் என்று படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மிகவும் மோசமான தேர்வு.

 ஹீரோ மற்றும் செகண்ட் ஹீரோயின் காபி டேயில் சந்திக்கும் அந்த காட்சி டென்ஷனை ஏற்றி பர பரப்பாய் முடிந்து இருக்க வேண்டியது, ஆனால் இயக்குனர் அந்த காட்சியை படு மொக்கையாய் ஆரம்பித்து சப்பென்று முடித்து இருப்பார்.அதே போல் கிளைமாக்ஸ் சண்டை காட்சி, எப்படா சண்டை முடியும் என்று ஏங்க வைத்து இருப்பார் இயக்குனர். இவருக்கும் அக்ஷன் படங்களுக்கும் வெகு தூரம் என்பதை இந்த படம் நிருபித்து உள்ளது.


பரத் - 8 பேக்ஸ் வைத்து உள்ளார், படத்தின் ப்ரோமோஷனுக்கு மட்டுமே பயன்படுத்த பட்டு இருக்கிறது. படத்தின் கதைக்கு அந்த உடம்பு தேவையே இல்ல. முதல் பாதியில் காலேஜ் ஸ்டுடென்ட் போல் வருகிறார். ஒரு காட்சியில் மொட்டை வேறு அடித்து நடித்து உள்ளார்.  உடம்பை வளர்க ஜிம்யில் செலவு செய்த நேரத்தில் எங்காவது கூத்து பட்டறையில் சேர்ந்து நன்றாக நடிக்கவும் பயற்சி எடுத்து இருக்கலாம். "சின்ன தளபதி" என்று டைட்டிலில், இயக்குனர் பேரரசு படங்கள் முலம் டெரர் அப்நார்மல் படங்கள் 
குடுத்து கொண்டு இருந்தவர், இந்த படத்திருக்கு பிறகு நார்மல் படங்கள் குடுப்பார் என்று நம்புவோமாக. அடுத்த படத்தில் சன்னி லியோனியோட ஜோடி சேர மட்டுமே அவரது 8 பேக்ஸ் உதவி செய்து உள்ளது. 

கதாநாயகி மிருத்திகா. இவரை பற்றி நாம் சொல்லும் முன்பு சந்தானமே சொல்லி விடுகிறார். வழக்கமான் தமிழ் லூசு பெண் கதாபாத்திரம். நடிப்பு எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்பார் போல். வாய் அசைப்பும் படு மோசம். சீவிங் கம் மென்று கொண்டு இருந்திருப்பார் போல. இந்த சுமார் முஞ்சி பிகர்க்கு தான் படத்தில் இவ்வளவு அலப்பறை என்று என்னும் போது அட போங்கபா என்கிற எண்ணம் தான் வருகிறது. 


இவர் மீது பரத்திருக்கு காதல் வருவதற்கான் காரணம் ஒன்றுமேயில்லை. அதே போல் பரத்திடம் அதிசிய சக்தி இருப்பதாய் நம்புவதலாம் டூ மச். இப்படிப்பட்ட அறிவாளியை விழுந்து விழுந்து காதலிப்பார் ஹீரோ.

அடுத்து சந்தானம், பல படங்களை காத்தது போல் இந்த படத்தையும் காப்பற்றி உள்ளார். முதல் முறையாக குணசித்திர நடிப்பை முயற்சி செய்து உள்ளார் என்று எண்ணுகிறேன். தன்னுடைய ட்ரேட்மார்க் டயலாக் டெலிவரி முலம் நிறைய இடங்களில் ஸ்கோர் செய்கிறார். 

கடைசியாக வில்லன், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மிகவும் தவறான தேர்வு. பாடல்கள் படம் எப்போது எல்லாம் நொண்டி அடிக்கிறதோ அப்பொழுது எல்லாம் கரெக்டாக வந்து நமது பொறுமையை சோதிக்கும். அதுவும் அந்த இழவு பாடல், கொடுமை ரகம். பரத் உடம்பை ஏற்ற எடுத்து கொண்ட நேர்த்தில் சசி திரைக்கதை இன்னும் நன்றாக செதுக்கி இருந்தால்,நமக்கு மற்றும்மொரு கஜினி கிடைத்து இருக்கும், திரைகதையில் சறுக்கி சமர் லிஸ்டில் சேருகிறது "555"

555 (2013) - உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது !!!

My Rating: 6.4/10.


Friday, July 05, 2013

சிங்கம்-II (2013)- பர பர பட்டாசு !!

இன்று அமெரிக்க சுதந்திர தினம் என்பதால் இங்கு அணைத்து அலுவல்களும் விடுமுறை. அதனால் என்றுமே வெள்ளிக்கிழமை ரீலீஸ் ஆகும் படங்கள் இன்று விடுமுறை என்பதால் இன்றே அதாவது வியாழன்று ரீலீஸ் ஆனது. அதில் சிங்கம்-II படம்மும் ஒன்று. ஊரே அமெரிக்க சுதந்திரத்தை கொண்டாடி கொண்டு இருக்க நாங்கள் மட்டும் சிங்கம்-II ஓடும் திரைஅரங்குக்கு சென்றோம். சிங்கம்-II படத்தின் முதல் டீசர் மட்டும் பார்த்து விட்டு விழுந்து புரண்டு சிரித்தேன். அந்த சமயத்தில் தான் சூது கவ்வும், நேரம் போன்ற நல்ல தமிழ் படங்கள் வந்து கொண்டு இருந்தன. ரசிகர்களின் ரசனை சூது கவ்வும் போன்ற படங்களினால் மாறி கொண்டு வரும் வேலையில் எப்படி தான் இப்படி தைரியமா "ஆ...ஊன்னு கத்திகிட்டே பஞ்ச் டயலாக் பேசி படம் எடுக்கிறாங்களோ என்று ஹரி மீது ஆச்சிரியம் வந்தது.

அது போக சூர்யாவின் கடைசி ரெண்டு மொக்கை படங்களினால் ஏகத்துக்கும் நொந்து போய் இருந்த காரணத்தினால் சிங்கம்-II மேல் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் ஏற்படாமல் போனது. ஹரி எல்லாம் என்னத்த படத்தை எடுத்து கிழித்து விடுவார் என்கிற எண்ணத்திலே தியேட்டர் சென்று அமர்ந்தேன். ஆனால் என்னுடைய என்னத்தை தவிடுபொடியாக்கி அட்டகாசமான பர பர அக்ஷன் படத்தை வழங்கி உள்ளார் ஹரி. படம் கிட்ட தட்ட ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடுது, ஆனால் நேரம் போனதே தெரியவில்லை.


சிங்கம் முதல் பாகத்தில் முடிந்த கதை அப்படியே இதில் தொடர்கிறது. வழக்கமான தமிழ் படத்திற்கே உண்டான பார்முலா படி சூர்யா அஞ்சலி  குத்து பாடலுடன்  படம் தொடங்குகிறது. துரைசிங்கம் (சூர்யா) தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு துத்துக்குடி டவுனில் ஒரு பள்ளியில் NCC மாஸ்டராக வேலை செய்கிறார். அவ்வபோது அந்த ஊரில் நடக்கும் கடத்தல்களை பற்றி உளவு வேலை வேறு செய்கிறார். 

அதே பள்ளியில் +2 படிக்கும் மாணவி திவ்யா (ஹன்சிகா). அந்த ஊரில் பெரிய புள்ளியான "பாய்" வெளிநாட்டில் இருந்து வரும் போதை மருந்தை கடல் வழியாக இந்தியாவிற்குள் கடத்துகிறான். அதருக்கு உடந்தை ஹன்சிகவின் சித்தப்பா தங்கராஜ் (ரஹ்மான்). இவர்களுக்கு ஊரில் உள்ள அணைத்து போலீசும் உடந்தை. போதை மருந்தை சப்ளை செய்யும் இன்டர்நேஷனல் கிரிமினல் டேனி. அண்டர் கவர் போலீஸ் ஆக இருக்கும் துரைசிங்கம் உள்துறை அமைச்சருக்கு மட்டும் அவப்போது ரிப்போர்ட் அனுப்புகிறார். 


ஒரு கட்டத்தில் பெண் கடத்தல் பிரச்சனையில் துத்துக்குடியில் இரண்டு பிரிவினரிடையே ஜாதி கலவரம் ஏற்படும் நிலைமை வருகிறது. அந்த நேரத்தில் மீண்டும் சார்ஜ் எடுத்து DSP வேலையில் சேருகிறார் துரைசிங்கம். பெண் கடத்தல் எபிசோடு தான் படத்தின் உண்மையான் ஆரம்பம். ஹரியின் அக்மார்க் பர பர காட்சிகளால் நாம் நிமிர்ந்து உட்கார்வோம், அதில் இருந்து நம்மை யோசிக்கவே விடமால் படம் வேகம் எடுக்கும். வேறு ஒரு கட்டத்தில் டேனியை யார் என்றே தெரியாமல் துரைசிங்கம் அரெஸ்ட் செய்யும் நிலைமை ஏற்படும், பிறகு டேனி யார் என்று தெரிய வரும் பொழுது அவன் தப்பித்து இருப்பான். தப்பித்த டேனியை மீண்டும் துரைசிங்கம் பிடித்தாரா இல்லையா என்பதை ஓவர் டோஸ் அக்ஷன் காட்சிகள் முலம் சொல்லி  முடித்து இருக்கிறார்கள்.

படத்தின் பெரிய பலமே சூர்யா தான். மனிதர் சில காட்சிகளில் ஓவராக கத்தி பேசினாலும் அது எரிச்சலை வர வளைப்பது இல்லை. தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து உள்ளார். இரண்டு தொடர் தோல்விகளுக்கு இந்த படத்தின் முலம் முற்றுபுள்ளி வைத்து உள்ளார். அதி புத்திசாலி போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் சூர்யா. இவர் அனுஷ்காவுடன் பேசும் காட்சிகள் தவிர்த்து அனைத்திலும் நிறுத்தாமல் முச்சு விடமால் பேசுகிறார். நிறைய வசங்கள் நானாக அர்த்தம் புரிந்து கொண்டேன். டயலாக் டெலிவரி அவ்வளவு  பாஸ்ட். அக்குஸ்ட் இப்ப அந்த டவர் சிக்னல்ல இருக்கான், இப்ப இந்த டவர்ருக்கு மூவ் ஆகிட்டான், இன்னும் பத்து நிமிசத்துல ஸ்பாட்க்கு வந்துருவான், போன்ற ட்ரேட்மார்க் ஹரி வசனங்களை படம் முழுக்க நிரம்பி வழிகிறது. 

ரொமான்ஸ் காட்சிகளில் அளவான நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார், முதல் பாகத்தில் இருந்த சூர்யா அனுஷ்கா கெமிஸ்ட்ரி இதில் சுத்தமாய் மிஸ்ஸிங். என்ன எந்த வசனம் பேசும் போதும் பல்லை கடித்து கொண்டு பேசுவதை தவிர்த்து இருக்கலாம் சூர்யா. அது போக முதல் பாகத்தில் கோப பட வேண்டிய நேரத்தில் முறைத்து பார்க்கும் அதே தப்பை இதிலும் தொடர்ந்து இருக்கிறார். முதல் பாகம் போலவே படத்தின் லாஜிக் மிஸ்டேக்சை பற்றி யோசிக்கவே விடாமல் படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணம் செய்து முடிந்து விடும்.


பிரதான கதாபாத்திரம் சூர்யா தவிர்த்து படத்தில் நிறைய துணை கதாபாத்திரங்கள் வருகிறது. படத்தின் மார்க்கெட் வேல்யுவிற்கு மற்றும் காமெடிக்கு சந்தானத்தை பயன்படுத்தி உள்ளார்கள். ஹரியின் எந்த படத்திலும் காமெடி வொர்க் அவுட் ஆனது இல்லை, இதிலும் அந்த ரெகார்ட் வெற்றிகரமாக தொடர்ந்து உள்ளது. காமெடி காட்சிகள் அனைத்தும் மொக்கை ரகம். விவேக்கிருக்கு சுட்டு போட்டாலும் காமெடி வரது என்பது மறுபடியும் நிருபணம் ஆகி உள்ளது. ஹன்சிகாவிற்க்கு படத்தில் பெரிய ரோல் இல்ல, துரைசிங்கத்தை ஒன் சைடு லவ் பண்ணும் கேரக்டர். வில்லன் டேனி சரியான தேர்வு. நல்ல முகபாவம் காட்டி நடித்து உள்ளார். ரஹ்மான் மற்றும் பாய்யாக வரும் முகேஷ் ரிஷி தங்கள் கதாபாத்திரங்கள் உணர்ந்து நடித்து உள்ளார்கள்.

படத்தில் கேமராமேன் பிரியனின் உழைப்பு பாராட்டுக்குரியது. படத்தில் நிறைய ஹெலிகாப்டர் ஷாட்ஸ் உண்டு, எல்லாமே அட்டகாசமாய் காட்சி படுத்த பட்டு உள்ளது. படத்தில் பின்னணி இசை பெரிய லெட் டவுன் என்றே நான் சொல்லுவேன். பரபரப்பான காட்சிகளின் டெம்போவை குறைப்பது போல் இருந்தது பின்னணி இசை. பாடல்கள் தியேட்டரில் கேட்க்கும் படி இருந்தன. சாதாரண கதையை தனது திரைக்கதை முலம் மெருகேற்றி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் ஹரி. 

சிங்கம்-II - பர பர பட்டாசு !!
My Rating: 8.0/10......


Sunday, June 16, 2013

Man of steel (2013)- நீங்க இன்னும் நல்லா வளரனும் தம்பி !

ஹாலிவுடில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று எப்பொழுதும் தனி மவுசு உண்டு. வார்னர் பிரதர்ஸ் அல்லது 20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்திருக்கு வருவாய் குறைவது போல் இருந்தால், எடுடா சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்சை என்று பழைய காமிக்ஸ் கதையை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் ரீ மாடல் பண்ணி கொள்ளை லாபம் பார்த்து விடுவார்கள். காமிக்ஸ் உலகை பொறுத்த வரை இரண்டு பெரிய நிறுவங்கள் உண்டு. மார்வெல் காமிக்ஸ் மற்றும் டி.சி. காமிக்ஸ். இவர்களுக்கு என்று தனி தனி சூப்பர் ஹீரோக்கள், தனி தனி ரசிகர்கள் பட்டாளம் வேறு இருப்பார்கள். நம்ம ஊரில் ரஜினி-கமல், அஜித்-விஜய், ரசிகர்களிடையே மற்றும் ர.ர-உ.பி கழக கண்மணிகள் இடையே நடைபெறும் பேஸ்புக் சண்டையை விட படு பயங்கரமாய் இவர்கள் மோதி கொள்வார்கள். மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களில் முக்கியமானவர்கள் கேப்டன் அமெரிக்கா, X-மென், ஹல்க், ஸ்பைடர் மேன், பிளேட், அயர்ன் மேன், வால்வரின், மற்றும் தோர். மார்வெல் கதாபாத்திரங்களில் நான்கு சூப்பர் ஹீரோஸ் இனைந்து சாகசம் செய்தால் அதை "அவெஞ்சர்ஸ்" என்று கூறுவார்கள். மார்வெல் ரசிகர்களில் பெரும்பாலோனர் 18 வயசுக்கு கீழ் உள்ள டீன் ஏஜ் குழந்தைகள் தான் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. மார்வெல் கதாபாத்திரங்கள் செய்யும் சாகசங்கள் அணைத்து குழந்தைகளை கவரும் விதமாகவே இருக்கும். இவர்களின் காப்புரிமையை வைத்து இருப்பது 20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம். சரியாய் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எதாவது ஒரு மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து படம் எடுத்து குறைந்தது $500 மில்லியன் சம்பாரித்து விடுவார்கள். உலகிலே அதிக வசூல் (கிட்ட தட்ட $2b) செய்த படமாக இன்றும் இருப்பது "தி அவெஞ்சர்ஸ்" என்பதே இவர்களின் பேன் பேஸ்க்கு தக்க சான்று.


டி.சி. காமிக்ஸ் ஹீரோக்களில் முக்கியமானவர்கள் பேட் மேன், சூப்பர் மேன் , கிரீன் லான்டர்ன் (Green Lantern) மற்றும் வாட்ச்மேன் கதாபத்திரங்களை கூறலாம். இவர்களில் எனக்கு பிடித்த ஹீரோ பேட் மேன். அதற்க்கு முக்கிய காரணம் கிறிஸ்டோபர் நோலன் என்பதில் சந்தேகமேயில்லை. சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று புதிய வரைமுறையை எழுதியவர் அவர். சூப்பர் ஹீரோ படங்கள் என்றால் வெறும் கிராபிக்ஸ் அக்ஷன் (மார்வெல் படங்கள்) மட்டுமே என்று இருந்து வந்த நிலையில், பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் படங்களில் அருமையான திரைக்கதை, உனர்வுபூர்வமான நடிப்பு, கண்கலங்க வைக்கும் காட்சிகளையும் அட்டகாசமான ரியல் அக்ஷன் காட்சிகளை சேர்த்து ஒரு புதிய இலக்கணத்தை ஏற்படுத்தினார் நோலன். நோலனின் பேட் மேன் சீரீஸ் முன்பு வரை வார்னர் பிரதர்ஸ் டி.சி. காமிக்ஸின் பல கதைகளை திரைப்படமாக எடுத்து கையை சுட்டு கொண்டு இருந்தது. வார்னர் பிரதர்ஸ் நோலனின் பேட் மேன் சீரீஸ் முலம் பல படங்களில் விட்டதை அந்த முன்று படங்கள் முலம் மீட்டு விட்டார்கள். 

நோலனின் பேட் மேன் சீரீஸ் முன்பு வரை வந்த பேட் மேன் படங்கள் எல்லாம் படு திராபையான படங்கள். எல்லாம் அதள பாதாள தோல்வியை தழுவிய படங்கள். சரியாக சொன்னால் டி.சி. காமிக்ஸ் கதாபாத்திரங்களை நடித்து வார்னர் பிரதர்ஸ் எடுத்து வெளி வந்த அனைத்து படங்களும் தோல்வி படங்கள் தான். போட்ட மூதல் கூட திரும்பி வராத படங்கள் அவைகள். அந்த லிஸ்டில் சூப்பர் மேன் படங்களும் அடங்கும். Man of steel படத்திற்கு முன்பு வரை எந்த சூப்பர் மேன் படமும் உருப்படியாக வந்தது இல்லை. இதற்கு முன்பு வரை வந்த எந்த சூப்பர் மேன் படங்களின் சாயலும் இந்த படத்தில் இருக்காது என்று விளம்பரம் செய்ய பட்டது. அது போக Man of steel படக்குழுவில் கிறிஸ்டோபர் நோலன் வேறு இடம் பிடித்து இருந்தார், டைரக்டராக இல்லாமல் இந்த முறை தயாரிப்பாளராக களம் இறங்கி இருந்தார். படத்தை டைரக்ட் செய்தது 300 பருத்தி வீரர்கள், WatchMen போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஸாக் ஸிண்டர்(Zack Snyder). இவருக்கு இது இரண்டாவது சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட். கதை உருவாக்கத்தில் நோலனின் பங்கும் இருந்தது.


 படத்தில் சூப்பர் மேனாக நடித்து இருப்பது ஹென்றி கெவில் (Henry Cavill). இவர் பலர் அறிந்திராத யூ.கே டிவி நாடக நடிகர். டிவி சீரியல்களில் மட்டுமே நடித்து வந்தவருக்கு Man of steel தான் பெரிய பிரேக். இவர்கள் கூட்டனியில் பெரிய எதிர்பார்ப்புடன் வந்த Man of steel டி.சி. காமிக்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால், ஓர் அளவுக்கு பூர்த்தி செய்ததே என்று சொல்வேன். அது என்ன அளவு என்றால், வசூல் ரீதியாக படம் பெரிய வெற்றி படம், ஆனால் தொய்வான திரைக்கதை, ஓவர் கிராபிக்ஸ் அக்ஷன் காட்சிகள் என்று படம் என்னை அவ்வளவாய் கவரவில்லை.

அணைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் புல் டைம் ஆக உலகை காக்கும் வேலை தான் செய்வார்கள், தீய சக்திகளிடம் இருந்து உலகத்தை காத்த நேரம் போக காதலிகளை லவ்வுவார்கள். நாம் பார்க்க போகும் Man of steel படத்தின் ஹீரோ சூப்பர் மேனும் உலகத்தை காக்கும் அதை வேலையை தான் செய்கிறார், அந்த வேலையை இன்னும் கொஞ்சம் சுவாரிசியமாக செய்து இருக்கலாம். மாற்ற சூப்பர் ஹீரோக்களிடம் இருந்து ரொம்பவே வித்தியாசமானவர் "சூப்பர் மேன்". உண்மையில் இவர் மனித குலத்தை சேர்ந்தவர் கிடையாது. பூமியைவிட பலநூறு மடங்கு டெக்னாலஜியில் முன்னேறிய கிரிப்டான் கிரகம் சேர்ந்த மனிதர் தான் நம்ம ஹீரோ. கிரிப்டான் கிரகத்தில் இருக்கும் வளங்கள் எல்லாம் அழிந்த பிறகு அந்த கிரகம் அழிவை நோக்கி பயணிக்கிறது. அந்த கிரகத்தில் இயற்கையான முறையில் பிறந்த குழந்தையான் கேல்-எல்லை (சூப்பர் மேன்) விண்கலம் முலம் ஏற்றி பூமிக்கு அனுப்புகிறார் அந்த குழந்தையின் தந்தை ஜோர்-எல் (Russell Crowe).அதைத் தடுப்பதற்காக ஏற்படும் சண்டையில் ஜெனரல் ஸோடு (Michael Shannon) ஜோர்-எல்லை கொன்றுவிடுகிறான் அந்த கொலை குற்றதிருக்கு தண்டனையாக ஸோடு  மற்றும் அவனது படை வீரர்கள் கிரகம் விட்டு கிரகம் கடத்துகிறது கிரிப்டான் அரசாங்கம். அதன் பிறகு கிரிப்டான் கிரகமே அழிந்து போகிறது.


விண்கலத்தில் பூமிக்கு வந்த கேல்-எல்லை ஒரு விவசாய குடும்பம் கண்டு எடுத்து கிளார்க் கென்ட்ட என்று பெயர்யிட்டு வளர்கிறார்கள். வளர வளர கிளார்கிருக்கு தனக்கு இருக்கும் அறிய சக்திகள் பற்றி தெரிய வருகிறது. ஆனால் தன்னிடம் இருக்கும் சக்திகள் பற்றி வெளியில் சொன்னால் எங்கே தன்னை மக்கள் ஒதுக்கி விடுவார்களோ என்று அஞ்சி யாருக்கும் சொல்லாமல் வாழ்கிறான். தன் தந்தையிடம் மட்டும் சொல்கிறான். அவனது தந்தை "கிளார்க் பூமியை சேர்ந்தவன் கிடையாது" என்கிற உண்மையை சொல்லி, கிளார்க் பூமிக்கு அனுப்பட்ட நோக்கத்தை தேடி கண்டுபிடிக்க சொல்கிறார். கிளார்க் நாடோடி போல் தன் பிறப்பின் ரகசியத்தை தேடி உலகை சுற்றி வருகிறான். அந்த தேடலில் அவனுக்கு தான் யார், தன்னுடைய உண்மையான தந்தை பற்றி தெரியவருகிறது. கிளார்க்கின் சிறு வயது சம்பவங்கள், மற்றும் அவன் நாடோடியாய் அலையும் சம்பவங்கள் எல்லாமே நான்-லினியர் பாணியில் சொல் பட்டு இருக்கும். ஆனால் குழப்பம் இல்லாமல் நமக்கு புரியும். கிளார்க்கிருக்கும் அவனது வளர்ப்பு தந்தைக்கும் நடக்கும் உரையாடல்கள் மட்டுமே சுவாரிசியமாக இருந்தது. மற்றவை அனைத்தும் ஜஸ்ட் அனதர் மூவி போல் தான் இருந்தன. 

கிளார்க் தனது பிறப்பின் ரகசியம் அறிந்த பிறகு சரியாய் ஜெனரல் ஸோடும் அவனது படை வீரர்களும் கிரிப்டான் கிரகத்தில் இருந்து தப்பிதது பூமிக்கு வந்த கிளார்க்கை தேடி வருகிறார்கள். வந்தவர்களுக்கு பூமி மிகவும் பிடித்து விடவே இங்கயே தங்கி விடலாம் என்று எண்ணி பூமியை அழிக்க எண்ணி அதற்க்கான அழிவு வேலையை செய்கிறார்கள். தன் கிரிப்டான் இன மக்களை அழித்து   பூமியை காப்பாற்றும் பொறுப்பு சூப்பர் மேன்க்கு வருகிறது. அதை எப்படி செய்து முடிக்கிறார் என்று கொட்டாவி வரும் அளவு கிராபிக்ஸ் சண்டை காட்சிகள் முலம் சொல்லி இருக்கிறார். அடுத்து பாகத்தில் சீரியஸ் கதையை எதிர்பார்கலாம். இந்த படம் சுமார் ரகமே.

Man of steel (2013)- நீங்க இன்னும் நல்லா வளரனும் தம்பி !

My Rating: 6.6/10......


Saturday, March 09, 2013

The Attacks Of 26/11(2013) - மும்பை அட்டாக்ஸ் !!

ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் The Attacks Of 26/11 (2013) படத்தின் ஏழு நிமிட முன்னோட்டம் வெளியான உடனே இந்த படத்தை எப்பாடுபட்டாவது தியேட்டரில் பார்த்து விடுவது என்று முடிவு செய்து விட்டேன். படத்தை போன வாரம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தை பற்றி எனது பார்வையை பதிவு செய்யலாம் என்கிற எண்ணத்தின் விளைவே இந்த பதிவு. ராம் கோபால் வர்மா சுருக்கமாக ஆர்.ஜி.வி எனக்கு பிடித்த இந்திய இயக்குனர்களில் ஒருவர். இந்திய சினிமாவில் பல வித்தியாசமான முயற்சிகளை செய்தவர், செய்து கொண்டு இருப்பவர். எந்த இந்திய இயக்குனரும் ஆர்.ஜி.வி அளவுக்கு கதை சொல்லும் திறமை இருக்குமா என்பது சந்தேகமே. அவரின் சத்யா (1998), கம்பெனி (2002) சர்க்கார் (2005) போன்ற படங்கள் இவரின் கதை சொல்லும் திறமையை பறைசாற்ற போதுமானவை. மும்பை நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை இவர் அளவுக்கு யாருமே தந்துருப்பமாய் படம் பிடித்தது இல்லை.


சென்ற வருடம் மிக மிக கம்மியான செலவில் (ரூ. 6,50,000), வெறும் ஐந்தே நாட்களில் ஐந்து கேனான் 5 டி காமெராவை கொண்டு தெலுங்கின் முன்னணி நடிகர்களை வைத்து இவர் இயக்கிய  தொங்கலா முத்தா (Dongala Mutha -2011) இவரின் வித்தியாசமான சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. 100 நாட்கள், 200 நாட்கள் வருட கணக்கில் படம் எடுபவர்கள் மத்தியில் நல்ல திட்டமிடுதல் இருந்தால் வெறும் ஐந்தே நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து விடலாம் என்று இவர் நிருபித்து இருக்கிறார். வித்தியாசமான முயற்சிகள், நல்ல கதை சொல்லும் பாணி இருபதால் இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் டுப்பர் ஹிட் ஆகும், எல்லா படத்தையும் பார்க்கலாம் என்று எண்ணி விட வேண்டாம். இவரை போல் மொக்கை படங்கள் குடுப்பதருக்கு இந்தியாவில் ஆர்.ஜி.வி விட்டால் ஆள் இல்லை. இவரின் சில படங்கள் வெறும் ரெண்டு நாட்கள் மட்டுமே ஓடி சாதனை புரிந்து உள்ளன. இந்திய சினிமா வரலாற்றின் மையில் கல் படமான "ஷோலே" படத்தை ரீமேக் செய்கிறேன் என்று "ராம் கோபால் வர்மா கி ஆக்" என்கிற பெயரில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து இவர் செய்த காமெடி கொத்து பரோட்டாவை  யாருமே மன்னிக்க மாட்டார்கள். அதே போல் அடிக்கடி பேய் படம் எடுக்கிறேன் என்று மக்களை பயம் முறுத்தி சிரிக்க வைப்பதும் இவரின் இன்னும் ஒரு பலவீனம்.


The Attacks Of 26/11 படத்தின் அறிவிப்பு வந்த உடனே முடிவு செய்து விட்டேன், இந்த படம் ஆர்.ஜி.வியின் சிறந்த ஐந்து படங்களில் ஒன்றாக இருக்கும் என்று. எனது நம்பிக்கை வீண் போக வில்லை. 26/11 ஆர்.ஜி.வியின் சிறந்த ஐந்து படங்களில் ஒன்று. படத்தின் கதை இந்தியர் அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். 2008 வருடம் நவம்பர் 26 தேதி இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல் பற்றிய தொகுப்பே இப்படம். கிட்ட தட்ட டாகுமெண்டரி போன்ற ஒரு கதை களம். அதில் ஆர்.ஜி.வி தனது பாணியில் வழங்கி உள்ளார். படத்தை பார்க்கும் போது எனக்கு இது திரையில் ஓடும் படம் என்ற உணர்வே வரவில்லை, நானும் மும்பை நகரில் அந்த கோர இரவில் பயங்கரவாதிகள் மத்தியில் மாட்டி கொண்டு விட்டேன் என்றே உணர்வே தோன்றியது. படத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை  மும்பை ஜாயிண்ட் கமிஷனர் நானா படேக்கர் விவரிப்பது போன்று இருக்கும். நடந்த சம்பவங்களை அவர் விசாரணை கமிஷனிடம் விவரிப்பது போன்ற கதை அமைப்பு.

பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டுயிருக்கும் இந்திய மீனவர்களின் படகில் உதவி கேட்டு வருபவர்கள் போல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து விடுவார்கள். அந்த இந்திய படகின் முலம் மும்பை நகர்க்குள் புகும் தீவிரவாதிகள் இரண்டு குழுக்களாய் பிரிந்து சென்று கண்ணில் படுபவர்களை எல்லாம் வீடியோ கேம்மில் எதிரிகளை சுடுவது போல் சுட்டு விழுத்துகிறார்கள். முதலில் லியோபோல்ட் கஃபே என்கிற மக்கள் கூடும் இடத்தில தாக்குதல் தொடங்குகிறது, அதன் பிறகு தாஜ் ஹோட்டல் சென்று கண்ணில் படுபவர்களை எல்லாம் சுடுகிறார்கள். அந்த காட்சி படமாக்க பட்ட விதம் கல் நெஞ்சையும் கரைத்து விடும். சின்ன குழந்தையை கூட விட்டு வைக்காமல் சுட்டு விழுத்துவார்கள். அந்த காட்சி பார்க்கும் போது எனக்கு யாரவது நிஜ ஹீரோ வந்து பயங்கரவாதிகளை கொன்று மக்களை காப்பாற்ற மாட்டார்களா என்று தோன்றியது. ஆனால் இது கற்பனை கதை இல்லையே, ஹீரோ வந்து காப்பாற்ற. உண்மை கதையில் அப்படி எல்லாம் யாரும் வர மாட்டார்கள், நம்மை நாம் தான் காப்ற்றி கொள்ள வேண்டும் என்று எனக்கு உரைத்தது.


சி.எஸ்.டி ஸ்டேஷன் மற்றும் மாயா ஆஸ்பிட்டலில் ஷூட் அவுட் நடத்தியது கசாப் மற்றும் அவனது மற்றுமொரு ஜிகாதி கூட்டாளி. இவர்கள் எப்படி பட்ட சைக்கோ என்றல் ரயில்வே ஸ்டேஷனில் துப்பாக்கி சத்தத்தை கேட்டு அலறி ஓடும் நாயை கூட விட்டு வைக்காமல் சுட்டு விழுத்தும் ஜிகாதிகள். ஒரு குடிசை வீட்டில் நின்று குடிக்க தண்ணி கேட்பார்கள், தண்ணி வாங்கி குடித்தவுடன் அந்த விட்டில் உள்ள அப்பா, பையன் இருவரையும் சுட்டு கொல்லும் காட்சியை பார்த்த பிறகும் யாரவது காசப்க்கு தூக்கு தண்டனை வேண்டாம் என்று போராடினால் அவர்களை மனிதர்கள் லிஸ்ட்டில் கண்டிப்பாய் சேர்க்க கூடாது.

அதன் பிறகு காசப் பிடிப்படும் காட்சி, மும்பை போலீஸ் கான்ஸ்டபிள் வெறும் லத்தியை மட்டும் வைத்து கொண்டு AK47 கொண்டு சுடும் கசாப் மீது பாய்ந்து அவனை அமுக்கும் காட்சி அருமையாக படமாக்க பட்டு இருக்கும். அதில் மும்பை போலீஸ்சின் தைரியத்தை காண முடிகிறது. எதிரியை விழ்த்த ஆயுதம் தேவை இல்ல, மன உறுதியும் மனவலிமை மட்டுமே போதும் என்பதை பறைசாற்றும் காட்சிகள் அவைகள்.

 கடைசி வரை அமைதியாக கதை சொல்லி கொண்டு இருந்த நானா படேக்கர் கசாப்ஸிடம் ஒரு காட்சியில் இஸ்லாம், ஜிஹாத் பற்றி கிளாஸ் எடுப்பார் பாருங்கள்!! மனிதர் நடித்த மாதிரி தெரியவில்லை. அந்த ஒரு காட்சியில் அணைத்து இந்திய ஆத்மாகளில் ஒளிந்து இருக்கும் தீவிரவாத வலியை மிக அற்புதமாய் பதிவு செய்து இருந்தது போல் எனக்கு தோன்றியது. கசாப்பாக நடித்திருக்கும் சஞ்சீவ் ஜஸ்வாலின் நடிப்பு அட்டகாசம். தான் செய்த காரியம் அல்லாவுக்கு ஆனது, அது தான் தன்னை சொர்கத்திற்கு அழைத்து போகும் வழி என்று புலம்பும் காட்சியில் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். படத்தில் ஒரு வசனம் வரும், " காசப், ஒரு நாய், அந்த நாயை ஏவி விட்ட எஜமானரை நாம் தண்டிக்க வேண்டும் என்று, அதுக்காக நாயை விட்டு விட கூடாது". நாயை கொன்று விட்டோம், அதை ஏவிய பாகிஸ்தான் எஜமானரை எப்போது தண்டிக்க போகிறோமோ தெரியவில்லை.

The Attacks Of 26/11(2013)- தீவிரவாதத்தின் உண்மை முகம்.

My Rating: 7.9/10......


Thursday, November 01, 2012

Skyfall- 2012- Bond is Back. திரைவிமர்சனம்

Skyfall இந்த வருசத்துல நான் ரொம்பவே எதிர்பார்த்த படம். ஜேம்ஸ்பாண்ட் படம் வேற. இன்னைக்கு தான் ரிலீஸ் ஆச்சு. படம் என்னோட எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சதா என்றால், நிச்சியம் பூர்த்தி செஞ்சது என்று சொல்வேன். இது வரை வெளிவந்த உள்ள 23 பாண்ட் படங்களை தரவரிசை படுத்தினால் Skyfall படத்திருக்கு முதல் 5 இடங்களில் நிச்சியம் ஒரு இடம் உண்டு. ஆக்ஷ்ன், செண்டிமெண்ட், நம்பிக்கை துரோகம், மெல்லிய நகைச்சுவை என்று பல பரிமாணங்களில் படம் பயணம் செய்கிறது. முன்னாடியே சொன்ன மாதிரி இந்த படம் போன ஜேம்ஸ்பாண்ட் படமான Quantum of Solace தொடர்ச்சியாக இல்லாமல், புது கதைகளத்தை கொண்டு உள்ளது. படம் இஸ்தான்புல் நகரில் ஆரம்பித்து, லண்டன் சென்று, பிறகு ஷாங்காய், மறுபடியும் லண்டன் பயணம் செய்து கடைசியில் ஸ்காட்லாந்து நாட்டில் Skyfall என்ற வீட்டில் முடிவடைகிறது.


இங்கிலாந்து நாட்டின் உளவு அமைப்பான MI6 (Military Intelligence, Section 6) மீதும் அதன் தலைவர் மிஸ் M மீதும் முன்னால் MI6 ஏஜென்ட் ஒருவன் தொடுக்கும் தாக்குதலை மிஸ் M பாண்டின் உதவியுடன் எப்படி முறியடிக்கிறார் என்பது தான் படத்தின் ஒன் லைனர். இந்த படம் வழக்கமான எல்லா பாண்ட் பார்முலாவையும் கொண்டுள்ளது. படத்தின் ஆரம்பம் அட்டகாசமாய் இருக்கும். முதல் சேசிங் காட்சி இது வரை எந்த பாண்ட் படங்களிலும் வந்திராத காட்சி. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வில்லன் ஒருவன் MI6 ரகசிய ஏஜென்ட்களின் பெயர் விவரங்களை அடங்கிய சிப் ஒன்றை திருடி கொண்டு ஓடுவான். பாண்ட் அவனை துரத்தி செல்வது போன்ற காட்சி. டின்டின் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பைக்/ஜீப் சேசிங் காட்சி வருமே. அது போன்ற, இல்லை இல்லை அதை விட அட்டகாசமான காட்சி இது. அதில் ஸ்பீல்பெர்க் அனிமேஷன் கொண்டு அந்த காட்சியை எடுத்து  இருந்தார். ஆனால் இதில் சாம் மெண்டஸ் நிஜ மனிதர்களை கொண்டு மிக சிறப்பாய் எடுத்து உள்ளார். நான் இது வரை  பார்த்த சிறந்த சேசிங் காட்சிகளில் இதுவும் ஒன்று, சில இடங்களில் எனது ஹார்ட் பிட் தாறுமாறாக ஏறி விட்டது. முதல் 15 நிமிடங்கள் மிஸ் செய்யாமல் பாருங்கள்.


MI6 ரகசிய ஏஜென்ட்களின் பெயர் விவரங்களை அடங்கிய சிப் வில்லன் ஜேவியர் பார்டெம் (Javier Bardem) கைகளுக்கு போகிறது. அதை கொண்டு ஜேவியர் சில ரகசிய ஏஜென்ட்களை கொலை செய்கிறான். லண்டனில் இருக்கும் MI6  தலைமை அலுவலகத்தில் M இல்லாத நேரம் பார்த்து குண்டு வெடிப்பை ஏற்படுத்துகிறான். ஜேவியர் லட்சியம் உளவு துறை தலைவர் M மை கொல்ல வேண்டும் என்பது தான். அதுவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கொல்வது இல்லை, M மை லண்டனில் வைத்து அனைவரும் அறியும் படி கொலை செய்ய வேண்டும். ஜேவியர் ஏன் M மை கொலை செய்ய துடிக்கிறான் ? M முன்னால் MI6 ரகசிய ஏஜென்ட் ஜேவியர்க்கு செய்த துரோகம் என்ன ? போன்ற கேள்விக்கான விடைகளை Skyfall படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


டேனியல் க்ரெய்க், மறுபடியும் தான் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை நிரூபித்து உள்ளார். இவரது முந்திய இரண்டு பாண்ட் படங்களை விட இதில் மிகவும் சிறப்பாக நடித்து உள்ளார். முகத்தை எப்பொழுதும் இறுக்கமாக வைத்து இல்லாமல், நிறைய இடங்களில் மாறுபட்ட முகபாவனைகளை அழகாக வெளி படுத்தி உள்ளார். பழைய பாண்ட் படங்களை போல் இல்லாமல் இதில் நிறைய புன்னகைக்க வைக்கும் நகைச்சுவை டயலாக்ஸ் வருகிறது. க்ரெய்க் தனக்கு காமெடியும் வரும் என்று நிருபித்து உள்ளார். ஆக்சன் காட்சிகளில் வழக்கம் போல் பட்டைய கிளப்பி உள்ளார். நோலன் படம் போல், இதிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உபயோக படுத்தாமல் ரியல் டைம் ஆக்சன் கட்சிகளாக படம் ஆக்கி உள்ளனர். எப்பொழுதும் கிராபிக்ஸ் காட்சிகள் விட ரியல் ஆக்சன் காட்சிகள் தான் ரசிகர்களை கவரும். இப்படமும் நிச்சியம் ரசிகர்கள் கவரும்.

ஜேவியர் பார்டெம், இவரது கதாபாத்திரத்தின் பெயர் சில்வா, இவர் முன்னால் MI6 ஏஜென்ட். படத்தில் இவரது அறிமுகம் சரியாய் ஒரு மணி நேரம் கழித்து வரும். இன்னும் சரியாய் சொல்ல வேண்டும் என்றால் இண்டர்வெல் (இந்தியாவில் மட்டும்) முடிந்த உடன் தான் இவரின் அறிமுக காட்சி வரும், மொத்தமே 30 நிமிடங்கள் தான் வருவார், அதில் 20 நிமிடங்கள் சண்டை காட்சிகள். இவரது பெர்பார்மான்ஸ் காட்சிகள் என்று சொன்னால் மொத்தமே ரெண்டு காட்சிகள் தான். இவரும் பாண்டும் சந்திக்கும் காட்சி ஒன்று, மற்றொன்று இவரும் M மும் சந்திக்கும் காட்சி. மனிதர் இந்த இரண்டு காட்சிகளில் அசத்தி இருப்பர். அதுவும் இவர் பாண்ட் உடன் நடத்தும் உரையாடல்கள் அதகளம். டைரக்டர் இவரது கதாபாத்திரத்தை உருவாக்கும் போது டார்க் நைட் ஜோக்கர் கதாபாத்திரத்தை மனதில் வைத்து உருவாக்கி இருப்பர் போல். ஜோக்கர் அளவுக்கு புத்திசாலியாக இவரை காட்டி இருப்பார்கள். இவர் பாண்டிடம் மாட்டி பிறகு தப்பிக்கும் காட்சிகள் TDK போலவே இருந்தன.


M ஆக நடித்து இருப்பவர் ஜூடி டென்ச். M16 உளவு துறை தலைவர் M ஆக GoldenEye படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் இந்த படத்தில் முடிவடைகிறது. படத்தின் மெயின் கதை இவரை சுற்றியே பின்ன பட்டு இருக்கும். தனது பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்து உள்ளார். பாண்டிடம் இவர்கண்டிப்பு காட்டும் காட்சிகள் யதார்த்தமாய் இருக்கும். மறுபடியும் பணியில் சேர பாண்ட் சில டெஸ்ட் மேற்கொள்ள வேண்டியது வரும், அந்த எபிசோடில் M மற்றும் பாண்ட் இடையே நடைபெறும் உரையாடல்கள் செமையாக இருக்கும். Q கதாபாத்திரத்தை பென் விஷ்ஷா என்ற இளைஞர் ஏற்று நடித்து உள்ளார். அணைத்து படங்களிலும் Q  தான் ஜேம்ஸ்பாண்ட்க்கு நவீன ஆயுதங்களை வழங்குவர். படத்தின் முக்கியமான தருணங்களில்தான் க்யூ தலைகாட்டுவார். பல ஜேம்ஸ் பாண்ட் படங்களில் க்யூ தலைகாட்டுவதே இல்லை என்று கூட சொல்லலாம்.

கடைசியாக பாண்ட் கேர்ள்ஸ் நோமி ஹாரிஸ், மற்றும் Berenice Marlohe, இவர்களுக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. சில இடங்களில் திரைக்கதையில்  தொய்வு ஏற்படுகிறது, MI6 ரகசிய ஏஜென்ட்களின் லிஸ்ட்டை தீடிர் என்று அனைவரும் மறந்து விடுகிறார்கள். இது போன்ற சில குறைகள் இருக்க தான் செய்தன, ஆனால் ஜேவியர் க்ரெய்க் மற்றும் ஆக்சன் காட்சிகள் இந்த குறைகளை மறக்க அடித்து விடுகின்றன. படத்திருக்கு ஒளிப்பதிவு ரோஜர் டீகின்ஸ், கிளைமாக்ஸ் காட்சியில் இவரது உழைப்பு நன்றாக தெரியும். மனிதர் அசத்தி இருப்பார். கிளாசிகல் டைரக்டர் சாம் மெண்டஸ் பாண்ட் ரசிகர்களை ஏமாற்றாமல் நல்லதொரு பாண்ட் ஆக்சன் படத்தை வழங்கி உள்ளார். 

Skyfall: Bond is Back....

My Rating: 8.0 .........


Friday, September 28, 2012

தாண்டவம் (2012)- மிஸ் ஆன ருத்ரதாண்டவம்

கல்லூரி முடித்த பிறகு பல வருடங்கள் கழித்து இன்று தான் ஒரு படத்திருக்கு FDFS (முதல் நாள் முதல் காட்சி) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் டாக்டர் சியான் விக்ரம் நடித்த சஸ்பென்ஸ் த்ரில்லர் "தாண்டவம்". படத்திருக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் போனேன். படம் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று கேட்டல் ஓர் அளவு பூர்த்தி செய்தது என்றே சொல்வேன். அது என்ன ஓர் அளவு..?? சில காட்சிகள், சூப்பராகவும், சில காட்சிகள் சுமாரகவும், சில காட்சிகள் மொக்கையகவும் இருந்தன. இதை நல்ல படம் என்று கொண்டாட முடியாது, மொக்கை என்று ஒதுக்கவும் முடியாது. சுமார் லிஸ்டில் சேர்க்கலாம். கதை லண்டனில் ஆரம்பித்து, இந்தியா வந்து, இறுதியில் லண்டனில் முடிகிறது.


போன வாரம் தாண்டவம் படத்தின் மீது "கதை திருட்டு" வழக்கு ஒன்றை ஒரு உதவி இயக்குனர் போட்டதாய் செய்தி படித்தேன். அதனால் படம் வெளி ஆவதில் சிக்கல் இருப்பது போல் தெரிந்தது. ஆனால் அந்த வழக்கு பற்றிய எந்த ஒரு சுவடும் வெளியில் தெரியாமல், இன்று வெற்றிகரமாக படம் வெளியானதில் எனக்கு பெரிய ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. என்னை பொறுத்த வரை அரசியலில் ஊழலை எப்படி ஒழிக்க முடியாதோ, அதே போல் சினிமாவில் "கதை திருட்டு"/ஹாலிவுட் படத்தின் தழுவல், போன்றவற்றை ஒழிக்கவே முடியாது. எப்படி ஊழலுடன் வாழ பழகி, அதை சர்வசாதாரணமாக எடுத்து கொள்கிறேனோ, அதே போல் தழுவல்களையும் ஈசியாக எடுத்து கொள்ள பழகி விட்டேன். படத்தின் மூலத்தை தேடி அலைந்து எனது நேரத்தை விரயம் செய்யாமல், படம் நன்றாக இருந்தால் ரசிப்பது, மொக்கையாக இருந்தால் மறந்து விடுவது என்று இருக்கிறேன். இப்பொழுது தாண்டவம் படத்தின் கதை சுருக்கத்தை பார்போம்.

படம் லண்டன் நகரில் ஆரம்பிக்கிறது. லண்டன் நகரில் 2011 வருடம் ஜனவரி 1 ஆம் தேதி காலை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல இடங்களில் வெடி குண்டு வெடிக்கிறது. பல பேர் உயிர் இழக்கிறார்கள். அமெரிக்காவின் செப்டம்பர் -11 போன்ற தாக்குதல் என்று மீடியாக்கள் கூறுகின்றது. குண்டு வெடித்த சரியாய் ஒரு வருடம் கழித்து நகரில் வெவ்வேறு இடங்களில், ஒரே மாதிரி முன்று கொலைகள் நடைபெறுகிறது. கொலைகளை பற்றி துப்பறிய லண்டன் போலீஸ் அதிகாரியாக "வீர கத்தி" என்கிற இலங்கை தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் நாசர் அறிமுகம் ஆகிறார். ஒரு கட்டத்தில் கொலைகளை செய்வது கண் பார்வை அற்ற "கென்னி" (விக்ரம்) என்று தெரிய வருகிறது. கென்னி தனது நான்காவது கொலையை அரங்கேற்றம் செய்யும் வேலையில், படத்தில் இடைவேளை வேண்டி, போலீஸ் கென்னியை சூழ்ந்து கொள்கிறது. இடைவேளை முடிந்ததும் வழக்கம் போல  கென்னி போலீஸ்ஸிடம் இருந்தது தப்பித்து விடுகிறார். 


பிறகு என்ன பிளாஷ்பேக் தான். பிளாஷ்பேகில் கென்னியின் உண்மையான பெயர் சிவகுமார் என்று நமக்கு தெரிகிறது. இந்தியாவின் ரா அமைப்பின் முக்கிய ஆபிசர்  விக்ரம். அவருக்கும் அனுஷ்காவிற்கும் கிராமத்தில் கல்யாணம் நடக்கிறது. விக்ரம் ஏன் இந்தியாவில் இருந்தது லண்டன் வந்தார்..?? ஏன் பெயரை கென்னி என்று மாற்றி கொள்கிறார் ..?? ஏன் கொலை செய்கிறார்..??அவரது கண் பார்வை எப்படி பறி போனது..?? முதல் காட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கும் விக்ரமிருக்கு என்ன சம்பந்தம் ?? குண்டு வைத்து யார்..?? இது போன்ற கேள்விக்கான விடையை அறிய விரும்புவார்கள் "தாண்டவம்" படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கொஞ்சம் பொறுமையாக முன்று மாதம் வெயிட் செய்தால் விஜய் டிவியில் படத்தை போடும் போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Human Echolocation
விக்ரம்- வழக்கம் போல் இந்த படத்திலும் தனது முழு உழைப்பை வாரி வழங்கி உள்ளார். ஒரு துளி கூட குறை சொல்ல முடியாத நடிப்பு. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடுடன் நடிப்பதில் கமலுக்கு அடுத்து தமிழ் திரையுலகில் விக்ரம் தான் என்று கண்ணை முடி சொல்வேன். பார்வை அற்ற கேரக்டரில் விக்ரம் கன கச்சிதமாய் பொருந்துகிறார். கண் தெரியாமல் மனித எதிரொலி இடமாக்கம் (Human Echolocation)என்கிற டெக்னிக் முலம் எதிராளிகளை அடித்து விழுத்துக்கிறார். கண் பார்வை இல்லாதவர்கள் ஒலி எழுப்பி அதில் வரும் ரெஸ்பான்ஸ் வைத்து எதிரில்  யார் இருக்கிறார்கள், என்ன இருக்கிறது என்று அறிந்து அதன் படி நடப்பது தான்  Echolocation டெக்னிக். விக்ரம் இந்த டெக்னிக் முலம் எதிரிகளை வீழ்த்தும் காட்சிகள் நம்பும் படியாக உள்ளன. நிறைய இடங்களில் விக்ரமின் முதுமை, மற்றும் கழுத்தில் சுருக்கம் நன்றாகவே தெரிகிறது. 

அனுஷ்கா- பிளாஷ்பேகில் விக்ரமின் ஜோடியாக வருகிறார். இவருக்கு நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. காட்சிகளும் ரொம்பவே குறைவு தான். இவரும் முத்தின பீஸ் மாதிரி தான் தெரிந்தார். விக்ரம்மிற்கு ஏற்ற ஜோடி. லண்டன் டாக்ஸி டிரைவர் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்து உள்ளார். இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது போல, நிறைய காமெடி மொக்கை ரகம், சில "பேஸ் புக்" ஜோக்ஸ் வேறு உபயோகித்து உள்ளார். சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் இந்தியாவில் எடுத்தது போல் எனக்கு தெரிந்தது. லண்டன் அழகியாக நடித்த எமி ஜாக்சனுக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. சும்மா ஒரு பாடலுக்கு மட்டும் பயன் படுத்தப்பட்டு உள்ளார். சிறிது நேரம் பார்வை இல்லாத விக்ரமை லவ் செய்கிறார், அவ்வளவே. ஜெகபதி பாபு விக்ரமின் நண்பராக வருகிறார்.


G.V பிரகாஷின் சில பாடல்கள் ஏற்கனவே மதராசபட்டினம் படத்தில் கேட்ட மாதிரி இருந்தது. பின்னணி இசையும் அவ்வளவு ஈர்க்கவில்லை, சுமார் ரகம் தான். 
ஒளிப்பதிவு பல இடங்களில் கண்ணுக்கு குளுர்ச்சி. இயக்குனர் நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் குடுக்க வேண்டும் என்று தான் நினைத்து படத்தை எடுத்து உள்ளார். கதையும் அது போல் தான், ஆனால் நிறைய ட்விஸ்ட் என்னால் யூகிக்க முடிந்தது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் படம் இன்னும் சிறப்பாய் வந்து இருக்கும்.

தாண்டவம்- ருத்ர தாண்டவம் ஆகி இருக்க வேண்டியது, ஆனால் ஜஸ்ட் மிஸ்.


Friday, July 13, 2012

பில்லா-2 டானின் வரலாறு

ஆக்ஷ்ன், காமெடி, காதல், செண்டிமெண்ட்ன்னு சினிமாவுல பல வகைகள் இருக்கு. ஆக்ஷ்ன்லியே பல வகையான படங்கள் இருக்கு. சில படங்கள் சாதா ஆக்ஷ்ன் படங்களா இருக்கும், ஹீரோ வில்லன் மற்றும் அவரோட கூட இருக்கிற அடியாட்களை கையிலே அடிச்சு தும்சம் பண்ணுவாரு. பார்க்கிற நமக்கும் வில்லனை போட்டு அடிக்கணும்ன்னு தோணும். படமும் பர பரன்னு இருக்கும். தூள், கில்லி மாதிரி படங்களை இந்த லிஸ்ட்ல சேர்க்கலாம். அடுத்தது மிரட்டல் ஆக்ஷ்ன், சும்மா பார்க்கிறவன் கண்ணுல கத்தி, அருவாளை விட்டு ஆட்டுறது, புதுபேட்டை, தடையற தாக்க மிரட்டல் ஆக்ஷ்ன் லிஸ்ட்ல சேர்க்கலாம். படம் பார்பவர்களுக்கு ஒரு மாதிரியான திகில் அனுபவத்தை இந்த மாதிரி மிரட்டல் ஆக்ஷ்ன் படங்கள் ஏற்படுத்தும். இப்ப புதுசா ஸ்டைலிஷ் ஆக்ஷ்ன் படங்கள்ன்னு ஒரு டிரண்ட உருவாகி இருக்கு. செம ஸ்டைலான ஆக்சன் காட்சிகள், எப்போ யாரு யாரை சுடுவாங்கன்னு தெரியாம இருக்கிறது தான் ஸ்டைலிஷ் ஆக்ஷ்ன் படங்களோட ஸ்பெஷாலிட்டி. பில்லா-2 மேல சொன்ன சாதா ஆக்ஷ்ன்ல ஆரம்பிச்சு, மிரட்டல் ஆக்ஷ்ன்ல பயணம் செஞ்சு செம ஸ்டைலிஷா முடியும்.
படத்தோட கதைய அவங்க போஸ்டரிலே சொல்லிட்டாங்க.. " Every Don has a History". இந்த படம் டான்னின் வரலாற்றை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒரு டானின் வாழ்கையை நாம் அருகில் இருந்தது பார்ப்பது போல் இருக்கிறது. ஒரு டான்னின் வாழ்கையை இவ்வளவு தந்துருபமாய் இது வரை யாரும் தமிழ்லில் படம் பிடித்தது கிடையாது. தமிழில் வந்த சிறந்த கேங்க்ஸ்டர் படங்களில் வரிசையில் பில்லா-2 படத்திருக்கு நிச்சியம் இடம் உண்டு. இது சாதாரண தமிழ் சினிமா கிடையாது, ஒரே பாட்டுல ஹீரோ கஷ்ட பட்டு பணக்காரனாக மாறுறது, கெட்டவனா இருக்கிற ஹீரோ ஹீரோயின் அன்பால நல்லவனா மாறுறது, ஹீரோ வில்லன் கூடவே இருந்திட்டு கடைசியில் "ஐயாம் போலீஸ், இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ், உன்ன பிடிக்க தான் மாறுவேசத்துல உன் கூட சேர்ந்து கெட்டவன் மாதிரி நடிச்சேன்னு" சொல்லுறது, போன்ற என்ற எந்த சராசரி விஷயமும் இந்த படத்துல கிடையாது. வேற என்ன தான் இருக்குன்னு கேட்குறீங்களா. இது இருக்கிறது வெறும் "அஜித், அஜித், அஜித் தான். அதுவும் ரொம்ப ரொம்ப ரொம்ப கெட்ட அஜித்...

அகதியா வர அஜித், மெல்ல மெல்ல எப்படி இன்டர்நேஷனல் டான் ஆக மாறுகிறார் என்பது தான் கதையே. முதல வைர கடத்தல்ல தொடங்கி, போதை மருந்துல கால் வச்சு, கடைசியில ஆயுத பிசினஸ்ல முடியுது படம். அஜித் எப்படி அகதியாக மாறுனாறுன்னு படத்துல எங்கேயும் சொல்ல பட வில்லை.  அதே போல் படத்தில் இலங்கை அகதி என்று வார்த்தை எங்கும் வர வில்லை. ஆனா அதுக்குள்ளே அஜித் இலங்கை அகதி, டான் ஆகி வர பணத்துல புரட்சிக்கு உதவி செய்வார்ன்னு கொளுத்தி போட்டுட்டாங்க. தினமலர் பேப்பர்ல இந்த வரிகளை பில்லா வரதுக்கு முன்னாடி போட்டு இருந்தாங்க """அஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இண்டர்நேஷனல் அளவில் ஈழப்புரட்சிக்கு உதவுவதாக கதை....""". இது மாதிரி எல்லாம் படத்துல காட்சி கிடையாது.
அப்புறம் படம் அல்பாசினோ நடிச்ச "SCARFACE" படத்தோட தழுவல் அப்படின்னு ஒரு பேச்சு வேற. அது உண்மை தான். சில காட்சிகள் SCARFACE படத்தில இருந்தது அப்படியே பயன்படுத்தி இருக்காங்க. SCARFACE படத்துல அல்பாசினோ போதை மருந்து விற்க ஒரு ஹோட்டல் அறைக்கு போவார், அவர் அந்த ரூம்ல நுழையும் போது அங்க ஒரு பொம்பளை டிவி பார்த்திட்டு இருக்கும். டீல் பேசிட்டு இருக்கும் போது அந்த கும்பல் பாசினோவையும் அவர் கூட வந்த நண்பனையும் பிடிச்சு வச்சுகிட்டு போதை மருந்தை குடுத்திட சொல்லி மிரட்டுவாங்க. டிவி பார்த்திட்டு இருந்த பொம்பளை திடிர்ன்னு மிஷின் கன் எடுத்து காட்டுற சீன் செமயா இருக்கும். அல்பாசினோவை அந்த கும்பல் ரொம்பவே கொடுமை படுத்துவாங்க, கடைசியில தன்னோட பிரென்ட் உதவியால அல்பாசினோ அந்த ஹோட்டல இருந்தது தப்பிச்சு, அந்த கும்பல் தலைவனை நடு ரோடுல சுட்டு கொல்லுவார். டென்ஷன் எகிற வைக்கும் காட்சி அது, அதே போல ஒரு காட்சி பில்லா படத்திலும் இருக்கும். ஆனால் இதில் பெரிய த்ரில் எதுவும் இல்லாமல் சுமாராய் இருக்கும். அந்த காட்சியில் வில்லன் தேர்வு சரியாக செய்ய பட இல்லை. இன்னும் நன்றாக செய்து இருக்கலாம்.

படத்தில் அஜித் பேசும் வாசங்கள் மிக மிக குறைவே. அத்திபட்டியை தொலைத்து விட்டு பேசிய அஜித்துக்கும் இதில் தேவை படும் போது மட்டும் பேசும் அஜித்க்கும் நிறையவே வித்தியாசங்கள். டான் படங்களின் முன்னோடியாக கருத படும் "GOD FATHER" படத்தில் வசனங்கள் மூலமாவே பார்க்கும் பார்வையாளர்களை மனதில் பயத்தை உண்டு பண்ணுவார் மார்லின் பிராண்டோ. அஜித் கூட அதே போல் முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்று உள்ளார்.
பழைய அஜித் படங்களில் பஞ்ச் டயலாக் என்று சொல்லி கொண்டு ஹை பிட்சில் வெறும் சவுண்ட் மட்டுமே விடுவார்.உ.தா: "நான் தனி மனுஷன் இல்லை, என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு". ஆனால் இந்த படத்தில் அஜித் பேசும் ஒவொரு வசனமும் செம ஷார்ப், கொஞ்சம் அசந்தா நம்ம கழுத்தை கிழித்து விடும். 

படத்தில் அஜித் கொலை செய்கிறார். வெறும் கொலை மட்டுமே செய்கிறார். எதிரி என்று நினைபவர்களை கண்ட படி துப்பாகியால் சுடுகிறார். கேங் ஸ்டார் படத்துல கொலை செய்யாமல் வடையா சுடுவார்கள். வன்முறை அதிகம் தான். ஆனால் வன்முறை இல்லாமல் கண்டிப்பாய் கேங்க்ஸ்டர் வாழ்கையை படம் பிடிக்க முடியாது. ஆனால் என்னை பொறுத்த வரை முகம் சுளிக்க வைக்கும் வன்முறை கிடையாது. பார்க்க கூடியது தான்.

படத்துல ஹீரோயின் வேற இருக்காங்க. பாட்டுக்கு கூட அவங்களை உபயோக படுத்த வில்லை.அப்புறம் படம் இவ்வளவு வசூல் செய்தது, இவ்வளவு செலவு செஞ்சாங்க, இவ்வளவு தியேட்டர்ல போட்டாங்க, ஓடுமா ஓடாதா போன்ற எந்த விஷயமும் எனக்கு சம்பந்தம் இல்லாது. நான் ஒன்னும் படத்தோட டிஸ்ட்ரிபுட்டர் கிடையாது. வெற்றி தோல்வி பத்தி கவலை பட. படம் எனக்கு நல்ல அனுபவத்தை குடுத்திச்சு. எனக்கு படம் ரொம்பவே பிடித்து இருந்தது. அஜித்யின் திரைப்பட கேரியரில் இந்த படத்தை ஒரு மைல்கல் என்றே நான் சொல்வேன்..

பில்லா-2 : A Real Gangster..

பிற சேர்க்கை: நண்பன் JZ எழுதிய கருத்து எனக்கு மிகவும் பிடித்து இருந்தது... அதையும் பதிவில் சேர்த்து உள்ளேன்..:

படத்தில் இறுதிக் காட்சி வரை வன்முறையைக் கையாண்டிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிற என்ற கருத்துக்கு பதில் இதோ:

பில்லா பாகம்-1 நினைவிருக்கிறதல்லவா... அதில் பிரபு பில்லாவின் எழுச்சி பற்றி பில்டப் பண்ணும் சீன்களையும், அஜித் படத்தில் காட்டப்படும் லெவலையும், அவரது சொர்க்க மாளிகையும், அங்கு திரியும் கவர்ச்சி நாயகிகளையும், இருந்தும் அவர்கள் மீதும், நயனின் மீதும் பெரிதாக ஈடுபாடு கொள்ளாமல் விலகிச் செல்வதையும், அவர் பின்னால் காட்டப்பட்ட அடியாள் பலத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்..

இல்லாத இவை அனைத்தையும், உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு டோல்டி தலையில் விழுந்திருக்கிறது.. அவ்வளவு முக்கியமாக காட்டப்படும் பில்லா, அவனது எழுச்சிப் பாதையில் அதிகமான வயலன்ஸையும், அதிகமான கவர்ச்சியையும் பார்க்காமலா வந்திருப்பான்??..

அகதியாக வந்த ஒருவனுக்கு எடுத்த எடுப்பிலேயே இன்டர்நேஷனல் டானாக முடியாது.. படிப்படியாக அவன் முன்னேறுவதைக் காட்டுவததற்கு அதிகப்படியான சண்டைக்காட்சிகள் தேவையே! சண்டைக்காட்சிகள் அலுப்படிக்கிறது என்பதற்காக படத்தின் நீளத்தை கூட்டி காமெடி சீன்களையும், ரொமான்ஸ் சீன்களையும் போட்டிருந்தால் அது கேங்க்ஸ்டர் படம் என்று குறிப்பிடுவத்கே தகுதியற்றதாக மாறிவிட்டிருக்கும்!
தமிழர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. பொங்கியெழுவார்கள் என்பதற்காக கடைசி வரை இந்த மாதிரி படங்கள் வந்து விடாமலா போய்விடும்? குடும்பத்தோடு பார்க்க வேண்டாம், இளகிய மனம் கொண்டவர்ககள், வயது குறைந்தவர்கள் பார்க்க வேண்டாம் என்பதற்குத்தான் "ஏ" சேர்ட்டிஃபிகேட் இருக்கே..எல்லாரும் பார்ப்பதற்காக அல்ல என்று சொன்ன பின்னும் போய் பார்த்துவிட்டு படத்தை 'அதற்காக' குறை கூறுபவர்கள் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

படத்துக்கு A ரேட்டிங் கொடுத்தால் அது படம் வசூல் குவிப்பதற்கான நிகழ்தகவைக் குறைத்துவிடும்தான். ஒத்துக்கொள்கிறேன்.. மாறாக படத்தை U/A ஐ நோக்கி எடுத்திருந்தால், அது படத்தின் கதைக்கு தேவையான intensityஐ குறைத்துவிட்டிருக்கும்..


Sunday, December 18, 2011

Mission Impossible-4 - Ghost Protocol (2011) - ஐமாக்ஸ் அற்புதம்

இந்த பதிவுல நம்ப பார்க்க போற படம் “MISSION IMPOSIBLE-4 GHOST PROTOCOL”. படம் போன வாரம் தாங்க ரிலீஸ் ஆச்சு. நான் ஏன் இந்த படத்துக்கு போனேன், படம் என்னக்கு என்ன மாதிரியான அனுபவத்தை குடுத்திச்சு போன்ற விசயங்களை இந்த பதிவுல பார்போம். படத்துல வெறும் ஆக்க்ஷன், ஆக்க்ஷன் மட்டும் தான்.உங்களுக்கு ஆக்க்ஷன் படங்களை பிடிக்குமா.. நீங்க கண்டிப்பா மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படம் MI-4. MISSION IMPOSIBLE சீரிஸ்ல இந்த படம் நான்காவது பாகமாக வெளிவந்து உள்ளது. இதுக்கு முன்னாடி வந்த முன்று படத்துல நான் முன்றாவது பாகத்தை மட்டும் தான் பார்த்து உள்ளேன் , முதல் ரெண்டு பாகத்தை நான் பார்க்க வில்லை. எனக்கு MI-3 படம் ரொம்ப பிடிச்சிருந்தது. ச்சே MI-1 & MI-2 படத்தை மிஸ் பண்ணிடோம்ன்னு தோணிச்சு. நான் ஏன் MI-1 & MI-2 படத்தை பார்கையிலனா, சின்ன வயசுல என்னக்கு “TOM CRUISEயை” பிடிக்கவே பிடிக்காது. என்னோட சின்ன வயசுன்னா அது “1993 முதல் 2003” வரைக்கும் தான். அதற்கான் காரணத்தை உங்களுக்கு சொல்லறேன், கேளுங்க...
அந்த கால கட்டத்தில் (1993-2003) தான் எனக்கு இங்கிலீஷ் படங்களோட அறிமுகம் கிடைத்தது.அப்போ ஹாலிவுட்காரன் அன்னகோண்டா பாம்பு, டைனோசர், கொடூர குரங்கு, ராட்சஸ பல்லி, வெறி கொண்ட வௌவால், வேற்று கிரகத்து பூச்சி, எகிப்து மம்மி, கியூபாவில் போய் அமெரிக்க அதிகாரிகளை மீட்கும் ரேம்போ, போன்ற வஸ்துக்களை வச்சு தான் படம் எடுத்துகிட்டு இருந்தான். உண்மைய சொல்லனும்னா இந்த மாதிரி படங்கள் தான் தமிழ் நாட்டுல ரிலீஸ் ஆகும். இது போக நம்ப ஜெட்லி மற்றும் ஜாக்கி சான் நடிச்ச...!!!! சைனிஸ் படத்தை இங்கிலீஷ்ல டப் பண்ணி விடுவாங்க...என்னக்கு இந்த சைனிஸ் ஆக்க்ஷன் படங்கள், மற்றும் மேலே சொன்ன பாம்பு, பல்லி வஸ்துக்கள் இருக்குற படங்கள் தான் எனக்கு பிடிக்கும். 
அந்த கால கட்டத்தில ஜெட்லிக்கும் ஜாக்கி சான்க்கும் சண்டை வச்ச யாரு ஜெயிப்பாங்கன்னு நானும் என்னோட நண்பனும் சண்டை போட்டுக்குவோம்..இப்படி பட்ட சினிமா அறிவு இருக்குற எனக்கு “TOM CRUISE யை” பிடிக்காம போனதுல்ல பெரிய ஆச்சிரியமே கிடையாது. என்ன பொறுத்த வரைக்கும் “TOM CRUISEக்கு” பறந்து பறந்து சண்டை எல்லாம் போட தெரியாது, அதனால அவரு படத்துக்கு போய் காசை வேஸ்ட் பண்ண கூடாது அப்படிங்கற முடிவுல நான் ரொம்ப உறுதியா இருந்தேன். அதனாலயே ஏனோ MI-1 & MI-2 படத்தை நான் பார்க்கவில்லை. 

இப்போ என்னோட ஹாலிவுட் சினிமா அறிவை பத்தி உங்களுக்கு கொஞ்சம் ஐடியா கிடைசிருக்கும். சரி அத விடுங்க, இப்போ எனக்கு ஹாலிவுட் சினிமாவை பத்தி கொஞ்சம் அறிவு இருக்கு…ரொம்ப கொஞ்சம் தான். அதனால MI-4 பற்றிய அறிவிப்பு வந்தவுடனே இந்த படத்தை பாத்திட முடிவு செஞ்சுட்டுடேன். அதுவும் IMAXல தான் பார்கிறதுன்னு. சரி இப்போ படத்தோட கதையும், என்னோட அனுபவத்தையும் இப்போ பார்போம். 


ரஷ்யாவின் முக்கிய நகரமான கிரெம்ளின் (Kermlin) சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடிக்கிறது. இந்த சதியை செய்தது யு.ஸ் அரசாங்கத்தின் அமைப்பான IMF என்று ரஷ்யா நம்புகிறது. இரு நாட்டுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதன் ஹண்ட்க்கு (டாம் குரூஸ்) ரஷ்யா குண்டுவெடிப்பிற்கு காரணமான சதிகாரனை கண்டுபிடிக்கும் பொறுப்பு தர படுகிறது சதிகாரனை கண்டுபிடித்து அவன் ஏற்படுத்த போகும் ஆபத்தையும் தடுக்க வேண்டும். இது தான் மிஷ்ன் கோஸ்ட் ப்ரோடோகால் (Ghost Protocol). இந்த மிஷ்ன்க்கு அமெரிக்க அரசாங்கத்தின் எந்த உதவியும் கிடைக்காது, ஏதன் ஹண்ட் மற்றும் முன்று பேர் தான் மொத்த டீம். நான்கு பேர் சேர்ந்து எப்படி வில்லனின் சதியை முறியடித்து அமெரிக்காவை எப்படி காப்பாற்றினார்கள் !!!!! என்பது தான் மிஷ்ன் இம்பாசிபல் (Mission Impossible).
படத்தின் ஆரம்ப காட்சியே அட்டகாசமாய் இருக்கும். அமெரிக்க உளவாளி மாடியில் இருந்து குதிப்பது போன்று ஒரு காட்சி.

அந்த கிரெம்ளின் குண்டுவெடிப்பு, நீங்கள் எதிர்பாராத நேரத்தில் நடக்கும். கண்டிப்பாய் உங்களை உலுக்கி விடும். மிகவும் அற்புதமாய் காட்சிபடுத்த பட்டு இருக்கும்.

துபாயில் உலகிலே மிக உயரமான கட்டிடத்தில் டாம் குரூஸ் ஏறும் காட்சி IMAX கேமராவை கொண்டு படமாக்க பட்டு இருக்கும். IMAXயில் பார்த்தால் அந்த காட்சி வாவ்......சூப்பர் அனுபவம் !!!
அடுத்து அந்த பாலைவன புயலில் நடக்கும் சேஸிங் காட்சிகள், மங்கலான வெளிச்சத்தில் பர பரவென்று நடக்கும் கார் சேஸிங் .... அருமை. !!!!

கில்லர் ஆக (Assassin) வரும் அந்த வில்லி...கண்களாலேயே வில்லத்தனம் செய்யும் காட்சிகள் யப்பா..நல்ல தேர்வு.

படத்தின் டைரக்டர் Brad Bird , இவர் பிக்ஸார் நிறுவனத்திற்காக Ratatouille and The Incredibles போன்ற அனிமேஷன் படங்களை இயக்கி உள்ளார். அனிமேஷன் படங்களை இயக்கிய தன் அனுபவத்தை கொண்டு சிறந்த ஆக்சன் படத்தை கொடுத்துள்ளார்.

படத்தில் இந்திய நடிகர் அணில் கபூர் வேறு உள்ளார். பெரிய வேலை இல்லை. அது போக வில்லன் ஏவுகணை செலுத்துவதற்கு சன் டிவியில் நெட்வொர்க்கை உபயோகிப்பது போன்று காட்சி வைத்து இருப்பார்கள்.

படத்தை IMAX ஸ்கிரீனில் பார்த்தால், அந்த அனுபவம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாய் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் IMAXயில் பாருங்கள்.

My Rating: 7.9/10......