Friday, November 22, 2013

இரண்டாம் உலகம் (2013) - சொதப்பல் செல்வா !!

இரண்டு உலகத்தில் பாரல்லாக நடக்கும் பேண்டஸி கதை தான் "இரண்டாம் உலகம்" என்று படத்தின் ட்ரைலர் பார்த்தவுடனே புரிந்து விட்டது. ட்ரைலர் உடன் நிறுத்தி இருக்க வேண்டும். செல்வா என்கிற சினிமா வெறியன் மீது நம்பிக்கை வைத்து, படம் பார்க்க சென்ற எங்களை இந்த அளவு வதைத்து இருக்க வேண்டாம். சாண்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கிற கொள்கை படி, வீக் டே என்று கூட பாராமல் இன்று படத்துக்கு சென்ற எங்களுக்கு இது மாதிரியான தண்டனை  கிடைத்து இருக்க கூடாது. 

செல்வாவிடம் “நீங்கள் இதுவரை எடுத்த படங்களில் ஒன்றை மொத்தமாக அழிக்க வேண்டுமென்று என்று சொன்னால் எந்தப் படத்தை அழிப்பீர்கள்” என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் “ஆயிரத்தில் ஒருவன்” என்று சொன்னார். ஆனால் இனி மேல் அதே கேள்வியை இப்பொழுது கேட்டால், அவரது பதில் "இரண்டாம் உலகம்" என்று தான் வரும். செல்வாவின் கேரியரில் அவருக்கு அழிக்க முடியாத கெட்ட பேரை இந்த ஒரு படம் சம்பாரித்து குடுத்து விடும் என்று நான் நம்புகிறேன். மிஷ்கினுக்கு முகமுடி போல, செல்வாவுக்கு "இரண்டாம் உலகம்".


இரண்டு உலகம். இரண்டிலும் ஆர்யா - அனுஷ்கா ஜோடி. நிஜ உலகத்தில் வாழும் ரம்யா (அனுஷ்கா) டாக்டர். மதுவை (ஆர்யா) பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆர்யா முதலில் மது வேண்டாம் என்று சொல்கிறார், பிறகு ஓகே சொல்கிறார். பிறகு ரம்யா தனக்கு மது வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு ஓகே சொல்கிறார். படிக்கும் போதே தலை சுற்றுகிறதா ? படத்தில் இன்னும் பயங்கர குழப்பமாக இருக்கும். செல்வாவின் இத்தனை வருட படங்களிலே இது போன்ற மொக்கை காதல் எபிசோட்டை பார்த்து இருக்க முடியாது. 

பேண்டஸி உலகத்தில் யாருக்கும் தான் அடிமை இல்லை என்று சொல்லிகொள்ளும் வீர (!) பெண் வர்ணா (அனுஷ்கா). இவர் மீது மோகம் கொள்கிறார் அதே உலகத்தில் வாழும் ஆர்யா. கவனிக்க மோகம் தான், காதல் அல்ல. இந்த உலகத்தில் காதல், வெக்கம் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. இந்த உலகத்தில் ராஜா வேறு இருக்கிறார். கடவுளும் வாழ்கிறார். சந்தர்ப்ப வசத்தால், ஆர்யா-அனுஷ்கா திருமணம் நடக்கிறது. ஆர்யா பிடிக்காமல் அனுஷ்கா விபரித முடிவு ஒன்றை எடுக்கிறார். அதே நேரத்தில் நிஜ உலகிலும் விபரிதம் ஒன்று நடக்கிறது. அது என்ன விபரிதம் என்று அறிந்துகொள்ள உங்களிடம் அசாத்திய பொறுமை இருந்தால், தியேட்டரில் போய் பாருங்கள். அப்படி பொறுமை இல்லையென்றால் படத்தை பார்க்காமல் இருப்பதே நன்று.


இன்று இரண்டாம் உலகம் படத்திருக்கு போகும் முன்பு, செல்வாவின் ஆனந்த விகடன் பேட்டியை பார்த்துவிட்டு தான் சென்றேன். அவரின் பேச்சில் தான் சினிமாவை காக்க வந்த கடவுள் போலவும், தமிழ் ரசிகர்களுக்கு ரசனையே இல்லை என்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் தமிழ் ரசிகர்களுக்கு ரசனை இருக்கிறதோ இல்லையோ, சகிப்புத்தன்மை ரொம்பவே ஜாஸ்தி. இது மாதிரி மெண்டல் தனமான படங்களை எல்லாம் சகித்து கொள்கிறார்களே. இந்த காவியத்தை முழுசாய் பார்த்த அனைவருக்கும் செல்வா வீடு வீடாய் சென்று, கையை பிடித்து நன்றி சொல்ல வேண்டும்.

ஆர்யா, செல்வா சொன்னதை அப்படியே கேட்டு நடித்து இருக்கிறார். அனுஷ்காவும் அதையே செய்து இருக்கிறார். இருவரும் இயக்குனர் மீது அதித நம்பிக்கை வைத்து, அவர் சொன்னதை அப்படியே செய்து இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பலவீனமான கதையில், நடிகர்கள் என்ன தான் குட்டிகரணம் அடித்தாலும் எடுபட்டு இருக்காது. இது போன்ற செயற்கை தனமாக காட்சிகள் கொண்டு எந்த படமும் வந்தது இல்லை, இனி மேலும் வருமா என்று எனக்கு சந்தேகமே. 


ஆர்யா, அனுஷ்கா தவிர்த்து மற்ற நடிகர்களின் தேர்வில் பெரிய கோட்டை விட்டு உள்ளார் செல்வா. பேண்டஸி உலகில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே ஹிந்தி டப்பிங் நாடகங்களில் வருவது போல் வந்து செல்கிறார்கள். காட்சியமைப்பை பற்றி சொல்லவே வேண்டாம். படுமோசமாய் அமைக்க பட்டு இருக்கிறது. வசனங்கள், ஸ்கூல் டிராமாவில் கூட இதை விட சிறப்பாய் எழுதி இருப்பார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு நிறைய உழைத்து இருக்கிறார்கள். சரியாக சொன்னால் ஆயிரத்தில் ஒருவனை விட நன்றாக இருந்தது.

படத்தின் ஒரே ஆறுதல் பின்னணி இசை மட்டுமே. ட்ரைலரில் வரும் பின்னணி இசையை தான் படம் முழுக்க தவழ விட்டு இருக்கிறார் அனிருத். பாடல்கள், மெல்ல மெல்ல செத்து கொண்டிருக்கும் போது, கழுத்தில் ஏறி மிதிப்பது போல் இருக்கிறது. ஹாரிஸ் சார், அந்த 12B டியூன்னை எப்ப தான் விடுவீங்களோ ? பேண்டஸி உலகத்தை நம் கண் முன்னே கொண்டு வர மிகவும் மெனக்கட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. விஷுவல்ஸ் அனைத்துமே நன்றாக உள்ளது. வலுவில்லாத திரைக்கதை, மொக்கை காட்சிகளை கொண்டதால், இது செல்வாவின் வொர்ஸ்ட் மூவி என்று உறுதியாக சொல்லலாம்.

இரண்டாம் உலகம் - சொதப்பல் செல்வா !!
My Rating: 4.0/10.

சமிபத்தில் எழுதியது : வில்லா (2013)


Tuesday, November 19, 2013

வில்லா (2013) - பயமே இல்லா திகில் படம் !!

தமிழில், இல்லை இல்லை இந்தியாவிலே இது வரை வந்த திகில் பேய் படங்களிலே சிறந்தது எது என்று என்னை கேட்டால் கண்ணை முடி கொண்டு "பீட்சா" என்று சொல்வேன். ஹார்ட் பீட் எகிறும் அளவுக்கு பயத்தை விதைத்து இருப்பார்கள். அது போக கிளைமாக்ஸ் ட்விஸ்ட் யாராலும் அவ்வளவு சீக்கிரம் யூகித்து இருக்க முடியாது. ஹாலிவுடில் பீட்சா ரீமேக் செய்யபடுவதாய் கூட ஒரு செய்தி படித்தேன். அடுத்த பாகத்துக்கான அடித்தளத்துடன் தான் பீட்சா முடிக்க பட்டு இருக்கும். ப்ரம் மேக்ர்ஸ் ஆப் பீட்சா என்கிற விளம்பரத்தோடு வெளியான வில்லா பீட்சாவின் தொடர்ச்சியாய் இருக்கும் என்று தான் நம்பி இருந்தேன். ஆனால் படத்தின் முதல் ட்ரைலரில் ஒரு கதாபாத்திரம் “இது சீக்வலா ?” என்று கேட்க்கும், அதற்கு கதாநாயகன் “இல்ல, இது டோட்டலா வேற கதை” என்று சொல்லுவார். பீட்சாவின் தொடர்ச்சியாக இல்லாமல் இது புது கதைக்களம் என்று இயக்குனர் மிக தெளிவாக குறிப்பிட்டு விட்டார். அதனாலே வில்லாவை பீட்சாவுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் "வில்லா" சராசரி திகில் படத்தின் அனுபவத்தையே எனக்கு குடுத்து ஏமாற்றி விட்டது.


கதையின் நாயகன் ஜெபின் (அசோக் செல்வன்) சாதிக்க துடிக்கும் இளம் எழுத்தாளர். அவரது அப்பா (நாசர்) கோமாவில் படுத்து இறந்து போகிறார். அப்பா இறந்தவுடன், தன் குடும்ப வக்கீல் முலம்  பாண்டிச்சேரியில் தனக்கு ஒரு வில்லா இருப்பது தெரிய வருகிறது. அதை விற்று தான் எழுதிய புத்தகத்தை பதிப்பிக்க விரும்புகிறார். அதனால் அந்த வில்லாவை விற்க தன் காதலி ஆர்த்தியை (சஞ்சிதா ஷெட்டி) கூட்டி கொண்டு பாண்டிச்சேரி செல்கிறார். அந்த வில்லாவில் சில பல ஓவியங்களை பார்க்கிறார். ஜெபின் வாழ்வில் பல வருடங்கள் முன்பு நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாய் அவ் ஓவியங்களை அவர் கண்ணுக்கு தெரிகிறது. அந்த ஓவியங்களை வரைந்தது யார் ?  ஏன் வரைந்தார்கள் ? ஓவியங்களில் வரைந்த இருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தனவா என்கிற சுவாரசிய முடிச்சுகளை சுவாரசியம் இல்லாமல் அவிழ்ப்பது தான் மீதி கதை. 

எனர்ஜியை உருவாகவும் முடியாது, அதை அழிக்கவும் முடியாது. எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு, என்று நாம் எப்போதோ படித்த அறிவியல் பாடங்களை வைத்து கதையை பின்னி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தீபன் சக்ரவர்த்தி. தன் அப்பா வரைந்த ஓவியங்களிலால் ஒருவனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும் திகில் முடிச்சுகளை, எப்படி அவன் எதிர்கொள்கிறான் என்பது தான் கதையின் ஆதார முடிச்சு. இதை வலுவில்லாத திரைக்கதையின் மூலம் சொல்லி சொதப்பி விட்டார். இன்னும் நிறைய பில்ட் வொர்க் பண்ணி இருந்தால் சிறப்பாய் குடுத்து இருக்கலாம்.


மணிவண்ணனின் 100 ஆவாது நாள் படத்தில் கூட, நளனி கனவில் காண்பது எல்லாம் நிஜத்தில் நடப்பது போல் கதை அமைக்க பட்டு இருக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்று எந்த ஜல்லியும் அடிக்காமல், ஏன் அது போன்று நடக்கிறது என்பதருக்கு விஜயகாந்த முலம் மிக எளிமையாக விளக்கி இருப்பார் மணிவண்ணன். ராஜவின் பின்னணி இசை சாதாரண காட்சியை கூட திகில் காட்சி போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும். இதிலும் கனவு போன்றே எதிர்காலத்தை நடப்பதை கணிக்கும் கான்செப்ட் தான், ஆனால் நெகடிவ் எனர்ஜி, பிளாக் மேஜிக், நர பலி என்று ஏதோ ஏதோ சொல்கிறார்கள். சரி திகில் காட்சிகளாவது நன்றாக இருக்குமா என்று பார்த்தால், அதிலும் பெரிய அளவு தாக்கம் ஏற்படவில்லை.

நாயகன் அசோக், படம் முழுக்க இறுக்கமான முக தோற்றத்துடன் தான் வருகிறார். கதையின் தேவைக்கு அப்படி வருகிறாரா, இல்லை அவரின் முகமே அப்படித்தானா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. திகில் காட்சிகளிலும் ஒரே மாதிரியான முகபாவனைகைகள். பீட்சா விஜய் சேதுபதியுடன் கம்பேர் செய்தால் ஒன்றுமே இல்லை. நாயகி சஞ்சிதா ஷெட்டி, சூது கவ்வும் ஷாலுமா. நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. இவரின் கதாபாத்திரத்தை பீட்சா போல் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வைக்கிறேன் என்று சொல்லி குழப்பி கூல் ஆக்கி விட்டார் இயக்குனர்.

பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் கலக்கியிருந்தாலும் படத்தின் திரைக்கதை அவருடைய பின்னணி இசைக்கு ஈடு கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. நெகடிவ் எனர்ஜியை விரட்ட எடுக்க படும் முயற்சியின் போது ஒளிப்பதிவில் கலக்கியிருக்கிறார் தீபக் குமார், ஆனால் பார்வையாளனை பயமுறுத்தும் வகையில் காட்சிகள் இல்லாமல் போனது அவரின் துரதிஷ்டம். கடைசியாக இன்னும் மெனக்கெட்டு கட்டி இருந்தால் வில்லா பேச பட்டு இருக்கும்.

வில்லா - பயமே இல்லா திகில் படம்.
My Rating: 6.2/10.

சமிபத்தில் எழுதியது : FAR CRY 3


Sunday, November 17, 2013

FAR CRY 3 - உயிர் வாழ போராட்டம் (18+)

இந்தியாவில் இருந்த வரைக்கும் Xbox360 தான் என்னுடைய உற்ற தோழனாக இருந்து வந்தந்து. அமெரிக்கா வந்துவுடன் அந்த இடத்தை PS3 எடுத்து கொண்டது. வந்த சிறிது நாட்களிலே PS3 ஸ்லிம் 120GB வாங்கி விட்டேன். இந்தியாவில் கஷ்டமாக கிடைக்க கூடிய கேம்ஸ் இங்கு சுலபமாக கிடைத்தது இன்னும் வசதியாக போய் விட்டது. மாதம் ஒரு கேம் என்று, இதுவரை கிட்டத்தட்ட 7 கேம் விளையாடி முடித்து விட்டேன். இரண்டு பேட்மேன் கேம்களும் அதில் அடக்கம். நான் இது வரை விளையாடியதில் என்னை மிகவும் கவர்ந்த "FAR CRY-3" என்கிற FPS கேம் பற்றிய பதிவு தான் இது. அதித வன்முறை,  சைக்கோ வில்லன்கள், கிராபிகல் செக்ஸ், கொடூர கொலைகள், மற்றும் நாம் வாழ எந்த அளவுக்கும் போகலாம் என்கிற தீம்மை கொண்ட 18+ அமெரிக்கன் கேம். வீடியோ கேம் பிடிக்காதவர்கள் அப்படியே அப்பிட் ஆகி விடுவது நலம்.


கேம் ப்ளாட்: 

ஒரு கேம் வெற்றியடைய முதல் தேவை நல்ல ஸ்டோரி லைன். அது FAR CRY 3 யில் நிச்சியம் இருக்கிறது. கேமின் நாயகன் "ஜேசன் பிராடி" (Jason Brody). 20 வயதே நிரம்பிய அக்மார்க அமெரிக்க வாலிபன். விடுமுறையை கழிக்க தன் அண்ணன், நண்பர்கள், மற்றும் காதலியுடன் பாங்காக் நகரம் வருகிறான். வந்த இடத்தில ஸ்கை டைவிங் செல்கிறான். அதில் விபத்து ஏற்பட்டு ரூக் ஐலேன்ட் என்கிற பகுதியில் தரை இறங்குகிறான். 

ரூக் தீவுகளை தன் கட்டுபாட்டில் வைத்து இருப்பவன் வாஸ் மாண்டினீக்ரோ (Vaas Montenegro). மொத்த நண்பர்களும் வாஸ் மற்றும் அவனது பைரேட்ஸிடம் மாட்டி சிறை படுகிறார்கள். பைரேட்ஸ் சிறையில் இருந்து தப்பிக்கும் வேளையில் ஜேசனின் அண்ணன் "கிரான்ட்" வாஸிடம் மாட்டி தன் உயிரை விடுகிறான். ஜேசன் மட்டும் தப்பித்து ரூக் தீவுகளில் மறைந்து வாழும் "ரக்கியாட்" (Rakyat) பழங்குடியின மக்களை சந்திக்கிறான். ரக்கியாட் மக்களின் பயற்சியில் தேர்ந்த வீரனாக மாறும் ஜேசன், தன் அண்ணனை கொன்ற வாஸ்சை பழி வாங்கி, தன் மீதி நண்பர்களை காப்பற்றி, ரூக் ஐலேன்ட்டை பைரேட்ஸிடம் இருந்து மீட்பது வரை தான் பாதி ப்ளாட்.

கேமின் முதல் பாதி முழுக்க வாஸ் மாண்டினீக்ரோவின் சைக்கோ கொலைகார படையை எதிர்த்து போராட வேண்டும். இரண்டாம் பாதியில் வாஸின் பாஸ் "ஹோய்ட் வோல்கர்" (Hoyt Volker) என்கிற ஸ்லேவ் வியாபாரியை எதிர்த்து போராட வேண்டும். வாஸ் ரூக் தீவின் வடக்கு பகுதியை தன் கட்டுபாட்டில் வைத்து இருந்தால், ஹோய்ட் தெற்கு பகுதியில் கோலோச்சி இருப்பான். இவனது போதை மருந்து சாம்ராஜியத்தை வீழ்த்தி ரூக் தீவிருக்கு முழு சுதந்திரம் பெற்று தருவது தான் மீதி ப்ளாட்.


கேம் ப்ளே:

கேம் ப்ளாட் ஏதோ ஹாலிவுட் படம் போல் தெரிகிறதா. Apocalypse Now படம் கூட FAR CRY 3 போன்றே திரைக்கதை அமைப்பை கொண்டுயிருக்கும். ஒன்ரை மணி நேர படத்திருக்கு திரைக்கதை எந்த அளவு முக்கியமோ, அதே போல் வீடியோ கேமிற்கு கேம் ப்ளே ரொம்பவே முக்கியம். ஒரு கேம் முடிக்க சராசரியாய் 10~15 மணி நேரம் வரை ஆகும். 15 மணி நேரம் சுவாரிசியம் குறையாமல் பார்த்து கொண்டால் தான் அதை கிரேட் கேம் என்று சொல்லுவோம். அப்படி பார்த்தால் FAR CRY 3 கிரேட் கேம் லிஸ்டில் தராளமாய் இடம் பிடித்து விடும். அட்டகாசமான கேம் ப்ளே அனுபவத்தை நமக்கு வழங்குகிறது FAR CRY 3. முதலில் இது ஓபன் வேர்ல்ட் கேம். ஓபன் வேர்ல்ட் என்றால், மிஷன் முடித்தவுடன் நாம் எங்கு வேண்டுமென்றாலும் உலாவலாம். ரூக் தீவுகளை சுற்றி வரலாம். நமக்கு பிடித்தமானதை செய்யலாம். நமக்கு தோணும் போது மெயின் மிஷன்களை விளையாடலாம்.

Apocalypse Now நாயகன் தன்னை வேட்டையாட வருபவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டேயிருப்பான். ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் என்று திருப்பி தாக்க ஆரம்பிப்பான். இந்த கேமிலும் நாயகன் ஜேசன் பிராடி வாஸின் படைகளிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டே இருக்க வேண்டும். அதே நேரம் தன் திறமைகளை வளர்த்து கொண்டே திருப்பி தாக்க வேண்டும். 


வாஸின் கட்டுப்பாடில் இருக்கும் "அவுட் போஸ்ட்களை" விடுவிக்க வேண்டும். அடர்ந்த காட்டில் இருக்கும் கொடிய மிருகங்களை வேட்டையாடி அதன் முலம் வரும் புள்ளிகளை கொண்டு ஜேசனின் துப்பாக்கி சுடும் திறன்கள், பதுங்கி தாக்குதல், வேகமாய் ஓடுதல், பாஸ்ட் ஹீலிங் போன்ற திறன்களை வளர்த்து கொல்லலாம். அது போக தீவில் இருக்கும் ரேடியோ டவர்களை அக்டிவேட் செய்து ரூக் தீவின் புதைந்திருக்கும் மர்மங்களை வெளி கொண்டுவரலாம்.

இந்த கேம் நிச்சியம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தான். வார்த்தைக்கு வார்த்தை ஃபக் வந்து விடும். அது போக முன்று உடலுறவு காட்சி வேறு உண்டு. அதனாலே அமெரிக்காவில் மிக பெரிய ஹிட் அடித்தது. Call of Juarez,  Assassin's Creed போன்ற புகழ் பெற்ற கேம்மை உருவாகிய  Ubisoft நிறுவனம் தான் FAR CRY 3 யின் டெவலப்பர்கள். Ubisoft நிறுவனத்தினரிடம் இருந்து வரும் கேம்களின் கிராபிக்ஸ் தாறுமாறாய் இருக்கும். இதிலும் கிராபிக்ஸ் மிகவும் தந்துருபமாய் இருக்கும். 2012 ஆண்டிற்க்கான சிறந்த அக்ஷன் கேம்கிற்கான விருதினை பெற்றது. இது வரை மொத்தம் 5 மில்லியன் காப்பி விற்பனை ஆகி உள்ளது. FPS அக்ஷன் பிரியர்கள் தவற விட கூடாத கேம் FAR CRY 3.

My Rating: 9.0/10


Sunday, November 03, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா (2013) - ஜென் தத்துவம் !!

ஹிந்தியில் "மிதுன் சக்கரவர்த்தி" என்ற ஒரு நடிகர் இருக்கிறார். அவரிடம் ஒரு சாதனை இருக்கிறது. இந்தியாவிலே அதிக ப்ளாப் படங்கள் குடுத்தது அவர் தான். A மற்றும் B சென்டரில் தான் அவர் படங்கள் ப்ளாப் ஆகும், ஆனால் C சென்டரில் சக்கை போடு போடும். கார்த்தி "அழகுராஜா" போன்ற படங்களில் நடித்து கொண்டே போனால் மிதுன் சாதனையை அசால்டாக முறியடித்து விடுவார். ஒரே வித்தியாசம் கார்த்தி படங்கள் அணைத்து சென்டரிலும் அட்டர் ப்ளாப் ஆகும், மிதுன் படங்கள் C சென்டரில் ப்ளாக்பஸ்டர் கொண்டாடும். "அலெக்ஸ்பாண்டியன்" என்கிற உலக சினிமாவை படம் பார்த்த பிறகு இனி மேல் கார்த்தி படங்களை பார்க்கவே கூடாது என்று உறுதியாய் இருந்தேன். ஆனால் ராஜேஷ் - சந்தானம் கூட்டணி மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கை காரணமாக ஜென் தத்துவத்தை உரக்க சொல்லும்  "அழகுராஜா" என்கிற காவியத்தை பார்க்க சென்றோம். பார்த்து நொந்து நூடுல்சாய் திரும்பி வந்தோம்.


நான் சமிபத்தில் இது போன்ற மரண மொக்கை படத்தை பார்த்ததே இல்லை. இனி மேலும் பார்ப்பேனா என்பதும் சந்தேகமே. அழகுராஜா (கார்த்தி) AAA என்கிற லோக்கல் சேனல் ஓனர் மற்றும் MD, இவரிடம் வேலை பார்க்கும் ஆபிசர் கல்யாணம் (சந்தானம்). AAA சேனலை நம்பர் 1 சேனலாக மாத்தாமல் திருமணம் செய்து கொள்ள போவது இல்லை என்கிற லட்சியம் வேறு. பாய் பிரியாணி சாப்பிட ஒரு கல்யானதிருக்கு செல்லும் கார்த்தி அங்கு தேவி பிரியாவை (காஜல் அகர்வால்) பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ரெகுலர் ராஜேஷ் படங்களில் வரும் நாயகன் போல் லூசு தனமாய் ஏதோ ஏதோ செய்து காஜலின் மனதில் இடம் பிடிக்கிறார். 

காஜலின் குடும்ப பின்னணி தெரிந்தவுடன் அழகுராஜாவின் அப்பா பிரபு திருமணத்துக்கு தடை போடுகிறார். அதற்க்கு மகா திரபையான பிளாஷ்பேக் வேறு. இறுதியில் அழகுராஜாவும் தேவி பிரியாவும் இணைந்தார்களா இல்லையா என்கிற சஸ்பென்ஸ் முடிச்சை, யாரும் படம் பார்த்து அவிழ்க்கும் முயற்சியில் இறங்க வேண்டாம். நீங்கள் யாரும் கஷ்டப்பட்டு படம் பார்க்கவேண்டாம் என்று அந்த  சஸ்பென்ஸசை நானே சொல்லி விடுகிறேன். இறுதியில் அழகுராஜாவும் தேவி பிரியாவும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். டிவியில் கூட பார்க்க லாய்க்கு அற்ற திரைக்காவியம் இது. 


கார்த்தியை நினைத்து பரிதாப பட தான் முடியும். பருத்திவீரன் படத்துடன் நடிகர் "கார்த்தி" இறந்தே விட்டார் என்று நினைக்கிறன். படத்தில் வரும் காட்சியமைப்புகள் மொக்கை தான். அந்த மொக்கை காட்சியமைப்பை மரண மொக்கையாய் மாற்றுவதில் கார்த்தியின் பங்கு மிக பெரியது. கடந்த முன்று படங்களிலும் தனது "ஈ" வாயை மாற்றாமல் நம்மை படுத்தி எடுக்கிறார். 

கார்த்தி காஜலிடம், "நீ நன்றாக பாடுவதாய் உன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வேலையாட்கள் மட்டும் தான் இது வரை சொல்லி இருக்கிறார்கள், வீதில் இறங்கி பாடினால் கல்லை கொண்டு எறிவார்கள்" என்கிற ஜென் தத்துவத்தை  உதிர்ப்பார். ஆனால் அந்த ஜென் தத்துவம் அவருக்கு தான் மிக சரியாய் பொருந்தி இருக்கிறது. இதே போன்று படங்களில் நடித்து மக்களை வதைத்து கொண்டு இருந்தால் கல்லால் தான் அடி வாங்க வேண்டியது வரும்.


காஜல் அக்மார்க் லூசு பெண். வழக்கம் போல் வருகிறார், ஆடுகிறார் அவ்வளவு தான். தமிழ் சினிமாவில் என்று தான் "கதா"நாயகிகளை பார்க்க முடியுமோ தெரியவில்லை. பிரபு, சரண்யாவை குறை கூற முடியாது, தங்களுக்கு வழங்க பட்ட ரோல்லை சரியாய் செய்து இருக்கிறார்கள். கார்த்தியிடம் இருந்து நல்ல படம் வந்தால் தான் ஆச்சிரியம். ஆனால் சந்தானத்திடம் இருந்து மொக்கை படம் வந்தால் பெரிய ஆச்சிரியம். அது இந்த படத்தில் நடந்து இருக்கிறது. 

படத்தின் மிக பெரிய லெட் டவுன் சந்தானம் தான். கடைசியாக சந்தானம் காமெடி எடுபடாமல் போன ரெண்டு படமும் கார்த்தியின் திரைக்காவியங்கள் தான். இதற்கு முன்னால் அலெக்ஸ்பாண்டியன். ப்ளீஸ், சந்தானம் இனி மேல் கார்த்தி படங்களில் தயவு செய்து நடிக்காதீர்கள். 

இயக்குனர் ராஜேஷ்க்கு வேக் அப் கால். படத்தை எடுத்துடன் ஒரு முறை போட்டு பார்த்து இருக்கலாம். பார்த்து இருந்தால் கண்டிப்பாய் ரீலீஸ் செய்து இருக்க மாட்டார். முன்று படங்களில் சம்பாதித்து பேரை ஒரே படத்தில் கோட்டை விட்டு விட்டார். இசை மாற்றும் பாடல்கள் ஓகே ரகம். "உன்னை பார்த்த நேரம்" பாடல் மட்டும் எனக்கு பிடித்து இருந்தது. படம் நமக்கு கற்று தரும் ஜென் தத்துவம் பொறுமை. ஆர்ட் ஆப் லிவிங் போய் வராதா பொறுமையும், சகிப்புத்தன்மையும் இந்த படத்தை முழுசாய் பார்த்ததின் முலம் எனக்கு கிட்டியது. நன்றி ராஜேஷ் M.

ஆல் இன் ஆல் அழகுராஜா  - ஜென் தத்துவம்
My Rating: 3.5/10.