Sunday, June 23, 2013

ராஞ்ஜனா (2013) - தலைவலி இலவசம் !!

தமிழ்நாட்டில் இருந்து தனுஷிருக்கு முன்பு வரை பல தமிழ் நடிகர்கள், தமிழ் டைரக்டர்ஸ் பாலிவுட் சென்று தங்கள் முத்திரையை பதிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள், அனைவருக்கும் கிடைத்தது என்னவோ தோல்வி தான். கமல், ரஜினி, சூர்யா என்று இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். தமிழில் அழியா காவியங்களை குடுத்து வந்த மணிரத்தினம் தனது "ரத்தினதன்மையை" இழந்தது அவரது ஹிந்தி என்ட்ரிக்கு பிறகு தான் என்று நம்மால் நிச்சியமாக கூற முடியும். ஹிந்தி ஆடியன்சையும் கவர வேண்டும் தமிழ் ஆடியன்சையும் கவர வேண்டும் என்று அவர் எடுத்த சமீபத்திய கொத்து பரோட்டா திரைப்படங்களே அதருக்கு சாட்சி. பாலிவுட் தன் இரு கரங்களையும் கூப்பி வரவேற்று ஏற்று கொண்ட ஒரே தமிழர் ஏ.ஆர் ரஹ்மான் மட்டும் தான். 

தற்போதிய டிரென்ட் படி ஹிந்தி ஆடியன்சை பொறுத்த வரை ஹீரோ என்பவருக்கு வெள்ளை தோலு, கிளீன் ஷேவ் மூஞ்சி, சிக்ஸ் பேக்ஸ் போன்றவை நிச்சியமாக இருக்க வேண்டும், பேசிக் குவாலிட்டிஸ் என்று சொல்லலாம். யார் வேண்டுமென்றாலும் ஹீரோ ஆகலாம் என்பது ஹிந்தி சினிமா உலகில் நடக்காத காரியம். ஆனால் இதில் எந்த குவாலிட்டிசும் இல்லாத ஒரு தமிழ் நடிகரால் ஹிந்தி படத்தில் என்ட்ரி குடுக்க முடியும் என்றால் அது "கொலைவெறி" புகழ் தனுஷால் மட்டுமே முடியும். கொலைவெறி புகழ் மற்றும் அவருக்கு நன்றாக வரும் சைக்கோ நடிப்பை மட்டுமே வைத்து பாலிவுட்டில் சாதித்து விடலாம் என்ற தனுஷின் ஆசைக்கு பதில் சொல்லும் படம் தான் "ராஞ்ஜனா".


ராஞ்ஜனா படம் யுஸ்ஸில், அதுவும் நான் வசிக்கும் சாண்டியாகோ நகரில் ரீலீஸ் ஆகி உள்ளது என்றால் அதருக்கு காரணம் படத்தின் இசைஅமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மட்டுமே. இங்கு ரஹ்மானின் அணைத்து படங்களுக்கு ரீலீஸ் ஆகும் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டை சேர்ந்த தனுஷ் நடித்த படம், மற்றும் ரஹ்மான் இசை எங்களை தியேட்டருக்கு அழைத்து சென்றன. 

படத்தின் மீது எனக்கு பெரிய அளவு எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. சும்மா ரெண்டு மணி நேரம் கடத்தினால் போது என்கிற மனநிலையில் தான் சென்றேன். ஆனால் ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இரண்டு மணி நேரம் எனக்கு இருண்ட அறையில் இருபது மணி நேரம் கட்டி வைத்தது போல் கொடூரமாய் நகர்ந்து போனது. கடைசிக்கு கடுமையான தலைவலியுடன் தான் திரும்பி வந்தோம்.

படத்தின் கதை அரத பழசான காதல் கதை தான். அதில் புதுமையை புகுத்துகிறேன் என்று நம்மை வாட்டி வதைக்கிறார்கள். தனுஷ் வாரனாசியில் செட்டில் ஆனா தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஐயர் பையன். ஆறு வயதிலே முஸ்லிம் செல்வந்தரின் ஐந்து வயது மகளான் சோனம் கபூரை லவ்ஸ் செய்கிறார்.அதுவும் பார்த்தவுடனே. அவரது தெய்வீக காதல் வளர்ந்து விருச்சம் ஆகிறது. பத்தாவது படிக்கும் போது தனது மணி கட்டை அறுத்து (!!) சோனம் கபூரின் இதையத்தில் இடம் பிடிக்கிறார். 


சோனம் வீட்டில் விஷயம் தெரியவர அவரை ஊர் விட்டு ஊர் கடத்துகிறார்கள். எட்டு வருடம் கழித்து சோனம் திரும்பி வந்தால், தனுஷை பார்த்து "நீ யார், உன்னையை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கே" என்று கேட்கிறார். சின்ன வயசுல வந்தது பப்பி லவ், அதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்க கூடாது என்று கிளாஸ் எடுக்கிறார். தனுஷுடன் சேர்ந்து பாம்பே படத்தை போல் அருமையான ஹிந்து முஸ்லிம் காதல் கதையை சொல்லுவார்கள் என்கிற ஆர்வமாய் இருந்த நம் மீதும் சேர்ந்தே இடி விழுகிறது. நொந்து போன தனுஷ் மீண்டும் மணி கட்டை அறுத்து கொள்கிறார். படத்தில் எத்தனை பேர் எத்தனை முறை மணி கட்டை அறுக்கிறார்கள் என்கிற போட்டியே வைக்கலாம். எண்ணுவது கஷ்டம்.

சோனம் டெல்லியில் படிக்கும் போது புரட்சி புயல் அகரம் (அபய் தியோல்) விரும்பிய கதையை நமக்கும் தனுஷுக்கும் சேர்த்து சொல்கிறார். ஷாஜகான் விஜய் போல் எங்கள் காதலை நீ தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். அதருக்கு தனுஷ் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை திரணி இருந்தால் (!!) தியேட்டரில் இந்த படம் அம்பிகாவதி என்கிற பெயரில் தமிழில் வரும் போது போய் பார்த்து கொள்ளுங்கள். படத்தின் முதல் பாதி தனுஷிருக்கு மிகவும் பரிச்சியமான ரோல், அதாங்க ஸ்டுடென்ட் ரோல். தாடி மீசையை எடுத்து எண்ணை வைத்து படிய சீவி, லூஸ் ஷர்ட் போட்டு பல்லு தெரியாமல் சிரித்தால் ஸ்டுடென்ட் கேரக்டர் ரெடி. 

3 படத்தில் நாம் பார்த்த அந்த ஸ்டுடென்டுக்கும் இதருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டாம் பாதியில் காலேஜ் புரட்சி படையை வழி நடத்தி புரட்சி செய்யும் வேலை. "வேட்டையாடு விளையாடு" படத்தின் லொள்ளு சபா வெர்ஷனில் பேசியே கழுத்து அறுத்து கொல்லுவார்கள் இளாவும், அமுதனும். அதே போல் இதில் தனுஷ் பேசியே புரட்சீசீ செய்கிறார். யப்பா முடியல சாமி. தனுஷ் கதாபாத்திரம் தான் படத்திலே மிகவும் குழப்பமானது, எந்த காட்சியில் எப்படி ரீயாக்ட் செய்வார், என்ன முடிவு எடுப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. 


சோனம் கபூர் அழகாக வருகிறார், அளவாக நடிக்கிறார். தில்லி யுனிவெர்சிட்டியில் அபய் தியோல் மீது இவருக்கு காதல் அரும்பும் காட்சிகளில் மிகவும் க்யூட் எக்ஸ்ப்ரஷன்ஸ் வெளிப்படுத்தி இருப்பார். அபய் தியோல் வினவு ஸ்டைலில் பத்து பேரை வைத்து கொண்டு கருப்பு சட்டை மாட்டி கொண்டு மாணவர் புரட்சி செய்கிறார். நெம்ப கஷ்டம்..!! படத்தில் அவர் செய்த ஒரே நல்ல காரியம் சோனம் கபூருக்கு காலேஜ் சீட் வாங்கி தருவது தான். மற்ற படி ஒன்றுமே செய்யாமல் எலெக்ஷனில் நின்று ஆல்மோஸ்ட் டெல்லி சி.எம் ஆகி விட்டது போல் பில்ட் ஆப் மட்டும் குடுக்கிறார். மாணவர் புரட்சி எபிசோடுகள் பாதாளத்தில் இருந்த படத்தை அதள பாதாளத்தில் தள்ளி விடுகின்றன. 

படத்தில் உருபடியான பார்ட் என்று சொன்னால் அது இசை மற்றும் ஒளிப்பதிவு. நட்டி என்கிற நடராஜன் தான் ஒளிப்பதிவு, வாரணாசி ஹோலி பண்டிகை காட்சிகளில் இவரின் கேமரா விளையாடி உள்ளது. தனுஷ் சோனம் சிறு வயது காதல் எபிசோடில் ரஹ்மான் பின்னணி இசையில் அட்டகாச படுத்தி இருப்பார். குடுத்த காசுக்கு பாட்டு மட்டும் தான் கேட்க்கும் படி உள்ளது. படத்தின் ஒரே ஆறுதல் பாரின் பாட்டு இல்லை, தனுஷ் சட்டையை கழட்டி இடுப்பில் கட்டி சண்டை போடவில்லை என்பது தான். தனுஷின் ஹிந்தி என்ட்ரி தமிழு சினிமாவுக்கு நல்லது தான், இவரை பார்த்து சிம்புவும் சில காலம் மும்பையில் குடி ஏறுவார். தனுஷ் இதே போன்ற படங்களில் நடிங்க, தமிழ் பக்கமே வந்துராதீங்க.

ராஞ்ஜனா (2013) - தலைவலி இலவசம் !!
My Rating: 5.6/10......


Wednesday, June 19, 2013

தில்லு முல்லு (2013) - சிரிப்பே வராத காமெடி படம் !

தில்லு முல்லு (2013) படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எவர் கிரீன் முழு நீள காமெடி படமான தில்லு முல்லு (1981) படத்தின் ரீமேக் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இன்றும் கே டிவியில் ரஜினி நடித்த தில்லு முல்லு படத்தை போட்டால் இருக்கும் வேலையை அப்படியே போட்டு விட்டு படம் பார்க்க உட்கார்ந்து விடுவேன். ரஜினிக்கும் முழு நீள காமெடியும் வரும் என்பதை நிருபித்த படம். சீரியஸ் இரண்டு பொண்டாட்டி கதைகள், குழப்பமான இடியாப்ப குடும்ப சிக்கல் கதைகள்  மட்டுமே எடுக்க தெரிந்தவர் என்று பெயர் பெற்ற கே. பாலச்சந்தர் தன்னாலையும் காமெடி படம் இயக்க முடியும் என்று நிருபித்த படம். "கோதாவரி கோட்டை கிழிடி" புகழ் விசு தான் பழைய தில்லு முல்லு படத்திருக்கு திரைக்கதை எழுதினார் என்பதை அவர் இந்த படத்தின் மீது கேஸ் போட்டவுடன் தான் நாம் அனைவரும் அறிந்த கொண்டிருப்போம். 

படம் வெளிவந்த காலத்தில் ரஜினி மிக பெரிய அக்ஷன் ஹீரோவாக வளம் வந்துகொண்டு இருந்தார், அவரின் அக்ஷன் ஹீரோ இமேஜ் உடைத்து காமெடி ஹீரோ இமேஜ் ஏற்படுத்தி குடுத்ததும் இந்த படம் தான். அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன் என்கிற ரஜினி என்ட்ரி ஆகும் ஒரு காட்சி போதும் ரஜினி கிளாஸ் நடிகர் என்பதை நிருபிக்க. இந்திரன்/சந்திரன் என்று மீசை வைத்து/மீசை இல்லாமல் இரு கதாபாத்திரங்களில் ரஜினி பிரமாத படுத்தி இருப்பார். மீசையை எடுக்கும் காட்சியில் ரஜினி நவரச முக பாவங்களை அருமையாக வெளி படுத்தி இருப்பார். இப்படி பட்ட கிளாசிக் காமெடி படத்தை ரீ-மேக் செய்யும் போது ஒரிஜினல் படத்தின் பக்கத்திலாவது வர வேண்டாம்மா, வெகு தூதூதூதூதூதூதூதூரம் தள்ளி இருக்கிறது தில்லு முல்லு (2013).


உலக நாயகன் + சூப்பர் ஸ்டார் பட்டங்களை இணைத்து அகில உலக சூப்பர் ஸ்டார் "சிவா" என்கிற டைட்டில் கார்டுடன் படம் ஆரம்பிக்கும் போதே மைல்ட் டவுட். சரி பழைய படத்தில் கமல் வக்கீலாக ஒரு கேரக்டர் செய்து இருப்பார், கமல் + ரஜினியின் கதாபத்திரங்களை தூக்கி சாப்பிடுவது போல் மிர்ச்சி சிவா கலக்கி இருப்பார் என்று பார்த்தால், பார்க்கும் நமக்கு தான் வயறு கலங்கி விடுகிறது. படம் முழுக்க ஒரே எக்ஸ்பிரஷன் தான். 

கொஞ்சமாவாது மாற்றம் வேண்டாமா ? பார்க்கும் நமக்கு சலிப்பு தான் ஏற்படுகிறது. ஸ்பூப் படமான் "தமிழ்படத்தில்" இவரின் ஒரே மாதிரியான முகபாவம் ஓகே, அதன் பிறகு வந்த எல்லா படங்களிலும் அதையே செய்து கொண்டு இருந்தால், பார்க்கும் தமிழ் மக்களுக்கு தான் கஷ்டம். பவர் ஸ்டார் இவரை விட நன்றாக நடிப்பார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.  


முதல் காட்சியில் அப்பு கமல் போல் சிவா நடிக்க "லம்பா லேகியத்தை" சாப்பிட்டு அவர் வளர்ந்து விடுவது போல் ஒரு மொக்கை காமெடி, அந்த ஒரு காட்சி போது படத்தின் காமெடி வறட்சியை சொல்ல. சிவாவின் பூர்விக வீடு கோர்ட் கேஸில் பறிபோகிறது, அதனால் அவரின் மாமா இளவரசின் யோசனை படி பிரகாஷ்ராஜ் நடத்தும் மினரல் வாட்டர் கம்பெனிக்கு இன்டர்வியூ வருகிறார். தேங்காய் சீனிவாசன் பின்னி பெடல்யெடுத்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ். வழக்கம் போல் மனிதர் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து உள்ளார், சரியாக சொன்னால் இவர் மட்டும் தான் படத்தில் நடித்து உள்ளார். 

பசுபதி என்கிற தந்து பெயருக்கு ப- பழனி மலை, சு- சுவாமி மலை, ப- பழமுதிர்சோலை தி- திருத்தணி என்று புது விளக்கம் குடுத்து ஏமாற்றி அந்த கம்பெனியில் வேலைக்கு சேருகிறார் சிவா. ஐபில் மேட்ச்சுக்கு அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று போகும் சிவாவை மொபைல் வீடியோ ஆதாரத்தை வைத்து கையும் களவுமாக பிடிக்கிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் அது தான் இல்ல, தனது தம்பி கங்குலீ என்று பொய் சொல்லி மீசைக்கு பதில் தந்து தம்பிக்கு பூனை கண் என்று ரீல் விடுகிறார். தம்பி கதாபாத்திரத்திலும் கொஞ்சம் கூட மொடுலேஷன் மாற்றாமல் வந்து நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார். அதன் பிறகு பிரகாஷ்ராஜ் பொண்ணை லவ்லி சில பல மொக்கை காமெடிக்கு பிறகு எப்படி கரம்பிடிக்கிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


பழைய கிளாச்சிக் படத்தில் இருந்து சில காட்சிகள் மாற்றி எடுத்து உள்ளார் இயக்குனர் பத்ரி. ஆனால் எந்த காட்சியிலும் புதுமை இல்ல. சிவாவின் நண்பராக பரோட்ட சூரி வருகிறார். அவர் கதாபாத்திரம் காமெடியா இல்ல சீரியஸ் என்று கடைசி வரைக்கும் புரியவில்லை. சௌகார் ஜானகி கலக்கிய அம்மா பாத்திரத்தில் கோவை சரளா. கொஞ்சமும் பொருந்தவில்லை. பிரகாஷ் ராஜ் சந்தேகத்துடன் இவரைப் பார்க்க வரும் நேரங்களிலெல்லாம் நாக்கில் வேலைக் குத்தி அவரை உட்கார வைத்து விடுகிறார்கள். மற்ற நேரங்களில் சென்னை தமிழ் பேசுகிறேன் என்று சும்மா கத்தி கொண்டே இருக்கிறார். படத்தின் இன்னொரு பெரிய மைனஸ் கதாநாயகி இஷா தல்வார். மும்பை இறக்குமதி போல் தெரிகிறார். முகத்தில் ஒரு களை இல்லை. நடிப்பு....? எந்த கடையில் கிடைக்கும் !!!

 படத்தின் ஒரே அறுதல் சிவாவின் சின்னச் சின்ன டைமிங் வசனங்கள் தான். நீங்க பேஸ் புக்ல இருக்கீங்களா, என்று பிரகாஷ்ராஜ் கேட்க இல்லீங்க நான் மைலாபூர்ல இருக்கேன் போன்ற சில பல வசனங்கள் ஸ்மைல் வரவைக்கிறது, மற்ற படி கிளாச்சிக் தில்லு முல்லு போல் குபீர் சிரிப்பை வரவைக்கும் காட்சிகள் படத்தில் ஒன்றுமே இல்ல. கிளைமாக்ஸ் காட்சியில் "ஆங்கிரி பேட் மூக்கா" என்று சந்தானம் என்ட்ரி குடுத்து படத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார். கிளைமாக்ஸ் காட்சி சுந்தர்.சி பாணி ஆள் மாறாட்ட காமெடி முயற்சி, பரவாயில்லை ராகமே. 

முதல் முறையாக எம்எஸ்வி - யுவன் இசைக் கூட்டணி, தில்லு முல்லு டைட்டில் ரீமிக்ஸ் அசத்தலாக உள்ளது. ராகங்கள் பதினாறு... பாடல் மட்டும் கேட்க்கும் படி உள்ளது. தமிழ் நாட்டில் வசூல் ரீதியில் படம் வெற்றி என்று நியூஸ் படித்தேன். நமது மக்களின் காமெடி சென்ஸ் மீது கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டது. இப்பொழுது எல்லாம் கலைஞர் அரசியல் அறிக்கைகள் விடுவது இல்ல போல, அதனால் தான் இந்த மாதிரி மொக்கை காமெடி படங்கள் ஹிட் அடிக்கிறது. !!!!

தில்லு முல்லு (2013) - சிரிப்பே வராத காமெடி படம் !

My Rating: 6.0/10......


Sunday, June 16, 2013

Man of steel (2013)- நீங்க இன்னும் நல்லா வளரனும் தம்பி !

ஹாலிவுடில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று எப்பொழுதும் தனி மவுசு உண்டு. வார்னர் பிரதர்ஸ் அல்லது 20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்திருக்கு வருவாய் குறைவது போல் இருந்தால், எடுடா சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்சை என்று பழைய காமிக்ஸ் கதையை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் ரீ மாடல் பண்ணி கொள்ளை லாபம் பார்த்து விடுவார்கள். காமிக்ஸ் உலகை பொறுத்த வரை இரண்டு பெரிய நிறுவங்கள் உண்டு. மார்வெல் காமிக்ஸ் மற்றும் டி.சி. காமிக்ஸ். இவர்களுக்கு என்று தனி தனி சூப்பர் ஹீரோக்கள், தனி தனி ரசிகர்கள் பட்டாளம் வேறு இருப்பார்கள். நம்ம ஊரில் ரஜினி-கமல், அஜித்-விஜய், ரசிகர்களிடையே மற்றும் ர.ர-உ.பி கழக கண்மணிகள் இடையே நடைபெறும் பேஸ்புக் சண்டையை விட படு பயங்கரமாய் இவர்கள் மோதி கொள்வார்கள். மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களில் முக்கியமானவர்கள் கேப்டன் அமெரிக்கா, X-மென், ஹல்க், ஸ்பைடர் மேன், பிளேட், அயர்ன் மேன், வால்வரின், மற்றும் தோர். மார்வெல் கதாபாத்திரங்களில் நான்கு சூப்பர் ஹீரோஸ் இனைந்து சாகசம் செய்தால் அதை "அவெஞ்சர்ஸ்" என்று கூறுவார்கள். மார்வெல் ரசிகர்களில் பெரும்பாலோனர் 18 வயசுக்கு கீழ் உள்ள டீன் ஏஜ் குழந்தைகள் தான் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. மார்வெல் கதாபாத்திரங்கள் செய்யும் சாகசங்கள் அணைத்து குழந்தைகளை கவரும் விதமாகவே இருக்கும். இவர்களின் காப்புரிமையை வைத்து இருப்பது 20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம். சரியாய் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எதாவது ஒரு மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து படம் எடுத்து குறைந்தது $500 மில்லியன் சம்பாரித்து விடுவார்கள். உலகிலே அதிக வசூல் (கிட்ட தட்ட $2b) செய்த படமாக இன்றும் இருப்பது "தி அவெஞ்சர்ஸ்" என்பதே இவர்களின் பேன் பேஸ்க்கு தக்க சான்று.


டி.சி. காமிக்ஸ் ஹீரோக்களில் முக்கியமானவர்கள் பேட் மேன், சூப்பர் மேன் , கிரீன் லான்டர்ன் (Green Lantern) மற்றும் வாட்ச்மேன் கதாபத்திரங்களை கூறலாம். இவர்களில் எனக்கு பிடித்த ஹீரோ பேட் மேன். அதற்க்கு முக்கிய காரணம் கிறிஸ்டோபர் நோலன் என்பதில் சந்தேகமேயில்லை. சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று புதிய வரைமுறையை எழுதியவர் அவர். சூப்பர் ஹீரோ படங்கள் என்றால் வெறும் கிராபிக்ஸ் அக்ஷன் (மார்வெல் படங்கள்) மட்டுமே என்று இருந்து வந்த நிலையில், பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் படங்களில் அருமையான திரைக்கதை, உனர்வுபூர்வமான நடிப்பு, கண்கலங்க வைக்கும் காட்சிகளையும் அட்டகாசமான ரியல் அக்ஷன் காட்சிகளை சேர்த்து ஒரு புதிய இலக்கணத்தை ஏற்படுத்தினார் நோலன். நோலனின் பேட் மேன் சீரீஸ் முன்பு வரை வார்னர் பிரதர்ஸ் டி.சி. காமிக்ஸின் பல கதைகளை திரைப்படமாக எடுத்து கையை சுட்டு கொண்டு இருந்தது. வார்னர் பிரதர்ஸ் நோலனின் பேட் மேன் சீரீஸ் முலம் பல படங்களில் விட்டதை அந்த முன்று படங்கள் முலம் மீட்டு விட்டார்கள். 

நோலனின் பேட் மேன் சீரீஸ் முன்பு வரை வந்த பேட் மேன் படங்கள் எல்லாம் படு திராபையான படங்கள். எல்லாம் அதள பாதாள தோல்வியை தழுவிய படங்கள். சரியாக சொன்னால் டி.சி. காமிக்ஸ் கதாபாத்திரங்களை நடித்து வார்னர் பிரதர்ஸ் எடுத்து வெளி வந்த அனைத்து படங்களும் தோல்வி படங்கள் தான். போட்ட மூதல் கூட திரும்பி வராத படங்கள் அவைகள். அந்த லிஸ்டில் சூப்பர் மேன் படங்களும் அடங்கும். Man of steel படத்திற்கு முன்பு வரை எந்த சூப்பர் மேன் படமும் உருப்படியாக வந்தது இல்லை. இதற்கு முன்பு வரை வந்த எந்த சூப்பர் மேன் படங்களின் சாயலும் இந்த படத்தில் இருக்காது என்று விளம்பரம் செய்ய பட்டது. அது போக Man of steel படக்குழுவில் கிறிஸ்டோபர் நோலன் வேறு இடம் பிடித்து இருந்தார், டைரக்டராக இல்லாமல் இந்த முறை தயாரிப்பாளராக களம் இறங்கி இருந்தார். படத்தை டைரக்ட் செய்தது 300 பருத்தி வீரர்கள், WatchMen போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஸாக் ஸிண்டர்(Zack Snyder). இவருக்கு இது இரண்டாவது சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட். கதை உருவாக்கத்தில் நோலனின் பங்கும் இருந்தது.


 படத்தில் சூப்பர் மேனாக நடித்து இருப்பது ஹென்றி கெவில் (Henry Cavill). இவர் பலர் அறிந்திராத யூ.கே டிவி நாடக நடிகர். டிவி சீரியல்களில் மட்டுமே நடித்து வந்தவருக்கு Man of steel தான் பெரிய பிரேக். இவர்கள் கூட்டனியில் பெரிய எதிர்பார்ப்புடன் வந்த Man of steel டி.சி. காமிக்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால், ஓர் அளவுக்கு பூர்த்தி செய்ததே என்று சொல்வேன். அது என்ன அளவு என்றால், வசூல் ரீதியாக படம் பெரிய வெற்றி படம், ஆனால் தொய்வான திரைக்கதை, ஓவர் கிராபிக்ஸ் அக்ஷன் காட்சிகள் என்று படம் என்னை அவ்வளவாய் கவரவில்லை.

அணைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் புல் டைம் ஆக உலகை காக்கும் வேலை தான் செய்வார்கள், தீய சக்திகளிடம் இருந்து உலகத்தை காத்த நேரம் போக காதலிகளை லவ்வுவார்கள். நாம் பார்க்க போகும் Man of steel படத்தின் ஹீரோ சூப்பர் மேனும் உலகத்தை காக்கும் அதை வேலையை தான் செய்கிறார், அந்த வேலையை இன்னும் கொஞ்சம் சுவாரிசியமாக செய்து இருக்கலாம். மாற்ற சூப்பர் ஹீரோக்களிடம் இருந்து ரொம்பவே வித்தியாசமானவர் "சூப்பர் மேன்". உண்மையில் இவர் மனித குலத்தை சேர்ந்தவர் கிடையாது. பூமியைவிட பலநூறு மடங்கு டெக்னாலஜியில் முன்னேறிய கிரிப்டான் கிரகம் சேர்ந்த மனிதர் தான் நம்ம ஹீரோ. கிரிப்டான் கிரகத்தில் இருக்கும் வளங்கள் எல்லாம் அழிந்த பிறகு அந்த கிரகம் அழிவை நோக்கி பயணிக்கிறது. அந்த கிரகத்தில் இயற்கையான முறையில் பிறந்த குழந்தையான் கேல்-எல்லை (சூப்பர் மேன்) விண்கலம் முலம் ஏற்றி பூமிக்கு அனுப்புகிறார் அந்த குழந்தையின் தந்தை ஜோர்-எல் (Russell Crowe).அதைத் தடுப்பதற்காக ஏற்படும் சண்டையில் ஜெனரல் ஸோடு (Michael Shannon) ஜோர்-எல்லை கொன்றுவிடுகிறான் அந்த கொலை குற்றதிருக்கு தண்டனையாக ஸோடு  மற்றும் அவனது படை வீரர்கள் கிரகம் விட்டு கிரகம் கடத்துகிறது கிரிப்டான் அரசாங்கம். அதன் பிறகு கிரிப்டான் கிரகமே அழிந்து போகிறது.


விண்கலத்தில் பூமிக்கு வந்த கேல்-எல்லை ஒரு விவசாய குடும்பம் கண்டு எடுத்து கிளார்க் கென்ட்ட என்று பெயர்யிட்டு வளர்கிறார்கள். வளர வளர கிளார்கிருக்கு தனக்கு இருக்கும் அறிய சக்திகள் பற்றி தெரிய வருகிறது. ஆனால் தன்னிடம் இருக்கும் சக்திகள் பற்றி வெளியில் சொன்னால் எங்கே தன்னை மக்கள் ஒதுக்கி விடுவார்களோ என்று அஞ்சி யாருக்கும் சொல்லாமல் வாழ்கிறான். தன் தந்தையிடம் மட்டும் சொல்கிறான். அவனது தந்தை "கிளார்க் பூமியை சேர்ந்தவன் கிடையாது" என்கிற உண்மையை சொல்லி, கிளார்க் பூமிக்கு அனுப்பட்ட நோக்கத்தை தேடி கண்டுபிடிக்க சொல்கிறார். கிளார்க் நாடோடி போல் தன் பிறப்பின் ரகசியத்தை தேடி உலகை சுற்றி வருகிறான். அந்த தேடலில் அவனுக்கு தான் யார், தன்னுடைய உண்மையான தந்தை பற்றி தெரியவருகிறது. கிளார்க்கின் சிறு வயது சம்பவங்கள், மற்றும் அவன் நாடோடியாய் அலையும் சம்பவங்கள் எல்லாமே நான்-லினியர் பாணியில் சொல் பட்டு இருக்கும். ஆனால் குழப்பம் இல்லாமல் நமக்கு புரியும். கிளார்க்கிருக்கும் அவனது வளர்ப்பு தந்தைக்கும் நடக்கும் உரையாடல்கள் மட்டுமே சுவாரிசியமாக இருந்தது. மற்றவை அனைத்தும் ஜஸ்ட் அனதர் மூவி போல் தான் இருந்தன. 

கிளார்க் தனது பிறப்பின் ரகசியம் அறிந்த பிறகு சரியாய் ஜெனரல் ஸோடும் அவனது படை வீரர்களும் கிரிப்டான் கிரகத்தில் இருந்து தப்பிதது பூமிக்கு வந்த கிளார்க்கை தேடி வருகிறார்கள். வந்தவர்களுக்கு பூமி மிகவும் பிடித்து விடவே இங்கயே தங்கி விடலாம் என்று எண்ணி பூமியை அழிக்க எண்ணி அதற்க்கான அழிவு வேலையை செய்கிறார்கள். தன் கிரிப்டான் இன மக்களை அழித்து   பூமியை காப்பாற்றும் பொறுப்பு சூப்பர் மேன்க்கு வருகிறது. அதை எப்படி செய்து முடிக்கிறார் என்று கொட்டாவி வரும் அளவு கிராபிக்ஸ் சண்டை காட்சிகள் முலம் சொல்லி இருக்கிறார். அடுத்து பாகத்தில் சீரியஸ் கதையை எதிர்பார்கலாம். இந்த படம் சுமார் ரகமே.

Man of steel (2013)- நீங்க இன்னும் நல்லா வளரனும் தம்பி !

My Rating: 6.6/10......


Sunday, June 09, 2013

அஸ்ஸாசின்ஸ் (2009)- திட்டமிட்ட விபத்துக்கள்- கேன்டனீஸ் மூவி

பதிவு எழுதி கிட்ட தட்ட முன்று மாதங்கள் ஆகி விட்டது. இங்கு அமெரிக்காவில் வேலை பளு காரணமாக பதிவுலக வாழ்கையில இருந்து தற்காலிக ஓய்வு எடுக்க வேண்டி நிலைமை. இடைப்பட்ட காலத்தில் பல நல்ல தமிழ்/ பிறமொழி திரைப்படங்கள் பார்க்க நேர்ந்தது ஆனாலும் ஏதோ ஒன்று எழுதுவதை தடுத்து கொண்டே வந்தது.அது நிச்சியம் சோம்பேறித்தனம் தவிர வேறொன்றும் இல்லை.
இந்த பதிவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை இந்த ப்ளாக் ரீடர்ஸ்களுக்கும் மற்றும் எனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன். அதாவது ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி எனக்கு "அப்பா" என்கிற உயரிய ப்ரோமோஷன் கிடைத்தது. பையன் பிறக்கும் போது நான் பக்கத்தில் இருந்து அவன் அழுகையை ரசிக்க முடியாமல் போனது எனக்கு பெரிய வருத்தமே. அந்த வருத்தத்தை போக்க மே மாதம் 15 ஆம் தேதி இந்தியா வந்து கிட்ட தட்ட முன்று வாரம் பையனுடன் இருந்து விட்டு நேற்று (ஜூன் 7) தான் திரும்ப யூ.ஸ் வந்து சேர்ந்தேன். இடைப்பட்ட நாட்களில் சென்னையில் பதிவுலகத்தை சேர்ந்த நண்பர்களை சந்தித்தது மனதுக்கு பெரிய நிறைவை குடுத்தது. பதிவு எழுதுவதை விட்டு விடுவது பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்ந்து கொண்டேன். நிறைய படங்களை எழுத முடியாவிட்டாலும் அவ்வப்போது நேரம் ஏற்படுத்தி நான் ரசித்த படங்களை பற்றி எழுதாமல் என்று எண்ணுகிறேன். பார்க்கலாம் எப்படி போகிறது என்று.

அஸ்ஸாசின்ஸ் AKA ஆக்சிடென்ட்ஸ் (2009) கேன்டனீஸ் மொழி திரைப்படம். கேன்டனீஸ் என்பது நமது பாஷையில் சைனீஸ் மொழி. இந்தியா டூ லண்டன் விமான பயணத்தில் இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. படம் அட்டகாசமான திரில்லர் வகையை சேர்ந்தது. இன்ஃபெர்னல் அஃபேர்ஸ் (Infernal Affairs - 2002) வகை கேன்டனீஸ் படங்களை நீங்கள் விரும்பி பார்த்து இருந்தீர்கள் என்றால் இந்த படம் உங்களுக்கு நிச்சியம் பிடிக்கும். The Departed (2006) படம் இன்ஃபெர்னல் அஃபேர்ஸ் படத்தின் தாக்கத்தில் உருவானது தான். 90 நிமிடங்கள் ஓடும் ஆக்சிடென்ட்ஸ் திரைப்படம் ஒரு நல்ல ரோல்லர் கோஸ்டர் ரைட் என்றல் அது மிகையாகாது. படத்தின் இறுதி காட்சி வரை சுவாரிசியமா இருக்கும். படத்தை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.


கூட்டம் நிறைந்த பீக் ஹவர்ஸ் டிராபிக்கில் இளம் பெண் ஓட்டி வந்த கார் பஞ்சராகி நடுவில் நின்று விடுகிறது. பின்னால் வரும் நடுத்தர வயதுக்காரர் கடுப்பாகி தனது காரை காலியான பக்கத்து தெருவுக்கு திருப்புகிறார். நேரத்தில் அவர் ட்ரக் ஒன்றுக்கு வழிவிட்டு ஓரமாகச் செல்கையில் வீதியின் மேலே கட்டியிருந்த பேனர் ஒன்று எதிர்பாராத விதமாக கார் கண்ணாடி மீது விழுகிறது. இவர் காரை விட்டு இறங்கி கடைக்கார‌ரிடம் பேனரை அகற்றும்படி சொல்கிறார். அவரோ அது தன்னுடையதில்லை, மேலே உள்ளவர்களுடையது என்கிறார். கோபத்தில் காரை ஓட்டி வந்தவர் பேனரை இழுக்க, அதை கட்டியிருந்த கம்பி விசையுடன் அவருக்கு மேலேயுள்ள கண்ணாடியில் மோதி, கண்ணாடி உடைந்து அவர் மீது மழை போல பொழிகிறது. அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க சாய்கிறார் காரை ஓட்டி நடுத்தர வயது ஆசாமி. முதலுதவிக்கு அவரை எடுத்துச் செல்லவோ, ஆம்புலன்ஸ் உதவிக்கு வரவோ முடியாதபடி சுற்றிலும் ட்ராஃபிக் ஜாம். சற்று நேரத்தில் எல்லோரும் பார்த்து நிற்க அந்த  துரதிஷ்டவசமாக விபத்தில் அவர் இறந்து போகிறார்.

சிறிது நேரம் கழித்து தான் நமக்கு புரிகிறது இது விபத்து இல்ல, திட்ட மிட்ட படுகொலை என்பது. இதில் இருந்து நாம் நிமிர்ந்து உட்காருவோம். அடுத்து இந்த கொலையை செய்தவர்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். அவர்கள் நான்கு பேர் கொண்ட டீம். அழகிய இளம் பெண், வயதான அங்கிள் ஒருவர், குண்டு மனிதன் இவர்கள் மூவரையும் வழி நடத்தும் விபத்துகளை திட்டமிடும் பிரைன் (Brain) எனப்படும் இளைஞன். தமிழ் சினிமா பாஷையில் சொன்னால் கூலிப்படை. ஆனால் இவர்களின் வொர்க்கிங் ஸ்டைல்தான் வித்தியாசம். யாருக்கும் சந்தேகம் வராதபடி விபத்து போல் கொலைகளை செட்டப் செய்வதுதான் இவர்களின் ஸ்பெஷாலிட்டி.

அடுத்து இவர்களுக்கு ஒரு ஆஃபர் வருகிறது. நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்து ஒரு பெரியவரை கொலை செய்ய வேண்டும் என்பது தான் அந்த வேலை. இவர்களும் அந்த வேலையை ஏற்று கொண்டு அதற்கான ப்ளான் தயார் செய்கிறார்கள். அந்த காட்சி மிகவும் நன்றாக படமாக்க பட்டு இருக்கும், அந்த ப்ளானை மிகவும் வி‌ரிவாக காட்டுவார்கள். சக்கர நாற்காலி மனிதரை இவர்கள் வெற்றிகரமாக கொலை செய்த பிறகு எதிர்பாராதவிதமாக அவர்கள் டீமைச் சேர்ந்த குண்டு மனிதன் விபத்தில் இறந்து போகிறான். இறப்பதற்கு முன் பிரைனிடம் அவன் சொல்வது, "இதுவும் விபத்துதானா?"




இதை கேட்டவுடன் மற்ற டீம் மெம்பெர்ஸ்க்கு பயம் பிடித்து கொள்கிறது. குண்டு ஆள் இறந்து போனது நிஜமாகவே விபத்தா இல்லை அவர்களைப் போல் யாரேனும் திட்டமிட்டு உருவாக்கிய விபத்து கொலையை என்று? பிரைன் தனது விசாரணையை முடுக்கி விட, சக்கர நாற்காலி ஆளின் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் மீது சந்தேகம் வலுக்கிறது. ஏஜெண்ட் தான் குண்டு ஆளை திட்டமிட்டு கொலை செய்து விட்டான் என்று பிரைன் நம்பி அந்த ஆளை நெருங்கும் சமயம் இவர்கள் டீமின் வயதான அங்கிள் மற்றுமொரு விபத்தில் உயிரை விடுகிறார். இனி பழிக்கு பழி என்று பிரைன் முடிவு செய்து ஏஜெண்டை விபத்து போல் கொலை செய்ய துல்லியமாய் திட்டமிட்டு தனது ப்ளானை செயல்படுத்தும் போது தான் உண்மை தெரியவருகிறது. அதுவும் கடைசிக்கு கடைசியாக தான் யார் கொலையாளி என்று தெரியவருகிறது. அது தெரியும் போது நிச்சியம் ஒரு "அட" போட வைக்கும். அது என்ன வென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக்சிடென்ட்ஸ் - விபத்தா..?? கொலையா...??

படத்தின் ட்ரைலர் காண:
http://www.youtube.com/watch?v=V9ljtnwHOUE

My Rating: 7.7/10......