Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

Sunday, July 24, 2016

கபாலி (2016) - முழுமையான் படம்


25 வருடம் சிறைவாசம் முடித்து வரும் ஒரு கேங்க்ஸ்டர் தான் வாழ்வில் இழந்ததை திரும்பபெறும் போராட்டம்தான் கபாலி. இந்த நேரம் கபாலி படம் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அதனால் படத்தில் எனக்கு பிடித்த காட்சிகளை மட்டும் இங்கு தொகுத்து உள்ளேன். படம் பார்க்காதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். 


Spoilers ahead:

"கபாலியில் நான் ரசித்த காட்சிகள்":


1) "மாய நதி" பாடலில், ஒரு வெளிநாட்டு ஜோடி பிரெஞ்சு கிஸ் அடித்து கொண்டுயிருக்கும் போது கபாலி, குமுதவல்லியை கண்ணில் காதல் ததும்ப பார்க்கும் காட்சி. ராதிகா ஆப்தே அதற்கு குடுக்கும் ரியாக்ஷன். மக்கள் தனக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் சும்மா குடுக்கவில்லை என்பதை ரஜினி நிருபித்த காட்சி.

2) தாய்லாந்து நாட்டில் நடக்கும் துப்பாக்கி சூடுக்கு பிறகு, யோகி தான் தன் மகள் என்று புரிந்து கொண்டு, தன் மகள் யோகி தனது கையை பிடித்து வெளியே கூட்டி கொண்டு வரும் போது யோகியை பார்க்கும் பார்வை. செம. அந்த காட்சியில் ரஜினி வாழ்ந்திருப்பார்.

3) நல்ல ராவான கொரியன்/அமெரிக்கன்  கேங்க்ஸ்டர் படங்களை பார்க்கும் போது, எங்கே யாருக்கு எப்போது வெட்டு விழும் என்கிற ஒருவித பயம் நமக்கு வரும் பாருங்கள், அதே போன்ற பய அனுபவம் ரஜினி படத்தில் 3~ 4 காட்சிகளில் கிட்டியது மறக்க முடியா அனுபவம்.

4) பெட் ஷாப்பில் நடக்கும் சண்டைக்கு முன்பான பில்ட் அப் காட்சி.

5) கிளைமாக்ஸ் காட்சியில் டோனி லீயிடம் தன் மகள் பிடிபட்ட பிறகு, அந்த இடத்தில ரஜினி சோபா மீது கால் மீது கால் போட்டு உட்காரும் காட்சி, எப்படி ஒருவன் தன் மகள் துப்பாக்கி முனையில் இருக்கும் போது கூட இப்படி திமிராக இருக்கிறானே என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதன் பிறகு ரஜினி பேசும் வசங்கள் "கபாலியை" எனக்கு முழுமையாக உணர்த்தியை காட்சிகள். 

6) பண்ணை வீட்டில் குண்டடிபட்டு சோர்வாய் இருக்கும் போது, தன் மகள் முலம் தன் மனைவி எங்கோ உயிருடன் இருக்கிறாள் என்று அறிந்த பிறகு, சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழும் காட்சி செம. அந்த காட்சியை சினிமா தனம் இல்லாமல் மிக எதார்த்தமாய் படம்மாக்கிய ரஞ்சித்க்கு ராயல் சல்யூட். நாயகன் படத்தில் கிட்டத்தட்ட இதே போல் ஒரு சூழ்நிலை கமல் காட்டு எருமை பொறியில் மாட்டியது போல் அழுவார். அந்த காட்சியமைப்பை இன்று வரை பேச படுகிறது. சராசரி மனிதன் அது போல் செய்யமாட்டான். அது போக குண்டடிபட்டு ஓய்வில் இருக்கும் ஒருவன் அப்படி தான் அழுவான்.

7) செட்டியார் வீட்டில், சங்கிலி முருகன் அமெரிக்காவில் இருக்கும் தன் மகளுக்கு போன் செய்து "வள்ளியை" பற்றி விசாரிக்கிறேன் என்று சொல்லி போன் அடிப்பார், அந்த பக்கம் ரிங் போய் கொண்டே இருக்கும். அவர்கள் போன் எடுக்கும் வரை ரஜினி முகத்தில் தெரியும் பதட்டம். யப்பா அந்த பதட்டம் எனக்கும் ஒட்டி கொண்டது. 

8) கிளைமாக்ஸ் காட்சியில் டோனி லீயிடம் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள், டயலாக் டெலிவரி செம.

9) பிளாஷ்பேக்கில் ரஜினியின் எனெர்ஜி. சும்மா தீ மாதிரி நடித்து இருப்பார். நாசர் பேசும் வசனங்கள் எல்லாமே சிம்பிள் மற்றும் பவர்புல்.

10) பள்ளி பட்டமளிப்பு விழாவில் ரஜினி தன் கதையை மாணவர்களுக்கு சொல்லும் காட்சிகள், மெது மெதுவாய் நமது டெம்போவை ஏற்றி, கதை சொல்லி முடிக்கும்போது அங்கு இருக்கும் மாணவர்களுக்கு இருக்கும் எமொஷனை நமக்குள் புகுத்தி இருப்பார். அந்த காட்சி முடியும் போது என் நெஞ்சு கனத்து போனது. இது போன்ற அனுபவம் வேறு எந்த காட்சிக்கும் எனக்கு கிட்டியது இல்லை. இந்த ஒரு காட்சிக்கும் மட்டும் கபாலியை நான் கொண்டாடி மகிழ்வேன்.





படத்தில் நான் குறைகள் என்று கருதுவது: 

1) கடைசி கடைசி காட்சி, "டைகர்" ரஜினியை சுடும் காட்சி. அதை ரஞ்சித் தவிர்த்து இருக்கலாம். 

2) படத்தில் வரும் நிறைய கதாபாத்திரத்தின் பெயர் குழப்பங்கள். கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க தான் "யோகி" "ஜீவா" யார் என்றே புரிந்தது. 

3) யூகிக்க கூடிய காட்சியமைப்பை தான் படத்தின் மிக பெரிய பலவீனம். 

4) மலேசியா சொல்லாடல்கள் புரிந்துகொள்ள சற்று கடினமாய் இருந்தது. தேத்தண்ணி, கோழிக்கறி, சாவடி, பொன்னழகு போன்ற சொற்கள்.

5) டோனி லீயின் சாம்ராஜியத்தை ரஜினி கீழே கொண்டு வரும் காட்சிகள் சப்பையாய் முடிந்தது பெரிய ஏமாற்றம். 

கபாலி இத்தனை கோடி வசூல் செய்தது, அந்த சாதனையை முறியடித்து போன்ற விசயங்களை பற்றி நல்ல சினிமாவை நேசிப்பவன் கவலை பட மாட்டான். நல்ல சினிமாவை விரும்பியவர்களுக்கு நல்ல விருந்தை ரஞ்சித்தும் ரஜினியும் வழங்கி உள்ளார்கள். பிடித்தவர்கள் எடுத்து கொள்ளலாம், பிடிக்காதவர்கள் "2.0" க்கு காத்து இருக்கலாம்.

கபாலி  - முழுமையான் படம்

My Rating : 9.0



Saturday, September 28, 2013

B.A Pass (2013) - டெல்லி சவிதா ஆண்ட்டி ???

'Delhi Noir' என்ற சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற The Railway Aunty என்கிற கதையை தழுவி எடுக்க பட்ட படம் தான் BA Pass. வேற்று மொழிகளில் மட்டுமே சாத்தியமான "உலக சினிமா" கதைகளை ஹிந்தியில் குடுக்க விளைந்து, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். நான் அறிந்தவரையில் இந்தியாவில் சிறுகதைகளை தழுவி எடுக்க பட்ட படங்கள் மிகவும் குறைவே. அப்படியே எடுக்க பட்டு இருந்தாலும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தை திரையில் கொண்டு வருவது மிகவும் கடினம். வாசிப்பு அனுபவம் தரும் சுகத்தை கமெர்ஷியல் திரைப்படங்களினால் குடுக்க முடியாது என்கிற என்னத்தை உடைத்த எறிந்தது BA Pass. சிறுகதையின் மூலம் கெடாமல், அதன் தாக்கத்தை கொஞ்சமும் குறைக்காமல், சரியாய் சொன்னால் அதன் வீரியத்தை கூட்டி திரையில் விருந்து படைத்தது இருக்கிறார் இயக்குனர் அஜய் பாஹ்ல்.


 டெல்லியில் நடைபெறும் கதையின் கதாநாயகன் முகேஷ். பெற்றோரை இழந்த முகேஷ் தன் படிப்பிருக்காக டெல்லி வந்து தன் அத்தை வீட்டில் தங்குகிறான். தன் இரண்டு தங்கைகளை ஹாஸ்டலில் தங்க வைத்து விட்டு அத்தை வீட்டில் அவர்கள் சொல்லும் எடுபுடி வேலைகளை செய்து தன் படிப்பையும் தொடர்கிறான். அந்த வீட்டிருக்கு வரும் சரிகா ஆண்ட்டியின் அறிமுகம் அவனுக்கு கிடைக்கபெறுகிறது. ஆப்பிள் கூடை வாங்க சரிகா வீட்டிருக்கு போகும்போது ஒரு பலவீனமான தருணத்தில் முத்தத்தில் ஆரம்பித்து உறவில் போய் முடிகிறது.

 அதன் பின்பு முகேஷ் சரிகா ஆண்ட்டி சொல்லும் வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறான். அந்த வேலை இந்தியாவிருக்கு அதிகம் பரிச்சியம் இல்லாத "ஜிகோலோ" வேலை. கிளியராக சொல்ல வேண்டுமென்றால் ஆண் விபச்சாரம். பணம் பெற்றுக்கொண்டு பெண்களின் தாம்பத்திய தேவைகளை பூர்த்தி செய்யும் வேலையை செய்ய ஆரம்பிக்கிறான். அந்த வேலை அவன் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது, எதில் போய் முடிகிறது என்பதை கொஞ்சமும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதார்த்தமாய் சொல்கிறார்கள். முடிவு பார்பவர்களை உலுக்கி எடுத்து விடும் என்பதில் மட்டும் எனக்கு சந்தேகமேயில்லை. 


முதலில் இது போன்ற கதையை தேர்வு செய்த இயக்குனர் பாஹ்ல்க்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கத்தி மீது நடப்பது போன்ற கதைக்களம். இம்மியளவு பிசகினாலும் இரண்டாம்தர B கிரேடு படத்தில் சேர்ந்து விடும். சரிகா ஆண்ட்டி சவிதா பாபியாய் மாறி விட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பே தராமல் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சியை காண்பித்து அட்டகாசமான உலக சினிமாவை குடுத்து இருக்கிறார் இயக்குனர். டெல்லியின் சமூக அவலங்கள் அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார். படம் நகர வாழ்கையில் பெருகி வரும் "கே" கலாச்சாரம், ஆண் எஸ்கார்ட்டை, நம்பிக்கை துரோகம் என்று பல விஷயங்களை தொடுகிறது. 
  
முகேஷாக நடித்த இளைஞரின் பெயர் சதாப் கமல். அட்டகாசமான நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார். முதல் பாதி முழுக்க இவரின் வாய்ஸ் ஓவரில் தான் படம் நகருகிறது. டெல்லியின் வேகதிருக்கு ஈடு குடுக்க முடியாமல் இவர் முதிலில் தடுமாறி, ஒரு கட்டத்தில் சரிகாவின் மாய வலையில் விழுந்து, பிறகு சொன்ன வேலைகள் வேண்டா வெறுப்பாய் செய்து, பிறகு அதே வேலையை ரசித்து செய்கிறார். இவர் செஸ் மற்றும் செக்ஸில் ஒரு சேர தேர்ச்சி பேரும் காட்சி கவிதை. சரிகாவின் ட்ரைனிங் மூலம் கன்றுகுட்டியில் இருந்து பொலி காளையாய் மாறுகிறார். விரக்தியின் உச்சியில் கேவாக மாறி நைட் அவுட் போய் விட்டு வந்து காலையில் நடக்க முடியாமல் நடந்து வரும் காட்சியில் நம்மால் பரிதாப படாமல் இருக்க முடியாது.
  

சரிகாவாக நடித்து இருப்பவர் "ஷில்பா சுக்லா". ஆம்பிளை முக தோற்றம் கொண்டவர் போல் எனக்கு தோன்றியது. முகம் மட்டுமே அப்படி, ஆனால் நடிப்பில் குறை சொல்ல முடியாத படி செய்து இருக்கிறார். கண்களில் ஒரு வித போதையுடன் தான் படம் முழுக்க வலம்வருகிறார். பின்னணி இசை பிரமாதம். துணை கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சரிகாவின் வீட்டில் இருக்கும் பாட்டி, முகேஷின் செஸ் பார்ட்னர், கணவன் மரண படுக்கையில் இருக்கும் போது முகேஷை தேடி வரும் ஒரு ஆண்ட்டி என் அணைத்து கதாபாத்திர தேர்வும் அருமை. ட்ரைலர் மற்றும் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்து விட்டு கில்மா படம் அல்லது சூப்பர் மேட்டர் படம் என்று நம்பி போனால் நீங்கள் ஏமாற மாட்டீர்கள். படத்தில் செக்ஸும் உள்ளது, அழுத்தமான கதையும் உள்ளது. ஆனால் செக்ஸ் தீனிக்க பட்டது இல்லை. நல்ல சினிமாவை பார்க்க விரும்புவர்கள் கண்டிப்பாய் பார்க்கலாம்.

The Railway Aunty சிறுகதையை தமிழில் படிக்க மதுரை மல்லி 
ஆங்கிலத்தில் படிக்க Delhi Noir

My Rating: 7.8/10.


Thursday, September 19, 2013

மூடர் கூடம் (2013) - கொரியன் படத்தின் தழுவல் !!

வாழ்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்த நான்கு நண்பர்கள் சீட்டு கம்பெனி நடத்தி மக்கள் பணத்தை சுருட்டிய பணக்காரனின் வீட்டில் கொள்ளை அடிக்க செல்லும் நகைச்சுவை கலாட்டா தான் மூடர் கூடம். அடுத்தவனை வாய்க்கு வந்ததை சொல்லி ஓட்டுவது தான் நகைச்சுவை என்று இன்னும் நம்பி கொண்டிருக்கும் மக்கள், இது போன்ற "பிளாக் காமெடி" வகை படங்களையும் ரசிப்பது மாற்று சினிமாவிருக்கான நல்ல தொடக்கம் என்றே நம்ப தோன்றுகிறது. "பிளாக் காமெடி/டார்க் காமெடி" தமிழ்சினிமாவிருக்கு புதுசு. "சூது கவ்வும்" இந்த வகையில் வந்த மாஸ்டர் பீஸ். அதன் பிறகு நான் பார்த்த சிறந்த டார்க் காமெடி படம் "மூடர் கூடம்".


நான்கு பேர் நவீன், குபேரன், சென்ட்ராயன் மற்றும் வெள்ளையன் தமிழ் சினிமா மரபு மாறமால் வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். வாழ்கையில் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற முடிவிருக்கு வந்து குருட்டு தைரியத்தை மட்டுமே முதலீடாக கொண்டு வெள்ளையனின் மாமாவான சீட்டு கம்பெனி முதலாளி வீட்டில், அவர்கள் வெளியூர் சென்ற நேரம் பார்த்து திருட செல்ல, அந்த குடும்பமோ காலை 3 மணிக்கு பதில் மதியம் 3 மணி தான் கிளம்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. வேறுவழியின்றி அவர்களை வீட்டுக்காவலில் பிணைய கைதிகளாய் வைத்து அந்த வீட்டில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்க நினைகிறார்கள். அவர்கள் முயற்சி வென்றதா. அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்களா என்பதே மீதி கதை.

நான்கு நண்பர்கள் ஒவொருவரும் ஒரு விதம். சமூகத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டவர்கள், ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்தவர்கள். அனைவரது கடந்த காலத்தையும் பிளாஷ்பேக் முலம் பார்வையாளர்களுக்கு சொல்கிறார்கள். ஒவ்வொரு பிளாஷ்பேக்கையும் வித்தியாசப்படுத்தி ரசிக்கும் படி குடுத்தது கூடுதல் சிறப்பு. வீடு புகுந்து திருடுவதற்கு ஐடியா குடுப்பது நவீன். இவர் தான் படத்தின் இயக்குனர். தீவிர "சிவப்பு" கம்யூனிஸ்ட் பிரியர் போல் தெரிகிறது. போகிற போக்கில் "சிவப்பு" தத்துவங்களை தூவி செல்கிறார். ரொம்பவே எளிமையாக, ரசிக்கும் படி மற்றும் முக்கியமாக புரியும் படி வசனங்களை செதுக்கி உள்ளார். சிவப்பு மீது தீராத வெறுப்பில் இருக்கும் எனக்கே சில வசனங்கள் பிடித்து இருந்தன. அலட்டல் இல்லாத நடிப்பின் முலம் நம் மனதை கவருகிறார். 


"ரெண்டு வருஷம் முன்னாடி ரெண்டு ரூபாய் வித்த டீ இப்ப ஆறு ரூபாய். அதைக் கேட்கவே ஆளில்லை. கஞ்சா 400 ரூபாய்ன்னா மட்டும் தட்டி கேட்டுருவாங்களா?" என்று அறிமுகம் ஆகிறார் சென்ட்ராயன். இவர் பேசும் "பு" வசனங்கள் அதகளம். வெள்ளைக்காரன்கிட்ட தமிழிலே பேசுறீங்களாடா? அப்புறம் ஏன் தமிழன்கிட்ட மட்டும் இங்கிலீஷிலே பு ? என்று இவர் கேட்பது ஞாயமாக படுகிறது. ஆனால் நிறைய காட்சிகளில் இவரின் நடிப்பு ஓவர் டோஸ் மற்றும் எரிச்சலை வரவழைக்கிறது. 

தன்னை பச்சை பச்சையாய் திட்டியவனை விட்டுவிட்டு முட்டாள் என்று சொன்னவனை புரட்டி எடுப்பதிலே தெரிந்து விடுகிறது குபேரனின் வீக்னெஸ் என்னவென்று. குபேரனுடைய இளம் வயது முட்டாள் பிளாஷ்பேக்கை கார்ட்டூனாக காட்டியிருப்பது படத்தின் ஸ்டைலை மாற்றுகிறது. கடைசியாக வெள்ளையன். இவருக்கு மட்டும் காதலி உண்டு. 

படத்தில் வரும் நாய்க்கு கூட ரசிக்கும்படியான பிளாஷ்பேக். ஓவியா, ஜெயப்ரகாஷ், குண்டு சிறுவன், தாவூத்தின் சென்னை பிராஞ்ச்சை எடுத்து நடத்தும் சேட், ஜப் எத்திக்ஸ் திருடன் என்று அனைவருமே சிறப்பாய் நடித்து உள்ளார்கள். குறை என்று சொன்னால் பின்னணி இசை மற்றும் பிற்பாதியில் படத்தின் நீளம்.


 "Attack the Gas Station!" என்கிற கொரியன் படத்துல இருந்து   தழுவி எடுக்க பட்ட நிறைய காட்சிகளை நம்மால் மறைக்க முடியல. படத்தின் மூல கதை,  தலைகீழ் தண்டனை, சென்ட்ராயன் சேட்டைகள், கிளைமாக்ஸ் காட்சி என்று நிறைய காட்சிகள் கொரியன் படத்தை ஞாபக படுத்துகிறது. பிற மொழியில் இருந்து தழுவி எடுக்கிற தமிழ் படங்கள் என்னைக்குமே எனக்கு ஓகே தான். டோரன்ட்ல டவுன்லோட் பண்ணி அந்த கொரியன் படத்தை பார்த்த யாருக்கும் தழுவல்/கதை திருட்டை பத்தி பேசுற யோக்கியதை இல்லை என்பது என்னுடைய உறுதியான எண்ணம். எந்த மொழி படமாக இருந்தாலும் என்னை பொறுத்த வரை பார்வையாளர்களை கதையோடு கட்டி போட வேண்டும், படத்தை சுவாரிசியமாக குடுத்து இருக்க வேண்டும். வெற்றிக்கான மந்திரம் அது தான். அந்த வகையில் மூடர் கூடம் வெற்றி கோட்டை அசால்ட்டாக கடக்கிறான்.

மூடர் கூடம் - வெற்றி கூடம் 
My Rating: 8.0/10.


Thursday, August 22, 2013

ஆதலால் காதல் செய்வீர் (2013)- படம் பார்த்து யாரும் திருந்த வேண்டாம் !!

தமிழ் சினிமாவில் எத்தனயோ வகையான காதலை காட்டியாகி விட்டது, இனி காட்டுவதருக்கு காதலே இல்லை என்கிற நிலையில் தான் சுசீந்திரின் "ஆதலால் காதல் செய்வீர்" படம் வெளி வந்து உள்ளது. இதில் காட்டி இருப்பது சிட்டி வாழ்க்கையின் யதார்த்த காதல். கொஞ்சம் கூட சினிமா தனம் இல்லாமல், 20 வயதில் வரும் காதலில் என்ன என்ன பிரச்சினைகள் வரும் என்பதை இந்த அளவுக்கு எந்த படமும் எடுத்து சொன்னதாய் எனக்கு ஞாபகம் இல்லை. மன பக்குவம் இல்லாத காதலர்களின் விளையாட்டு காதலால் எந்த மாதிரியான் விளைவுகள் இந்த சமுகத்தில் ஏற்படுகிறது என்பதை சொல்லும் படம் தான் "ஆதலால் காதல் செய்வீர்".


கல்லூரியில் படிக்கும் நாயகன் கார்த்திக் (சந்தோஷ் - புதுமுகம்) தன்னுடன் நண்பியாக பழகும் ஸ்வேதாவிடம் (மனீஷா யாதவ்) ப்ரோபோஸ் செய்கிறார், இதயம் முரளி மாதிரி கிளைமாக்ஸ் வரை காத்திருக்காமல் படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் தன் காதலை சொல்லி விடுகிறார். முதலில் மறுக்கும் ஸ்வேதா பிறகு காதலை ஏற்றுகொள்கிறார். மகாபலிபுரம் அவுட்டிங் செல்லும் இருவரும் பலவீனமான ஒரு வேலையில் எல்லை மீறி விடுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் காதல் என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்தது என்பதை திரையில் காண்பது நல்லது.

படத்தின் கதாநாயன் சந்தோஷ், இவர் தான் கதாநாயகன் என்று படம் ஆரம்பித்த பத்து நிமிடங்கள் கழித்து தான் தெரிகிறது. அது வரை கதாநாயகியிடம் முதல் காட்சியில் ப்ரொபோஸ் செய்யும் ஒரு பையனை தான் ஹீரோ என்று எண்ணி இருந்தேன். இவர் நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரி தான் தெரிகிறார். நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்து உள்ளார். ஒரு சாயலில் பதிவர் "பிலாசபி" மாதிரி தெரிந்தார், எனக்கு மட்டும் தான் அப்படி தெரிந்ததா, இல்லை மற்றவர்களுக்கும் அப்படி தான் தோன்றியதா என்று தெரியவில்லை. 

ஹீரோயின் மனீஷா யாதவ், வழக்கு என் படத்தில் நடித்தவர். படத்தில் பெஸ்ட் பெர்பார்மென்ஸ் இவருடையது தான். டீன் ஏஜ் பெண்கள் வீட்டில் பேசும் பொய்களை அன்யாசமாய் பேசுகிறார். தான் கர்பமானவுடன் இவர் காட்டும் பயம் கலந்த முகபாவனைகைகள் நம்மையும் பத பதைக்க வைக்கிறது. முதல் பாதியில் தன் காதலை வீட்டில் மறைக்கவும் பிற பாதியில் தன் கர்பத்தை மறைக்க இவர் படும் பாடு ஒவொரு டீன் பெண்ணிற்கும் பாடம். மகாபலிபுரம் அவுட்டிங் காட்சியில் கூட விரசம் இல்லாமல் காமத்தை வெளி படுத்தி இருந்தார்.


மனிஷாவின் பெற்றோர்ராக ஜெயப்பிரகாஷ் மற்றும் துளசி. இருவரும் அசத்தலாய் நடித்து இருக்கிறார்கள். அதிலும் அம்மா துளசி மற்றும் மனிஷாயிடையே நடக்கும் உரையாடல்கள் ரொம்பவே எதார்த்தமாய் இருந்தது. சிட்டியில் வாழும் அம்மா மற்றும் டீன் ஏஜ் பெண்யிடையே இருக்கும் பந்தத்தை மிக நன்றாக காட்டி இருக்கிறார் இயக்குனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீது எந்த அளவு நம்பிக்கை வைக்கிறார்கள், அவர்கள் வைத்த நம்பிக்கையை பிள்ளைகள் மோசம் செய்ததும் எந்த அளவு உடைந்து போய் விடுகிறார்கள் என்பதை துளசி மற்றும் ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரம் முலம் நம் கண் முன்னே வந்து நிறுத்துகிறார் இயக்குனர்.

படத்தின் உண்மையான் கதாநாயன் இயக்குனர் சுசீந்திரன் தான். பக்கம் பக்கமாய் அட்வைஸ் என்கிற பேரில் வசனம் பேச வைக்காமல் காட்சிகள் முலமே பிரச்சனைகளின் விரியத்தை நமக்கு உணர்த்துகிறார். துள்ளுவதோ இளமை கூட கிட்ட தட்ட இதே தீம்மை கொண்ட படம் தான். ஆனால் செக்ஸ், கவர்ச்சி, ரெயின் டான்ஸ் என்று மேட்டர் படம் போல் எடுத்து இருந்தார் செல்வா. ஆனால் சுசீந்திரன் வசனங்களில் கூட கண்ணியத்தை கடை பிடித்து இருக்கிறார். சிட்டியில் படிக்கும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் காதலை எப்படி பார்கிறார்கள் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார். தான் சொல்ல வந்ததை கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாமல் தெளிவாய் சொல்லி இருக்கிறார்.


இசை "யுவன்", நீண்ட நாட்கள் கழித்து யுவன் ஸ்டைல் துள்ளல் இசை. செல்வராகவன் படத்திருக்கு போடுவது போல் இசை அமைத்து உள்ளார். பின்னணி இசை பிரமாதம். மனிஷா தன் கர்பத்தை டெஸ்ட் செய்யும் காட்சியில் வரும் பின்னணி இசை பழைய யுவனை ஞாபகம் படுத்துகிறது. அதே போல் கிளைமாக்ஸ்  காட்சியில் அந்த குழந்தைப் பாடலின் மூலம் மனதை வருடிச்செல்கிறார்.

கொஞ்சம் நாட்களுக்கு முன்பு Trust (2010) என்கிற ஹாலிவுட் படம் பார்க்க நேர்ந்தது, அந்த படத்தின் தாக்கம் மற்றும் கிளைமாக்ஸ் மறைய எனக்கு இரண்டு நாட்கள் பிடித்தது. அது மாதிரியான படங்கள் தமிழில் வராதா என்கிற எனது ஏக்கத்தை இந்த படம் முலம் போக்கி இருக்கிறார் சுசீந்திரன். மிக மிக அழுத்தமான கிளைமாக்ஸ், கண்டிப்பாய் அதன் தாக்கம் ஒரு நாளாவது இருக்கும். பரிதாபம் மற்றும் கோபம் ஒரு சேர எனக்கு ஏற்பட்டது, "உங்க 2 நிமிஷ சந்தோஷத்துக்கு ஏண்டா ஒரு குழந்தையோட எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குறீங்க" என்று இந்த படத்தின் ஜோடியை கேட்க தோன்றியது. சாரி கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.  படத்தை பார்த்து யாரும் திருந்துவார்கள் என்று நான் எண்ணவில்லை, ஆனால் ஒரு நிமிடமாவது படிக்கிற வயதில் எல்லை மீற தான் வேண்டுமா என்று யோசிப்பார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றி.

ஆதலால் காதல் செய்வீர் - படம் பார்த்து யாரும் திருந்த வேண்டாம்.

My Rating: 8.3/10.


Sunday, July 07, 2013

Lila Says - (2004) பிரெஞ்ச் படம்- Erotic But Not Vulgar !

Lila Says (2004) பிரெஞ்சு மொழி படம். 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இன்டர்நேஷனல் பெஸ்ட் செல்லிங் பிரெஞ்சு நாவலான "Lila dit ça" (Lila Says) தழுவி எடுக்க பட்ட திரைப்படம். இந்த நாவலை பற்றி சுவாரிசியம் ஒன்று உள்ளது, அதாவது இன்று வரை இந்த நாவலை எழுதியவர் யார் என்று தெரியாது. 1996 ஆம் வருடம் பிரான்ஸின் இருக்கும் ஒரு முக்கிய பதிப்பகம் முன்பு இரண்டு டைரி குறிப்புகள் கிடந்தன. அவைகளை புரட்டி பார்த்த பதிப்பக ஊழியருக்கு பெரிய அதிர்ச்சி. சிமோ என்கிற 19 வயது வாலிபனின் தனது சொந்த காதல் அனுபவங்களை படிபவர்களின் மனதை உருகும் விதமாக விவரித்து இருந்தான். படித்து முடித்த பிறகு அவர் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் வந்தது. இதை கண்டிப்பாய் நாவல் வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்து அதை முடித்தும் காட்டினார்.

எழுதியவர் பெயர் என்று ஒன்றும் இல்லாமல் வெளி வந்த இந்த நாவல், எவ்வளவோ கலாச்சார அணுகுண்டுகளை அல்வா சாப்பிடுவது போல் ஜீரணிக்கும் பிரெஞ்ச் குடி மக்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் குடுத்தது. அதன் அமோக விற்பனை, மற்றும் வரவேற்பைப் புரிந்து கொண்ட அமெரிக்காவின் ஸ்க்ரிப்னர் பதிப்பகம் நாவலை ஆங்கிலத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியிட்டது. ஜியாத் டோரி(Ziad Doueiri) இந்த நாவலின் திரை வடிவத்தில் 2004 ஆம் ஆண்டு பிரெஞ்ச் மொழியில் தீட்டினார்.


வாய்ஸ் ஓவரில் சிமோ தனது அனுபவங்களை டைரியில் பதிந்து கொண்டிருக்கும் காட்சி தான் படத்தின் முதல் காட்சி. எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பத்திலே எழுத ஆரம்பிக்கிறான். நேற்றைய லிலாவின் சந்திப்பை பற்றி நமக்கு விவரிக்கிறான். லிலா திரையில் தோன்றுகிறாள். அவள் பேசும் வசங்கள் கீழே வருமாறு.

      “  என் முடி எப்படி இருக்கு? சூப்பரா இல்ல ?
          என் கண்ணப் பாரு. ப்ளூ கலர் ஸ்படிகம் போல் இல்ல ?
          என் உடல் பால் போல் வெள்ளை கலர்ல இருக்குதானே ?
          எங்க அத்தை சொல்வாங்க. நான் ஒரு தேவதை.
          சரி. இப்போ
           DO YOU WANT SEE MY PUSSY? "

சிமோவுடன் சேர்ந்து நாமும் ஷாக் ஆகும் போது திரையில் படத்தின் பெயர் "LILA SAYS" என்று வரும். நிற்க, இது மாதிரியான முதல் காட்சியை பார்த்தவுடன் இதை கில்மா பட லிஸ்டில் சேர்த்து விடாதீர்கள். லிலா சொல்லுவது தான் ஆபாசமாய் இருக்கும். செயலில் புனிதத்தன்மை இருக்கும். 

சிமோ 19 வயது நிரம்பிய அரேபிய முஸ்லிம் வாலிபன். பிரான்ஸில் இருக்கும் சிறு ஊரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பில் அவன் அம்மாவுடன் வசித்து வருகிறான். வேலை எதுவும் இல்லாத காரணத்தினால் மற்ற முன்று முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியாய் பொழுதை கழித்து வருகிறான். சிமோவின் உற்ற நண்பன் மௌலாத் (Mouloud). இவர்கள் நால்வரும் சேர்ந்து சிறு சிறு திருட்டு காரியங்களில் தங்கள் பிழைப்பை ஓட்டுகிறார்கள். அந்த குடியிருபிருக்கு தன் வயதான அத்தையுடன் வருகிறாள் 16 வயதே நிரம்பிய கத்தோலிக்க அழகு தேவதை "லிலா". சிமோ யாரிடமும் அதிகம் பேசாத, ஆனால் கூர்ந்து கவனிக்க கூடிய, தன் மனதிற்குள் பேசும் சுபாவம் உடையவன். 


கதை மட்டுமே எழுத தெரிந்த சிமோவிருக்கு அவனது பிரெஞ்ச் டீச்சர் பாரிஸில் இருக்கும் ஒரு எழுத்தாளர் பள்ளியில் இடம் வாங்கி தருவதாய் சொல்ல்கிறார். ஆனால் அந்த பள்ளியில் சேர சொந்த அனுபவ கட்டுரை ஒன்றை சிமோ எழுத வேண்டும் என்று வேறு சொல்கிறார். சிமோவின் நண்பர்கள் எழுத்தாளர் பள்ளி எல்லாம் வேளைக்கு ஆகாது, நீ அங்கு எல்லாம் போகதே என்று அட்வைஸ் செய்கிறார்கள். சிமோவின் வாழ்கை இப்படியாக செல்கிறது,

தன் நண்பர்கள் பட்டாளத்துடன் அமர்ந்து இருக்கும் ஒரு மாலை வேளையில் லிலா தன் சைக்கிளின் பின்னால் உயரமான செடிக் கன்றுடன் அவள் அவர்களைக் கடக்கிறாள். அவளை பார்க்கும் சிமோவின் நண்பர்கள் அனைவரும் அவளை காதலிக்க தொடங்குகிறார்கள். மௌலாத் ஒரு படி மேலே போய் அவளை கற்பனையில் கல்யாணம் செய்து குழந்தை வரை சென்று விடுகிறான். சிமோ மட்டும் எதுவும் பேசாமல் இருக்கிறான். லிலா திரும்பும் போது கடைசியாய் சிமோவை மட்டும் பார்த்து  புன்னகையை வீசி விட்டு நகர்கிறாள். சிமோ எதிர் கொள்ளும் முதல் ஆடம் டீசிங் !!

அந்த ஒரு நொடி புன்னகை சிமோவின் இதய துடிப்பையே நிறுத்தி விட்டதாய் பிறகு அவனது டைரி குறிப்பில் குறிப்பிடுக்கிறான். அதன் பிறகு சிமோவும் லிலாவும் சந்திக்கும் காட்சி மேலே சொன்ன முதல் காட்சி. அந்த காட்சி முடிவில் லிலா தான் சொன்னதை செய்தும் காட்டுவாள். ஊஞ்சலில் ஆடியபடி லிலா தான் சொன்னதை சிமோவிடம் காட்டும் காட்சி துளியும் ஆபாசம், கவர்ச்சி இல்லாத அழகிய கவிதை. அதன் பிறகு லிலாவும் சிமோவும் சந்திக்கும் காட்சிகளில் லிலா மட்டும் தான் பேசுகிறாள். தன் செக்ஷுவல் பண்டசி , செக்ஷுவல் கனவுகள் பற்றி  கூசாமல் பேசுகிறாள். தொடர்ந்த சந்திப்புகளில் அவள் சொல்லும் கலர் கலர் செக்ஸ் அனுபவக் கதைகளை, கனவுகளைக் கேட்கிறான் சிமோ. சில நேரங்களில் தவறாக எண்ணும் அளவுக்கு அவளது கதைகள், வார்த்தைகள் ஆபாசமாக நீள்கின்றன. இருந்தாலும் அவளது கதைகளையும் மீறி சிமோவிருக்கு அவள் மீது காதல் வருகிறது. 


தனது காதலை அவளிடம் சொல்ல பல சந்தர்பங்கள் கிடைத்த போதும் ஏதோ ஒன்று சிமோவை தடுக்கிறது. அது லிலாவின் பேச்சு தான் காரணம் என்று நம்மால் ஊகிக்க முடியும். இப்படியாக நகரும் கதையில் மௌலாத்திருக்கு லிலாவின் மேல காமம் வெறி வந்து விடுகிறது, அவளை அடைய முயற்சிகள் எடுக்கிறான். ஆனால் லிலா மௌலாத்தை துளியும் சட்டை செய்யாமல் நகர்ந்து சென்று விடுகிறாள். இறுதியில் சிமோ-லிலா சொல்ல படாத காதல் என்னவானது, மௌலாத்தின் காம வெறி எதில் போய் முடிந்தது என்ற முடிச்சுகளை இயக்குனர் கனத்த மனதுடன் திரையில் அவிழ்த்து இருப்பார். 

படத்தின் இயக்குனர் ஜியாத் டோரி க்வென்டின் டரான்டினோ பள்ளியில் படித்தவர். க்வென்டினிடம் கேமரா மேன் ஆக பணி புரிந்தவர். அதனாலே என்னமோ படத்தில் நிறைய காட்சிகளை வசனங்கள் முலமே நகர்த்தி சென்றிருப்பார். லிலா பேசும்  வசனங்கள் சொல்லும் கதைகள் எதுவுமே நமக்கு அருவெருப்பை ஏற்படுத்தாது. லிலாவாக நடித்த தேவதையின் பெயர் Vahina Giocante.இந்த தேவதையை தவிர இந்த படத்தில் வேறு யார் பேசி இருந்தாலும் இந்த படம் போர்ன் மூவி லிஸ்டில் சேர்ந்து இருக்கும். ஆனால் அது போன்ற என்னத்தை துளியும் நமக்கு ஏற்படாதவாறு லிலா பார்த்து கொள்கிறாள். சிமோ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நபர் "Mohammed Khouas". இவர் சிமோ வேடத்துக்கு அட்டகாசமாய் பொருந்தி இருப்பார். அவ்வபோது மனதிற்குள் பேசும் பாணி கதைக்கு அருமையாய் பொருந்தி வரும். கிளைமாக்ஸ் காட்சியில் இவரின் நடிப்பு பிரமாதமாய் இருக்கும். 

படத்தின் ட்ரைலர் :



படத்தில்  சிமோ லிலாவை மோட்டார் பைக்கில் முன்னால் வைத்து கொண்டு பயணம் செய்யும் காட்சி அழகான கவிதை. அந்த காட்சியில் வரும் பின்னணி இசை மனதை விட்டு அகல வெகு நேரம் ஆகும் என்பது உறுதி. சிமோ மட்டும் லிலா ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்து மௌலாத் மற்றும் நண்பர்களுடன் பேசும் காட்சி கிட்ட தட்ட முன்று நிமிடம் ஒரே ஷட்டில் படமாக்கி இருப்பார் இயக்குனர் ஜியாத் டோரி. நல்ல திரைப்படங்களை விரும்பும் அனைவரும் இந்த படத்தை தவற விட கூடாது.

Lila Says - Erotic But Not Vulgar ! 

My Rating: 7.9/10.


Sunday, June 09, 2013

அஸ்ஸாசின்ஸ் (2009)- திட்டமிட்ட விபத்துக்கள்- கேன்டனீஸ் மூவி

பதிவு எழுதி கிட்ட தட்ட முன்று மாதங்கள் ஆகி விட்டது. இங்கு அமெரிக்காவில் வேலை பளு காரணமாக பதிவுலக வாழ்கையில இருந்து தற்காலிக ஓய்வு எடுக்க வேண்டி நிலைமை. இடைப்பட்ட காலத்தில் பல நல்ல தமிழ்/ பிறமொழி திரைப்படங்கள் பார்க்க நேர்ந்தது ஆனாலும் ஏதோ ஒன்று எழுதுவதை தடுத்து கொண்டே வந்தது.அது நிச்சியம் சோம்பேறித்தனம் தவிர வேறொன்றும் இல்லை.
இந்த பதிவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை இந்த ப்ளாக் ரீடர்ஸ்களுக்கும் மற்றும் எனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன். அதாவது ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி எனக்கு "அப்பா" என்கிற உயரிய ப்ரோமோஷன் கிடைத்தது. பையன் பிறக்கும் போது நான் பக்கத்தில் இருந்து அவன் அழுகையை ரசிக்க முடியாமல் போனது எனக்கு பெரிய வருத்தமே. அந்த வருத்தத்தை போக்க மே மாதம் 15 ஆம் தேதி இந்தியா வந்து கிட்ட தட்ட முன்று வாரம் பையனுடன் இருந்து விட்டு நேற்று (ஜூன் 7) தான் திரும்ப யூ.ஸ் வந்து சேர்ந்தேன். இடைப்பட்ட நாட்களில் சென்னையில் பதிவுலகத்தை சேர்ந்த நண்பர்களை சந்தித்தது மனதுக்கு பெரிய நிறைவை குடுத்தது. பதிவு எழுதுவதை விட்டு விடுவது பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்ந்து கொண்டேன். நிறைய படங்களை எழுத முடியாவிட்டாலும் அவ்வப்போது நேரம் ஏற்படுத்தி நான் ரசித்த படங்களை பற்றி எழுதாமல் என்று எண்ணுகிறேன். பார்க்கலாம் எப்படி போகிறது என்று.

அஸ்ஸாசின்ஸ் AKA ஆக்சிடென்ட்ஸ் (2009) கேன்டனீஸ் மொழி திரைப்படம். கேன்டனீஸ் என்பது நமது பாஷையில் சைனீஸ் மொழி. இந்தியா டூ லண்டன் விமான பயணத்தில் இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. படம் அட்டகாசமான திரில்லர் வகையை சேர்ந்தது. இன்ஃபெர்னல் அஃபேர்ஸ் (Infernal Affairs - 2002) வகை கேன்டனீஸ் படங்களை நீங்கள் விரும்பி பார்த்து இருந்தீர்கள் என்றால் இந்த படம் உங்களுக்கு நிச்சியம் பிடிக்கும். The Departed (2006) படம் இன்ஃபெர்னல் அஃபேர்ஸ் படத்தின் தாக்கத்தில் உருவானது தான். 90 நிமிடங்கள் ஓடும் ஆக்சிடென்ட்ஸ் திரைப்படம் ஒரு நல்ல ரோல்லர் கோஸ்டர் ரைட் என்றல் அது மிகையாகாது. படத்தின் இறுதி காட்சி வரை சுவாரிசியமா இருக்கும். படத்தை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.


கூட்டம் நிறைந்த பீக் ஹவர்ஸ் டிராபிக்கில் இளம் பெண் ஓட்டி வந்த கார் பஞ்சராகி நடுவில் நின்று விடுகிறது. பின்னால் வரும் நடுத்தர வயதுக்காரர் கடுப்பாகி தனது காரை காலியான பக்கத்து தெருவுக்கு திருப்புகிறார். நேரத்தில் அவர் ட்ரக் ஒன்றுக்கு வழிவிட்டு ஓரமாகச் செல்கையில் வீதியின் மேலே கட்டியிருந்த பேனர் ஒன்று எதிர்பாராத விதமாக கார் கண்ணாடி மீது விழுகிறது. இவர் காரை விட்டு இறங்கி கடைக்கார‌ரிடம் பேனரை அகற்றும்படி சொல்கிறார். அவரோ அது தன்னுடையதில்லை, மேலே உள்ளவர்களுடையது என்கிறார். கோபத்தில் காரை ஓட்டி வந்தவர் பேனரை இழுக்க, அதை கட்டியிருந்த கம்பி விசையுடன் அவருக்கு மேலேயுள்ள கண்ணாடியில் மோதி, கண்ணாடி உடைந்து அவர் மீது மழை போல பொழிகிறது. அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க சாய்கிறார் காரை ஓட்டி நடுத்தர வயது ஆசாமி. முதலுதவிக்கு அவரை எடுத்துச் செல்லவோ, ஆம்புலன்ஸ் உதவிக்கு வரவோ முடியாதபடி சுற்றிலும் ட்ராஃபிக் ஜாம். சற்று நேரத்தில் எல்லோரும் பார்த்து நிற்க அந்த  துரதிஷ்டவசமாக விபத்தில் அவர் இறந்து போகிறார்.

சிறிது நேரம் கழித்து தான் நமக்கு புரிகிறது இது விபத்து இல்ல, திட்ட மிட்ட படுகொலை என்பது. இதில் இருந்து நாம் நிமிர்ந்து உட்காருவோம். அடுத்து இந்த கொலையை செய்தவர்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். அவர்கள் நான்கு பேர் கொண்ட டீம். அழகிய இளம் பெண், வயதான அங்கிள் ஒருவர், குண்டு மனிதன் இவர்கள் மூவரையும் வழி நடத்தும் விபத்துகளை திட்டமிடும் பிரைன் (Brain) எனப்படும் இளைஞன். தமிழ் சினிமா பாஷையில் சொன்னால் கூலிப்படை. ஆனால் இவர்களின் வொர்க்கிங் ஸ்டைல்தான் வித்தியாசம். யாருக்கும் சந்தேகம் வராதபடி விபத்து போல் கொலைகளை செட்டப் செய்வதுதான் இவர்களின் ஸ்பெஷாலிட்டி.

அடுத்து இவர்களுக்கு ஒரு ஆஃபர் வருகிறது. நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்து ஒரு பெரியவரை கொலை செய்ய வேண்டும் என்பது தான் அந்த வேலை. இவர்களும் அந்த வேலையை ஏற்று கொண்டு அதற்கான ப்ளான் தயார் செய்கிறார்கள். அந்த காட்சி மிகவும் நன்றாக படமாக்க பட்டு இருக்கும், அந்த ப்ளானை மிகவும் வி‌ரிவாக காட்டுவார்கள். சக்கர நாற்காலி மனிதரை இவர்கள் வெற்றிகரமாக கொலை செய்த பிறகு எதிர்பாராதவிதமாக அவர்கள் டீமைச் சேர்ந்த குண்டு மனிதன் விபத்தில் இறந்து போகிறான். இறப்பதற்கு முன் பிரைனிடம் அவன் சொல்வது, "இதுவும் விபத்துதானா?"




இதை கேட்டவுடன் மற்ற டீம் மெம்பெர்ஸ்க்கு பயம் பிடித்து கொள்கிறது. குண்டு ஆள் இறந்து போனது நிஜமாகவே விபத்தா இல்லை அவர்களைப் போல் யாரேனும் திட்டமிட்டு உருவாக்கிய விபத்து கொலையை என்று? பிரைன் தனது விசாரணையை முடுக்கி விட, சக்கர நாற்காலி ஆளின் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் மீது சந்தேகம் வலுக்கிறது. ஏஜெண்ட் தான் குண்டு ஆளை திட்டமிட்டு கொலை செய்து விட்டான் என்று பிரைன் நம்பி அந்த ஆளை நெருங்கும் சமயம் இவர்கள் டீமின் வயதான அங்கிள் மற்றுமொரு விபத்தில் உயிரை விடுகிறார். இனி பழிக்கு பழி என்று பிரைன் முடிவு செய்து ஏஜெண்டை விபத்து போல் கொலை செய்ய துல்லியமாய் திட்டமிட்டு தனது ப்ளானை செயல்படுத்தும் போது தான் உண்மை தெரியவருகிறது. அதுவும் கடைசிக்கு கடைசியாக தான் யார் கொலையாளி என்று தெரியவருகிறது. அது தெரியும் போது நிச்சியம் ஒரு "அட" போட வைக்கும். அது என்ன வென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக்சிடென்ட்ஸ் - விபத்தா..?? கொலையா...??

படத்தின் ட்ரைலர் காண:
http://www.youtube.com/watch?v=V9ljtnwHOUE

My Rating: 7.7/10......


Wednesday, February 27, 2013

Amour (2012) - காதலை சொல்லும் உலக சினிமா

Amour (2012) - இந்த வருடத்தின் ஆஸ்கார் வருது வழங்கும் விழாவில் பிற மொழி படங்களுக்கான பிரிவில் சிறந்த படமாக தேர்வு செய்ய பட்ட படம். விருது அறிவிக்கப்பட்டவுடன் படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து சென்ற வாரம் பார்த்து முடித்தேன். உலக சினிமா என்றால் என்னவென்று அறிய விரும்புவர்கள் இந்த படத்தை கண்டிப்பாய் பார்க்கலாம். படத்தை பற்றி விகடன் தளத்தில் அற்புதமாய் எழுதி இருந்தார்கள். அவர்களது விமர்சனத்தை இங்கு பகிர்கிறேன்.
'அமோர்' என்கிற பிரெஞ்ச் வார்த்தைக்கு காதல் (LOVE) என்று அர்த்தம். மரத்தைச் சுற்றியோ, அல்லது பனிபடர்ந்த மலை உச்சியிலோ ஆடிப்பாடும் காதலர்களை முக்கிய பாத்திரமாகக் கொண்ட வழக்கமான காதல் படம் இல்லை இது. ஒரு வீட்டினுள் அடைந்து கிடக்கிற 80 வயது முதிய தம்பதியினரின் காதலை பார்வையாளன் கண்ணில் நீர் வரவரச் சொல்லியிருக்கிற படம்தான் இந்த அமோர்.


ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்தனையோ காதல்களைக் கடந்து செல்கிறான். சிறு வயதில் தன் உலகமாயிருக்கும் தாயின் மீது தோன்றும் காதல், கண்டிப்பானவர் என்கிற வெறுப்பினூடேயும் தன் தந்தையின் மீதுள்ள காதல், பள்ளிப் பருவத்தில் உடன் பயிலும் சக மாணவியின் மீது வரும் காதல், இளம் பருவத்தில் கண்ணில் படும் அழகழகான பெண்கள் அத்தனை பேர் மீதும் பார்த்ததும் அரும்பும் காதல், திருமணத்திற்குப் பின் நம் அனைத்து கனவுகளையும் அடித்து நொறுக்கி விட்டு வந்து வாய்த்திருப்பவள் மீது வேறு வழியின்றி முகிழ்க்கும் காதல், பிறகு பிள்ளைகள் மீதும் அப்புறம் அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும். இப்படி காதல் நம் வாழ்வின் ஒரு சுழற்சியாகவே இருக்கிறது.

தற்காலத்தில் முகம் பார்க்கா இணையதள சாட் காதல், ஃபோட்டோ பார்த்தே வரும் முகநூல் காதல் என்று உலகமயமாக்கலுக்கு ஏற்ப காதலும் தன்னை தகவமைத்துக் கொண்டுவிட்டது. நம் வாழ்வின் சம அங்கமான ஒருவர் மரணப்படுக்கையில் தன் வாழ்வின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருக்க, அவர்மீது நாம் காட்டும் அளவற்ற கருணையும், அக்கறையும் காதல் என்கிற வார்த்தைக்கு இன்னும் அழகையும் இளமையும் சேர்த்துவிடுகிற அற்புதத்தை Michael Haneke-வின் 'அமோர்' சாதித்திருக்கிறது.

சமகால முக்கிய திரைப்பட இயக்குனர்களில் Michael Haneke-வின் இடம் தனித்துவமானது. இன்றுவரை இருண்ட மற்றும் மனதைப் பிசையக்கூடிய கதை சொல்லலுக்குப் பெயர் போனவர் இவர்.'The Seventh Continent’ 1989ல் இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம். 2001ல் வெளியான இவருடைய 'The piano Teacher’உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம். தன்னைவிட வயதில் குறைந்த தனது மாணவன் மீது ஒரு பியானோ டீச்சர் கொண்ட காதலையும் அதன் வலியையும் பதிவு செய்த அப்படம், அந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க கிராண்ட் விருதைப் பெற்றது. தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற படமான 'Blue’ வில் நாயகியாக நடித்த Juliet Binoche-வை வைத்து இவர் இயக்கிய படம் 'Cache' கேன்ஸ் திரைப்பட விழாவில் இவருக்கு மீண்டும் சிறந்த இயக்குனர் விருதைப் பெற்று தந்தது. 

2009ல் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'The White Ribbon'. முதலாம் உலக யுத்தத்திற்கு முன் ஜெர்மனியில் கதை நிகழ்கிறது. ஒரு ஜெர்மனி கிராமத்தில் தொடர்ந்து நடைபெறும் மர்மமான சம்பவங்களும், அக்கிராமத்தில் ஒழுக்கத்தின் பேரால் கண்டிப்புடன் வளர்க்கப்படும் சிறுவர்களும் என இருவேறு தளங்களில் கதை நகர்கிறது. அக்கிராமத்தின் ஒரு பள்ளி ஆசிரியரின் நினைவுகளாய் பயணிக்கும் இந்த கறுப்பு வெள்ளைப் படம் அந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்க பனைமர விருதைப் பெற்றது.


இந்த வருடம் 'அமோர்' திரைப்பபடத்திற்காக இவ்விருதை ஹனக்கே மீண்டும் பெற்றிருப்பன் மூலம் இவ்விருதை மும்முறை வென்ற பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலா உள்ளிட்ட இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் Michael Haneke .

பாரிஸில் நிகழ்கிறது இக்கதை. ஒரு வீடு தாழிடப்பட்டிருக்க வெளியிலிருந்து அதை உடைக்கும் சத்தம் கேட்கிறது. சிறிது போராட்டத்திற்குப் பிறகு கதவு உடைக்கப்பட தீயணைப்ப்பு வீரர்கள் "யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டுக்கொண்டே வீட்டைச் சுற்றி தேடுகிறார்கள். முடிவில் டேப்பினால் அடைக்கப்ப்பட்டிருக்கும் ஒரு அறையைத் திறக்க அதனுள்ளே மலர்கள் தூவிய படுக்கையில் ஆனா ( Anna )படுத்துக் கொண்டிருக்கிறாள் பிணமாக.

ஆனாவின் கணவர் ஜார்ஜ். இருவரும் எண்பதுகளில் இருக்கும் ஓய்வு பெற்ற இசைக் கலைஞர்கள். தங்கள் முன்னாள் மாணவன் ஒருவனின் இசை நிகழ்ச்சியை ரசித்துப் பாராட்டிவிட்டு வீடு திரும்புகின்றனர். அடுத்த நாள் காலை இருவரும் உணவருந்தும்போது ஆனா செயலற்று சிலை போலாகி விடுகிறாள். முதலில் ஜார்ஜ் ஆனா விளையாடுவதாகத்தான் நினைத்துக் கொள்கிறார். ஆனால் பிறகுதான் அவருக்கு விபரீதம் உறைக்கிறது. உடனடியாக ஆனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

மருத்துவமனையில் ஆனாவுக்கு இதய அடைப்பை நீக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவளுக்குச் செய்யப்படும் சிகிச்சை தவறாக முடிய, பக்கவாதம் ஏற்பட்டு உடலின் எந்த ஒரு பாகத்தையும் அசைக்க முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறாள் ஆனா.

ஒரு வீல்சேரில் அடைக்கலமாகிறாள் ஆனா. அவளுக்காக வீட்டில் பல மாற்றங்கள் செய்கிறார் ஜார்ஜ். கீழ் வீட்டினரும் அவருக்கு பல உதவிகள் செய்கின்றனர். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும் ஆனா தன்னை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூடாதென ஜார்ஜிடம் வேண்டிக்கொள்ள அதற்கு அவரும் அதற்கு சம்மதிக்கிறார்.

நாட்கள் நகர்கின்றன. சிறு அசைவிற்கும் தன் கணவனின் உதவியை நாட வேண்டிய நிலை ஆனாவுக்கு. ஜார்ஜ் மனம் கோணாமல் அனைத்துப் பணிவிடைகளையும் செய்து ஆனாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறார். நோய் தீவிரமடைய ஆனாவின் நிலைமை மேலும் மோசமாகிறது. ஆனா தன் மீதே வெறுப்பு கொண்டு பல நேரம் சிறு குழந்தை போல் நடந்து கொள்கிறாள்.

ஆனாவின் மகள் தன் தாய் கஷ்டப்படுவது கண்டு மனம் பொறுக்காமல் ஆனாவை ஓய்வு இல்லமொன்றில் சேர்த்து விடலாம் என்று யோசனை சொல்ல ஜார்ஜ் அதைத் திட்டவட்டமாக மறுத்து விடுகிறார். 'இத்தனை ஆண்டுக்காலம் என்னை அன்போடு பராமரித்தவள் அவள். அவளைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்'. என்கிறார்.


ஆனாவைக் கவனித்துகொள்ள இரண்டு வேலையாட்களை நியமிக்கிறார் ஜர்ர்ஜ். ஆனாவுக்கு அதிலே இஷ்டமில்லை. ஒருநாள் அவர்களின் முன்னாள் மாணவன் அவர்களைக் காண வருகிறான். ஜார்ஜ் ஆனாவை வீல் சேரில் வைத்து அழைத்தது வருகிறார். ஆனாவின் நிலை கண்டு மனம் வருந்துகிறான் வந்தவன். ஆனாவின் ஆசைக்கிணங்க அவளுக்குப் பிடித்த இசைத் தொகுப்பை அவளுக்காக வாசிக்கிறான்.

ஆனாவின் பணியாள் ஒருநாள் பொறுப்பின்றியும் இரக்கமின்றியும் ஆனாவிடம் நடந்துகொள்ள, ஜார்ஜ் அவளை வேலையைவிட்டு நிறுத்தி விடுகிறார். ஒருகட்டத்தில் ஆனா பேசும் சக்தியை முற்றிலுமாக இழந்துவிட, ஜார்ஜ் தினமும் இரவில் பேச வைக்கும் தெரபி என்று தன்னுடன் சேர்ந்து அவளை ரைம்ஸ் பாட வைக்கிறார். 

ஓர் இரவு ஜார்ஜ் ஆனாவுக்கு உணவு ஊட்டிவிட, ஆனா சிறுபிள்ளை போல் சாப்பிட மறுத்து அடம்பிடிக்க ஜார்ஜ் தன்னை மறந்தவராய் கோபத்தில் அவளை அடித்துவிடுகிறார். பிறகு அதற்காக வருத்தப்பட்டு ஆனாவிடம் மன்னிப்புக் கேட்கிறார்.

ஒருநாள் ஆனாவின் மகள் வீட்டிற்கு வரப் போவதாக கடிதம் வர.. ஆனா தன் மகள் அங்கு வருவதை விரும்பவில்லை என்கிறாள். அதையும் மீறி மகள் வந்துவிட, ஜார்ஜ் ஆனாவின் அறையைத் தாளிட்டு மகளிடம் ஆனா உன்னைக் காணத் தயாராயில்லை என்கிறார். ஆனால் மகளோ தன் அம்மாவைப் பார்த்தே தீருவேன் என்று அடம்பிடிக்க வேறு வழியின்றி ஜார்ஜ் கதவைத் திறந்துவிட கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆனாவை அவள் மகள் நெருங்கித் தொட முயல அப்போது விழித்துக்கொள்ளும் ஆனா பேச இயலாமல் கத்திக் கூப்பாடு போட்டு மகளைப் பார்க்க மறுத்து அங்கிருந்து அவளை வெளியேறச் சொல்கிறாள். ஜார்ஜ் தன் மகளிடம் " நீ உன் வாழ்க்கையைப் பாரும்மா; நாங்கள் எங்களுடைய வாழ்க்கையைப் பார்த்துக்கறோம்" என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அன்றிரவு ஜார்ஜ் பல் துலக்கிக்கொண்டிருக்க, கட்டிலில் படுத்திருக்கும் ஆனா நோயின் உச்சத்தில் வலி பொறுக்க மாட்டாதவளாய் வேதனையில் கத்துகிறாள். ஜார்ஜ் அவளுக்கு அருகில் அமர்ந்து ஆறுதலாய் வருடிக் கொடுக்கிறார். வலி தெரியாமலிருக்க தன் சிறு வயதுக் கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனா கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக, முடிவில் ஜார்ஜ் அருகிலிருக்கும் தலையணையை எடுத்து ஆனாவின் முகத்தில் பொத்தி அழுத்தி ஆனாவுக்கு அவளுடைய நோயின் வேதனையிலிருந்தும் இந்த உலகிலிருந்தும் நிரந்தர விடை கொடுத்து அனுப்பி வைக்கிறார். 

மறுநாள் ஜார்ஜ் கண்விழிக்க, ஆனாவின் குரல். சென்று பார்க்க ஆனா வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறாள். ஜார்ஜ் அவளுக்கு கோட் அணிய உதவி செய்து அவளுடனே சேர்ந்து அவரும் கிளம்பி வீட்டை விட்டு வெளியேறிச் செல்கிறார்.

மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரே வீட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். ஆனா மற்றும் ஜார்ஜாக நடித்த EMMANUEL RIVA , JEAN-LOUIS TRINTIGNANT இருவரின் நடிப்பு என்றும் மறக்க முடியாதது. ஜார்ஜாக நடித்த JEAN-LOUIS TRINTIGNANT பல முன்னணிப் படங்களில் நடித்தவர். COSTA GRAVAS என்னும் இயக்குனரின் ' Z ' படத்திற்காக கேன்ஸில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றவர்.

'அமோர்' தன் குடும்பத்தில் நடந்த உண்மைக் கதை என்கிற Haneke-விற்கு 'ஜார்ஜ்' மற்றும் 'ஆனா' என்கிற பெயர்களின் மீது ஏனோ அப்படி ஒரு காதல். தன்னுடைய எட்டுப் படங்களின் முதன்மைக் கதாபாத்திரங்களுக்குமே அவர் ஜார்ஜ், ஆனா என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.

- நன்றி- சினிமா விகடன்


Friday, January 25, 2013

விஸ்வரூபம் (2013) விமர்சனம் - இயக்குனர் கமலின் மாஸ்டர் பீஸ் படம்.

((( நோ ஸ்பாய்லர்கள் - No Spoilers )))

விஸ்வரூபம் படத்தை நான் வசிக்கும் சான் டியகோ நகரில் இன்று இரவு 8:30 காட்சி பார்த்தே விட்டேன். கடந்த ரெண்டு நாட்களாய் என்னுடைய எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி கிடந்தது, படம் அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று. இந்த படத்திருக்கு நான் கிட்ட தட்ட ஆறு மாதமாய் காத்து இருந்தேன், இத்தனை நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா என்றால், நிச்சியம் கண் மேல் பலன் கிடைத்தது. விஷுவல் ட்ரீட், மைன்ட் ப்லோவிங் படம் இது. தமிழில் இது வரை இது போன்ற ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு படம் வெளி வந்து உள்ளது. படம் என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி செய்து உள்ளது என்றே சொல்வேன். கிளாஸ், டெக்னாலஜி, மரண மாஸ் என்ற அணைத்து வஸ்துகளையும் சரியான விகிதத்தில் கலந்து வழங்கி உள்ளார் இயக்குனர் கமல்ஹாசன். நான் பார்ப்பது தமிழ் படமா இல்லை, ஹாலிவுட் படமா என்கிற சந்தேகம் படம் முழுக்க எனக்கு வந்து கொண்டே இருந்தது. கமல் பேசும் தமிழை வைத்து தான் நான் பார்ப்பது தமிழ் படம் என்கிற உணர்வே எனக்கு வந்தது. அப்படி பட்ட படம் இது. வொர்த் வாட்சிங்.


படத்தின் ஒன் லைனர், படத்தின் பாடல் வெளியீடு விழாவில் ஏற்கனவே கமல் சொல்லி இருக்கிறார். விஷ் (கமல்) மற்றும் பூர்ணிமா (பூஜா குமரி) இருவருக்கும் கல்யாணம் நடந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசிக்கிறார்கள். விஷ் கதக் சொல்லி குடுக்கும் மாஸ்டர். பூர்ணிமா அமெரிக்க வருவதருக்கு விஷ்சை திருமணம் செய்ய ஒத்து கொள்கிறார். பூர்ணிமாவிருக்கு விஷ் மீது பெரிய ஈடுபாடு கிடையாது. டைவர்ஸ் வாங்க விஷ்சிடம் எதாவது குறை கண்டுபிடிக்க வேண்டி பூர்ணிமா பிரைவேட் டிடக்டிவ் ஒருவரை அமர்த்தி அவரை பின் தொடர செய்கிறார். அந்த டிடக்டிவ் விஷ்ஷை பின் தொடர்ந்து செல்ல, அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்து இருக்கிறது. கதை அங்கிருந்து அசுர வேகம் பிடிக்கிறது. எதிர்பாரா திருப்பங்களுடன் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அல்கொய்தா, ஜிஹாத், தாலிபான், ஒசாமா பின்லேடன், என்று பயணம் செய்து கடைசியில் அமெரிக்காவில் அதுவும் அடுத்த பாகத்துக்கு ஆச்சாரம் போட்டு அட்டகாசமாய் முடிகிறது.


படத்தின் நாயகன் கமல் ஹாசன், இவரின் நடிப்பை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். மனிதர் அந்த காதபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார். கதக் ஆடும் போது அவர் காட்டும் முக பாவனைகள் அற்புதம். ஏதோ ஒரு நளினமான பெண் தான் கமல் போல் வேடம் பூண்டு உள்ளாரோ என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. உண்மையான பெண் கூட இவர் அளவுக்கு முக  பாவனைகளை தந்துருபமாக காட்டி இருப்பாரா என்பது சந்தேகமே. படத்தில் கமலின் பரிணாம மாற்றம் (Transformation) காட்சி ஒன்று வரும், அந்த காட்சி ஒரு மாஸ் காட்சிக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதருக்கு தக்க சான்று. ஏசி குளிரிலும் எனக்கு கூஸ்பம்ப்ஸ் ஏற்பட்டது. செம சீன் அது. சண்டைகாட்சிகளில் கமல் கடுமையாக உழைத்து உள்ளார். ஆனால் ஆரம்ப காட்சிகளில் கமலின் முக சுருக்கம் நன்றாக தெரிகிறது. படத்தில் வயதான முக தோற்றத்தை ஜஸ்டிபை செய்து இருப்பார் கமல். நிருபமா விஷ்ஸிடம் டைவர்ஸ் கேட்க வயதான முக தோற்றத்தை ஒரு காரணமாக சொல்லி இருப்பார்.


படத்தின் கதாநாயகி நிருபமா (பூஜா குமரி) மற்றும் அஸ்மிதா (அண்ட்ரியா). இருவரில் பூஜா குமாரிக்கு கொஞ்சமே கொஞ்சம் ஹெவி ரோல். அமெரிக்காவில் Phd முடித்த அணு விஞ்ஞானியாக வருகிறார். இவர் பேசும் ஐயர் பாஷை சில நேரங்களில் சிரிப்பை வர வைத்தாலும், நிறைய நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கமல் டச் காமெடி வசனங்கள் இவர் முலம் கேட்கலாம். பெரிய சிரிப்பு வர வில்லை என்றாலும் கண்டிப்பாய் ஸ்மைல் பண்ணலாம். அண்ட்ரியாவிருக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை, ட்ரைலரில் அவர் பேசிய வசனங்கள் தான் படத்தில் பேசி உள்ளார். பெருசாய் ஒன்றும் இல்லை.

வில்லன் ஓமர் (ராகுல் போஸ்), ஆப்கான ஜிஹாத் போராளியாக வருகிறார். நிஜமான ஆப்கான் ஜிஹாத் போராளி ஒருவன் எப்படி இருப்பான் என்று நான் கற்பனை செய்து இருந்தேனோ, அதே போல் தான் இவரும் நடித்து இருக்கிறார். மனிதர் அந்த காதபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார். விஜயகாந்த் படத்தில் வரும் தீவிரவாதி வாசிம்கான் போல் இவர் என்று நீங்கள் கற்பனை செய்தால், ரொம்ப சாரி. இவர் கத்தி கூட பேச மாட்டார். எந்த காட்சியிலும் எரிச்சல் வருவது போல் இவரது ஆக்டிங் இல்லை என்பது பெரிய ஆறுதல். ஒரு காட்சியில் Tall sheikh வேறு வருவார், அவர் யார் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஓமர் ஏன் தமிழ் பேசுகிறார் என்பதருக்கு அவர் ஒரு காரணம் சொல்வர், "நான் கொஞ்சம் காலம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்தேன், அதனால் எனக்கு தமிழ் தெரியும்" என்று சொல்லவர், இந்த காட்சி அவசியம் தேவை, இல்லை என்றால் படம் முழுக்க அவர் உருது தான் பேசி கொண்டு இருப்பார். தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்பு ஒன்று இந்த காட்சிக்கு ஆட்சேபனை செய்து ஓமர் என்கிற போராளி எப்படி இந்தியா வந்து திரும்பி போனார் என்று கமலிடம் ஆதாரம் கேட்கிறது. நெம்ப கஷ்டம் தான்.


படத்தின் பின்னணி இசை மிக பெரிய ஏமாற்றம். டெம்போவை ஏற்றும் இசை என்று எதையும் சொல்ல முடியாது. நிறைய இடங்களில் மொக்கையாய் இருந்தது. கமல் இசை பொறுப்பை ஷங்கர், எசன்லாய்யிடம் குடுத்ததுக்கு பதில், ரஹ்மானிடம் குடுத்து இருக்கலாம். அவருக்கு ஏற்ற ப்ளாட். படம் இன்னும் அட்டகாசமாய் வந்து இருக்கும். படத்தில் வெறும் நிறைகள் மட்டும் தான் உள்ளது, குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம், பெரிய குறை ஒன்று உள்ளது. வழக்கமா கமல் படத்தில் இருக்கும் குறை தான். படம் படித்தவர்களுக்கு தான் புரியும். நிறைய டெக்னிகல் வார்த்தைகள், சிலியும் பாம், ஆட்டாமிக் பவர், ஷீல்ட் பாக்ஸ் என்று பாமரன் கேள்விபடாத வார்த்தைகள் அப்புறம் அவனுக்கு அவ்வளவு தெரியாத அமெரிக்க ஆப்கன் போர் என்று சில விசயங்கள் இருக்க தான் செய்கிறது. ஆனால் ஆப்கான் போர், ஜிஹாத் பற்றி கொஞ்சம் இணையத்தில் படித்தவர்கள் இந்த படத்தை ஹாலிவுட் படத்திருக்கு இணையாக கொண்டாடுவார்கள். 

கடைசியாக இந்த படத்தில் தமிழ்நாடு முஸ்லிம் அமைப்புகள் சொல்வது போல், சர்ச்சைக்குரிய காட்சிகள், முஸ்லிமை இழவுப்படுதும் காட்சிகள் இல்லையா என்று என்னை கேட்டல், இல்லை என்று தான் நான் சொல்வேன். படத்தில் நிறைய இடத்தில அல்லா புகழ் தான் பாடி உள்ளார் இயக்குனர் கமல்ஹாசன். சின்ன ஸ்பாய்லர், படம் ஆரம்பித்த உடன் தெரிந்து விடும், படத்தில் கமல் பிராமன் இல்லை, அவர் "விசிம்" என்கிற முஸ்லிம் என்று. அப்புறம் இந்த படத்தை யார் எல்லாம் எதிர்க்கலாம் என்றால், அல் கொய்தா அமைப்பை சேர்ந்தவர்கள், ஜிஹாத் போராளிகள், வெடி குண்டு வைக்கும் தீவிரவாதிகள் வேண்டும் என்றால் எதிர்க்கலாம். காமன் மேன்னுக்கு இது ஒரு விஸ்வரூப அனுபவம்.
அடுத்த பதிவில் இயக்குனர் கமல் பற்றி எழுதுகிறேன்.

விஸ்வரூபம் - Mind Blowing...

My Rating : 8.4 ....


Sunday, December 23, 2012

முன்று உலக சினிமா : Russian Ark (2002)/Citizen Kane (1941)/Cinema Paradiso (1988)

போன வாரம் பேஸ்புக்கை மேய்ந்து கொண்டு இருக்கும் போது "உலக தரம் சினிமா & சாதனையாளர்கள் - ஒரு பார்வை" என்கிற பக்கத்தை பார்க்க நேர்ந்தது. எப்பொழுதாவது எழுதும் இவர்கள் சில நல்ல திரைப்படங்களை நேர்த்தியாக அறிமுக படுத்தி வருகிறார்கள். அந்த பக்கத்தில் இருந்து நான் பார்த்த/ரசித்த திரைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்போம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------  
ரஷ்யன் ஆர்க் (Russian Ark) 2002 ஆம் ஆண்டு வெளி வந்த வரலாறு சார்ந்த ரஷ்ய மொழி திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்கியவர் அலெக்ஸாண்டர் சொகுரோவ் (Alexander Sokurov) . இந்த படம் பொருளாதார அடிப்படையில் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் இது ஒரு சாதனை திரைப்படமாக கருதப்படுகிறது. 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் ஒரே கேமராவின் மூலம் ஒரே ஷாட் (shot) இல் எடுக்கப்பட்டது (Steadycam Sequence Shot ). ஒரே ஷட்டில் படம் பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. படம் எடுபவர்களுக்கு தான் அதன் கஷ்டம் தெரியும். இரண்டு டேக்கள் தொழில்நுட்ப தவறினால் தடைபட, முன்றாவது டேக் 96 நிமிடங்களில் ஓகே செய்ய பட்டது.

நடிகர்கள், துணை நடிகர்கள் என 2000 பேர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். 3 இசை குழுவினர் இசை அமைத்துள்ளனர். ரஷ்யாவின் St .Petersburg இல் இருக்கும் குளிர்கால அரண்மனை (Winter Palace) இல் முழு படபிடிப்பையும் நடத்தியுள்ளார் இயக்குனர். படம் ஒரே நாளில் படமாக்க பட்டது. கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த திரைப்படத்துக்கு பின்னால் எவ்வளவு பெரிய கடின உழைப்பு இருக்கிறது என்று. அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் இடம் பிடித்தது. கதை என்று பார்த்தல் படத்தில் அவ்வளவு சுவாரிசியம் இருக்காது, படம் கொஞ்சம் போர் தான், இந்த படம் ரஷியாவின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள நமக்கு பேர் உதவி செய்யும். படம் பார்க்கும் முன்பு ரஷிய கலாச்சாரத்தை/வரலாற்றை பற்றி நிறைய கிரௌண்ட் வொர்க் பண்ணி இருக்க வேண்டும். நான் அது மாதிரி எதுவும் செய்யாமல் படத்தை பார்த்தனால் எனக்கு நிறைய காட்சிகள் புரியவில்லை. மீண்டும் ரஷிய வரலாற்றை படித்து விட்டு படத்தை பார்க்க வேண்டும். என்னை பொறுத்த வரை புதிய முயற்சி காரணமாக உலக சினிமா வரலாற்றில் இந்த திரைப்படத்துக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. 
------------------------------------------------------------------------------------------------------------------------------
Citizen Kane (சிட்டிசன் கேன்) - 1941 வது வருடம் வெளிவந்த ஆங்கில திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் ஓர்சன் வெல்ஸ். உலகின் மிகச்சிறந்த 10௦ படங்களில் சிட்டிசன் கேன் இருக்கும் என்பது பல சினிமா ஆய்வாளர்களின் கருத்து. இத்திரைப்படத்தின் இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை போன்றவை அக்காலத்தில் மிக சிறந்ததாக கருதப்பட்டது. இந்த திரைப்படத்தில் தான் முதன் முறையாக ஒளிப்பதிவுகளில் ஒரு வகையான "deep focus" என்ற முறையை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளனர். தூரத்தில் இருக்கும் ஒரு பொருள் கூட தெளிவாக தெரியும் அளவுக்கு இந்த ஒளிப்பதிவு இருக்கும். கதைப்படி ஒரு பத்திரிக்கையின் சொந்தக்காரரும் பெரும் செல்வந்தருமான சார்லஸ் போஸ்டர் கேன் (Charles Foster Kane) என்பவர் இறக்கும் தருவாயில் ரோஸ்பட் (Rosebud) என்று கூறி இறந்து விடுகிறார். 

பத்திரிக்கை ஆசிரியரான தொம்சன் (Thompson) என்பவர் கேன் உடைய சொந்த வாழ்க்கை பற்றியும் அவர் கூறிய கடைசி வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதையும் அறிய முயற்சி செய்கிறார். இதற்காக கேன் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் தேடி கண்டுபிடித்து விசாரணை செய்கிறார். இறுதியில் அவர் கண்டு பிடித்தாரா இல்லையா என்பது திரைப்படத்தின் முடிவு.இந்த திரைப்படம் 1942 ஆம் வருடம் ஆஸ்கார் விருதில் 9 துறைகளில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த திரைக்கதைக்கான விருதை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

சரி, அந்த ரோஸ்பட் (Rosebud) என்பது என்னவாக இருக்கும்? கேன் தான் சின்ன வயதில் வைத்து விளையாடிய ஒரு பனி சறுக்கு பலகையின் பெயர் தான் ரோஸ்பட். அவர் தனது சிறு வயது வாழ்க்கையை நினைத்துக்கொண்டே உயிர் நீத்தார் என்பதையே இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. எனக்கு மிகவும் பிடித்த உலக சினிமா வரிசையில் "சிட்டிசன் கேன்" படத்திருக்கு நிச்சியம் ஒரு இடம் உண்டு. உலக சினிமாவை விரும்பும் யாரும் தவற விட கூடாத படம் இது.

எனக்கு மிகவும் பிடித்த உலக சினிமா வரிசையில் "சிட்டிசன் கேன்" படத்திருக்கு நிச்சியம் ஒரு இடம் உண்டு. உலக சினிமாவை விரும்பும் யாரும் தவற விட கூடாத படம் இது. படம் பார்த்த உடன், இப்படத்தின் தாக்கம் உங்களிடம் குறைந்தது ரெண்டு நாட்கள் இருக்கும் , கண்டிப்பாய் உங்கள் குழந்தை பருவம் உங்களுக்கு ஞாபகம் வரும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------- 
சினிமா பேரடிசோ (Cinema Paradiso) - 1988 ஆம் ஆண்டு வெளி வந்த இத்தாலிய மொழி திரைப்படம். இதன் இயக்குனர் குஸாப்பே டோர்ணடோர் (Guiseppe Tornatore). நாம் சின்ன வயதில் நமது ஊர்களில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்ததை மறக்க முடியுமா....அது போல தான் இந்த படமும். ஒரு சினிமா இயக்குனர் தான் சின்ன வயதில் வாழ்ந்த ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸ் மற்றும் அதில் ஆபரேட்டராக வேலை செய்த ஒரு பெரியவர், இவர்களது ஆழ்ந்த நட்பு இவற்றை பற்றி சொல்லும் ஒரு கவித்துவமான திரைப்படம் தான் சினிமா பேரடிசோ. 

இந்த திரைப்படம் 1989 ஆம் ஆண்டு சிறந்த வேற்று மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது, கோல்டன் க்ளோப் விருது, BAFTA விருது, கேன்ஸ் திரைப்பட விழாவில் Grand Prix Jury விருது போன்றவற்றை சேர்த்து இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. Empire Magazine தரவரிசைப்படி உலக சினிமாவின் சிறந்த 100 படங்களில் 27 வது இடத்தில் இத்திரைப்படம் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் திரைஅரங்குகளுக்கு போக ஆள் இல்லாததால் அவை இடிக்கப்பட்டு கல்யாண மண்டபம், வணிக வளாகம் என்று கட்டி கொண்டு இருக்கின்றனர். ஆனாலும் சின்ன வயதில் நாம் திருவிழா திரையில் பார்த்த திரைப்படங்கள், டூரிங் டாக்கீஸ் திரைப்படங்கள் இவைகளை மறக்க முடியுமா....இன்றும் அதையெல்லாம் Facebook பக்கத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு தானே இருக்கிறோம். 
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜஸ்ட் ஷேரிங் ஒரு செய்தி: இணையத்தில் என்னுடன் நெருக்கமாக பழகும் சில நண்பர்களுக்கு ஏற்கனவே தெரிந்த செய்தி தான். இருந்தாலும் சொல்கிறேன், நான் பணி புரியும் கம்பெனியின் தலைமையிடம் அமெரிக்காவில் "சான்-டியாகோ" என்கிற இடத்தில உள்ளது. நான் இங்கு இந்தியாவில் ஆணி புடுங்கும் அழகை பார்த்து, நீங்கள் ஏன் இங்கு வந்து அதே "ஆணியை" புடுங்க கூடாது என்று கேட்டார்கள். சரி என்று நானும் ஒத்து கொள்ள, அதற்கான பணிகளை தான் கடந்த ஆறு மாதம் காலமாக செய்து வந்தேன். ஆப்பர் லெட்டர், யு.எஸ் விசாவிருக்கு தயார் ஆவது என்று வாழ்கை மிகவும் பிஸியாக சென்றது. போன வாரம் தான் ஒபாமாவின் ஆட்கள் பெரிய மனது பண்ணி L1 (Inter Company Transfer) விசா அனுமதி குடுத்தார்கள். அடுத்த மாதம் யு.எஸ் சென்று விடுவேன். 

நீங்கள் பயபடுவது போல், நான் யு.எஸ் சென்ற உடன் அமெரிக்கா காரன், ரோட்டுல எச்சி துப்ப மாட்டான், காரை ரோடு மேல தான் ஒட்டுவான், சிக்னலில் காரை நிறுத்துவான் என்று இந்தியாவையும் அமெரிக்காவை கம்பேர் செய்து பதிவு எழுதி உங்களை வதைக்க மாட்டேன். இப்பொழுது செய்வதை தான் அங்கு சென்றும் செய்வேன். 
------------------------------------------------------------------------------------------------------------------------------



Sunday, August 12, 2012

Trust (2010): ஆன்லைன் சாட்டிங் வக்கிர மிருகங்கள்.

Trust (2010) அமெரிக்காவில்  இளம் டீன் ஏஜ் பெண்கள் எப்படி ஆன்லைன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுகிறார்கள் என்பதை கொஞ்சம் கூட எதார்த்தத்தை மீறாமல் சொல்லும் படம். ஆன்லைன் சாட்டிங் நம்மில் அனைவரும் செய்து இருப்போம். முகம் தெரியாத நிறைய நபர்களை நாம் சந்திக்க ஒரு வாய்ப்பாய் அமைக்கிறது ஆன்லைன் சாட்டிங். முகம் தெரியாமல்/முகத்தை மூடி செய்ய படும் வாய்ஸ் சாட்டிங்கில் ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும், வயதான ஆள் தான் டீன் ஏஜ் பையன் போலவும் நம்முடன் சாட் செய்ய நிறையவே வாய்ப்பு  இருக்கிறது.


தவறான சாட் முலம் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுவதை, பெண்கள் ஏமாற்ற படுவதை நியூஸ் பேப்பரில் படித்து இருப்போம். நமக்கு அது வெறும் செய்தி தான், ஆனால் அந்த பெண் எந்த மாதிரியான மன உளைச்சலுக்கு ஆளாக்க படுகிறாள், அவளது குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்ன என்பதை, கண்டிப்பாய் முன்றாவது நபர்கள் ஆகிய நாம் உணர முடியாது. ஆன்லைன் சாட்டின் விளைவாக ஒரு அமெரிக்க  டீன் ஏஜ் பெண் எப்படி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்டு உடைந்து போகிறாள், எப்படி பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகிறாள், அந்த மன உளைச்சலில் இருந்தது எப்படி மீள்கிறாள் என்பதை அற்புதமாய் சொல்லும் படம் தான் Trust.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான அனே (Annie) 14 வயதை நெருங்கும் அமெரிக்க டீன் ஏஜ் பெண். முதல் காட்சியில் அனே நெட்டில் சிலருடன் தனது ஸ்கூல் வாலிபால் செலக்ஷன் பற்றி ஆன்லைன் குரூப் சாட் செய்வது போன்று படம் ஆரம்பிக்கும், அந்த சாட்டில் தன்னுடன் தவறாக பேசும் நபரை அனே உடனே பிளாக் செய்து விடுவாள். இதில் இருந்தது தவறாக பேசுபவர்களை கண்டு பிடிக்கும் அளவுக்கு வளர்ந்த பெண் அனே என்பது நமக்கு புரியும். அந்த குரூப் சாட்டில் சார்லி என்பவன் மட்டும் மிகவும் நல்லவன் போல் அனேவிற்கு வாலிபால் விளையாட்டு பற்றி டிப்ஸ் தருவான். அனேவும் ஸ்கூல் வாலிபால் டீமில் விளையாட செலக்ட் ஆகி விடுவாள். மறுநாள் சாட்டில் சார்லி அவளது செலக்ஷன் பற்றி கேட்க, அனேவிற்கு சார்லி மீது நல்ல அபிப்பிராயம் வருகிறது. இருவரும் சாட்டில் பேச ஆரம்பிக்கிறர்கள். சார்லி தனக்கு 15 வயது தான் ஆகிறது, தானும் ஸ்கூல் வாலிபால் பிளேயர் என்று சொல்லுவான். இப்படியாக சார்லி மற்றும் அனேவின் நட்பு சிறு புள்ளியில் ஆரம்பித்து வளர்கிறது.

இதற்கிடையே அனேவின் தந்தை வில் (Will) அவளது 14 ஆவது பிறந்த நாள் அன்று Apple Mac புக் ஒன்றை பரிசாக தருவார். Mac புக் முலம் அனே சார்லியுடனான தனது சாட்டிங்கை தொடர்கிறாள். அப்பொழுது சார்லி தான் 15 வயது பையன் இல்லை, தனக்கு 20 வயது ஆகிறது என்று சொல்லுவான். அனேவும் அதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ள மாட்டாள். சிறிது நாட்களில் இருவரும் டீப் சாட்டிங்கில் இறங்கி விடுவார்கள். பிறகு சார்லி தனக்கு 20 வயது இல்லை, தான் 25 வயது வாலிபன் என்று ஒரு புகைபடத்தை அனுப்புவான். அனே அப்பொழுதும் அவனை மன்னித்து விடுவாள்.
இருவரது சாட்டிங் எந்த தடையும் இன்றி வளர்கிறது. ஒரு நாள் சார்லி நாம் இருவரும் சந்தித்தால் என்ன என்று சொல்லி, அந்த சந்திப்புக்கு அனேவிடம் சம்மதம் வாங்கி விடுவான். அந்த ஊரில் இருக்கும் ஒரு மாலில் இருவரும் சந்திப்பது என்று முடிவு செய்கிறார்கள். அந்த மால்க்கு சென்று சார்லியை பார்த்த பிறகு தான் அனேவிற்கு தெரிய வரும், சார்லி 25 வயது வாலிபன் கிடையாது, 35 வயதை கடந்த நடுத்தர ஆள் என்பது. மால்லில் இருந்தது வெளியேற அனே செய்யும் முயற்சி, சார்லியின் நயவஞ்சக பேச்சால் தடுத்து நிறுத்த படுகிறது. மால்லில் இருந்தது அனேவை சார்லி ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று அவளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறான்.

அந்த சம்பவத்தினால் மனம் சோர்வடையும் அனே, அதை பற்றி தனது உயிர் தோழியான பிரிட்டானியிடம் சொல்கிறாள். ஆனால் பிரிட்டானி அந்த சம்பவத்தை அவர்கள் படிக்கும் ஸ்கூல் நிர்வாகத்திடம் சொல்லி விடுவாள். அங்கிருந்து லோக்கல் போலீஸ், பிறகு FBI வரை விஷயம் சென்று விடும். அனே ஒரு வயதான நபரால் ஏமாற்றி கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டு வில் (Will) உடைந்து விடுவார். FBI விசாரணையில் சார்லி இது போல் பல பெண்களை ஏமாற்றி இருப்பது தெரிய வரும். அதுவும் எந்த ஒரு தடயமும் விடாமல் தவறை சரியாக செய்பவன் சார்லி என்பது தெரியவரும். IP அட்ரெஸ், கிரெடிட் கார்டு, போட்டோ என்று ஒரு தடயம் கூட கிடைக்காது.
சாதாரண ஆக்சன் படமாக இருந்தால், பாதிக்க பட்ட பெண்ணின் அப்பா கதாபாத்திரம் தன் பெண்ணை மோசம் செய்தவனை துரத்தி துரத்தி கொலை செய்வது போல் இருந்தது இருக்கும். அது நடைமுறை சாத்தியம் இல்லாத செயல். அப்படி செய்து இருந்தால் பத்தோடு பதினொன்று என்று இந்த படம் ஆகி இருக்கும்.

ஆனால் Trust படத்தில் அந்த மாதிரி எதுவும் செய்யாமல், பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்ட பெண் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவர்களது குடும்பம் சந்திக்கும் சிக்கல்கள் பற்றி காட்டி இருப்பார் இயக்குனர் டேவிட் சுவிம்மர் (David Schwimmer). தன் அன்பு மகள் யாரோ ஒருவனால் ஏமாற்ற பட்டு விட்டாளே என்று  அனேவின் தந்தை கதாபாத்திரமான வில் கதறும் காட்சிகள் நம்மை நிறைய இடங்களில் உலுக்கி எடுத்து விடும். படம் நகர நகர நாமும் அவர்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆகி விடுவோம். அந்த குடும்பத்துக்கு எப்படியாது ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நம்மை ஏங்க வைத்து விடுவார் இயக்குனர். படத்தின் இறுதி காட்சியில் வில் மற்றும் அனே இடையே நடைபெறும் உரையாடல்கள் உலக தரமானவை. யாரையும் பழி வாங்காமல், யாருக்கும் அப்படி இரு, இப்படி இரு என்று அட்வைஸ் செய்யாமல் என்ன நடந்தாலும் Life has to Go On என்ற தத்துவத்துடன் படம் முடியும்.
படம் முடிந்து கிரெடிட்ஸ் போடும் போது சார்லி என்பவன் யார் என்று காட்டப்படும். அந்த காட்சியை பற்றி ரொம்ப நேரம் நினைத்து கொண்டு இருந்தேன். எனக்கு தோன்றியது சார்லி என்பவன் சமுகத்தில் முலையில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து வாழும் மிருகம் கிடையாது, அவன் சமுகத்தின் உயர்ந்த இடத்தில் கூட இருக்கலாம், எங்கும் இருக்காமல் எதிலும் இருக்காமல், யாராகவும் இருக்காமல்...

போன வருடம் இணையத்தில் ஒரு பிரச்சனை வெடித்தது, சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளர்/பிளாக்கர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசி விட்டார் என்ற சர்ச்சை வெடித்தது. அது உண்மையா என்று கூட எனக்கு தெரியாது. அனைவரும் சாரு நிவேதிதாவை அவர் சாட்டில் பேசியதை விட மிகவும் ஆபாசமாக பேசினார்கள். அந்த பெண்ணின் மனநிலையில் இருந்தது யோசித்து பார்த்தவர்கள் மிகவும் சில பேரே. எனக்கு இந்த படம் பார்த்த உடன் அந்த பெண்ணின் (அது பெண்ணே கிடையாது என்றும் சில பேர் சொன்னார்கள்) மன நிலையை யோசித்து பார்த்தேன், ஒரு கனம் என் உடம்பு நடுங்கி விட்டது. அது தான் Trust டின் தாக்கம்.

வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை கண்டிப்பாய் பாருங்கள். முழு படத்தையும் youtube யில் காண இங்கு கிளிக் செய்யவும்.

Trust: What Ever happens Life has to Go On.

My Rating: 8.3/10......


Saturday, May 26, 2012

City of God-(2002)-கேங்ஸ் ஆப் பிரேசில் -15+

ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள ரெண்டு வழிகள் உள்ளன, ஒன்று நீங்கள் அந்த நாட்டிற்கு பயணம் செய்து அந்த நாட்டின் கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை அறிந்து கொள்ளலாம், அல்லது நீங்கள் அந்த நாட்டின் திரைப்படங்களை பார்க்கலாம் - யாரோ சொன்னது !!!!!
     
திரைபடங்கள் நமக்கு என்ன வாழ்க்கைமுறையை கற்று தர போகின்றது என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பார்க்க வேண்டிய படம் "City of God-(2002)" a.k.a: Cidade de Deus. உங்கள் சந்தேகம் போயே போய் விடும். பிரேசில் என்றால் நமக்கு உடனே ஞாபகம் வருவது மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த புட் பால் விளையாட்டு வீரர்கள், சம்பா நடனம் மற்றும் பெரிய ஜீசஸ் சிலை தான். அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைமுறையை நாம் அறிந்திருக்க வாய்ப்பு ரொம்பவே குறைவு. இந்த படம் முலமாக நீங்கள் பிரேசில் நாட்டின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கைமுறையை அறிந்து கொள்ள முடியும்.எனக்கு பிரேசில் என்றால் இனி மேல் இந்த படமும் ஞாபகம் வரும்.
City of God பிரேசில் நாட்டின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோ அருகில் உள்ள ஒரு சேரி பகுதி. அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் தொகுப்பே இப்படம். அந்த சேரியில் நிறைந்து இருப்பது வன்முறை மற்றும் அதீத வன்முறை மட்டுமே. அது மட்டும் அல்லாது போதை மருந்து கும்பல், அவர்கள் செய்யும் கொலை, கொள்ளை என்று அந்த சேரியே வாழ தகுதியற்ற இடமாக மாறி கொண்டு வருகிறது. இந்த மாதிரி அசாதாரணமான சூழ்நிலையில் அந்த சேரியில் பின்புலத்தில் இருந்து வந்து, சிறந்த போட்டோக்ராப்பர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ராக்கெட் (Rocket) என்ற இளைஞன் தனக்கும் City of God-க்கு இருக்கும் பந்தத்தை நமக்கு விவரிக்கும் கதையே இந்த படம். சும்மா சொல்ல கூடாது, இந்த படத்துல யாரும் நடிச்ச மாதிரி எனக்கு தெரியவில்லை, எல்லாம் அந்த அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார்கள்
படத்தில் முதல் காட்சியில் City of God நகரின் மைய பகுதியில் ஒரு தாதா கேங், தங்கள் மதிய உணவிற்கு சிக்கன் சமைத்து கொண்டு இருப்பார்கள். அங்கு நிற்கும் ஒரு கோழி மரண பயத்துடன் மற்ற கோழிகள் சிக்கன் ஆவதை பார்த்து கொண்டு இருக்கும். பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று, தன் கட்டை தானே அவிழ்த்து கொண்டு தப்பித்து ஓடும். நம்ப ஊருல ஹீரோயின் கோழி தப்பிச்சி போச்சுனா அதை பிடிச்சு தர நம்ப ஹீரோ இருப்பாரு. கோழி பிடிக்கிற சாக்குல அவரு ஹீரோயின பிடிப்பாரு !! காதல் வரும், இது சராசரி சினிமா.. ஆனா நம்ப பார்கிறது உலக சினிமா. இங்க தப்பிச்ச கோழிய பிடிக்க அந்த தாதா கும்பலின் மொத்த பேரும் துப்பாக்கிய தூக்கிகிட்டு ஓடுவாங்க. சும்மா கிடையாதுங்க சுட்டுகிட்டே ஓடுவாங்க. எல்லாம் பத்து வயசுல இருந்து இருபது வயசுக்குள்ள தான் அந்த தாதா கேங் ஆளுங்க இருப்பாங்க. ஓடுற கோழி படத்தோட கதைசொல்லி ராக்கெட் பாகத்துல வந்து நிக்கும். அந்த கும்பலின் தலைவன் பேரு லில்' ஜே (Lil' Ze), வெறும் இருபது வயசு தான் இருக்கும். ஜே மற்றும் ராக்கெட் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். ஜே ராக்கெட்கிட்ட அந்த கோழிய பிடிக்க சொல்லுவாரு. ராக்கெட் கோழி பிடிக்க ரெடி ஆவான். கரெக்டா அந்த நேரம் பார்த்து மொத்த போலீஸ் குரூப் தாதா லில்' ஜே கும்பலை உயிரோடு அல்லது பிணமாக பிடிக்க அன்புச்செல்வன் IPS மாதிரி விறப்பா வந்து சேருவாங்க. இந்த பக்கம் போலீஸ் படை, அந்த பக்கம் லில்' ஜே படை, நடுவுல ராக்கெட் & கோழி. இங்க இருந்து பிளாஷ்பேக்....... ராக்கெட் தன்னோட கடந்த காலத்தை பற்றியும் லில்' ஜேவை பற்றியும் மற்றும் அந்த சேரியில் வாழ்ந்த அனைவரை பற்றியும் நமக்கு கதை சொல்லுவார்.
ROCKET
கதை முதலில் 60's பயணம் செய்யும். இங்கு நாம் City of God-யின் ஆரம்ப நாட்களை பார்போம். ராக்கெட் மற்றும் லில்' ஜே சிறுவனாக இருப்பார்கள். லில்' ஜேவின் மற்றும் ஒரு நண்பனின் பெயர் பென்னி(Benny). அங்கு டெண்டர் ட்ரையோ (Tender Trio) என்ற முன்று பேர் கொண்ட கேங் சிறு, சிறு கொள்ளைகள் செய்து கொண்டு இருப்பார்கள். டெண்டர் ட்ரையோ கேங்கில் எப்படியாவது தங்களையும் சேர்த்து கொள்ள சிறுவர்கள் லில்' ஜே & பென்னி அந்த முன்று பேரை கெஞ்சி கொண்டு இருப்பார்கள். இப்படியாக 60's கதை பயணம் செய்யும். கதை முடிவில் ட்ரையோ கேங் மெம்பர்ஸ் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள்.
அடுத்து கதை 70's-க்கு நகரும். அங்கு ராக்கெட் பள்ளிக்கு செல்லும் வாலிபனாக வளர்ந்து இருப்பான். லில்' ஜே மற்றும் பென்னி அந்த நகரத்தில் பெரிய போதை மருந்து டீல்ர்ஸ் ஆக வளர்ந்து இருப்பார்கள். தங்கள் பாதையில் யார் வந்தாலும் போட்டு தள்ளிட்டு போய் கொண்டே இருப்பார்கள். அவர்களின் பிரதான எதிரி கேங் கேரட்(Carrot). பென்னி அனைவரையும் அனுசரித்து செல்லும் பொறுமைசாலி, லில்' ஜே அவனுக்கு நேர் எதிர். பொறுமை என்பதே கிடையாது. அனைவரிடமும் சண்டை போடும் கேரக்டர். ஒரு டான்ஸ் பார்ட்டியில் கேரடின் ஆள் தவறுதலாக லில்' ஜேவை சுடுவதற்கு பதில் பென்னியை சுட்டு கொன்று விடுவான். அதை பார்த்த லில்' ஜே வெறி கொண்டு, தன் நண்பனை கொன்ற கேரட் கேங்யை பழி வாங்க புறப்பட்டு விடுவான். இங்கு இருந்து கேங் வார் ஆரம்பிக்கும். இங்கு இருந்து 80's ஆரம்பிக்கும்.
இந்த கேங் வாரின் இறுதி தான் நாம் பார்த்த முதல் காட்சி.......

Children Shooting
படத்தில் சுவாரிசியங்கள் சில:

  • படம் நான்-லீனியர் பாணியில் சொல்ல பட்டு இருக்கும். ஆனால் நமக்கு குழப்பம் இல்லாமல் திரைக்கதை புரியும்.
  • படத்தில் ராக்கெட் கதை சொல்லும் விதம் புதுமையாக இருக்கும். ஒரு கதை அல்லது சம்பவம் என்று ராக்கெட் விவரிக்க ஆரம்பித்தால், கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்கவே முடியாது. எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விடும் கதை. ஒரு கதாபாத்திரத்தை பற்றி சொல்லும் போது அந்த கதாபாத்திரத்தில் வரலாறு, புவியல், மற்றும் பூகோளம் போன்ற அணைத்து விசயங்களும் புட்டு புட்டு வைக்க படும். உ.தா: போதை மருந்து விற்க படும் ஒரு அப்பார்ட்மெண்ட் அறையை காட்டி, போன தலைமுறையில் அந்த அறையில் யார் முதலில் தங்கி இருந்தார்கள், அவர்களிடம் இருந்து யார் யாருக்கு அந்த அறை கை மாறியது, தற்பொழுது அந்த அறையில் யார் உள்ளார்கள் என்று அணைத்து விசயங்களும் நமக்கு விளக்க படும்.
  • படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் மிகவும் தந்துருபமாக படமாக்க பட்டு இருக்கும். ஒரு காட்சிகளில் 10 வயது சிறுவன் ஒருவனிடம் லில்' ஜே துப்பாக்கியை குடுத்து வேறு ஒரு 8 வயது சிறுவனை கொல்ல சொல்லும் காட்சி நம்மை உலுக்கி விடும்..8 வயது சிறுவனின் கண்ணில் தெரியும் உயிர் பயம் மற்றும் 10 வயது சிறுவன் தான் கொலை செய்ய வேண்டுமா என்று கண்ணில் மிரட்சியும் பயமும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் காட்சி....யப்பா....கிரேட் ஆக்டிங் !!!
  • இறுதி காட்சி தான் படத்தின் அடிநாதமே. சினிமா தனம் இல்லாமல் மிகவும் எதார்த்தமான காட்சி அது.
  • இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட படம். படம் இறுதியில் நிஜ வாழ்வில் வாழ்ந்த கதாபாத்திரங்களின் படங்களை காட்டுவார்கள்.
இந்த படம் கட்டாயம் தவற விட கூடாத படம். கொஞ்சம் வன்முறை ஜாஸ்தி.அதீத வன்முறை காரணமாக இப்படம் 15+ வயதினற்கு மட்டுமே உகந்தது

My Rating: 9.2/10 .... Must watch..!