Monday, August 26, 2013

மெட்ராஸ் கஃபே (2013) - அரவேக்காடு அக்ஷன் த்ரில்லர்

சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கஃபே திரைபடத்தை பார்க்கும் வாய்ப்பு நேற்று கிட்டியது. படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அரசாங்க தடை இல்லாதா போதும், படம் தமிழ்நாட்டில் வெளியாக வில்லை. நம் ஊரில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிட முடியாது என்று சொல்லி விட்டதால் தமிழ்நாட்டில் எங்குமே படம் ரீலீஸ் ஆகவில்லை. எந்த ஒரு கலைப்படைப்பையும் முடக்குவது என்னை பொறுத்தவரை தவறான செயல். நம் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை திரைப்படமாக சொல்லலாம், படம் வெளிவந்தவுடன் மக்கள் படத்தை பார்த்துவிட்டு அது நல்லதா கெட்டதா என்று முடிவு செய்யட்டும். வெறும் நான்கு ஐந்து பேர் மட்டும் ஒரு திரைபடத்தை பார்த்து விட்டு, இது எங்கள் உணர்வுகளை பாதிக்கிறது, கண்டிப்பாய் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் அதனால் படத்தை தடை செய் என்று கோருவது மிக பெரிய அயோக்கியதனம். நான்கு அல்லது ஐந்து பேரை எப்படி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரநிதிகள் என்று கூற முடியும். மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட பிரநிதிகள் சொன்னாலும் பரவாயில்லை. சீமான், வைகோ, ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் எப்படி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்? இந்த படத்தை யாரும் பார்க்ககூடாது, அது உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் என்று சொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் குடுத்தார்கள்? நான் தான் எனக்கு எஜமானன், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிப்பேன், மற்றவர்களுக்கு அதை பற்றி தீர்மானிக்க உரிமை இல்லை. அந்த காரனத்திருக்கு மட்டுமே இந்த திரைபடத்தை நான் பார்த்தேன். 


ஒரு சராசரி சினிமா ரசிகனாய் மெட்ராஸ் கஃபே படம் என்னை பெரிய அளவில் கவரவில்லை, ஆனால் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை. இல்லை என்பதை விட எனக்கு அப்படி தோன்றவில்லை. கடைசியாய் இது நேர்மையான் படைப்பா, என்றால் சத்தியமாய் நேர்மை என்பது மருந்திருக்கு கூட இல்லை. படத்தின் பெரிய காமெடியே ராஜீவ்காந்தியை நல்லவர் என்று சொல்வது தான். இந்த ஒரு விஷயத்திருக்கு மட்டுமே இந்த படம் எனக்கு பிடிக்காமல் போனது. எப்படி "நேரு" என்கிற ப்ளே பாய்யை, காம கொடூரனை இந்திய குழந்தைகளின் மாமா என்று சொல்லி, அவர் பேரில் "குழந்தைகள் தினத்தை" கொண்டாடுவது போல் ஒரு மோசமான சூழ்நிலையை வரலாறு உருவாக்கியதோ, அதே போன்ற ஒரு தவறை இப்பொழுது இந்த படத்தின் முலம் செய்ய முயற்சி மேற்கொள்ள பட்டுள்ளது. 

ராஜீவ்காந்தி என்கிற அயோக்கியனை, ஊழல் பெருச்சாளியை இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவன், இலங்கையில் அமைதி திரும்ப ஆசை பட்டான் என்று காட்டுவது தான் என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை. வரலாற்றை உண்மையா எடுக்க தைரியம் இல்லாதவன் எல்லாம் எதுக்கு படம் எடுக்கிறாங்களோ தெரியவில்லை. வரலாற்றை கொஞ்சம் படித்தவன் கூட சொல்லி விடுவான், இலங்கையில் அமைதி படை என்கிற பெயரில் ராஜீவ் அனுப்பிய படைகள் செய்த அட்டுழியங்களை பற்றி, முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் அமைதி படை செய்த அக்கிரமங்களை எல்லாம் மறைத்து மனசாட்சி இல்லாமல் படம் எடுக்க எப்படி தான் ஜான்க்கு மனம் வந்ததோ, தெரியவில்லை.


இலங்கை உள்நாட்டுப்போர் உச்ச கட்டத்தில் இருந்த "80's பிற்பகுதியில் கதை ஆரம்பிகிறது. ரா உளவு ஏஜென்ட்டாக விக்ரம் சிங் (ஜான் ஆப்ரஹாம்), யாழ்ப்பாணத்தில் பணி அமர்த்த படுகிறார். LTF தலைவர் அண்ணா பாஸ்கரனை (அஜய் ரத்னம்) பிடிக்கும் பொறுப்பை ஏற்றுகொள்கிறார். ஆனால் அவரை நெருங்க கூட முடியவில்லை. பிறகு LTF இரண்டாம் கட்ட தலைவர் மல்லையாவை சந்தித்து பதவி ஆசை காட்டி பாஸ்கரனை காட்டி குடுக்க சொல்கிறார்கள். மல்லையா பதவி ஆசையில் தன் தலைவரை காட்டி குடுத்து விடுகிறான். இந்திய படை பாஸ்கரனை சுத்தி வளைத்து தாக்க, அதில் அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி பரவுகிறது. ஆனால் அந்த தாக்குதலில் இருந்து தப்பித்து மீண்டு வந்து தன்னை காட்டி குடுத்து அனைவரையும் கொல்கிறார். இந்திய அமைதி படையும் (!) திரும்ப பெற படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தான் ஜெயித்தால் "இலங்கையில் அமைதியை" திரும்ப கொண்டு வருவேன் என்று சபதம் போடுகிறார் Ex-பி.எம். இதை கேட்ட பாஸ்கரன் சீனம் கொண்டு அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டம் தீட்டப்படும் இடம் சிங்கப்பூரில் இருக்கும் "மெட்ராஸ் கஃபே". ஆக படத்திருக்கு பெயர் கிடைத்து விட்டது. LTF தலைவர்கள் பேசிய பேச்சுகளை ரா அமைப்பு டேப் செய்து டிகோடு செய்து, அந்த திட்டத்தை கண்டு பிடிகிறார்கள். பேச்சை முழுவதும் புரிந்து எந்த நேரத்தில், எந்த இடத்தில் படுகொலை நடைபெறுகிறது என்று கண்டு பிடிக்கும் அதே வேளையில் படுகொலை நடந்து விடுகிறது.

ஜான் ஆப்ரஹாம் நன்றாக நடித்து உள்ளார் என்று சொன்னால் எனக்கு போஜனம் கிடைக்காது. உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது, முகத்தில் கொஞ்சமாவது வேரியேஷன் காட்ட வேண்டாமா. மலச்சிக்கல் வந்து ஆள் போல் முஞ்சியை வைத்து உள்ளார். இன்வெஸ்டிகேஷன் செய்யும் காட்சிகளில் கொஞ்சம் கூட பரபரப்பே இல்லை, ஏனோ தானோ என்று தான் பல காட்சிகள் செல்கிறது. புலிகள் எத்தனை தைரியசாலி என்பதை உலகம் அறியும். அப்படி பட்ட புலி ஆதரவாளர்களிடம் இவர் உண்மையை வெளி கொண்டு வரும் காட்சிகள் தான் படத்தில் காமெடி இல்லாத குறையை தீர்த்து வைக்கிறது. ஒருவனை பார்த்தவுடன், "ஏய், உண்மையை சொல்லு", என்று இவர் கேட்ப்பார், அவரும் உண்மையை புட்டு புட்டு வைத்து விடுவார். 60 களில் வந்த எம்.ஜி.யார் படங்களில் கூட விசாரணை காட்சிகள் நன்றாக இருந்து இருக்கும். 


இயக்குனர் சூஜித் சிர்கார், தனக்கு மண்டையில் ஒன்றுமே இல்லை என்பதை காட்சிகள் முலம் தெளிவு படுத்தி உள்ளார். இது வரை யாரும் தொடாத கதைக்களம், நல்ல இயக்குனர் கையில் கிடைத்து இருந்தால் பின்னி இருப்பார்கள். அரவேக்காடு தனமாய் வரலாற்றை படித்து விட்டு மூளையை கழற்றி வைத்து விட்டு படத்தை இயக்கினால் இது போன்ற படங்கள் தான் கிடைக்கும். படத்தில் என்னை கவர்ந்த ஒரே எபிசோடு, தாணு என்கிற பெண் புலி ராஜீவை கொலை செய்ய தயார் ஆகும் காட்சிகள் தான். சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் அட்டகாசமான் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அந்த பெண். மற்ற படி குரங்கு கையில் கிடைத்த கொள்ளிக்கட்டை போல், இயக்குனர் தன்னையும் சுட்டு கொண்டு படம் பார்க்கும் நம்மளையும் சூடு போடுகிறார். 'நம் பிரதமர் (ராஜீவ் காந்தி) என்ன தப்பு செய்தார்? நாம் ஏன் அவரை இழந்தோம்?’- என்கிற கேள்விகளுடன் படத்தை முடித்து இருப்பார்கள், அதை பார்க்கும் போது, ராஜீவ் முதேவியை அன்றே படுகொலை செய்யாமல் விட்டு இருந்தால், 2007 இனப்படுகொலையை ராஜீவ் 1992 வருடமே நிகழ்த்தி இருப்பான்டா !@#!#$ பசங்களா என்று உரக்க கத்த தோன்றியது. 

மெட்ராஸ் கஃபே - அரவேக்காடு அக்ஷன் த்ரில்லர்
My Rating: 5.2/10.
சமிபத்தில் எழுதியது :ஆதலால் காதல் செய்வீர் (2013)



Thursday, August 22, 2013

ஆதலால் காதல் செய்வீர் (2013)- படம் பார்த்து யாரும் திருந்த வேண்டாம் !!

தமிழ் சினிமாவில் எத்தனயோ வகையான காதலை காட்டியாகி விட்டது, இனி காட்டுவதருக்கு காதலே இல்லை என்கிற நிலையில் தான் சுசீந்திரின் "ஆதலால் காதல் செய்வீர்" படம் வெளி வந்து உள்ளது. இதில் காட்டி இருப்பது சிட்டி வாழ்க்கையின் யதார்த்த காதல். கொஞ்சம் கூட சினிமா தனம் இல்லாமல், 20 வயதில் வரும் காதலில் என்ன என்ன பிரச்சினைகள் வரும் என்பதை இந்த அளவுக்கு எந்த படமும் எடுத்து சொன்னதாய் எனக்கு ஞாபகம் இல்லை. மன பக்குவம் இல்லாத காதலர்களின் விளையாட்டு காதலால் எந்த மாதிரியான் விளைவுகள் இந்த சமுகத்தில் ஏற்படுகிறது என்பதை சொல்லும் படம் தான் "ஆதலால் காதல் செய்வீர்".


கல்லூரியில் படிக்கும் நாயகன் கார்த்திக் (சந்தோஷ் - புதுமுகம்) தன்னுடன் நண்பியாக பழகும் ஸ்வேதாவிடம் (மனீஷா யாதவ்) ப்ரோபோஸ் செய்கிறார், இதயம் முரளி மாதிரி கிளைமாக்ஸ் வரை காத்திருக்காமல் படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் தன் காதலை சொல்லி விடுகிறார். முதலில் மறுக்கும் ஸ்வேதா பிறகு காதலை ஏற்றுகொள்கிறார். மகாபலிபுரம் அவுட்டிங் செல்லும் இருவரும் பலவீனமான ஒரு வேலையில் எல்லை மீறி விடுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் காதல் என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்தது என்பதை திரையில் காண்பது நல்லது.

படத்தின் கதாநாயன் சந்தோஷ், இவர் தான் கதாநாயகன் என்று படம் ஆரம்பித்த பத்து நிமிடங்கள் கழித்து தான் தெரிகிறது. அது வரை கதாநாயகியிடம் முதல் காட்சியில் ப்ரொபோஸ் செய்யும் ஒரு பையனை தான் ஹீரோ என்று எண்ணி இருந்தேன். இவர் நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரி தான் தெரிகிறார். நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்து உள்ளார். ஒரு சாயலில் பதிவர் "பிலாசபி" மாதிரி தெரிந்தார், எனக்கு மட்டும் தான் அப்படி தெரிந்ததா, இல்லை மற்றவர்களுக்கும் அப்படி தான் தோன்றியதா என்று தெரியவில்லை. 

ஹீரோயின் மனீஷா யாதவ், வழக்கு என் படத்தில் நடித்தவர். படத்தில் பெஸ்ட் பெர்பார்மென்ஸ் இவருடையது தான். டீன் ஏஜ் பெண்கள் வீட்டில் பேசும் பொய்களை அன்யாசமாய் பேசுகிறார். தான் கர்பமானவுடன் இவர் காட்டும் பயம் கலந்த முகபாவனைகைகள் நம்மையும் பத பதைக்க வைக்கிறது. முதல் பாதியில் தன் காதலை வீட்டில் மறைக்கவும் பிற பாதியில் தன் கர்பத்தை மறைக்க இவர் படும் பாடு ஒவொரு டீன் பெண்ணிற்கும் பாடம். மகாபலிபுரம் அவுட்டிங் காட்சியில் கூட விரசம் இல்லாமல் காமத்தை வெளி படுத்தி இருந்தார்.


மனிஷாவின் பெற்றோர்ராக ஜெயப்பிரகாஷ் மற்றும் துளசி. இருவரும் அசத்தலாய் நடித்து இருக்கிறார்கள். அதிலும் அம்மா துளசி மற்றும் மனிஷாயிடையே நடக்கும் உரையாடல்கள் ரொம்பவே எதார்த்தமாய் இருந்தது. சிட்டியில் வாழும் அம்மா மற்றும் டீன் ஏஜ் பெண்யிடையே இருக்கும் பந்தத்தை மிக நன்றாக காட்டி இருக்கிறார் இயக்குனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீது எந்த அளவு நம்பிக்கை வைக்கிறார்கள், அவர்கள் வைத்த நம்பிக்கையை பிள்ளைகள் மோசம் செய்ததும் எந்த அளவு உடைந்து போய் விடுகிறார்கள் என்பதை துளசி மற்றும் ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரம் முலம் நம் கண் முன்னே வந்து நிறுத்துகிறார் இயக்குனர்.

படத்தின் உண்மையான் கதாநாயன் இயக்குனர் சுசீந்திரன் தான். பக்கம் பக்கமாய் அட்வைஸ் என்கிற பேரில் வசனம் பேச வைக்காமல் காட்சிகள் முலமே பிரச்சனைகளின் விரியத்தை நமக்கு உணர்த்துகிறார். துள்ளுவதோ இளமை கூட கிட்ட தட்ட இதே தீம்மை கொண்ட படம் தான். ஆனால் செக்ஸ், கவர்ச்சி, ரெயின் டான்ஸ் என்று மேட்டர் படம் போல் எடுத்து இருந்தார் செல்வா. ஆனால் சுசீந்திரன் வசனங்களில் கூட கண்ணியத்தை கடை பிடித்து இருக்கிறார். சிட்டியில் படிக்கும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் காதலை எப்படி பார்கிறார்கள் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார். தான் சொல்ல வந்ததை கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாமல் தெளிவாய் சொல்லி இருக்கிறார்.


இசை "யுவன்", நீண்ட நாட்கள் கழித்து யுவன் ஸ்டைல் துள்ளல் இசை. செல்வராகவன் படத்திருக்கு போடுவது போல் இசை அமைத்து உள்ளார். பின்னணி இசை பிரமாதம். மனிஷா தன் கர்பத்தை டெஸ்ட் செய்யும் காட்சியில் வரும் பின்னணி இசை பழைய யுவனை ஞாபகம் படுத்துகிறது. அதே போல் கிளைமாக்ஸ்  காட்சியில் அந்த குழந்தைப் பாடலின் மூலம் மனதை வருடிச்செல்கிறார்.

கொஞ்சம் நாட்களுக்கு முன்பு Trust (2010) என்கிற ஹாலிவுட் படம் பார்க்க நேர்ந்தது, அந்த படத்தின் தாக்கம் மற்றும் கிளைமாக்ஸ் மறைய எனக்கு இரண்டு நாட்கள் பிடித்தது. அது மாதிரியான படங்கள் தமிழில் வராதா என்கிற எனது ஏக்கத்தை இந்த படம் முலம் போக்கி இருக்கிறார் சுசீந்திரன். மிக மிக அழுத்தமான கிளைமாக்ஸ், கண்டிப்பாய் அதன் தாக்கம் ஒரு நாளாவது இருக்கும். பரிதாபம் மற்றும் கோபம் ஒரு சேர எனக்கு ஏற்பட்டது, "உங்க 2 நிமிஷ சந்தோஷத்துக்கு ஏண்டா ஒரு குழந்தையோட எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குறீங்க" என்று இந்த படத்தின் ஜோடியை கேட்க தோன்றியது. சாரி கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.  படத்தை பார்த்து யாரும் திருந்துவார்கள் என்று நான் எண்ணவில்லை, ஆனால் ஒரு நிமிடமாவது படிக்கிற வயதில் எல்லை மீற தான் வேண்டுமா என்று யோசிப்பார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றி.

ஆதலால் காதல் செய்வீர் - படம் பார்த்து யாரும் திருந்த வேண்டாம்.

My Rating: 8.3/10.


Friday, August 16, 2013

555 (2013) - உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது !!!

கண்ணாமுச்சி ஆட்டம் காட்டும் முகம் தெரியாத வில்லனிடம் இருந்து தனது காதலை கதாநாயகன் காப்பாற்றும் கதை தான் 555.

மோசமான கார் விபத்தில் மாட்டும் அரவிந்த் (பரத்) மன ரீதியாக பாதிப்பு அடைகிறார். விபத்திருக்கு முன்பு தனக்கு லியானா என்கிற காதலி இருந்ததாகவும், விபத்தில் அந்த காதலி இறந்து விட்டதாகவும் நம்பி வாழ்கிறார். அவரை சுற்றி இருக்கும் சைக்கியாட்டிரிஸ்ட் டாக்டரும், அவரது அண்ணன் சந்தானமும் லியானா என்கிற பெண் இல்லவே இல்ல, பரத்  இல்லாத ஒன்றை இருப்பாதாய் கற்பனை செய்து கொண்டு வாழ்கிறார் என்று அடித்து சொல்கிறார்கள். அவர்களது கருத்திருக்கு வலு சேர்ப்பது போல நிறைய சம்பவங்கள் நடைபெறுகிறது. 

சிறிது சிறிதாக பரத் தனக்கு ஏதோ பிரச்னை என்பதை உணர்கிறார். தன் பிரச்சனையை உணர்ந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பும் போது தன்னை சுற்றி நடப்பது எல்லாமே நாடகம் என்பதை அறிந்து கொள்கிறார். யார் அந்த நாடகத்தை நடத்துகிறார்கள் என்பதை தேடி செல்லும் போது அவருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. தன்னை சுற்றி பின்ன பட்ட முடிச்சுகளை பரத் அவிழ்க்கும் போது முகம் தெரியாத வில்லன் கும்பல் அவருக்கு இடைஞ்சல் குடுக்கிறது. யார் அந்த வில்லன், அவன் ஏன் பரத் வாழ்கையில் விளையாட வேண்டும் என்பதை பர பரப்பாய் சொல்ல ஆசை பட்டு ஏனோ தானோ என்று சொல்லும்  படம் தான் 555.


படத்தில் வரும் சில தீடீர் திருப்பங்கள் நம்மை அட போட வைக்கின்றன. ஆனால் படத்தின் மிக பெரிய லெட் டவுன் வில்லன் மற்றும் அவனது படு மொக்கையான பிளாஷ்பேக் தான். நிறைய ஹைப் ஏற்றி விட்டு கடைசியில் படத்தை சப் என்று முடிந்து விடுவது தான் இயக்குனர் செய்த மாபெரும் தவறு. இதே குறை தான் "சமர்" படத்திலும் இருந்தது. இதிலும் அதே தவறு இருப்பதால் நல்ல படமாக வந்திருக்க வேண்டிய படம் சுமாருக்கும் கீழ் லிஸ்டில் சேர்ந்து விட்டது. 

இயக்குனர் சசி, சொல்லாமலே,ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ போன்ற மென்மையான படங்களை குடுத்தவர். முதல் முறையாக அக்ஷன் த்ரில்லர் முயற்சி செய்து உள்ளார். கதையை சரியாக தான் தெரிவு செய்து உள்ளார், ஆனால் கதைக்கான கதாபாத்திர தேர்வில் ஆரம்பிகிறது இவரது முதல் சறுக்கல். முதல் மற்றும் இரண்டாம் கதாநாயகி, வில்லன் மற்றும் அவனது அடியாட்கள் கூட்டம் என்று படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மிகவும் மோசமான தேர்வு.

 ஹீரோ மற்றும் செகண்ட் ஹீரோயின் காபி டேயில் சந்திக்கும் அந்த காட்சி டென்ஷனை ஏற்றி பர பரப்பாய் முடிந்து இருக்க வேண்டியது, ஆனால் இயக்குனர் அந்த காட்சியை படு மொக்கையாய் ஆரம்பித்து சப்பென்று முடித்து இருப்பார்.அதே போல் கிளைமாக்ஸ் சண்டை காட்சி, எப்படா சண்டை முடியும் என்று ஏங்க வைத்து இருப்பார் இயக்குனர். இவருக்கும் அக்ஷன் படங்களுக்கும் வெகு தூரம் என்பதை இந்த படம் நிருபித்து உள்ளது.


பரத் - 8 பேக்ஸ் வைத்து உள்ளார், படத்தின் ப்ரோமோஷனுக்கு மட்டுமே பயன்படுத்த பட்டு இருக்கிறது. படத்தின் கதைக்கு அந்த உடம்பு தேவையே இல்ல. முதல் பாதியில் காலேஜ் ஸ்டுடென்ட் போல் வருகிறார். ஒரு காட்சியில் மொட்டை வேறு அடித்து நடித்து உள்ளார்.  உடம்பை வளர்க ஜிம்யில் செலவு செய்த நேரத்தில் எங்காவது கூத்து பட்டறையில் சேர்ந்து நன்றாக நடிக்கவும் பயற்சி எடுத்து இருக்கலாம். "சின்ன தளபதி" என்று டைட்டிலில், இயக்குனர் பேரரசு படங்கள் முலம் டெரர் அப்நார்மல் படங்கள் 
குடுத்து கொண்டு இருந்தவர், இந்த படத்திருக்கு பிறகு நார்மல் படங்கள் குடுப்பார் என்று நம்புவோமாக. அடுத்த படத்தில் சன்னி லியோனியோட ஜோடி சேர மட்டுமே அவரது 8 பேக்ஸ் உதவி செய்து உள்ளது. 

கதாநாயகி மிருத்திகா. இவரை பற்றி நாம் சொல்லும் முன்பு சந்தானமே சொல்லி விடுகிறார். வழக்கமான் தமிழ் லூசு பெண் கதாபாத்திரம். நடிப்பு எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்பார் போல். வாய் அசைப்பும் படு மோசம். சீவிங் கம் மென்று கொண்டு இருந்திருப்பார் போல. இந்த சுமார் முஞ்சி பிகர்க்கு தான் படத்தில் இவ்வளவு அலப்பறை என்று என்னும் போது அட போங்கபா என்கிற எண்ணம் தான் வருகிறது. 


இவர் மீது பரத்திருக்கு காதல் வருவதற்கான் காரணம் ஒன்றுமேயில்லை. அதே போல் பரத்திடம் அதிசிய சக்தி இருப்பதாய் நம்புவதலாம் டூ மச். இப்படிப்பட்ட அறிவாளியை விழுந்து விழுந்து காதலிப்பார் ஹீரோ.

அடுத்து சந்தானம், பல படங்களை காத்தது போல் இந்த படத்தையும் காப்பற்றி உள்ளார். முதல் முறையாக குணசித்திர நடிப்பை முயற்சி செய்து உள்ளார் என்று எண்ணுகிறேன். தன்னுடைய ட்ரேட்மார்க் டயலாக் டெலிவரி முலம் நிறைய இடங்களில் ஸ்கோர் செய்கிறார். 

கடைசியாக வில்லன், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மிகவும் தவறான தேர்வு. பாடல்கள் படம் எப்போது எல்லாம் நொண்டி அடிக்கிறதோ அப்பொழுது எல்லாம் கரெக்டாக வந்து நமது பொறுமையை சோதிக்கும். அதுவும் அந்த இழவு பாடல், கொடுமை ரகம். பரத் உடம்பை ஏற்ற எடுத்து கொண்ட நேர்த்தில் சசி திரைக்கதை இன்னும் நன்றாக செதுக்கி இருந்தால்,நமக்கு மற்றும்மொரு கஜினி கிடைத்து இருக்கும், திரைகதையில் சறுக்கி சமர் லிஸ்டில் சேருகிறது "555"

555 (2013) - உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது !!!

My Rating: 6.4/10.


Friday, August 09, 2013

தலைவா (2013) - சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!!

தலைவா பல தடைகளை (!!) தாண்டி தமிழ்நாட்டுல ரீலீஸ் ஆகாம வெளிநாட்டில் ரீலீஸ் ஆகி இருக்கிறது. ஒரு படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்ப இப்ப படக்குழுவினர் எத்தனையோ புது புது ஐடியாவுல ஸ்டன்ட் அடிச்சு பார்த்து இருக்கேன், சமிபத்தில் தங்க மீன்கள் ராம் கூட புது விதமா "படம் ரீலீஸ் பண்ண காசு இல்லைங்கிற" மாதிரி டீசர் வெளியீட்டு இருந்தார், ஏதோ இப்ப தான் அவருக்கு படம் எடுக்க காசு தேவை என்கிற ரகசியம் தெரிஞ்ச மாதிரி. ஆனா அது கூட நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பற்றிய ஆர்வத்தை உண்டு பண்ணியது. ஆனா தலைவா பட குழுவினர் அடிச்ச ஸ்டன்ட் பழைய எம்.ஜி.யார் காலத்து "தியேட்டர்ல பாம் வைப்போம்" டெக்னிக், அதை பார்த்தவாது நாங்க கொஞ்சம் உஷார் ஆகி இருக்கனும், ஆனா விதி யாரை விட்டுச்சு. பப்ளிசிட்டி ஸ்டன்ட் மட்டும் பழைய எம்.ஜி.யார் காலத்து டெக்னிக் இல்ல, படமும் அரத பழசான கதையை கொண்டு வெளி வந்து இருக்கு. நாங்களா வான்டட்டா போய் வண்டியில ஏறுனது எங்க தப்பு தான். 


நான் பெரிய விஜய் பேன்னாக இல்லாட்டியும், விஜய்யோட எல்லா படத்தையும் முத நாள் பாத்திருவேன், கடந்த அஞ்சு வருஷமா ரீலீஸ் ஆனா எல்லா விஜய் படத்தையும் முத நாள் பார்க்கிற பாக்கியம் கிடைச்சு இருக்கு. துப்பாக்கி மட்டும் மிஸ் ஆகிருச்சு, அதுக்கு காரணம் அப்ப நான் சொந்த கிராமத்துல இருந்தேன், படத்துக்கு தாறுமாறான கூட்டம். எங்க ஊருல ஹவுஸ் புல் போர்டு மாட்டுன வெகு சில படங்களில் துப்பாக்கியும் ஒன்னும். வில்லு, வேட்டைக்காரன், சுறான்னு விஜய் மொக்கை மொக்கையா படம் குடுத்துகிட்டு இருந்தப்பவும் நான் விடாம விஜய் மேல நம்பிக்கை வச்சு படத்துக்கு போய்கிட்டே இருந்தேன். கடைசியா காவலன், நண்பன், துப்பாக்கின்னு நல்ல படங்கள் குடுக்க ஆரம்பிச்ச விஜய் மறுபடியும் பேக் டூ ஸ்குயர் ஒன் மாதிரி, அவர் அப்பாவோட அரசியல் பேராசையில மோசமான மொக்கை படத்தை "தலைவா" மூலமா குடுத்து இருக்கார். நான் இது வரை பார்த்த விஜய் படங்களிலே "தமிழன்" என்கிற காவியத்தை தான் டாப் வொர்ஸ்ட் லிஸ்ட்ல வச்சு இருந்தேன், இப்ப அந்த இடத்தை அன்ன போஸ்ட்ல "தலைவா" பிடிச்சு இருக்கு. வாழ்த்துக்கள் விஜய்.

 இன்னைக்கு கூட சாண்டியாகோவுல "தலைவா" ரீலீஸ் ஆகுமா இல்லையா என்கிற சந்தேகம் இருந்தது, கடைசி நேரத்துல தான் படம் ரீலீஸ் என்கிற அறிவிப்பு தியேட்டர்ல இருந்து வந்தது. எங்க கம்பெனி தமிழ் மக்கள் மொத்த கூட்டமும் தியேட்டர்ல தான் இருந்தது, இத்தனைக்கும் நாளைக்கு ஆபீஸ் வேற. விஜய்க்கு இங்க இருக்கிற ரசிகர் கூட்டம் உண்மையிலே பெரிய ஆச்சிரியமா விஷயம் தான். அவங்களை மனசுல வச்சுகிட்டாவது விஜய் இது மாதிரியான படங்களை தவிர்ப்பது நல்லது. 


படத்தோட கதையை கொஞ்சம் சினிமா ஞானம் உள்ளவங்க ட்ரைலர் வச்சே சொல்லிருவாங்க. விஜய் அப்பா அண்ணா (சத்யராஜ்) மும்பையில வாழுற ஏழைகளின் காப்பாளன், விடிவெள்ளி, கலியுக கர்ணன், ரொம்ப குழம்பாதீங்க சினிமா பாஷையில பெரிய டான். அவரோட பையன் தான் விஷ்வா (விஜய்). அப்பாவோட பிஸினெஸ் பத்தி தெரியாம ஆஸ்திரேலியாவுல வாழுறார். அங்க டான்ஸ் குரூப் வச்சு நடத்திகிட்டு ஜாலியா ப்ரிண்ட்ஸ் கூட சந்தோஷமா இருக்கிறார். தமிழ் பெண்னான் அமலாபாலை லவ்வி, தன்னோட கல்யாணத்தை பத்தி பேச இந்தியா வரார். வந்த எடத்துல அவர் கண்ணு முன்னாலே "அண்ணாவை" வழக்கம் போல் சமூக விரோதிகள் கொன்று விடுகிறார்கள். வழக்கம் போல் விஜய் விரோதிகளை அழித்து மும்பை தமிழர்களை காப்ற்றி, விஷ்வாவில் இருந்து எப்படி விஷ்வா "பாய்" ஆகிறார் என்பதை இழு இழு என்று ஜவ்வு போல் இழுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் "விஜய்".

இளைய தளபதி விஜய் அட்டகாசமாய் எல்லாம் நடிக்கல, தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செஞ்சு இருக்கார். அவருக்கு நல்லா வரது டான்ஸ் மட்டும் தான். செமையா டான்ஸ் ஆடி இருக்கார். உணர்ச்சி பூர்வமான் இடத்துல இவர் பேசுற நிறைய வசனம் சிரிப்பை தான் வரவழைக்குது, டிவி சீரியல கூட வர லாயக்கு இல்லாத வசனங்கள். "தம்பி நல்லா படிச்சா பரீட்சையில் நல்ல மார்க் எடுக்கலாம்" டைப் வசனங்கள். இந்த மாதிரி மொக்கை வசங்களை விஜய் என்ன தான் எமோஷனலா பேசினாலும் அது நம்ம பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. வசனம் எழுதுன ஆளுக்கு கையிலே ரெண்டு போடு போடணும்.


இளைய தளபதி விஜய் ஏன் எல்லா படத்திலும் ஒரே மாதிரியான கெட் அப்ல வராரு, கெட் அப் சேன்ஜ் பண்ணுறதே இல்லைன்னு கேட்கிற ஆளுகளுக்கு கிளைமாக்ஸ் காட்சியில ஒரு கெட் அப் போட்டுக்கிட்டு வராரு பாருங்க. சுறா சிங் கெட் அப் தோத்தது. தியேட்டரே விழுந்து விழுந்து சிரிச்சது. படத்தோட பெஸ்ட் காமெடி சீன் அது தான். சுறாவுக்கு முன் வந்த விஜய் படங்க மாதிரி பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி நம்மளை வதைக்கிறது இந்த படத்துல இல்லாதது பெரிய ஆறுதல்.படத்தோட கதையை ஓகே பண்ணுனது எஸ்.ஏன்னு படிச்சேன். தளபதி ஒரு அஞ்சு வருஷம் அவங்க அப்பாவை ஊரை விட்டு தள்ளி வச்சுறது நல்லது. சனியை கூடவே வச்சுகிறது ரொம்ப ரொம்ப ஆபத்து. 

படத்தோட கதாநாயகி அமலா பால். நடிப்பை வெளிபடுத்த பெரிய வாய்ப்பெல்லாம் இல்லை. வழக்கமான் தமிழ் பட ஹீரோயின் வேலையை சரியா செஞ்சு இருக்காங்க. நிறைய காட்சியில மேக் அப் இல்லாம வந்து மரண பயத்தை உண்டு பண்ணுறாங்க. இடைவேளைக்கு முன்னாடி வர ட்விஸ்டுக்கு பயன்படுத்த பட்டு இருக்காங்க. மற்ற படி  பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. சத்யராஜ் போன்ற நல்ல நடிகரை வேஸ்ட் செஞ்சு இருக்காங்க. இவர் பேசுற வசனங்கள் கொட்டாவியை தான் வர வைக்குது. ஏதோ ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாதிரி வந்துட்டு போறார். 

படத்தை முதல் பாதியில் அப்புறம் இரண்டாம் பாதியில பாதிக்கு மேல வந்து படத்தையும் நம்மளையும் காப்பாதிறது சந்தானம் மட்டும் தான். இயக்குனர் விஜய்க்கு இந்த படத்திலும் சந்தானம் தான் கை குடுத்து இருக்கார். ஒரு டபிள் மீனிங் வசனம் தவிர சந்தானம் ரொம்பவே அடைக்கி வாசித்து இருக்கார். ஒரு காட்சியில் "சாம்  ஆண்டர்சன்" வேற வராரு, சாம் வர காட்சியை கொஞ்சம் சுவாரிசியமா குடுத்து இருக்கலாம்.


படத்துல பின்னணி இசை ரொம்பவே கொடூரமாய் இருந்தது. விஜய் பாடும் "வாங்கன்னா" பாட்டு தவிர எந்த பாட்டுமே மனதில் பதியவில்லை. "தலைவா தலைவா" பாட்டு ஒரு மாஸ் பாட்டை எப்படியெல்லாம் படம் ஆக்க கூடாது என்பத்ருக்கு நல்ல எடுத்துகாட்டு.

 "பாட்ஷா+நாயகன் = தலைவா", இது தான் நம்ம படத்துக்கு பார்முலான்னு சொல்லி தான் இயக்குனர் விஜய் தளபதியை ஏமாத்தி இருப்பார்ன்னு நினைக்கிறன். டைரக்டரோட சுடுற திறமை ஊர் அறிஞ்சது தான், தனக்கு என்ன வருமோ அதை சரியா செஞ்சா வெற்றி நிச்சியம், ஊர் சொல்லுறதுகாக நம்மளை மாத்திக்கிட்டு நமக்கு தெரியாதை வராததை செஞ்சா பல்பு தான் கிடைக்கும். இயக்குனர் விஜய் பேசமா சர்க்கார் இல்லாட்டி காட் பாதர் படத்தை சுட்டு எடுத்து இருக்கலாம், சொந்தமா சீன் யோசிச்சு எடுத்தா இப்படி தான் மண்ணை கவ்வ வேண்டியது வரும். அடுத்த படத்தையாவது உருபடியா சுட்டு எடுங்க விஜய் சார்.

இளைய தளபதி விஜய்க்கு ஒரு வேண்டுகோள், உங்க அப்பா பேச்சை கேட்டு நடிக்காம நல்ல இயக்குனர் மற்றும் நல்ல கதைகளில் நடிங்க, இல்லாட்டி சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!! நாங்க பாவம்.

My Rating: 5.5/10.