காதல் தோல்வியோடு வாழ்க்கையும் முடிந்து விடுவது இல்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்ற உயரிய சிந்தனையை உரக்க சொல்லும் படம் தான் "ராஜா ராணி". ஜான் (ஆர்யா) ரெஜினா (நயன்தாரா) இருவரும் விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்கிறது. இருவருக்கு திருமணத்தில் ஏன் விருப்பம் இல்லை, என்ற கேள்விக்கான விடையை பிளாஷ்பேக் மூலம் சொல்கிறார்கள். இருவரும் காதலில் தோல்வி அடைந்தவர்கள். பெற்றோர் விருப்பதிருக்கு தான் இந்த திருமனத்திருக்கு ஒத்து கொண்டு இருக்கிறார்கள். காதலை பறிகொடுத்த இருஜோடியும் தங்கள் பழைய பாதிப்பில் இருந்து மீண்டு, இவர்களின் தற்போதை திருமண வாழ்க்கையை எப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான் மீதி கதை.
படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நசிம், சந்தானம், சத்யராஜ் என்று ஏகப்பட்ட நடிகர் கூட்டம். அனைவரும் தங்கள் பணியை மிக சிறப்பாய் செய்து இருக்கிறார்கள். ஆர்யா அதிகம் அலட்டிக்கொல்லாமல் நடித்து இருக்கிறார். டெய்லி குடித்து விட்டு வந்து ரெஜினாவையும் பக்கத்து வீட்டுகாரர்களையும் கடுப்பு ஏதும் காமெடி எபிசோடு செம. தனக்கு எது நன்றாக வருமோ அதை மிக சரியாய் செய்து இருக்கிறார். திருமணம் செய்தபிறகு தன்னை மதிக்காத நயன்தாரவை வெறுப்பேற்றும் காட்சியிலும், நஸ்ரியாவை விழுந்து விழுந்து காதலிக்கும்போதும், சந்தானத்துடன் இணைந்து காமெடி பண்ணுவதிலும் கலக்கியிருக்கிறார்.
நயன்தாராவின் கம் பேக் மூவி. யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நாம் பார்த்து பழகிய மேல் டாமினேட்டிங் கேரக்டர். மிகவும் தந்துருப்பமாய் நடித்து இருக்கிறார். இந்த ஊரில் தமிழ் படம் ஓடும் தியேட்டர்களில் பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. சீட் நம்பர் என்று எதுவும் கிடையாது. சீக்கிரம் போய் இடம் பிடித்தால் பின்னாடி சீட் கிடைக்கும், லேட்டாக போனால் முன்னாடி சீட் தான் கிடைக்கும். தெரியாத்தனமாய் நாங்கள் லேட்டாய் போய் விட்டோம். இரண்டாவது ரோவில் தான் சீட் கிடைத்தது. நயன் பிளாஷ்பேக்கில் கதறி அழும் கொடூர காட்சியை மிக அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த கொடூரமான் காட்சியை தவிர அவர் நடிப்பை குறை சொல்ல முடியவில்லை. நயன் கொஞ்சம் டயட் கன்ட்ரோல் செய்தால் நல்லது, இல்லை என்றால் க்ளோஸ் அப் காட்சிகளை அறவே தவிர்ப்பது நலம்.
ஜெய்யின் நடிப்பு என்னை பெரிதாய் கவரவில்லை. நிறைய ஓவர் ப்ளே செய்து இருந்தார். இவருக்கும் நயனுக்கும் காதல் வரும் காட்சிகளில் அழுத்தமே இல்லை. அதனாலே இவர்களின் காதல் தோல்வி அடைந்தவுடன் பெரிய பச்சாதாபம் வர வில்லை. அது போக ஜெய்-நயன் கதையில் வரும் காமெடியும் படு மொக்கை. சத்யனுக்கு காமெடி சுட்டு போட்டாலும் வரது என்பதை மறுபடியும் நிருபித்து இருக்கிறார். முதல் பாதியில் நயன்தாராவின் முன்கதை, இரண்டாம் பாதியில் ஆர்யாவின் முன் கதை என்று படம் நகர்கிறது.
இந்த இரண்டு ப்ளாஷ் பேக்களில் என்னை கவர்ந்தது ஆர்யா-நஸ்ரியா எபிசோடு தான். நாங்கள் ரொம்பவே ரசித்து பார்த்தோம். காரணம் வேறு யாரும் இல்லை, சந்தானம் தான். மனிதர் கலக்கி இருக்கிறார். நஸ்ரியா செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கிறது. சமயத்தில் காஜால் அகர்வாலின் மானரிஸம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டு அடி ஹீல்ஸ் போட்டும் அம்மணியால் ஆர்யாவின் தோள்பட்டையை கூட தொட முடியவில்லை. முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் படத்தை சோர்வு அடையாமல் அழைத்து செல்லும் பணியை செய்து இருக்கிறார் சந்தானம். இவரின் கழுத்தின் கீழே இருக்கும் சதை இவரின் மொரட்டு தீனியை நமக்கு எடுத்து சொல்கிறது. உடம்பை பார்த்துக்காங்க பாஸ். இல்லாட்டி கேப்டன் மாதிரி ஆகிருவீங்க.
சத்யராஜ் இப்படத்தில் இளமையாக தெரிகிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார். நயன்தாராவுக்கு அப்பாவாக மட்டுமல்லாமல், அவருக்கு நல்ல நண்பராகவும் தோன்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் வழக்கம் போல் மொக்கை வாங்கி உள்ளது. ஆர்யா-நஸ்ரியா பாடல் தவிர எதுவுமே மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை எங்கள் காதை பதம் பார்க்கிறது. ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி என்பவர் தான் இயக்கியிருக்கிறார். காட்சிகளை தெளிவாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். நம்முடைய பழைய வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு தற்போது கிடைக்கும் வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது என்பதை ரொம்பவே தெளிவாக சொல்லி இருக்கிறார். இடை இடையே எனக்கு மௌன ராகம் மற்றும் வாரணம் ஆயிரம் படத்தின் நிறைய காட்சிகள் ஞாபகம் வந்து தொலைத்தது. காதலித்த பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை காதலிக்க பழகிக்கொள்ளுங்கள் என்று ஒரு எதார்த்தமான கதையை எடுத்துக் கொண்டு அதை, அழகாகவும் அதிகம் குழப்பாம்மலும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அட்லி.
டிஸ்கி: படத்தின் இடைவேளையில் அடுத்த இந்த தியேட்டரில் ரீலீஸ் ஆகும் இரு படத்தின் ட்ரைலர் போட்டார்கள். ஒரு தல அஜித்தின் "ஆரம்பம்" , தீபாவளி ரீலீஸ். அடுத்த படம் தான் எங்களுக்கு பெரிய ஆச்சிரியம். பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே யுஸ்ஸில் ரீலீஸ் ஆகும் என்கிற மாயயை உடைத்து எரிவது போல் இருந்தது அந்த ட்ரைலர். அந்த படம் "சுமார் மூஞ்சி குமாரின் "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா". அடுத்த வாரம் இங்கு ரீலீஸ். வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.