Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, April 17, 2014

மேஜிக் நம்பர் 272 -ஐ பிஜேபியால் தொட முடியுமா ..?? கருத்துக்கணிப்பு முடிவுகள்.


இந்திய திருநாட்டின் தேர்தல் களம் சுடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. மேஜிக் நம்பரான 272 ஐ தொட்டு வெற்றி கனியை பறிக்க போவது, மோடி தலைமையிலான பி.ஜே.பி (NDA) கூட்டணியா இல்ல ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் (UPA) கூட்டணியா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஜெயிக்க போவது மோடி தலைமையிலான அணி தான் என்பதை பெருன்பான்மையான மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் பி.ஜே.பி கூட்டணியால் 272 ஐ தாண்ட முடியுமா இல்லையா என்பதை அலசுவது தான் இந்த பதிவின் நோக்கம். 

தேசிய கட்சிகளில் பி.ஜே.பி மட்டுமே பிரதம மந்திரி வேட்பாளரை தேர்தல் தொடங்குவதருக்கு 8 மாதங்களுக்கு முன்பே அறிவித்து, தேர்தல் வேளைகளில் இறங்கி விட்டது. காங்கிரஸ் கட்சி தன் பிரதம மந்திரி வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்காதருக்கு தோல்வி பயம் தான் காரணம்  என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.  "இது வரை காங்கிரஸ் பிரதம மந்திரி வேட்பாளரை அறிவித்ததே இல்லை" என்ற விளக்கத்தை சப்பைக்கட்டு போல் தான் பார்க்க முடிகிறது. இது காங்கிரஸ் காட்சிக்கு விழுந்த முதல் அடி.


அடுத்த அதி முக்கிய அடி, காங்கிரஸுக்கு கூட்டணி அமைப்பதில் விழுந்தது. இந்தியாவில் தேசிய கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும் என்றாலும், அதற்கு மாநில கட்சிகளின் சப்போர்ட் நிச்சியம் தேவை. யாரும் எதிர்பாரா வண்ணம் எந்த மாநில காட்சியும் காங்கிரசை சீந்தாமல் போனது யாரும் எதிர்பாராது. 2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி மேஜிக் நம்பரான 272 ஐ தாண்டுவதற்க்கு பெரிதும் உதவி செய்தது கூட்டணி கட்சிகள் தான். மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் (19 MP), மு.காவின் தி.மு,க (18 MP) மற்றும் ஒய்எஸ்ஆர் ஒன்று பட்ட ஆந்திராவில் பெற்று தந்த 33 MP சீட் தான் காங்கிரஸ் (UPA) கூட்டணி இரண்டாவது முறை ஆட்சியில் அமர உதவி புரிந்தது. இந்த முறை (2014) மேற்கு வங்காளத்தில் மம்தா கை கழுவி விட, மு.கா இதயத்தில் கூட இடம் இல்லை என்று கையை விரிக்க. பெரிதும் நம்பிய தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதியும் நம்பிக்கை துரோகம் செய்து விட, வேறு வழியே இல்லாமல் அஜித் சிங்கின் ராஷ்டிரீய லோக் தள மற்றும் சரத் பாவரின் NCP (தேசியவாத காங்கிரஸ் கட்சி) மட்டுமே நம்பி களத்தில் இறங்கி உள்ளது. 

2009 ஆண்டு பி.ஜே.பி சொதப்ப முக்கிய காரணம் கூட்டணி தான். சென்ற முறை நிதிஷ்குமாரின் JD(U) தவிர்த்து பலமான கட்சிகள் எதுவும் NDA) கூட்டணியில் சேர வில்லை. சென்ற முறை செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த முறை வழுவான கூட்டணி மற்றும் மிக மிக வழுவான பிரதம மந்திரி வேட்பாளரை கொண்டு களம் இறங்கி உள்ளது. வழுவான வேட்பாளார் மட்டும் போதாது என்று, மிக ஆக்ரோஷமாக பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. "இந்தியா ஒளிர்கிறது" "இந்தியா தேய்கிறது" போன்ற காமெடி விளம்பரங்களை விட்டு, அந்த அந்த மாநிலங்களில் உள்ள லோக்கல் பிரச்சனைகளை முன்னிடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகையை பிரச்சாரத்தின் பலனை பி.ஜே.பி நிச்சியமாக MP சீட்ஸ் முலம் அறுவடை செய்யும் என்றே நான் நம்புகிறேன். தேர்தலில் பி.ஜே.பியின் கூட்டணியின் இலக்கான 272 ஐ தொட உதவி புரியும் முக்கிய மாநிலங்களை பற்றி இப்பொழுது பார்போம்.

பீகார் & ஜார்கண்ட் (54) சீட்ஸ்:
     17 வருடம் கூட்டணியில் இருந்த JD(U)வை மோடி பிரதம மந்திரி வேட்பாளார்  பிரச்சனையில் கழட்டி விட்டு, ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியுடன் சேர்ந்து தேர்தல் களம் காணுகிறது. பாஸ்வான் நம்ம ஊர் ராமதாஸ் போல், எந்த கட்சி வெற்றி பெறுவது  போல் தெரிந்தாலும், போய் ஒட்டி கொள்வார். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்தவர், இன்று பி.ஜே.பியுடன் ஒட்டி கொண்டு உள்ளார். இவருக்கு மாநிலத்தில் பெரிய வாக்கு வங்கி இல்லை என்றாலும், தலித் மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது. பத்து வருடம் ஆட்சியில் இருக்கும் நிதிஷ்குமாரின் JD(U)மீது ஏற்பட்டு இருக்கும் அதிருப்தி ஓட்டுகளையும், மோடி அலையும் சேர்த்து 
பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் முலம் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு விபரம்:

பீகார் - 40
ஜார்கண்ட்-14
குஜராத் (26) சீட்ஸ்:
     என்ன தான் குஜராத் அளவுக்கு அதிகமாக காம்ப்ளான் குடித்து வளர்ந்து விட்டது, இல்லை அது இன்னும் முளைக்கவே இல்லை என்று இணைய போராளிகள் கூப்பாடு போட்டாலும், அந்த ஊர் மக்களுக்கு மோடி தான் பிடித்து இருக்கிறது, மீண்டும் மீண்டும் பி.ஜே.பியை தான் அவர்கள் தங்களை ஆளா இதுவரை தேர்ந்தெடுத்து உள்ளார்கள், இனிமேலும் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்ல. சென்ற லோக்சபா தேர்தலில் 11 சீட்களை இழந்து சிறிய தேகத்தை சந்தித்தாலும். தங்கள் ஊர் முதல்வர் பிரதம மந்திரி வேட்பாளார் என்பதாலும் இந்த முறை சிறு குறை கூட சொல்ல முடியாத படி முழு வெற்றியை தேடி தருவார்கள் என்று நம்புவோம் ஆக. பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் முலம் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு விபரம்:


  
கர்நாடகா (26) சீட்ஸ்:
  பிஜேபி இந்த முறை நல்ல சரிவை  சந்திக்க போகும் மாநிலம் இது தான் என்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. சென்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவை இழந்து, தோல்வியை தழுவிய காரணத்தால், இந்த முறை அவரை மீண்டும் ஆட்டத்தில் சேர்த்து உள்ளார்கள். எடியூரப்பாவின் வருகை மற்றும் மோடி அலை எத்தனை தொகுதியை பெற்று தரும் என்று பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும். கருத்துக்கணிப்பு விபரம்:

கர்நாடகா (26)


மத்திய பிரதேசம் & சத்தீஸ்கர் (40) சீட்ஸ்:
  பிஜேபி ஆளும் மாநிலங்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் விஸ்வரூப வெற்றியை பிஜேபிக்கு தேடி தந்த மாநிலங்கள். சக்திவாய்ந்த லோக்கல் தலைவர்கள் செளகான் & ராமன் சிங் இந்த முறையும் ஏமாற்றாமல் நல்ல வெற்றியை தேடி தருவார்கள் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கிறது.
MP
CHAT
  
  மகாராஷ்டிரா: (48) சீட்ஸ்:
  இரண்டாவது பெரிய மாநிலம். நீண்ட காலமாய் ஆண்டு வரும் ஆளும் காங்கிரஸ் எதிரான உணர்வுகளை ஓட்டாக மற்ற மோடி மற்றும் சிவசேனா அரும்பாடு படுகிறது. மும்பை மற்றும் புனேவில் ஆம் ஆத்மி சிறிது ஓட்டை பிரிக்கலாம். கொங்கன் மற்றும் விதர்பாவில் சிவசேனா மற்றும் பிஜேபி  முறையே நன்றாக செய்வார்கள் என்று நம்புகிறேன். கருத்துக்கணிப்பு முடிவுகளும் அதயே சொல்கிறது.

மகாராஷ்டிரா-48
  ராஜஸ்தான்:  (25) சீட்ஸ்:

 நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜேபி கிளீன் ஸ்வீப் செய்த மாநிலம். சென்ற முறைக்கும் இந்த முறைக்கும் மிக பெரிய சீட் வித்தியாசம் இருக்கும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது.



 மேலே உள்ள மொத்த தொகுதிகளை வைத்து பார்க்கும் போது பிஜேபி கூட்டணி 140/219 இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்கலாம். மேஜிக் நம்பரான 272 டைதொடுவார்களா இல்லையா என்பதையும் உ.பி,மேற்கு வங்கம்,  தமிழ்நாடு பற்றிய விரிவான பார்வையை அடுத்து பகுதியில் பார்போம்.


Friday, February 21, 2014

ராஜீவ் கொலைக்கு நியாயம் கேட்டு புழுவாய் துடிக்கும் வஞ்சமில்லா உள்ளங்களே !!! ஐந்து நிமிடம் ஒதுக்கி இதைப் படியுங்கள். !!


பேரறிவாளன் பேட்டரி தேவைக்கான காரணத்தை அறிந்தே தான்  வாங்கித் தந்தாராம்,ஆனால் தெரியாது என பொய் சொல்கின்றாராம்,வயதான தாயை வைத்து மக்களிடம் இரக்கம் சம்பாதிக்கிறாராம். அதனால் அவரை அவசியம் தூக்கில் போட வேண்டுமாம்,மீண்டும் அறிவு ஜீவிகள் பிதற்ற ஆரம்பித்து விட்டனர்,ஆனால் அவர்கள் கீழ்கண்டவற்றை வசதியாக மறந்துவிடுவார்கள், கண்ணை திறந்து கொண்டே தூங்குவார்கள்,

இவர்களுக்கு யாராவது தூக்கில் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும், 1800களில் சதி என்னும் உடன்கட்டையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே?!!! மூடர்கள் ,அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது ஜில்லெட்டினில் வீழ்த்தப்பட்ட அறிஞர்கள் , எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்,அவர்கள் மனைவி குழந்தைகள்  தலைகளை சதுக்கத்தில் கூடி குரூரமாக வேடிக்கை பார்த்தார்களே பெர்வெர்ட்டுகள், அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?!!! நாட்டில் எது எப்படி நடந்தாலும் இந்த 3 பேரை அவசியம் தூக்கில் போட வேண்டும்.


ராஜிவ் கொலை வழக்கை,சரியாகவே விசாரிக்கவில்லை என்பது தானே நடந்த உண்மை,ராஜீவ் கொலை குறித்து பேரறிவாளனுக்கு மட்டும் தான் முன்கூட்டியே தெரியுமா? ஏன் அப்போதைய ஜனதா தள சென்ட்ரல் மினிஸ்டர் சுப்பிரமணியசாமிக்கு தெரியாதா? ஆர்டிஎக்ஸ் பெல்ட்பாம் பூஜை செய்து ஆசியளித்த அரசியல் ப்ரோக்கர் கம் போலிச் சாமியார் சந்திராசாமிக்கு தெரியாதா?


ஒரு முக்கிய அரசியல்வாதி டில்லியில் இருந்து வந்தால் எப்படி ஜால்ரா அடிப்பார்கள்? லோக்கல் அல்லக்கைகள்,ஆனால் அன்று அங்கே ஸ்ரீபெரும்புதூரில் 1991மே21 நடந்தது என்ன?ஒரு முன்னாள் பிரதமர்,அதுவும் புனிதப்பசு குடும்பத்தின் ஒரே வாரிசு,அவர் மனது வைத்தால் கிடைக்கும் ராஜயோகம்,இரவு 10-00 மணி வேறு , கொடிய கத்திரி வெயில் புழுக்கம் வேறு,திசைக்கொன்றாக விசிறிக்கொண்டே இருக்க மாட்டார்கள் அல்லக்கைகள்?

 போலீசாரின் பாதுகாப்பை விட அல்லக்கைகள் பாதுகாப்பு ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை அவசியம்?,தலைவரின்  கடைக்கண் பார்வைக்கு எப்படி ஏங்குவார்கள் அல்லக்கைகள். யாராவது அந்தண்டை இந்தண்டை அவரை விட்டு விலகுவார்களா? பிரியாணி இலைக்கு அடித்துக்கொள்ளும் நாய் போல அல்லவா?  நான் நீ என போட்டி போட்டு அவரை சுற்றி ஈயாக மொய்த்து எடுப்பார்கள்?


ஆனால் நடந்த உண்மை நிலவரம் என்ன? அங்கே பெங்களூர் நெடுஞ்சாலையில்,இரவு 10மணி வாக்கில் புதிதாய் இந்திரா சிலையை திறக்கும் வரை உடன் இருந்துவிட்டு ராஜிவ் மேடையை நோக்கி நடக்கையில் கமுக்கமாக, லாவகமாக, கழண்ட விஐபிக்கள் மூப்பனார்,ஜெயந்தி நடராஜன்,வாழப்பாடியார்,இத்யாதி, அவர்கள் யாருக்குமே தெரியாதா? ராஜிவ் சாகப்போகிறார் என்று? அன்று கூட்டத்துக்கு வராமல் போன கூட்டணித் தலைவி அம்மா, அவருக்கு தெரியாதா? ராஜிவ் சாகப்போகிறார் என்று?

அப்படி அவர்களுக்கு அந்த உண்மை தெரியாமல் போயிருந்தால், இந்திய பொதுவுடமைக் கட்சி தலைவரான தா.பாண்டியன் போல அவர்களும் குண்டுவெடிப்பில் சிக்கி பலத்த காயமடைந்திருப்பார்கள் அல்லவா?. பொதுவுடமைக் கட்சியின் கூட்டணித்தலைவர் ராஜீவ் பேசுவதை மொழிபெயர்க்க உடன் வந்து பலத்த காயமடைகிறார்,ஆனால் ராஜீவின் கட்சியைச் சேந்த முத்த தலைவர்களுக்கு எந்த கிறலுமே இல்லை.நகைப்புக்கிடமாக இல்லை?


ஹரிபாபு எடுத்த புகைப்படத்தில் தற்கொலைப் போராளி தணுவின் நெற்றியில் பொட்டு கிடையாது,ஆனால் இறந்து போன  தணுவின் நெற்றியில் இருக்கும் பொட்டு எப்படி வந்தது? அந்த துக்க கரமான நேரத்திலும்,மரண ஓலத்துக்கிடையே ,நேரம் ஒதுக்கி பொட்டு வைத்த மேக்கப் ஆர்டிஸ்ட் யார்?[குற்றத்தை இழைத்தவர்களை  தமிழ் இந்து கொலையாளியாக சித்தரிக்க நடந்த வேலை என்று தெரியவில்லையா?]


கொலைக்கான சூத்திரதாரி ஒற்றைக்கண் சிவராசன்  விடுதலைப்புலிகள் குழுவை சேர்ந்தவன் என்று சுப்ரமணியஸ்வாமி பரப்பிய அவதூறின் ரீதியிலேயே குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டன, சிவராசனின் சாயல் தமிழனுக்கு உரிய சாயலே அல்ல.சிங்களனுக்கு உரிய தோற்றம் கொண்டவன் சிவராசன்.அவன் படத்தை உற்றுப் பார்த்தால் ராஜபக்சேவின் சிங்கள் தோற்றம் நன்கு புலப்படும்,சிவராசன் விடுதலைப் புலிகள் குழுவை சேர்ந்தவன் என்பதற்காக சிபிஐ முன்வைக்கும் வலுவான ஆதாரம் தான் என்ன?சிவராசனுக்கும் சந்திராசாமிக்கும் சுப்பிரமணியஸ்வாமிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தான் என்ன?இதை குறித்து வாக்குமூலம் கொடுத்த 26ஆம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பெங்களூர் ஜெயராம் ரங்கநாத்தின் முக்கிய சாட்சியத்தை நீர்த்துப் போகச் செய்ததன் மர்மம் தான் என்ன?


இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள்,குண்டு வெடிக்கப்போவது தெரியாமல் அன்று ஒற்றைக்சிவராசனால்  தினக்கூலி பேசி பஸ்ஸில் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட லோக்கல் போட்டோக்ராப்பர் ஹரிபாபு போடோக்களாக எடுத்துத் தள்ளியியபடியிருந்தார், கடைசி ஐந்து நிமிடம் முன் சிவராசன், நளினி எல்லோருமே அகன்றும் ஹரிபாபுவுக்கு இது தெரிவிக்கப்படவில்லை, அதனால் அவர் மிகவும் பரிதாபமாக பலியானார், அதே போன்றே பேரறிவாளனுக்கும் ராஜீவ் கொலைக்கான சதி தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா?!!! இல்லையா?!!!


ஏன் திருச்சி வேலுச்சாமியின் மனுவின் ரீதியில் சிபிஐ வழக்கை விசாரிக்கவில்லை? சந்திராசாமிக்கு ஏன் அப்படி ஒரு விஐபி அந்தஸ்து? வேண்டுமென்றே சுப்பிரமணியசாமி+சந்திராசாமியை ஏன் தப்பவிட்டனர்? அவர்களை ராஜீவ் மீது விசுவாசம் கொண்ட காங்கிரசார் கூட எதுவும் செய்யவில்லையே? ஏன் அந்த பயம்?


 சரி ,மே 2009 சுப்ரீம் கோர்ட்டு சந்திராசாமியின் மீதான வெளிநாட்டு பயணத்தடையை ஏன் திடீரென விலக்கிக்கொண்டது?அவருக்கு ஜவாப்தாரி கையெழுத்து போட்டது யார்?  2009 மே மாதமே,போபால் கொலைகாரன்,வாரன் ஆண்டர்சன் போல நாட்டை விட்டு தப்பி ஓடிய சந்திராசாமி  இப்போது எங்கே இருக்கிறார்? அது யாரைக் கேட்டால் தெரியும்? தகவல் அறியும் சட்டத்தில் கேட்டால் தெரியுமா?!!!


ராஜீவுடன் சேர்த்து 14 பேர் பலியானர் என அரசின் கணக்கு சொல்கிறது, ராஜீவாவது இலங்கையிலும் ,கிழக்கு தில்லியிலும் விதைத்ததற்கு அறுவடை செய்தார் எனலாம், ஆனால் அந்த அப்பாவிகள்  13 பேர் செய்த பாவம் என்ன?அவர்களுக்காக வேண்டியேனும் இவ்வழக்கின் உண்மையான குற்றவாளிகளை விசாரித்து தண்டனை தரக்கூடாதா?


இன்னும் ஒரு விஷயத்தை தயவு செய்து யோசியுங்கள், விடுதலைப் புலிகள் (LTTE)  இயக்கம் போன்றே சுமார் 40க்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்கள் தனி தமிழீழம் வேண்டி துப்பாக்கியுடனும் சயனைட் குப்பியுடனும் போராடி வந்தன,அவற்றை சாம,பேத,தண்டம் ஆகிய மூன்று நெறிமுறைகளையும் பிரயோகித்து ஒரே குடைக்குள் கொண்டு வந்தவர் மேதகு [ஒரே] புரட்சித்தலைவர் பிரபாகரன்.இவர் சேகுவாரேவையும் மிஞ்சும் நெஞ்சுரம் கொண்ட வீரர் என்றால் மிகையில்லை.


இந்த 40க்கும் மேற்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த எல்லோருக்கும் ஏன் சிங்களர்களுக்கும் கூட ராஜிவ் அனுப்பிய அமைதிப்படை மீதும் ராஜிவ் மீதும் அளவு கடந்த வெறுப்பு இருந்தது, அதில் எஞ்சிய வீரர்கள் யாரேனும் கூட ராஜீவ் படுகொலை என்னும் அகில உலக சதிக்கு துணை போயிருக்க வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? ஒரே கல்லில் ராஜீவையும் வீழ்த்தி ஆறாத பழியையும் பிரபாகரன் மீது சுமத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கலாமா? இல்லையா?!!!




இந்த திருச்சி வேலுச்சாமி சூர்யகதிருக்கு தந்த முக்கியமான பேட்டியை அவசியம் படியுங்கள்
இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.


உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.

உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..

என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.

அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’

சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’

அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.

என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’

சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’

சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?

ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.

மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.
எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!

நன்றி – சூரியகதிர்


Friday, January 10, 2014

ஜில்லா (2014) - இன்னும் எடுத்து இருக்கலாம் நல்லா !!

சாண்டியாகோவில் வசிக்கும் எங்களுக்கு தமிழ் படங்கள் ரீலீஸ் ஆவதை வைத்து தான் பொங்கல் பண்டிகை நெருங்கி வந்து விட்டது என்கிற நினைப்பே வருகிறது. பொங்கல் போனஸாய் மாலை 6 மணி காட்சி ஜில்லாவும் இரவு 9 மணி காட்சி வீரம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. முதலில் "ஜில்லா" வின் பார்வை எப்படி என்று பார்போம். தலைவாவில் வாங்கிய சூடு இன்னும் ஆறாமல் இருந்த போதும், மோகன்லால் - விஜய் கூட்டணி, அதுவும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பு என்றதுமே நான் சற்றே அதிகம் எதிர் பார்த்து விட்டேன். நல்ல விறுவிறுப்பாய் வந்து இருக்க வேண்டிய படம் இயக்குனரின் அனுபவமின்மையால் நிறைய இடங்களில் நொண்டி அடிக்கிறது.


போலீஸ்கார்களை வெறுக்கும் ரவுடி சந்தர்பவசத்தால் போலீஸ் ஆனால் என்ன ஆகும் என்பதே ஜில்லா ஒன் லைனர். ஷிவன் (மோகன்லால்) மதுரை ஆட்டி படைக்கும் பெரிய தாதா. அவரிடம் வேலை பார்க்கும் ஷக்தியின் (விஜய்) அப்பாவை போலீஸ் ஒருவன் கொன்றுவிடுகிறான். அதனால் போலீஸ் மீதும் காக்கி சட்டை மீதும் தீராத வெறுப்பில் ஷிவனின் வளர்ப்பு மகனாய் வளர்கிறார் ஷக்தி.  ஒரு சந்தர்பத்தில் தனக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் ஒரு ஆள் வேண்டுமென்று ஷிவா முடிவெடுக்க, போலீஸசை வெறுக்கும் ஷக்தி போலீஸ் (!!) ஆக்கப்படுகிறார். வேண்டா வெறுப்பாய் வேலைக்கு சேரும் ஷக்தி, ஊரில் ஷிவா செய்யும் தப்புகளை கண்டும் காணமல் இருக்கிறார்.

ஒரு விபத்தில் நிறைய உயிர் இழப்புகளை பார்க்கும் ஷக்தி மனம் திருந்தி நல்ல போலீஸாய் மாறி ஷிவனின் ரவடி சாம்ராஜியத்தை எதிர்க்க புறபடுகிறார். நல்லவனாய் மாறவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் லாலேட்டனை, விஜய் எப்படி திருத்துகிறார் என்பதை நீட்டி முழக்கி சொல்லி இருக்கிறார் இயக்குனர். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மோகன்லால் தான். மனிதர் தாதா கதாபாத்திரத்தில் நின்று ஆடி உள்ளார். வாயில் சுருட்டுடன் "ஷிவன்னா யாரு தெரியுமான்னு" பஞ்ச் பேசும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். விஜயுடன் சவால் விடும் காட்சிகளிலும், வில்லத்தனம் காட்டும் காட்சிகளிலும் தான் தேர்ந்த நடிகர் என்பதை நிருபித்து இருக்கிறார். விஜய் - லாலேட்டனை காம்போ காட்சிகளில் விஜயை இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் அசல்டாய் தோற்கடித்து விடுகிறார். 


விஜய் படத்துக்கு படம் இளமையாய் ஆகி கொண்டே போகிறார். முந்திய படத்தை விட இன்னும் பிட்டாய் மற்றும் ஸ்மார்டாய் தெரிகிறார். நடிப்பு மற்றும் மானரிசத்தில் போக்கிரி ஸ்டைலை பாலோ செய்து உள்ளார். போக்கிரி படத்துக்கு செட் ஆனா அவரின் அசால்ட் மானரிசம் இந்த கதைக்கு நிச்சயம் செட் ஆகவில்லை. சீரியஸாய் வசனம் பேச வேண்டிய காட்சிகளில் வில்லுப்பாட்டு பாட்டுகாரன் போல் பல்லை கடித்து வாயில் முனுமுப்பதை தவிர்த்து இருக்கலாம். அவரை சொல்லி குற்றம் இல்லை, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். விஜய் செமையா ஸ்கோர் செய்யும் டான்ஸ் ஏரியாவில் இந்த முறையும் கலக்கி உள்ளார்.

காஜல் அகர்வால் மேக்அப் மேன்க்கு  சம்பள பாக்கி போல் தெரிகிறது. பார்பவர்களை பழி வாங்கி உள்ளார்கள். பார்பதற்க்கு கர்ண கொடூரமாய் இருக்கிறார். கதை சொல்லும் போதே உங்களுக்கு 4 சாங், அஞ்சு சீன் என்று சொல்லி தான் கால்ஷீட் வாங்குவார்கள் போல். ஒரு சீன் கூட எக்ஸ்ட்ரா இல்லை. ஹீரோ திருந்தும் காட்சியில் மட்டும் நடிக்க முயற்சி செய்து உள்ளார். மற்ற படி ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை. காமெடிக்கு சூரி. என்ன சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது.


படத்தில் வேண்டிய அளவு ட்விஸ்ட் உள்ளது. வலுவான கதையும் இருக்கிறது. ஆனால் திரைகதையை சுவாரிசியமாய் கொண்டு செல்வதில் இயக்குனர் சறுக்கி விட்டார். ஹீரோவின் கெத்தை காட்ட வேண்டும் என்றால் 
வில்லன்னும் அதே அளவு கெத்துடன் இருக்க வேண்டும், இது மாஸ் சினிமாவின் எழுதபடாத விதி. ஆனால் இந்த படத்தில் வில்லன் யார் என்பதே கடைசி இருபது நிமிடத்தில் தான் தெரியவருகிறது. வில்லன் யார் என்கிற சஸ்பென்ஸ் தெரிந்தவுடன் வேகம் எடுப்பது போல் தெரிந்தாலும், அதன் பிறகு சப்பென்று முடிந்து விடுகிறது. இன்னொரு பெரிய குறை, லாஜிக் என்கிற வஸ்துவை நீங்கள் பூத கண்ணாடியை வைத்து தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது. அத்தனை லாஜிக் மீறல்கள்.

இசை இமான், பாடல்கள் எல்லாமே அட்டகாசம், பாடல்கள் காட்சியமைப்பும் செம. பின்னணி இசை சில காட்சிகளில் காதை பதம் பார்த்தாலும், நிறைய காட்சிகளில் நன்றாக இருந்தது. நீசன் திரைகதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி இருந்தால் போக்கிரி பொங்கல் போல் வந்து இருக்கும். நல்ல நடிகர்கள், நல்ல கதை இருந்தும் சொதப்பியது இயக்குனர் மட்டுமே. 

ஜில்லா  - இன்னும் எடுத்து இருக்கலாம் நல்லா !! 

My Rating: 6.9/10.


Friday, August 09, 2013

தலைவா (2013) - சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!!

தலைவா பல தடைகளை (!!) தாண்டி தமிழ்நாட்டுல ரீலீஸ் ஆகாம வெளிநாட்டில் ரீலீஸ் ஆகி இருக்கிறது. ஒரு படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்ப இப்ப படக்குழுவினர் எத்தனையோ புது புது ஐடியாவுல ஸ்டன்ட் அடிச்சு பார்த்து இருக்கேன், சமிபத்தில் தங்க மீன்கள் ராம் கூட புது விதமா "படம் ரீலீஸ் பண்ண காசு இல்லைங்கிற" மாதிரி டீசர் வெளியீட்டு இருந்தார், ஏதோ இப்ப தான் அவருக்கு படம் எடுக்க காசு தேவை என்கிற ரகசியம் தெரிஞ்ச மாதிரி. ஆனா அது கூட நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பற்றிய ஆர்வத்தை உண்டு பண்ணியது. ஆனா தலைவா பட குழுவினர் அடிச்ச ஸ்டன்ட் பழைய எம்.ஜி.யார் காலத்து "தியேட்டர்ல பாம் வைப்போம்" டெக்னிக், அதை பார்த்தவாது நாங்க கொஞ்சம் உஷார் ஆகி இருக்கனும், ஆனா விதி யாரை விட்டுச்சு. பப்ளிசிட்டி ஸ்டன்ட் மட்டும் பழைய எம்.ஜி.யார் காலத்து டெக்னிக் இல்ல, படமும் அரத பழசான கதையை கொண்டு வெளி வந்து இருக்கு. நாங்களா வான்டட்டா போய் வண்டியில ஏறுனது எங்க தப்பு தான். 


நான் பெரிய விஜய் பேன்னாக இல்லாட்டியும், விஜய்யோட எல்லா படத்தையும் முத நாள் பாத்திருவேன், கடந்த அஞ்சு வருஷமா ரீலீஸ் ஆனா எல்லா விஜய் படத்தையும் முத நாள் பார்க்கிற பாக்கியம் கிடைச்சு இருக்கு. துப்பாக்கி மட்டும் மிஸ் ஆகிருச்சு, அதுக்கு காரணம் அப்ப நான் சொந்த கிராமத்துல இருந்தேன், படத்துக்கு தாறுமாறான கூட்டம். எங்க ஊருல ஹவுஸ் புல் போர்டு மாட்டுன வெகு சில படங்களில் துப்பாக்கியும் ஒன்னும். வில்லு, வேட்டைக்காரன், சுறான்னு விஜய் மொக்கை மொக்கையா படம் குடுத்துகிட்டு இருந்தப்பவும் நான் விடாம விஜய் மேல நம்பிக்கை வச்சு படத்துக்கு போய்கிட்டே இருந்தேன். கடைசியா காவலன், நண்பன், துப்பாக்கின்னு நல்ல படங்கள் குடுக்க ஆரம்பிச்ச விஜய் மறுபடியும் பேக் டூ ஸ்குயர் ஒன் மாதிரி, அவர் அப்பாவோட அரசியல் பேராசையில மோசமான மொக்கை படத்தை "தலைவா" மூலமா குடுத்து இருக்கார். நான் இது வரை பார்த்த விஜய் படங்களிலே "தமிழன்" என்கிற காவியத்தை தான் டாப் வொர்ஸ்ட் லிஸ்ட்ல வச்சு இருந்தேன், இப்ப அந்த இடத்தை அன்ன போஸ்ட்ல "தலைவா" பிடிச்சு இருக்கு. வாழ்த்துக்கள் விஜய்.

 இன்னைக்கு கூட சாண்டியாகோவுல "தலைவா" ரீலீஸ் ஆகுமா இல்லையா என்கிற சந்தேகம் இருந்தது, கடைசி நேரத்துல தான் படம் ரீலீஸ் என்கிற அறிவிப்பு தியேட்டர்ல இருந்து வந்தது. எங்க கம்பெனி தமிழ் மக்கள் மொத்த கூட்டமும் தியேட்டர்ல தான் இருந்தது, இத்தனைக்கும் நாளைக்கு ஆபீஸ் வேற. விஜய்க்கு இங்க இருக்கிற ரசிகர் கூட்டம் உண்மையிலே பெரிய ஆச்சிரியமா விஷயம் தான். அவங்களை மனசுல வச்சுகிட்டாவது விஜய் இது மாதிரியான படங்களை தவிர்ப்பது நல்லது. 


படத்தோட கதையை கொஞ்சம் சினிமா ஞானம் உள்ளவங்க ட்ரைலர் வச்சே சொல்லிருவாங்க. விஜய் அப்பா அண்ணா (சத்யராஜ்) மும்பையில வாழுற ஏழைகளின் காப்பாளன், விடிவெள்ளி, கலியுக கர்ணன், ரொம்ப குழம்பாதீங்க சினிமா பாஷையில பெரிய டான். அவரோட பையன் தான் விஷ்வா (விஜய்). அப்பாவோட பிஸினெஸ் பத்தி தெரியாம ஆஸ்திரேலியாவுல வாழுறார். அங்க டான்ஸ் குரூப் வச்சு நடத்திகிட்டு ஜாலியா ப்ரிண்ட்ஸ் கூட சந்தோஷமா இருக்கிறார். தமிழ் பெண்னான் அமலாபாலை லவ்வி, தன்னோட கல்யாணத்தை பத்தி பேச இந்தியா வரார். வந்த எடத்துல அவர் கண்ணு முன்னாலே "அண்ணாவை" வழக்கம் போல் சமூக விரோதிகள் கொன்று விடுகிறார்கள். வழக்கம் போல் விஜய் விரோதிகளை அழித்து மும்பை தமிழர்களை காப்ற்றி, விஷ்வாவில் இருந்து எப்படி விஷ்வா "பாய்" ஆகிறார் என்பதை இழு இழு என்று ஜவ்வு போல் இழுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் "விஜய்".

இளைய தளபதி விஜய் அட்டகாசமாய் எல்லாம் நடிக்கல, தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செஞ்சு இருக்கார். அவருக்கு நல்லா வரது டான்ஸ் மட்டும் தான். செமையா டான்ஸ் ஆடி இருக்கார். உணர்ச்சி பூர்வமான் இடத்துல இவர் பேசுற நிறைய வசனம் சிரிப்பை தான் வரவழைக்குது, டிவி சீரியல கூட வர லாயக்கு இல்லாத வசனங்கள். "தம்பி நல்லா படிச்சா பரீட்சையில் நல்ல மார்க் எடுக்கலாம்" டைப் வசனங்கள். இந்த மாதிரி மொக்கை வசங்களை விஜய் என்ன தான் எமோஷனலா பேசினாலும் அது நம்ம பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. வசனம் எழுதுன ஆளுக்கு கையிலே ரெண்டு போடு போடணும்.


இளைய தளபதி விஜய் ஏன் எல்லா படத்திலும் ஒரே மாதிரியான கெட் அப்ல வராரு, கெட் அப் சேன்ஜ் பண்ணுறதே இல்லைன்னு கேட்கிற ஆளுகளுக்கு கிளைமாக்ஸ் காட்சியில ஒரு கெட் அப் போட்டுக்கிட்டு வராரு பாருங்க. சுறா சிங் கெட் அப் தோத்தது. தியேட்டரே விழுந்து விழுந்து சிரிச்சது. படத்தோட பெஸ்ட் காமெடி சீன் அது தான். சுறாவுக்கு முன் வந்த விஜய் படங்க மாதிரி பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி நம்மளை வதைக்கிறது இந்த படத்துல இல்லாதது பெரிய ஆறுதல்.படத்தோட கதையை ஓகே பண்ணுனது எஸ்.ஏன்னு படிச்சேன். தளபதி ஒரு அஞ்சு வருஷம் அவங்க அப்பாவை ஊரை விட்டு தள்ளி வச்சுறது நல்லது. சனியை கூடவே வச்சுகிறது ரொம்ப ரொம்ப ஆபத்து. 

படத்தோட கதாநாயகி அமலா பால். நடிப்பை வெளிபடுத்த பெரிய வாய்ப்பெல்லாம் இல்லை. வழக்கமான் தமிழ் பட ஹீரோயின் வேலையை சரியா செஞ்சு இருக்காங்க. நிறைய காட்சியில மேக் அப் இல்லாம வந்து மரண பயத்தை உண்டு பண்ணுறாங்க. இடைவேளைக்கு முன்னாடி வர ட்விஸ்டுக்கு பயன்படுத்த பட்டு இருக்காங்க. மற்ற படி  பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. சத்யராஜ் போன்ற நல்ல நடிகரை வேஸ்ட் செஞ்சு இருக்காங்க. இவர் பேசுற வசனங்கள் கொட்டாவியை தான் வர வைக்குது. ஏதோ ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாதிரி வந்துட்டு போறார். 

படத்தை முதல் பாதியில் அப்புறம் இரண்டாம் பாதியில பாதிக்கு மேல வந்து படத்தையும் நம்மளையும் காப்பாதிறது சந்தானம் மட்டும் தான். இயக்குனர் விஜய்க்கு இந்த படத்திலும் சந்தானம் தான் கை குடுத்து இருக்கார். ஒரு டபிள் மீனிங் வசனம் தவிர சந்தானம் ரொம்பவே அடைக்கி வாசித்து இருக்கார். ஒரு காட்சியில் "சாம்  ஆண்டர்சன்" வேற வராரு, சாம் வர காட்சியை கொஞ்சம் சுவாரிசியமா குடுத்து இருக்கலாம்.


படத்துல பின்னணி இசை ரொம்பவே கொடூரமாய் இருந்தது. விஜய் பாடும் "வாங்கன்னா" பாட்டு தவிர எந்த பாட்டுமே மனதில் பதியவில்லை. "தலைவா தலைவா" பாட்டு ஒரு மாஸ் பாட்டை எப்படியெல்லாம் படம் ஆக்க கூடாது என்பத்ருக்கு நல்ல எடுத்துகாட்டு.

 "பாட்ஷா+நாயகன் = தலைவா", இது தான் நம்ம படத்துக்கு பார்முலான்னு சொல்லி தான் இயக்குனர் விஜய் தளபதியை ஏமாத்தி இருப்பார்ன்னு நினைக்கிறன். டைரக்டரோட சுடுற திறமை ஊர் அறிஞ்சது தான், தனக்கு என்ன வருமோ அதை சரியா செஞ்சா வெற்றி நிச்சியம், ஊர் சொல்லுறதுகாக நம்மளை மாத்திக்கிட்டு நமக்கு தெரியாதை வராததை செஞ்சா பல்பு தான் கிடைக்கும். இயக்குனர் விஜய் பேசமா சர்க்கார் இல்லாட்டி காட் பாதர் படத்தை சுட்டு எடுத்து இருக்கலாம், சொந்தமா சீன் யோசிச்சு எடுத்தா இப்படி தான் மண்ணை கவ்வ வேண்டியது வரும். அடுத்த படத்தையாவது உருபடியா சுட்டு எடுங்க விஜய் சார்.

இளைய தளபதி விஜய்க்கு ஒரு வேண்டுகோள், உங்க அப்பா பேச்சை கேட்டு நடிக்காம நல்ல இயக்குனர் மற்றும் நல்ல கதைகளில் நடிங்க, இல்லாட்டி சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!! நாங்க பாவம்.

My Rating: 5.5/10.


Wednesday, February 27, 2013

Amour (2012) - காதலை சொல்லும் உலக சினிமா

Amour (2012) - இந்த வருடத்தின் ஆஸ்கார் வருது வழங்கும் விழாவில் பிற மொழி படங்களுக்கான பிரிவில் சிறந்த படமாக தேர்வு செய்ய பட்ட படம். விருது அறிவிக்கப்பட்டவுடன் படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து சென்ற வாரம் பார்த்து முடித்தேன். உலக சினிமா என்றால் என்னவென்று அறிய விரும்புவர்கள் இந்த படத்தை கண்டிப்பாய் பார்க்கலாம். படத்தை பற்றி விகடன் தளத்தில் அற்புதமாய் எழுதி இருந்தார்கள். அவர்களது விமர்சனத்தை இங்கு பகிர்கிறேன்.
'அமோர்' என்கிற பிரெஞ்ச் வார்த்தைக்கு காதல் (LOVE) என்று அர்த்தம். மரத்தைச் சுற்றியோ, அல்லது பனிபடர்ந்த மலை உச்சியிலோ ஆடிப்பாடும் காதலர்களை முக்கிய பாத்திரமாகக் கொண்ட வழக்கமான காதல் படம் இல்லை இது. ஒரு வீட்டினுள் அடைந்து கிடக்கிற 80 வயது முதிய தம்பதியினரின் காதலை பார்வையாளன் கண்ணில் நீர் வரவரச் சொல்லியிருக்கிற படம்தான் இந்த அமோர்.


ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்தனையோ காதல்களைக் கடந்து செல்கிறான். சிறு வயதில் தன் உலகமாயிருக்கும் தாயின் மீது தோன்றும் காதல், கண்டிப்பானவர் என்கிற வெறுப்பினூடேயும் தன் தந்தையின் மீதுள்ள காதல், பள்ளிப் பருவத்தில் உடன் பயிலும் சக மாணவியின் மீது வரும் காதல், இளம் பருவத்தில் கண்ணில் படும் அழகழகான பெண்கள் அத்தனை பேர் மீதும் பார்த்ததும் அரும்பும் காதல், திருமணத்திற்குப் பின் நம் அனைத்து கனவுகளையும் அடித்து நொறுக்கி விட்டு வந்து வாய்த்திருப்பவள் மீது வேறு வழியின்றி முகிழ்க்கும் காதல், பிறகு பிள்ளைகள் மீதும் அப்புறம் அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும். இப்படி காதல் நம் வாழ்வின் ஒரு சுழற்சியாகவே இருக்கிறது.

தற்காலத்தில் முகம் பார்க்கா இணையதள சாட் காதல், ஃபோட்டோ பார்த்தே வரும் முகநூல் காதல் என்று உலகமயமாக்கலுக்கு ஏற்ப காதலும் தன்னை தகவமைத்துக் கொண்டுவிட்டது. நம் வாழ்வின் சம அங்கமான ஒருவர் மரணப்படுக்கையில் தன் வாழ்வின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருக்க, அவர்மீது நாம் காட்டும் அளவற்ற கருணையும், அக்கறையும் காதல் என்கிற வார்த்தைக்கு இன்னும் அழகையும் இளமையும் சேர்த்துவிடுகிற அற்புதத்தை Michael Haneke-வின் 'அமோர்' சாதித்திருக்கிறது.

சமகால முக்கிய திரைப்பட இயக்குனர்களில் Michael Haneke-வின் இடம் தனித்துவமானது. இன்றுவரை இருண்ட மற்றும் மனதைப் பிசையக்கூடிய கதை சொல்லலுக்குப் பெயர் போனவர் இவர்.'The Seventh Continent’ 1989ல் இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம். 2001ல் வெளியான இவருடைய 'The piano Teacher’உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம். தன்னைவிட வயதில் குறைந்த தனது மாணவன் மீது ஒரு பியானோ டீச்சர் கொண்ட காதலையும் அதன் வலியையும் பதிவு செய்த அப்படம், அந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க கிராண்ட் விருதைப் பெற்றது. தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற படமான 'Blue’ வில் நாயகியாக நடித்த Juliet Binoche-வை வைத்து இவர் இயக்கிய படம் 'Cache' கேன்ஸ் திரைப்பட விழாவில் இவருக்கு மீண்டும் சிறந்த இயக்குனர் விருதைப் பெற்று தந்தது. 

2009ல் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'The White Ribbon'. முதலாம் உலக யுத்தத்திற்கு முன் ஜெர்மனியில் கதை நிகழ்கிறது. ஒரு ஜெர்மனி கிராமத்தில் தொடர்ந்து நடைபெறும் மர்மமான சம்பவங்களும், அக்கிராமத்தில் ஒழுக்கத்தின் பேரால் கண்டிப்புடன் வளர்க்கப்படும் சிறுவர்களும் என இருவேறு தளங்களில் கதை நகர்கிறது. அக்கிராமத்தின் ஒரு பள்ளி ஆசிரியரின் நினைவுகளாய் பயணிக்கும் இந்த கறுப்பு வெள்ளைப் படம் அந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்க பனைமர விருதைப் பெற்றது.


இந்த வருடம் 'அமோர்' திரைப்பபடத்திற்காக இவ்விருதை ஹனக்கே மீண்டும் பெற்றிருப்பன் மூலம் இவ்விருதை மும்முறை வென்ற பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலா உள்ளிட்ட இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் Michael Haneke .

பாரிஸில் நிகழ்கிறது இக்கதை. ஒரு வீடு தாழிடப்பட்டிருக்க வெளியிலிருந்து அதை உடைக்கும் சத்தம் கேட்கிறது. சிறிது போராட்டத்திற்குப் பிறகு கதவு உடைக்கப்பட தீயணைப்ப்பு வீரர்கள் "யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டுக்கொண்டே வீட்டைச் சுற்றி தேடுகிறார்கள். முடிவில் டேப்பினால் அடைக்கப்ப்பட்டிருக்கும் ஒரு அறையைத் திறக்க அதனுள்ளே மலர்கள் தூவிய படுக்கையில் ஆனா ( Anna )படுத்துக் கொண்டிருக்கிறாள் பிணமாக.

ஆனாவின் கணவர் ஜார்ஜ். இருவரும் எண்பதுகளில் இருக்கும் ஓய்வு பெற்ற இசைக் கலைஞர்கள். தங்கள் முன்னாள் மாணவன் ஒருவனின் இசை நிகழ்ச்சியை ரசித்துப் பாராட்டிவிட்டு வீடு திரும்புகின்றனர். அடுத்த நாள் காலை இருவரும் உணவருந்தும்போது ஆனா செயலற்று சிலை போலாகி விடுகிறாள். முதலில் ஜார்ஜ் ஆனா விளையாடுவதாகத்தான் நினைத்துக் கொள்கிறார். ஆனால் பிறகுதான் அவருக்கு விபரீதம் உறைக்கிறது. உடனடியாக ஆனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

மருத்துவமனையில் ஆனாவுக்கு இதய அடைப்பை நீக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவளுக்குச் செய்யப்படும் சிகிச்சை தவறாக முடிய, பக்கவாதம் ஏற்பட்டு உடலின் எந்த ஒரு பாகத்தையும் அசைக்க முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறாள் ஆனா.

ஒரு வீல்சேரில் அடைக்கலமாகிறாள் ஆனா. அவளுக்காக வீட்டில் பல மாற்றங்கள் செய்கிறார் ஜார்ஜ். கீழ் வீட்டினரும் அவருக்கு பல உதவிகள் செய்கின்றனர். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும் ஆனா தன்னை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூடாதென ஜார்ஜிடம் வேண்டிக்கொள்ள அதற்கு அவரும் அதற்கு சம்மதிக்கிறார்.

நாட்கள் நகர்கின்றன. சிறு அசைவிற்கும் தன் கணவனின் உதவியை நாட வேண்டிய நிலை ஆனாவுக்கு. ஜார்ஜ் மனம் கோணாமல் அனைத்துப் பணிவிடைகளையும் செய்து ஆனாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறார். நோய் தீவிரமடைய ஆனாவின் நிலைமை மேலும் மோசமாகிறது. ஆனா தன் மீதே வெறுப்பு கொண்டு பல நேரம் சிறு குழந்தை போல் நடந்து கொள்கிறாள்.

ஆனாவின் மகள் தன் தாய் கஷ்டப்படுவது கண்டு மனம் பொறுக்காமல் ஆனாவை ஓய்வு இல்லமொன்றில் சேர்த்து விடலாம் என்று யோசனை சொல்ல ஜார்ஜ் அதைத் திட்டவட்டமாக மறுத்து விடுகிறார். 'இத்தனை ஆண்டுக்காலம் என்னை அன்போடு பராமரித்தவள் அவள். அவளைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்'. என்கிறார்.


ஆனாவைக் கவனித்துகொள்ள இரண்டு வேலையாட்களை நியமிக்கிறார் ஜர்ர்ஜ். ஆனாவுக்கு அதிலே இஷ்டமில்லை. ஒருநாள் அவர்களின் முன்னாள் மாணவன் அவர்களைக் காண வருகிறான். ஜார்ஜ் ஆனாவை வீல் சேரில் வைத்து அழைத்தது வருகிறார். ஆனாவின் நிலை கண்டு மனம் வருந்துகிறான் வந்தவன். ஆனாவின் ஆசைக்கிணங்க அவளுக்குப் பிடித்த இசைத் தொகுப்பை அவளுக்காக வாசிக்கிறான்.

ஆனாவின் பணியாள் ஒருநாள் பொறுப்பின்றியும் இரக்கமின்றியும் ஆனாவிடம் நடந்துகொள்ள, ஜார்ஜ் அவளை வேலையைவிட்டு நிறுத்தி விடுகிறார். ஒருகட்டத்தில் ஆனா பேசும் சக்தியை முற்றிலுமாக இழந்துவிட, ஜார்ஜ் தினமும் இரவில் பேச வைக்கும் தெரபி என்று தன்னுடன் சேர்ந்து அவளை ரைம்ஸ் பாட வைக்கிறார். 

ஓர் இரவு ஜார்ஜ் ஆனாவுக்கு உணவு ஊட்டிவிட, ஆனா சிறுபிள்ளை போல் சாப்பிட மறுத்து அடம்பிடிக்க ஜார்ஜ் தன்னை மறந்தவராய் கோபத்தில் அவளை அடித்துவிடுகிறார். பிறகு அதற்காக வருத்தப்பட்டு ஆனாவிடம் மன்னிப்புக் கேட்கிறார்.

ஒருநாள் ஆனாவின் மகள் வீட்டிற்கு வரப் போவதாக கடிதம் வர.. ஆனா தன் மகள் அங்கு வருவதை விரும்பவில்லை என்கிறாள். அதையும் மீறி மகள் வந்துவிட, ஜார்ஜ் ஆனாவின் அறையைத் தாளிட்டு மகளிடம் ஆனா உன்னைக் காணத் தயாராயில்லை என்கிறார். ஆனால் மகளோ தன் அம்மாவைப் பார்த்தே தீருவேன் என்று அடம்பிடிக்க வேறு வழியின்றி ஜார்ஜ் கதவைத் திறந்துவிட கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆனாவை அவள் மகள் நெருங்கித் தொட முயல அப்போது விழித்துக்கொள்ளும் ஆனா பேச இயலாமல் கத்திக் கூப்பாடு போட்டு மகளைப் பார்க்க மறுத்து அங்கிருந்து அவளை வெளியேறச் சொல்கிறாள். ஜார்ஜ் தன் மகளிடம் " நீ உன் வாழ்க்கையைப் பாரும்மா; நாங்கள் எங்களுடைய வாழ்க்கையைப் பார்த்துக்கறோம்" என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அன்றிரவு ஜார்ஜ் பல் துலக்கிக்கொண்டிருக்க, கட்டிலில் படுத்திருக்கும் ஆனா நோயின் உச்சத்தில் வலி பொறுக்க மாட்டாதவளாய் வேதனையில் கத்துகிறாள். ஜார்ஜ் அவளுக்கு அருகில் அமர்ந்து ஆறுதலாய் வருடிக் கொடுக்கிறார். வலி தெரியாமலிருக்க தன் சிறு வயதுக் கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனா கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக, முடிவில் ஜார்ஜ் அருகிலிருக்கும் தலையணையை எடுத்து ஆனாவின் முகத்தில் பொத்தி அழுத்தி ஆனாவுக்கு அவளுடைய நோயின் வேதனையிலிருந்தும் இந்த உலகிலிருந்தும் நிரந்தர விடை கொடுத்து அனுப்பி வைக்கிறார். 

மறுநாள் ஜார்ஜ் கண்விழிக்க, ஆனாவின் குரல். சென்று பார்க்க ஆனா வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறாள். ஜார்ஜ் அவளுக்கு கோட் அணிய உதவி செய்து அவளுடனே சேர்ந்து அவரும் கிளம்பி வீட்டை விட்டு வெளியேறிச் செல்கிறார்.

மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரே வீட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். ஆனா மற்றும் ஜார்ஜாக நடித்த EMMANUEL RIVA , JEAN-LOUIS TRINTIGNANT இருவரின் நடிப்பு என்றும் மறக்க முடியாதது. ஜார்ஜாக நடித்த JEAN-LOUIS TRINTIGNANT பல முன்னணிப் படங்களில் நடித்தவர். COSTA GRAVAS என்னும் இயக்குனரின் ' Z ' படத்திற்காக கேன்ஸில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றவர்.

'அமோர்' தன் குடும்பத்தில் நடந்த உண்மைக் கதை என்கிற Haneke-விற்கு 'ஜார்ஜ்' மற்றும் 'ஆனா' என்கிற பெயர்களின் மீது ஏனோ அப்படி ஒரு காதல். தன்னுடைய எட்டுப் படங்களின் முதன்மைக் கதாபாத்திரங்களுக்குமே அவர் ஜார்ஜ், ஆனா என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.

- நன்றி- சினிமா விகடன்


Friday, January 25, 2013

விஸ்வரூபம் (2013) விமர்சனம் - இயக்குனர் கமலின் மாஸ்டர் பீஸ் படம்.

((( நோ ஸ்பாய்லர்கள் - No Spoilers )))

விஸ்வரூபம் படத்தை நான் வசிக்கும் சான் டியகோ நகரில் இன்று இரவு 8:30 காட்சி பார்த்தே விட்டேன். கடந்த ரெண்டு நாட்களாய் என்னுடைய எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி கிடந்தது, படம் அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று. இந்த படத்திருக்கு நான் கிட்ட தட்ட ஆறு மாதமாய் காத்து இருந்தேன், இத்தனை நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா என்றால், நிச்சியம் கண் மேல் பலன் கிடைத்தது. விஷுவல் ட்ரீட், மைன்ட் ப்லோவிங் படம் இது. தமிழில் இது வரை இது போன்ற ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு படம் வெளி வந்து உள்ளது. படம் என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி செய்து உள்ளது என்றே சொல்வேன். கிளாஸ், டெக்னாலஜி, மரண மாஸ் என்ற அணைத்து வஸ்துகளையும் சரியான விகிதத்தில் கலந்து வழங்கி உள்ளார் இயக்குனர் கமல்ஹாசன். நான் பார்ப்பது தமிழ் படமா இல்லை, ஹாலிவுட் படமா என்கிற சந்தேகம் படம் முழுக்க எனக்கு வந்து கொண்டே இருந்தது. கமல் பேசும் தமிழை வைத்து தான் நான் பார்ப்பது தமிழ் படம் என்கிற உணர்வே எனக்கு வந்தது. அப்படி பட்ட படம் இது. வொர்த் வாட்சிங்.


படத்தின் ஒன் லைனர், படத்தின் பாடல் வெளியீடு விழாவில் ஏற்கனவே கமல் சொல்லி இருக்கிறார். விஷ் (கமல்) மற்றும் பூர்ணிமா (பூஜா குமரி) இருவருக்கும் கல்யாணம் நடந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசிக்கிறார்கள். விஷ் கதக் சொல்லி குடுக்கும் மாஸ்டர். பூர்ணிமா அமெரிக்க வருவதருக்கு விஷ்சை திருமணம் செய்ய ஒத்து கொள்கிறார். பூர்ணிமாவிருக்கு விஷ் மீது பெரிய ஈடுபாடு கிடையாது. டைவர்ஸ் வாங்க விஷ்சிடம் எதாவது குறை கண்டுபிடிக்க வேண்டி பூர்ணிமா பிரைவேட் டிடக்டிவ் ஒருவரை அமர்த்தி அவரை பின் தொடர செய்கிறார். அந்த டிடக்டிவ் விஷ்ஷை பின் தொடர்ந்து செல்ல, அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்து இருக்கிறது. கதை அங்கிருந்து அசுர வேகம் பிடிக்கிறது. எதிர்பாரா திருப்பங்களுடன் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அல்கொய்தா, ஜிஹாத், தாலிபான், ஒசாமா பின்லேடன், என்று பயணம் செய்து கடைசியில் அமெரிக்காவில் அதுவும் அடுத்த பாகத்துக்கு ஆச்சாரம் போட்டு அட்டகாசமாய் முடிகிறது.


படத்தின் நாயகன் கமல் ஹாசன், இவரின் நடிப்பை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். மனிதர் அந்த காதபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார். கதக் ஆடும் போது அவர் காட்டும் முக பாவனைகள் அற்புதம். ஏதோ ஒரு நளினமான பெண் தான் கமல் போல் வேடம் பூண்டு உள்ளாரோ என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. உண்மையான பெண் கூட இவர் அளவுக்கு முக  பாவனைகளை தந்துருபமாக காட்டி இருப்பாரா என்பது சந்தேகமே. படத்தில் கமலின் பரிணாம மாற்றம் (Transformation) காட்சி ஒன்று வரும், அந்த காட்சி ஒரு மாஸ் காட்சிக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதருக்கு தக்க சான்று. ஏசி குளிரிலும் எனக்கு கூஸ்பம்ப்ஸ் ஏற்பட்டது. செம சீன் அது. சண்டைகாட்சிகளில் கமல் கடுமையாக உழைத்து உள்ளார். ஆனால் ஆரம்ப காட்சிகளில் கமலின் முக சுருக்கம் நன்றாக தெரிகிறது. படத்தில் வயதான முக தோற்றத்தை ஜஸ்டிபை செய்து இருப்பார் கமல். நிருபமா விஷ்ஸிடம் டைவர்ஸ் கேட்க வயதான முக தோற்றத்தை ஒரு காரணமாக சொல்லி இருப்பார்.


படத்தின் கதாநாயகி நிருபமா (பூஜா குமரி) மற்றும் அஸ்மிதா (அண்ட்ரியா). இருவரில் பூஜா குமாரிக்கு கொஞ்சமே கொஞ்சம் ஹெவி ரோல். அமெரிக்காவில் Phd முடித்த அணு விஞ்ஞானியாக வருகிறார். இவர் பேசும் ஐயர் பாஷை சில நேரங்களில் சிரிப்பை வர வைத்தாலும், நிறைய நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கமல் டச் காமெடி வசனங்கள் இவர் முலம் கேட்கலாம். பெரிய சிரிப்பு வர வில்லை என்றாலும் கண்டிப்பாய் ஸ்மைல் பண்ணலாம். அண்ட்ரியாவிருக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை, ட்ரைலரில் அவர் பேசிய வசனங்கள் தான் படத்தில் பேசி உள்ளார். பெருசாய் ஒன்றும் இல்லை.

வில்லன் ஓமர் (ராகுல் போஸ்), ஆப்கான ஜிஹாத் போராளியாக வருகிறார். நிஜமான ஆப்கான் ஜிஹாத் போராளி ஒருவன் எப்படி இருப்பான் என்று நான் கற்பனை செய்து இருந்தேனோ, அதே போல் தான் இவரும் நடித்து இருக்கிறார். மனிதர் அந்த காதபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார். விஜயகாந்த் படத்தில் வரும் தீவிரவாதி வாசிம்கான் போல் இவர் என்று நீங்கள் கற்பனை செய்தால், ரொம்ப சாரி. இவர் கத்தி கூட பேச மாட்டார். எந்த காட்சியிலும் எரிச்சல் வருவது போல் இவரது ஆக்டிங் இல்லை என்பது பெரிய ஆறுதல். ஒரு காட்சியில் Tall sheikh வேறு வருவார், அவர் யார் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஓமர் ஏன் தமிழ் பேசுகிறார் என்பதருக்கு அவர் ஒரு காரணம் சொல்வர், "நான் கொஞ்சம் காலம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்தேன், அதனால் எனக்கு தமிழ் தெரியும்" என்று சொல்லவர், இந்த காட்சி அவசியம் தேவை, இல்லை என்றால் படம் முழுக்க அவர் உருது தான் பேசி கொண்டு இருப்பார். தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்பு ஒன்று இந்த காட்சிக்கு ஆட்சேபனை செய்து ஓமர் என்கிற போராளி எப்படி இந்தியா வந்து திரும்பி போனார் என்று கமலிடம் ஆதாரம் கேட்கிறது. நெம்ப கஷ்டம் தான்.


படத்தின் பின்னணி இசை மிக பெரிய ஏமாற்றம். டெம்போவை ஏற்றும் இசை என்று எதையும் சொல்ல முடியாது. நிறைய இடங்களில் மொக்கையாய் இருந்தது. கமல் இசை பொறுப்பை ஷங்கர், எசன்லாய்யிடம் குடுத்ததுக்கு பதில், ரஹ்மானிடம் குடுத்து இருக்கலாம். அவருக்கு ஏற்ற ப்ளாட். படம் இன்னும் அட்டகாசமாய் வந்து இருக்கும். படத்தில் வெறும் நிறைகள் மட்டும் தான் உள்ளது, குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம், பெரிய குறை ஒன்று உள்ளது. வழக்கமா கமல் படத்தில் இருக்கும் குறை தான். படம் படித்தவர்களுக்கு தான் புரியும். நிறைய டெக்னிகல் வார்த்தைகள், சிலியும் பாம், ஆட்டாமிக் பவர், ஷீல்ட் பாக்ஸ் என்று பாமரன் கேள்விபடாத வார்த்தைகள் அப்புறம் அவனுக்கு அவ்வளவு தெரியாத அமெரிக்க ஆப்கன் போர் என்று சில விசயங்கள் இருக்க தான் செய்கிறது. ஆனால் ஆப்கான் போர், ஜிஹாத் பற்றி கொஞ்சம் இணையத்தில் படித்தவர்கள் இந்த படத்தை ஹாலிவுட் படத்திருக்கு இணையாக கொண்டாடுவார்கள். 

கடைசியாக இந்த படத்தில் தமிழ்நாடு முஸ்லிம் அமைப்புகள் சொல்வது போல், சர்ச்சைக்குரிய காட்சிகள், முஸ்லிமை இழவுப்படுதும் காட்சிகள் இல்லையா என்று என்னை கேட்டல், இல்லை என்று தான் நான் சொல்வேன். படத்தில் நிறைய இடத்தில அல்லா புகழ் தான் பாடி உள்ளார் இயக்குனர் கமல்ஹாசன். சின்ன ஸ்பாய்லர், படம் ஆரம்பித்த உடன் தெரிந்து விடும், படத்தில் கமல் பிராமன் இல்லை, அவர் "விசிம்" என்கிற முஸ்லிம் என்று. அப்புறம் இந்த படத்தை யார் எல்லாம் எதிர்க்கலாம் என்றால், அல் கொய்தா அமைப்பை சேர்ந்தவர்கள், ஜிஹாத் போராளிகள், வெடி குண்டு வைக்கும் தீவிரவாதிகள் வேண்டும் என்றால் எதிர்க்கலாம். காமன் மேன்னுக்கு இது ஒரு விஸ்வரூப அனுபவம்.
அடுத்த பதிவில் இயக்குனர் கமல் பற்றி எழுதுகிறேன்.

விஸ்வரூபம் - Mind Blowing...

My Rating : 8.4 ....


Thursday, January 24, 2013

விஸ்வரூபம் - இயக்குனர் கமல் - யுஸ் ரீலீஸ் - எகிறும் எதிர்பார்ப்பு !!

கமல் "விஸ்வரூபம்" படத்தை ஆரம்பிக்கும் போது சத்தியமாக கனவிலும் இப்படி ஒரு எதிர்ப்பு வரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். செல்வராகவன் இயக்கத்தில் கமல் - படத்தின் பெயர் "விஸ்வரூபம்" என்கிற அறிவிப்பு வந்தவுடன், எனக்கு பெரிய ஆச்சிரியம், கமல் எப்படி செல்வா இயக்கத்தில் நடிப்பார் என்று, சத்தியமாக ஒத்து வரவே வராது என்று எண்ணினேன். நான் நினைத்தது போலவே படம் ஆரம்பித்த சில நாட்களிலே செல்வா படத்தில் இருந்து விலகினார். படத்தை இயக்கும் பொறுப்பு கமலிடம் வந்து சேர்ந்தது. கமல் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை விட அவர் மிக சிறந்த இயக்குனர், அதற்க்கு சாட்சி அவர் இயக்கிய படங்கள் "ஹேராம்" மற்றும் "விருமாண்டி". ஹேராம் வணிகரீதியான தோல்வி என்றாலும், தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு எடுத்து சென்ற படம் என்கிற பெயர் உண்டு. "விருமாண்டி" வணிகரீதியாக சுமாரான வெற்றி என்றாலும், எனக்கு மிகவும் பிடித்த கமல் படங்களில் ஒன்று. கமலில் கதை சொல்லும் பாணி அட்டகாசமாய் இருந்தது. உலக சினிமா அறிவு (இணைய கூகிள் அறிவு - அது தானே உலக சினிமா அறிவு !! ) எதுவும் தெரியாத வயதில் நான் பார்த்து அசந்து போன படம். 


ஒரே சம்பவங்களை, கொத்தாளத் தேவர் முதலில் சொல்லும் போது தன் வசதிப்படி சுருக்கிச் சொல்வார். விருமாண்டி குறித்த நமது சந்தேகங்கள், தொடர்ந்து விருமாண்டியே தன் கதையை விரிவாகச் சொல்லும் போது அகலுகின்றன. சிறப்பான கதை சொல்லும் உத்தியைக் கடைபிடித்து இருப்பார் இயக்குனர் கமல். மனித உளவியலை தந்துருபமாக காட்டி இருந்தார் கமல். மனிதன் தன்னை தன்னை எப்பொழுதும் நல்லவனாக காட்டி தான் எந்த உண்மையும் சொல்லுவான் என்கிற சித்தாந்தை கொண்ட படம். நம்மில் 99% பேர் "கொத்தலத் தேவர்" கதாபாத்திரம் கதை சொல்வது போல் நம் வாழ்கையில் கண்டிப்பாய் கதை சொல்லி இருப்போம். நான் அடிக்கடி எனது நண்பர்களிடையே சொல்லும் வாசகம் "விருமாண்டி ஸ்டைல் கதை சொல்லாத டா" என்பதே ஆகும். 

விருமாண்டி பார்த்து விட்டு தலைவர் சுஜாதா இது போன்று சொல்லி இருந்தார் ''“சிக்கலான இரண்டு ‘பாயிண்ட் ஆஃப் வியூ’வில் (POV) சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையை மக்கள் புரிந்துகொள்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை என்கிற செய்தி, தமிழ் சினிமாவின் முன்னேற்றத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் அறிகுறி. மேலும், இவ்வகை முயற்சிகளில் ஈடுபட அது தெம்பு அளிக்கும்
விருமாண்டி என்னை பொறுத்த வரை "ரோஷோமான்" படத்தை விட சிறந்த படைப்பு. ரோஷோமான் படத்தில் அகிரோ ஒரே சம்பவத்தை பல கோணங்களில் நான்கு பேர் தங்களை நல்லவர்கள் போல் காட்டி அந்த சம்பவத்தை விவரிப்பது போல் சொல்லி இருப்பார். கேமரா ஆங்கில் ஒவொருவரும் கதை சொல்லும் போது மாறும். ஆனால் கமல் அதை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் பல சம்பவங்களை ஒரே கேமரா ஆங்கிளில் காட்டி இருப்பார். "ரோஷோமான்" பார்க்கும் போது எனக்கு கொட்டாவி தான் வந்தது, படத்தில் விறுவிறுப்பு மற்றும் சுவாரிசியம் மிஸ்ஸிங். ஆனால் விருமாண்டியில் அனைத்தும் இருந்தது.


இப்படி பட்ட நல்ல திரைபடத்தை இயக்கிய கமல், தனது அடுத்த படமான விஸ்வரூபத்தை இயக்க எடுத்து கொண்ட காலம் கிட்ட தட்ட 5 வருடம். கண்டிப்பாய் கதையை நன்றாக செதுக்கி இருப்பார், படம் செம விறுவிறுப்பாய், எந்த பிசிறும் இல்லாமல் இருக்கும் என்று நான் நம்புகிறேன். படம் தமிழகத்தில் 28 தேதி வரை ரீலீஸ் இல்லை, என்கிற செய்தி பார்த்தேன். நான் இருக்கும் சான் டியாகோவில் (CA) இன்று இரவு 8:30 மணிக்கு ரீலீஸ் ஆகிறது. டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் செய்து உள்ளோம். இங்கு தியேட்டர் எல்லாம் குப்பை போல் தான் இருக்கும். நல்ல தியேட்டரில் பிறகு பார்த்து கொள்ளலாம். இப்போதைக்கு படம் பார்த்தால் மட்டும் போதும் என்பது போல் உள்ளது.

படம் பார்த்த ஒருவர், அல்-கொய்தா, LeT போன்ற டெர்ரரிஸ்ட் நெட்வொர்க் எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றிய த்ரில்லர் டாகுமெண்டரி போல் உள்ளது என்று சொல்லி இருந்தார். செம இன்டரிஸ்டிங் ப்ளாட் போல் எனக்கு தெரிகிறது. விஜயகாந்த் படம் போல், தீவிரவாதி பாகிஸ்தான் பார்டரில் நின்று லாரி ஏறி இந்தியாவுக்குள் வந்து பாம் வைத்து விட்டு போவது போல் கண்டிப்பாய் இருக்காது. கமல் எப்படி அவர்கள் நெட்வொர்க் வேலை செய்கிறது என்பதை நம்பும் படி காட்டி இருப்பார். சோ, அவர் சொல்லுவது போல் படம் டெர்ரரிஸ்ட் நெட்வொர்க் பற்றி படம் என்றால், ஞாயமாக அல்-கொய்தா, LeT போன்ற அமைப்புகள் தான், தங்கள் ரகசியங்களை வெளியீட்டு விட்டார்கள் என்று போராட வேண்டும், ஏன் தமிழ் நாட்டு முஸ்லீம்ஸ் போராடுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை.

படம் இங்கு வெளி ஆவது உறுதி, இந்திய நேர படி நாளை மதியம் படத்தை பற்றிய எனது பார்வையை இங்கு பதிவு செய்கிறேன்.


Wednesday, January 23, 2013

சமர் - (2013) காப்பியை கண்டு பிடிக்கும் மேனியா.

நீண்ட காலமாய் தமிழ் பதிவர்களிடம், பேஸ் புக் பயனீட்டாளர்களிடம் ஒரு விதமான மேனியா இருப்பதை காண முடிகிறது, அதை மேனியா என்று சொல்வதும் சரி வராது. வேறு வார்த்தை கிடைக்காதால் இப்பொழுதுக்கு அதை மேனியா என்றே வைத்து கொள்வோம். அது என்ன வென்றால், எதாவது வித்தியாசமா கதையை, திரைகதையை கொண்டு ஒரு சுவாரிசயமான தமிழ் படம் வந்தால், அதன் மூலத்தை ஆராய்வது. அது எந்த ஆங்கில மொழி இல்லையென்றால் பிறமொழி படத்தில் இருந்து தழுவி/காப்பி அடித்து எடுக்க பட்டது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவது. 

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், துப்பாக்கி படம் - தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைகதையை கொண்டு வெளி வந்த படம், நிறைய பதிவர்கள் கண்டிப்பாய் இது ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தில் இருந்து சுட்டு எடுக்க பட்டது என்று எழுதினார்கள். ஆனால் எந்த வெளிநாட்டு படம் என்று இது வரைக்கும் யாராலும் துப்பாக்கி பார்த்தவுடன் சொல்ல முடியவில்லை. நிறைய பேர் துப்பாக்கியின் மூலத்தை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்று "IMDB" தொறந்து வைத்து கொண்டு "டெரரிஸ்ட்" ஆக்டடை பின்னணியை கொண்ட பாரின் படங்களாய் பார்த்து தள்ளுகிறார்கள். என்றாவது ஒரு நாள் துப்பாக்கியின் மூலத்தை கண்டு பிடிக்காமல் விட மாட்டோம் என்று சபதம் பூண்டு உள்ளார்கள். எனக்கு இவர்கள் ஏன் இப்படி செய்து தங்கள் நேரத்தை வீணாக்கி கொள்கிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. இவர்கள் இப்படி செய்வது, தமிழ் இணைய உலகம் தங்களை உத்து நோக்க வேண்டும், தங்களுக்கு நிறைய உலக சினிமா அறிவு உள்ளது என்று ரீடர்ஸ் எண்ண வேண்டும் என்கிற என்னமாய் கூட இருக்கலாம். 

தமிழ் படங்கள் அனைத்துமே ஆங்கில படத்தின் தழுவல் என்கிற எண்ணம் நிறைய பேரிடம் உள்ளது, எந்த அளவுக்கு அந்த எண்ணம் என்றால் "அலெக்ஸ் பாண்டியன்" என்கிற மொக்கை படம் ஆங்கில "டிரான்ஸ்போட்டர்" படத்தின் காப்பி என்று சொல்லும் அளவுக்கு. "டிரான்ஸ்போட்டர்" படத்தில் ஹீரோ வில்லனிடம் காசு வாங்கி கொண்டு ஹீரோயினை கடத்தி கொண்டு போய் விடுவார். அலெக்ஸ் பாண்டியன் படத்திலும் ஹீரோ அதே போல் செய்கிறார், அதனால் "அலெக்ஸ்" "டிரான்ஸ்போட்டர்" படத்தின் காப்பி என்று காரணம் சொல்கிறார்கள். எனக்கு எங்கு போய் முட்டுவதே என்றே தெரியவில்லை. "விஸ்வரூபம்" படத்தின் ஒன் லைனர் (கமல் மனைவிக்கு தெரியாமல் ஸ்பை ஆக இருப்பது) வைத்தே அது ''ட்ரூ லைஸ்" படத்தின் காப்பி என்று சொல்லும் மேதாவிகள் வாழும் சமுகத்தில் தான் நானும் வாழ்கிறேன். 

நாள் ஆக, நாள் ஆக இந்த "காப்பியை கண்டுபிடிக்கும் மேனியா" ஜாஸ்தியா ஆகிறதே ஒழிய, குறைய மாட்டேன் என்கிறது. உண்மையில இது ஒரு விதமான மன நோய் என்றே நினைக்கிறன். இந்த காப்பி கண்டுபிடிக்கும் மேனியா கண்டிப்பாய் நமக்கு ஒரு படத்தை ரசிக்கும் மனநிலையை தராது, இது காட்சி, எந்த ஆங்கில படத்தில் இருந்து எடுக்க பட்டது, என்கிற சிந்தனையிலே அந்த காட்சியை ரசிக்க மாட்டோம். 

நானும் ஒரு காலத்தில் இந்த காப்பி மேனியாவில் அவதி பட்டேன், பிறகு யோசித்து பார்த்தால், நாமே நிறைய படத்தை பைரசி டவுன்லோட் செய்து பார்க்கிறோம், உரியவனுக்கு பணத்தை தராமல் படத்தை ரசிக்கிறோம், அதில் அந்த படம் வேற்று மொழி காப்பியாய் இருந்தால் என்ன, தழுவல் ஆக இருந்தால் என்ன. ஏன் அதன் மூலத்தை ஆராயிந்து மண்டையை குழப்பி சினிமாவின் உண்மையான சுவையை இழக்க வேண்டும் என்று எண்ணி, காப்பி ஆராய்ச்சியை விட்டு விட்டேன். இப்பொழுது முன்னை விட சினிமாவின் சுவை நன்றாக தெரிகிறது. 

சிலரின் காப்பி மேனியா ரொம்ப மோசமாய் இருக்கும், தமிழ் படத்தின் ஏதாவது ஒரு காட்சியின் சாயல் வேறு ஒரு வெளிநாட்டு படத்தில் இருந்து விட்டால். படமே மொத்த காப்பி, படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து உள்ளார்கள் என்று கைக்கு வந்ததை எழுதுவார்கள். அதற்க்கு சமிபத்திய உதாரணம் விஷால் நடிப்பில் வெளி வந்து "சமர்". இது "தி ட்ரூமேன் ஷோ" மற்றும் ''தி கேம்" படத்தின் அப்பட்ட காப்பி என்று சில பதிவர்கள் எழுதி இருப்பதை பார்க்க நேர்ந்தது. 

ஆனால் என்னை பொறுத்த வரை "சமர்" படத்தின் ஒன்று அல்லது ரெண்டு காட்சிகளின் சாயல் மேற்சொன்ன படங்களில் இருக்கலாம், ஆனால் நிச்சியமாக அப்பட்ட காப்பி இல்லை. நன்றாக ரசித்து முடிச்சுகள் தெரியாமல் பார்க்க வேண்டிய படம். நல்ல த்ரில்லர் ரைட் போன அனுபவத்தை குடுக்கும்.

ஊட்டி பாரஸ்ட் ஆபீசர் மகன் விஷால், இவருக்கும் சுனைனாவுக்கும் காதல். சரியான புரிந்துணர்வு இல்லாததால் அந்த காதல் புட்டுக்கொள்ள சுனைனா தாய்லாந்து கிளம்பி போகிறார், அங்கிருந்து விஷாலுக்கு "உன்னை மறக்க முடியவில்லை... உடனே புறப்பட்டு பாங்காக் வா..." என லவ் லெட்டருடன் பிளைட் டிக்கெட்டையும் அனுப்பி வைக்கிறார். முன்பின் விமானத்தில் சென்ற அனுபவமில்லாத விஷால், ஏர்போர்டில் முழிக்க, அங்கு த்ரிஷாவை பார்க்கிறார், அவரிடம் சென்று உதவி கேட்க, த்ரிஷாவும் உதவி செய்கிறார். பாங்காக் வந்து சேரும் விஷாலுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இவர் பெரிய கோடீஸ்வரன் என்று ஒரு கும்பல் சொல்கிறது, இன்னும் ஒரு கும்பல் இவரை கொலை செய்ய துரத்துகிறது என்று ஏகப்பட்ட ட்விஸ்ட். நிறைய முடிச்சுகள் விஷாலை சுத்தி போடபடுகிறது, விஷாலுடன் சேர்ந்து நாமும் குழம்புகிறோம். இறுதியில் போடப்பட்ட அணைத்து முடிச்சுகளும் ஒவொன்றாய் அழகாய் அவிழ்க்க படுகிறது. அந்த முடிச்சுகள் தெரிய படத்தை பார்ப்பது தான் நல்லது. கதை தெரிந்து இந்த படம் பார்ப்பது சுத்த வேஸ்ட். 

படத்தில் அரை மணி நேரம் நீங்களும் விஷாலுடன் சேர்ந்து சுத்துவீர்கள், அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று ஏகத்துக்கும் நம்மை யோசிக்க வைத்து விடுவார் இயக்குனர் திரு. இவர் விஷாலை வைத்து "தீராத விளையாட்டு பிள்ளை" என்கிற மொக்கை படத்தை எடுத்தவர். சண்டைகாட்சிகளில் நிறையவே உழைப்பை பார்க்க முடிகிறது. ஆனால், விஷால் இன்னும் நடிப்பு கற்று கொண்டே வருகிறார் என்று நினைக்கிறன். நிறைய சீரியஸ் காட்சிகளில் இவர் நடிப்பை பார்க்கும் போது எனக்கு கொட்டாவி வந்தது. இவரை விட ஒரு நல்ல நடிகர் இந்த படத்தில் நடித்து இருந்தால் படம் இன்னும் நல்ல ரீச் ஆகி இருக்கும். பாலா பள்ளியில் ஒரு கோர்ஸ் படித்த பிறகும் இவ்வளவு தான் நடிப்பு வரும் என்றால், விஷால் ரொம்ப கஷ்டம் பாஸ்.

த்ரிஷா, அழகாய் வருகிறார், அளவாய் நடிக்கிறார். பாடல் காட்சிகள் மனதில் ஒட்டவே இல்லை. சுனைனாவிருக்கு சில காட்சிகள், மற்றும் ஒரு பாடல், அவ்வளவு தான். பெரிய வேலை இல்ல. படத்தில் காமெடி இல்லவே இல்லை. இது போன்ற சீரியஸ் படங்களுக்கு காமெடி அனாவிசியம் தான். வசங்கள் எஸ்.ரா, அவர் எழுத்தை போலவே, சுலபமாக சொல்லி புரிய வைக்க வேண்டியதை, கடினமாக ஆக்கி உள்ளார். நார்மலா பேச வேண்டிய வசங்களை, சுத்தி வளைத்து கஷ்டமான வார்த்தைகள் கொண்டு கதாபாத்திரங்கள் பேசுகிறார்கள். ஆனால் அவரின் எழுத்தை போலவே நன்றாக உள்ளது. தமிழுக்கு வித்தியாசமான கதையை யோசித்த இயக்குனர், மேக்கிங்கில், மற்றும் ஹீரோ தேர்வில் பெரிய ஓட்டை விட்டு விட்டார் என்றே நாள் சொல்வேன்.

சமர் - சுமார்

My Rating: 6.5/10......