Sunday, April 29, 2012

The Great Dictator-(1940)- சாப்ளின் அட்வைஸ் ஹிட்லர்க்கு

ஹிட்லர் காலத்தில் அந்த சார்லி சாப்ளின் தில்”.. இந்த வரிகள் விக்ரம் நடித்த தில் படத்தில் வரும் ஒரு பாடல் வரிகள். இந்த பாடல் வரிகளின் அர்த்தம் “The Great Dictator” என்ற படத்தை பார்க்கும் வரை எனக்கு புரியவில்லை. நமக்கு ஒரு நாட்டின் தலைவரோட (உ.த: கலைஞர், ஜெ , சோனியா) கொள்கை பிடிகலைனா என்ன பண்ணுவோம் ?? அவருக்கு நீ பண்ணுறது சரி இல்லைன்னு எப்படி சொல்லுவோம் ?? நம்மலோட எதிர்ப்பை எப்படி காட்டுவோம் ?? இப்ப இருக்குற இணைய வசதி முலம்மா நம்ப கருத்தை எப்படி வேண்டுமானாலும் வெளிபடுத்தலாம், எதிர்ப்பை வெளிபடுத்த நிறைய வழிகள் இருக்கு. போடியில உக்காந்துகிட்டு வைட் ஹவுஸ் ஒபாமாவுக்கு ஒரு பகிரங்க கடிதம் நம்ப ப்ளாக்ல எழுதலாம். 

அவருக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ அத பத்தி எல்லாம் நாம் கவலை பட வேண்டியது இல்லை. கடிதம் பிடிக்கலையா திருக்குறள் மாதிரி நாளே வரியில நச்சுனு ஒரு தலைவரோட கொள்கைய கிண்டல் பண்ணி ட்விட்டர்ல ட்வீட் போடலாம். இது எல்லாம் இப்ப நம்பல மாதிரி காமன் மேன் பண்ணுறது. ஆனா ஒரு சினிமா படைப்பாளி ஒரு தலைவர் பண்ணுற செயல் பிடிகலைனா தன்னோட கருத்தை சினிமா முலமா சொல்லுவான், ஆனா அப்படி கருத்து சொல்லற படம் எல்லாம் டாக்குமெண்டரி லிஸ்ட்ல சேந்துரும். அப்படி ஒரு கிரேட் லீடர்க்கு!!!! தி கிரேட் சார்லி சாப்ளின் அட்வைஸ் செஞ்சு எடுத்த தி கிரேட் திரைக்காவியம் தான் “The Great Dictator”. அந்த தலைவர்!!!! வேறு யாரும் இல்லை, சார்லி சாப்ளின் மாதிரியே மீசை வச்ச அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler).


ஹிட்லரை பத்தி தெரியாதவங்க இருக்க முடியாது. தெரியாதவங்களுக்கு ஒரு சின்ன அறிமுகம். ஹிட்லர் ஜெர்மன் நாட்டை ஆட்சி செய்த ஒரு அரசியல்வாதி, சாதாரண ஆட்சியாளர் கிடையாது, மிக பயங்கரமான சர்வாதிகாரி. அவர் ஆட்சி செய்த காலகட்டத்தில் அவரின் யூத எதிர்ப்பு கொள்கை காரணமாக கிட்டதட்ட 11 மில்லியன் (1.1 கோடி) பேரை கொன்ற ஒரு கொடூரன்.

 உலகையே தன் காலடியில் கொண்டு வர துடித்த கிராகதன். இரண்டாம் உலக போர் நடைபெற முக்கிய காரணமாக இருந்த ஒரு லீடர். இப்படி பட்ட ஒரு சர்வாதிகாரியை மிக பயங்கரமாக பகடி செய்து, “அடேய் நீ பண்ணுறது தப்பு, உன்னோட கொள்கைகள் ரொம்ப முட்டாள்தனமானதுன்னு” செவுட்டில் அறைந்தாற்போல் சாப்ளின் சொன்ன படம் The Great Dictator”.


இந்த படத்தில் சாப்ளின் டபுள் அக்டு பண்ணி இருப்பர். ஒரு சாப்ளின் மூடி திருத்தும் நாவிதர், இவர் ஒரு யூதர். மற்றும் ஒரு சாப்ளின் டோமானியா (ஜெர்மனி) என்ற நாட்டை ஆண்டு வரும் சர்வாதிகாரி. பெயர் ஹெயக்கல் (ஹிட்லர்). இவருக்கு யூதர்களை கண்டால சுத்தமாக பிடிக்காது. தன் நாட்டில் யூதர்கள் யாரும் இருக்க கூடாது என்று, யூதர்களை பிடித்து சிறையில் அடைக்க தன் படையை ஏவி விட்டு இருப்பார். பார்பர் (நாவிதர்) சாப்ளின் ஹெயக்கல் படையிடம் இருந்து தப்பித்து உயிர் பிழைக்க ஓடி கொண்டு இருப்பார். இடையே ஹெயக்கல் பக்கத்து நாடான பாக்டீரியாவின் (இத்தாலி) சர்வாதிகாரி நபோலினியுடன் (முசோலினி) இனைந்து அடுத்த உலக போருக்கு ஆயுத்தம் ஆகி கொண்டு இருப்பார்.

பார்பர் சாப்ளின் ஹெயக்கல் படையிடம் மாட்டி சிறையில் அடைக்க பட்டு, பிறகு அங்கு இருந்து தப்பித்து ராணுவ உடையில் சுற்றி கொண்டு இருப்பார். பார்பரின் முக அமைப்பு ஹெயக்கல்(ஹிட்லர்) போல் இருப்பதால், அவரை ஹெயக்கல் என்று ராணுவ தளபதி தவறாக எண்ணி, போருக்கு தயாராகி கொண்டு இருக்கும் ஹெயக்கலின் ராணுவ படை முன்பு உரையாற்ற சொல்வார். ஆனால் யாரும் எதிர் பார வண்ணம் பார்பர் யூதர்களுக்கு ஆதரவாக, உலக போருக்கு எதிராக, சமாதானத்தை வலியுறுத்தி ஏழு நிமிட உருக்கமான உரை ஒன்றை அளிப்பார். அந்த உரை முடிய, படமும் முடிவடையும்.

            
சாப்ளின்  யூதர்களுக்கு ஆதரவாக மற்றும் ஹிட்லரை பகடி செய்து  அதுவும் ஹிட்லர் வாழ்ந்த காலத்திலே பேசும் படம் எடுத்தால் அவரை நிறைய பேர் யூதர் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் சாப்ளின் உண்மையில் யூதர் கிடையாது. யூதர்களின் கஷ்டங்களை புரிய நான் யூதராய் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று ஒரு முறை சொல்லி இருக்கார்.

 நாஜி கொள்கைகளுக்கு எதிராக மற்றும் யூதர்களின் கஷ்டங்களை திரையில் பதிவு செய்த, செய்துகொண்டு இருக்கும் மற்றும் ஒரு மிக சிறந்த படைப்பாளி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். நாலு படத்துக்கு ஒரு படம் இவர் கண்டிப்பா தன்னோட நாஜி எதிர்ப்பு கொள்கைய மையமா வச்சு ஒரு படத்தை குடுத்து விடுவார்.


படத்தின் சுவாரசியங்கள் சில:
  • சாப்ளின் எடுத்த முதல் பேசும் படம். படபிடிப்பு முழுவதும் அமெரிக்காவில் நடத்த பட்டது. இந்த படம் வெளிவந்த போது அமெரிக்கா உலக போரில் ஈடுபடவில்லை. இருந்தாலும் ஹிட்லரின் கொள்கைகள் தவறானவை என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்ல வேண்டும் என்று சாப்ளின் இப்படத்தை எடுத்தார்.
  • இந்த படம் தோல்வி அடைந்த இருந்தால், சாப்ளின் நடு தெருவுக்கு வந்து இருப்பார், ஆனால் அது போல் எல்லாம் நடக்காமல் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
  • ஹெயக்கல் (ஹிட்லர்) உலகமே பயந்த சர்வாதிகாரி, ஆனால் அவன் தனியாக இருக்கும் போது, மற்றும் அவன் அலுவலகத்தில் இருக்கும் போது செய்யும் சேட்டைகள், கிறுக்குத்தனங்களை செமையாய் கிண்டல் செய்து இருப்பார் சாப்ளின். ஹெயக்கல் ஒரு காட்சியில் தன் சிலை செய்யும் சிற்பிக்கு ரெண்டே செகண்ட் மட்டும் போஸ் குடுத்து விட்டு, அந்த எடத்தை விட்டு நகர்ந்து விடுவார். சிற்பி சிலை செய்ய ஆரம்பிதற்குகள் ஹெயக்கல் அங்கிருந்து போய் விடுவார். இப்படியாக பல காட்சிகள் வைத்து ஹிட்லரை பகடி செய்து இருப்பார் சாப்ளின்.
  • இப்படம் ஐந்து ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்க பட்டது. ஆனால் எந்த விருதும் கிடைக்கவில்லை.
இந்த படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய உலக சினிமா........

My Rating: 8.6/10......


Tuesday, April 10, 2012

Call of Juarez-(PC/Xbox360) -சபிக்க பட்ட புதையலை தேடி ஒரு பயணம்


இப்போ வரைக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச சினிமாவை பத்தி எழுதிகிட்டு இருந்தா நான், இப்போ அதுல இருந்து கொஞ்சம் விலகி எனக்கு பிடிச்ச வேற ஒரு விசயத்தை பத்தி எழுதலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன்.. முன்னாடி பதிவுல சொன்ன மாதிரி நான் ரசித்த சில வெஸ்டர்ன் வீடியோ கேம்ஸ்-ஐ உங்களுக்கு அறிமுக படுத்தற பதிவு தான் இது. இந்த பதிவுல நாம பார்க்க போற கேம் “Call of Juarez”. இந்த கேம்-ல் மொத்தம் முனு சீரீஸ் வந்துள்ளது. நாம்ப இப்போ பார்க்க போறது முத பாகம் Call of Juarez – (2007) & ரெண்டாம் பாகம் Call of Juarez: Bound in Blood - (2009)  . இந்த கேம் PC & Xbox360 ரெண்டு வெர்ஷன்ளையும் வந்துள்ளது. நான் இதோட Xbox-360 வெர்ஷன் தான் விளையாடி இருக்கேன். சரி Call of Juarez கேம் பத்தி பார்க்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் வேற சில அடிப்படையான வீடியோ கேம்ஸ் பத்தி பார்போம்.
90’s கால கட்டத்துல நிண்டெண்டோ (Nintendo) கேம்ஸ் மிக பிரபலமாக இருந்தது. 90-களின் வீடியோ கேம்ஸ் பிரியர்களுக்கு கண்டிப்பாய் "சூப்பர் மரியோ" (Super Mario) பற்றி தெரிந்து இருக்கும். அனேக கேம்ஸ் பிரியர்கர்கள் தங்களோட கேம்ஸ் கேரியர்யை சூப்பர் மரியோ-ல இருந்து தான் ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு உறுதியா சொல்லலாம். கேம் கான்செப்ட் ரொம்ப சிம்பிள், பிச் (Peach) என்ற காளான் ராஜியத்தின் இளவரசியை ப்ரௌசர் (Bowser) என்ற டிராகன் கடத்தி சென்று விடும். காளான் ராஜியத்தில் மொத்தம் எட்டு உலகங்கள், ஒவொரு உலகமும் நாலு லெவல் கொண்டது. மரியோ என்ற கதாபாத்திரத்தை ஏற்று விளையாடும் நாம் பிச் இளவரசியை தேடி ஒவொரு உலகமாய் பயணம் செய்ய வேண்டும். அணைத்து உலகத்தின் கடைசி லெவலில் வில்லன் ப்ரௌசர் நமக்காக காத்து கொண்டு இருக்கும், அதை கடந்து நாம் இளவரசி பிச்யை காப்பாற்ற வேண்டும். ஒவொரு உலகத்திலும் ப்ரௌசர் நமக்கு பல இடைஞ்சல்களை குடுக்கும், அவற்றை எல்லாம் முறியடித்து எட்டாவது உலகத்தில் கடைசி லெவலில் இருக்கும் பிச்யை மரியோ காப்பாற்றுவது தான் கேம் கான்செப்ட். சின்ன வயசுல மரியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கேம். கேம் விளையாட ஆரம்பிச்சு கரெக்டா முனு மாசம் கழிச்சு, என்னோட எட்டாவது முழு பரீட்சை லீவுன்னு நினைக்குறேன், ஒரு மதியான நேரத்துல பிச்யை சென்று அடைதேன். உடனே ஓடி போய் என்னோட பக்கத்து வீட்டு நண்பர்களை எல்லாம்  குப்பிட்டு வந்து காமிச்சது எல்லாம் ஆட்டோகிராப் நினைவுகள். இப்ப அந்த பழைய மரியோ கேம்ஸ் பார்த்தா ஏதோ பழைய எம்ஜியார் சிவாஜி படம் பார்க்கிற மாதரி இருக்கு.

 சின்ன வயசுல ஏற்பட்ட கேம்ஸ் மீதான பிடிப்பு இன்னும் எனக்கு கொஞ்சம் கூட குறையவேயில்லை. சம்பாரிக்க ஆரம்பிச்ச அப்புறம் நான் எனக்குன்னு வாங்குன முத பொருள் Xbox-360. வாங்கி நாலு வருஷம் ஆச்சு, கிட்டதட்ட 40 கேம்ஸ் என் கிட்ட இருக்கு. அதுல எனக்கு ரொம்பவே பிடிச்ச கேம் “Call of Juarez” சீரீஸ். இது வெஸ்டர்ன் டைப் பிரஸ்ட் பெர்சன் ஷூட்டர் (FPS) கேம். சில ஷூட்டர் கேம்ஸ்ல கன் (Gun) தூக்கிட்டு எதிர்ல யாரு வந்தாலும் சுட்டு தள்ளிட்டு ஓடிட்டே இருக்க வேண்டியது இருக்கும். ஏன் சுடுறோம், எதுக்கு சுடுறோம் ஒன்னுமே நமக்கு புரியாது. ஆனா சில கேம்ஸ் ரொம்ப சுவாரிசியமான கதைய அடிப்படையாக கொண்டு இருக்கும். நமக்கு குடுக்க பட்ட மிஷனை நாம் ரொம்ப யோசிச்சு, பிளான் பண்ணி முடிக்க வேண்டியதாக இருக்கும்.. ஒரு நல்ல கேம் நம்மை அந்த கேம் கதாபாத்திரமாக மாற்றி விட வேண்டும். சரி இப்போ “Call of Juarez” எப்படி பட்ட கேம் அப்படிங்கிறதை இப்போ பார்போம்.

எப்படி ஒரு நல்ல படத்துக்கு அதோட முத சீன் முக்கியமோ, அதே போல ஒரு கேம் வெற்றி அடைய அந்த முத மிஷன் ரொம்ப முக்கியம். இந்த கேம்ல முத மிஷன் படு அமர்க்களமாய் இருக்கும். ஒரு கோட்டையில் கேம் ஆரம்பிக்கும். மிஷியன் கன் கொண்டு அந்த கோட்டைய பாதுகாத்து கொண்டு இருக்கும் வீரர்களை நாம் சுட வேண்டும். நிறுத்தாமல் சுட வேண்டும், அந்த உக்கிரமான சண்டை முடியும் தருவாயில் டக் என்று பிளாஷ்பேக். நாம் யார் ? ஏன் அந்த கோட்டைக்கு வந்தோம் ? எதற்காக அந்த சண்டை ? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான் 15 மிஷன்.

Juarez என்ற சுடுகாட்டில் ஒளித்து வைக்க பட்டு உள்ள தங்க புதையலை தேடி எடுப்பது தான் மெயின் கதை.கேமில் மொத்தம் ரெண்டு முக்கியமான கதாபாத்திரங்கள். பில்லி (Billy) & ரே (Ray). நாம் இரண்டு கதாபாத்திரங்களின் வாயிலாக கேம் விளையட வேண்டும். ஒரு மிஷன்னில்
நாம் பில்லியாக விளையாடினால், அடுத்த மிஷன்னில் ரேவாக விளையாட வேண்டும். இருவரின் குணாதிசியங்கள் இதோ.
ரே: துப்பாக்கி சண்டை போடுவதில் கில்லாடி. நல்ல பலசாலி. டுயல் சண்டை போடுவதில் சூரன்.
பில்லி: இவன் அம்பு ஏய்வதில் பெரிய ஆள். ரே அளவு பலசாலி கிடையாது. மறைந்து அல்லது பதுங்கி தாக்குவதில் வல்லவன்.
ரேவின் தம்பி மகன் தான் பில்லி. ஒரு எதிர்பாரா சம்பவத்தால் ரேவின் தம்பி தாமஸ் (Thomas)கொல்ல பட்டு விடுவான். தன் தம்பியை கொன்றது பில்லி தான் என்று ரே தவறாக எண்ணி விடுவான். அந்த கொலைக்கு காரணம் தான் இல்லை என்று பில்லி எடுத்து கூறுவதை கேட்காமல் ரே பில்லியை துரத்த ஆரம்பித்து விடுவான். பில்லி ரேயிடம் இருந்து தப்பித்து புதையல் இருக்கும் Juarez நகரத்தை நோக்கி தன் பயணத்தை தொடர்வான். ரே பில்லியை தொடர்ந்து Juarez நகரத்தை வந்து அடைவான். தாமஸ்-ஐ கொன்ற உண்மையான கொலையாளி யார் ?? Juarez நகரத்தில் உண்மையிலே புதையல் இருந்ததா ?? முதல் காட்சியில் இருந்த அந்த கோட்டை யாருடயது ?? போன்ற பல சுவாரிசியமான கேள்விகளுக்கான விடை “Call of Juarez” PC/Xbox-360 கேமில் சொல்ல பட்டு இருக்கும்.
   
எப்பவுமே ஒரு படம் பெரும் வெற்றியடைந்தால் அதன் ரெண்டாம் பாகம் வெளி வரும். இந்த செண்டிமெண்ட்க்கு கேம்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன. Call of Juarez”- (2007) வெற்றிக்கு பிறகு “Call of Juarez: Bound in Blood - (2009) என்று இதன் ரெண்டாம் பாகம் வெளி வந்தது. முதல் பாகத்தை விட ரெண்டாம் பாகத்தில் கிராபிக்ஸ் நல்ல மெருகேற்ற பட்டு இருக்கும். Call of Juarez” கேமில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சி மற்றும் ரே & தாமஸ்யின் இளமை பருவ வாழ்கை தான் “Bound in Blood”. இந்த கேமில் ரே மற்றும் தாமஸ் எப்படி Juarez நகரத்தில் இருக்கும் சபிக்கப்பட்ட புதையலை அடைந்தார்கள் என்பது தான் மெயின் ப்ளாட். ஒவொரு மிஷன் ஆரம்பிக்கும்பொழுது நாம் நமக்கு எந்த கதாபாத்திரம் வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளலாம். ஒவொரு மிஷன் முடிவில் கண்டிப்பாய் ஒரு டுயல் சண்டை இருக்கும். லெவல் ஏற ஏற சண்டை கடினம் ஆகும்.
         
Bound in Blood”-யின் பல காட்சிகள் The Good Bad and Ugly படத்தில் இருப்பது போன்று இருக்கும். அமெரிக்க உள்நாட்டு போர் நடைபெறும் காலகட்டத்தில் நடைபெறும் முதல் மிஷன் GBU படத்தில் வரும் உள்நாட்டு போர் காட்சி போன்றே இருக்கும். அது போக கேமில் வரும் மர வீடுகள், குதிரை சண்டை, டுயல் துப்பாக்கி சண்டை, பண்டி ஹண்டர் மற்றும் பேய் நகரம் (Ghost Town) கண்டிப்பாய் உங்களுக்கு நல்ல வெஸ்டர்ன் வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை குடுக்கும்.
  
நீங்க வீடியோ கேம் பிரியரா இருந்ததா கண்டிப்பா இந்த கேம் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சியமா உங்களுக்கு பிடிக்கும்.

  இந்த கேமின் முன்றாவது பாகம் “Call of Juarez: The Cartel” என்ற பெயரில் வெளி வந்து உள்ளது. நான் இன்னும் இந்த கேம் விளையாட வில்லை. வாய்ப்பு கிடைத்து விளையாடினால் கண்டிப்பாய் அதை பற்றி எழுதுகிறேன்.


Wednesday, March 21, 2012

எதிர்பார்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள்- 2012

ஹாலிவுட்ல எவ்வளவு பெரிய டைரக்டர் ஆக இருந்தாலும், இதுக்கு முன்னாடி எவ்வளவு பிரமாண்ட ஹிட் குடுத்து இருந்தாலும் அவங்க படம் கண்டிப்பா ஓடும்ன்னு சொல்லவே முடியாது. ஓடுதோ இல்லையோ, அத பத்தி நமக்கு கவலை கிடையாது, நமக்கு படம் பார்க்க நல்லா இருக்கனும், மொக்கையா இருக்க கூடாது, 2 மணி நேரம் நல்ல டைம் பாஸ் ஆகனும். அது தான் நமக்கு வேணும். ஆனா சில டைரக்டர்ஸ் படம் அந்த குறைந்தபட்ச உத்தரவாதத்தை கூட நிறைவேற்றாமல் போய் விடும். ஒரு நல்ல உதாரணம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், எப்ப எந்த மாதிரியான படம் அவர் கிட்ட இருந்து வரும்னு சொல்லவே முடியாது. The Terminal என்ற அற்புத சினிமாவை எடுத்து முடிச்ச அப்புறம் அவரு எடுத்த மொக்கை படம் War of the Worlds. இப்படி தான் எப்பவுமே Expect the Unexpected-ன்னு எதிர் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தான். ஆனா என்னை பொறுத்த வரை சில பேர் எடுக்குற / எடுக்கபோற படங்கள் கண்டிப்பா சோடை போகாதுன்னு ஆணித்தரமா சொல்லுவோன். அப்படிப்பட்ட அந்த சில படங்களை இப்ப பார்போம்.நான் ரொம்ப ரொம்ப எதிர்பார்க்கிற படங்கள் ரெண்டே ரெண்டு தான். இந்த ரெண்டு படங்களும் இந்த வருஷம் (2012) ரிலீஸ் ஆக போற படங்கள்.

The Dark Knight Rises:

இந்த படத்தை எடுத்து கொண்டு இருப்பவர் கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan),இவரை பத்தி ரொம்ப சுருக்கமா சொல்லணும்னா இவர் பெரிய ஜீனியஸ், விஞ்ஞானி ஆகி இருக்க வேண்டியவர், தெரியாம சினிமா உலகத்துல வந்துட்டார், மிகவும் குழப்பமான திரைக்கதையை எடுப்பதில் வல்லவர். இது பேட்மேன் சீரீஸ்ல வர போற கடைசி படம். போன பேட்மேன் படமான The Dark Knight-ல ஜோக்கர் செஞ்ச அந்த வில்லன் கேரக்டர் மாதிரியே இந்த படத்துல நோலன் ரெண்டு வில்லன் கேரக்டர்களை அறிமுக படுத்த உள்ளார் . Bane & Cat woman. பேட்மேன் காமிக்ஸ் படிச்சவங்களுக்கு Bane பத்தி தெரிஞ்சு இருக்கும். Bane - அசுர பலம் மிக்க, பேட்மேனை விரும்பாத கெட்டவன். ஒரு தவறான ஆராச்சி முலம் அவன் உடம்பில் ஒரு வகையான நஞ்சு செலுத்த பட்டு விடும், அந்த நஞ்சின் வீரியத்தால் அவனுக்கு யானை பலம் கிடைத்து விடும். இந்த கதாபாத்திரம் ஜோக்கர் அளவுக்கு புத்திசாலி கிடையாது, ஆனா ரொம்ப பலசாலி. இந்த முறை பேட்மேன் Bane-ஐ எப்படி சமாளிக்க போறாருன்னு பார்போம்.

என்னோட கெஸ் என்னன்னா "The Man who Broke the Bat" அப்படிங்கற மிக பிரபலகாமிக் வாசகத்தை கண்டிப்பா Bane நிறைவேத்துவான்னு தோணுது. So its gonna be the end of Batman.ரொம்ப முக்கியமா நோலன் இப்படத்தை 70mm IMAX வெர்ஷனில் படமாக்கி இருக்காரு. கண்டிப்பாக ரசிகர்களுக்கு இப்படம் விஷுவல் ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Skyfall:

எதிர்பார்பை எகிற செய்யும் அடுத்த படம் Skyfall, இது 007 மூவி, ஆமாங்க ஜேம்ஸ் பாண்ட் சீரீஸ்ல வர 23-வது படம் தான் Skyfall.பாண்ட் படத்துல கதை எல்லாம் பெருசா இருக்காது, வழக்கமான மசாலா கதை தான், ஆனா மேகிங் அட்டகாசமாய் இருக்கும். இதுலயும் டேனியல் கிரெய்க் (Daniel Craig) தான் பாண்ட் கதாபாத்திரத்தை பண்ணுறாரு, அப்புறம் முக்கியமா, படத்துல வில்லன் கேரக்டர் பண்ணுற ஆளு Javier Bardem, இவரு யாருனா No Country for Old Men படத்துல சைக்கோ கொலைகாரனாக மிரட்டின ஆண்டன் சிகுரு. இவருக்குகாக இந்த படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன்.

மேல சொன்ன ரெண்டு படங்கள் தவிர இன்னும் நிறைய படங்கள் இந்த வருஷம் ரிலீஸ் ஆக போகுது. வில் ஸ்மித் (Will Smith) நடிக்கும் MIB-3, Bourne சீரீஸ்ல வர போற நாலாவது படம் The Bourne Legacy. ஸ்பைடர்மேன் சீரீஸ்ல வர போற நாலாவது படம் The Amazing Spider-Man.சோ, இந்த வருஷம் ஹாலிவுட் படங்களுக்கு பஞ்சமேயில்லைன்னு சொல்லலாம்.


Tuesday, March 13, 2012

ஆன்சைட் அனுபவங்கள் - கடைசி பாகம் -3

கடைசியா சொல்றேன் இது என்னோட சொந்த பதிவு கிடையாது. இந்த பதிவின் சொந்தக்காரர் பாலா என்பவர், அவரு அன்பே சிவம் அப்படிங்கற பேருல ஒரு வலைப்பூ எழுதிட்டு வரார். அவரின் அனுமதி பெற்று இந்த பதிவின் கடைசி பாகத்தை வெளியிடுறேன். இந்த பதிவின் முதல் பாகத்தை இங்கே பார்க்கவும், இரண்டாம் பாகத்தை பார்க்க இங்கே செல்லவும்.

எப்படியோ அடிச்சு பிடிச்சு ஆன்சைட் வந்தாச்சு, இப்ப அந்த ஆன்சைட் ஊருல நம்ப ரொம்ப காமென்-ஆ சந்திக்கிற சிக்கல்கள் என்னான்னு பார்போம்.

ஏர்போர்ட்ல நம்பல கூட்டிட்டு போக நம்ப நண்பர் யாராவது வந்திருந்தா விஷேசம், இல்லேனா குஷ்டந்தான்..திருவிழால காணாம போன திருவாத்தான் மாதிரி முழிச்சுகிட்டு நிக்க வேண்டியது தான்..அங்க எல்லாம் தெள்ளத்தெளிவா படம் போட்டு காட்டிருப்பான்.(நமக்குதான் பகல்லயே பசுமாடு தெரியாதே, இருட்டுலயா எருமை மாடு தெரியப்போகுது..) தட்டுத்தடுமாறி கேப் புடிச்சு நம்ப கலீக்கோடா ரூமுக்கோ, இல்லேனா அவரு முன்கூட்டியே ஏற்பாடு பண்ணிருக்கற ரூம்ல போயி புது நண்பர்களோட ஐக்கியமாயிர வேண்டியது தான்.
ஆன்சைட்ல வாழ அடிப்படையான விஷயங்கள்:
** உணவு, உடை, உறைவிடம் அப்பறம் பிராட்பேண்ட் கனெக்ஷனோட ஒரு லேப்டாப்.
நம்ம டிவி, ரேடியோ, மியூசிக் பிளேயர், விளையாட்டு மைதானம், சினிமா தியேட்டர், புத்தகம், நியூஸ் பேப்பர் எல்லாமே அதுதான். சாயங்காலம் வந்தோடனே சாணி போட்ட மாதிரி அப்படியே சத் துனு உக்காந்திர வேண்டியது தான்.
அப்புறம் சராசரி தமிழனை உறுத்தற ரெண்டு விஷயங்கள்:

1. டாய்லெட்டில் டிஸ்யூ பேப்பர்....
நம்மூர்ல பேப்பர்னா சரஸ்வதிங்கறான், கால்ல பட்டாவே.. பத்துதடவ தொட்டு கும்புடுவான்.ஆனா அங்க பேப்பரை வேற எதுக்கோ யூஸ் பண்ணுவான் வெள்ளைகாரன்.

2. காலநிலை மாற்றம்
வெயில் காலத்துல வெளிச்சமும், குளிர் காலத்துல இருட்டும் ஜாஸ்த்தியா இருக்கும். நீங்க சாயங்காலம் எவளோ லேட்டா வீட்டுக்கு வந்தாலும் நேரத்துலையே வந்த மாதிரி ப்ரெஷ்சாவே இருக்கும். ஏன்னா வெயில் காலத்துல பத்துமணிக்கு தான் கொஞ்சம் லைட்டா இருட்டும்.நைட் கொஞ்சம் லேட்டா பசங்களோட பேசிட்டு இருந்தம்னா திடீர்னு விடிஞ்சிரும்.குளிர் காலத்துல இதுக்கு நேர்மாறு, 3 மணிக்கெல்லாம் இருட்டீரும். எப்பவுமே நைட் ஷிப்ட்ல இருக்கற பீலிங் இருக்கும்.கன்னிப்பொண்ணு மனசு மாதிரியே வானிலை இருக்கும், பத்து நிமிஷம் அப்படியே இருட்டு கட்டி மழை பேயும், அப்புறம் பாத்தா இன்னிக்கா அப்படி பாத்தங்கறா மாதிரி சுள்ளுன்னு வெயிலடிக்கும்.
வேல ரீதியா பாத்தா ஒன்னும் பெருசா வித்யாசம் இருக்காது..அதே வேலை, ஆனா வெள்ளைக்கார மொதலாளி. நமக்கு கிளையன்ட் நல்ல படியா அமையனும் அது ரொம்ப முக்கியம், அத விட முக்கியம் Off-shore team (அந்த எட்டு பேரு) சரியா வாய்க்கனும் இல்லென சிக்கி சீரழிய வேண்டியதுதான். விடிய விடிய உக்காந்து ட்ரான்ஸ்சிசன் குடுத்திட்டு காலைல திரும்ப வந்து கேட்டா “ராமனுக்கு பொண்டாட்டி ரம்பா”ன்னு சொல்லுவான் அகராதி புடிச்ச பயபுள்ள.

நம்ப வீட்டுல இருக்கறவங்க அடிக்கடி கேக்கற கேள்வி,
“அங்க எல்லாம் கெடைக்குமாப்பா??”....
பொன்னி அரிசிலேருந்து முருங்கைக்காய் வரைக்கும் தரமான பொருளாவே நமக்கு கெடைக்கும்.ஊர்ல கால்ல பட்ற பாத்தரத்த கூட எடுத்து வெக்க மாட்டான் இங்க வந்து குமிஞ்சு கோலம் போடறதா தவிர எல்லா வேலையும் துல்லியமா செய்வான்! வேற வழி?

நம்புடைய புதிய பொழுதுபோக்குகளில் சமையலும் கண்டிப்பா சேர்ந்திரும் குழிப்பனியாரம், கொழுக்கட்டை, பருப்பு வடை, பாயசம்ன்னு பயலுக நொறுக்குவானுக. ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க, சில பொண்ணுகள விட பசங்க ரொம்ப நல்லாவே சமைப்பானுக. பசங்க நாலு பேரு ஒரு வீட்ல இருந்தா கூட, ஒரே அடுப்புதான் எரியும், ஆனா பொண்ணுக வீட்டுல கொறஞ்சது ரெண்டு அடுப்பாவது எரியும். சரி, பிரச்சன திசை மாறுது…

அங்க போயும் நம்பாளுக்கு பூ பூக்க ஆரம்பிச்சிரும். “மச்சி, நான் சொல்லலே என்னோட தேவதைன்னு, அங்க பார்ரா பனியில நனைஞ்ச புஷ்பம் மாதிரி” ன்னு சொல்லிகிட்டிருக்கும் போதே அவனோட வெள்ளைகார தேவதை நல்ல பத்து செண்டி மீட்டர்ல ஒரு சிகரட்ட எடுத்து பத்தவெக்கும்…  அசிங்கத்த மிதிச்ச மாதிரி அப்பறமாதான் அடங்குவான்…
வெள்ளக்காறன பொருத்தவர ஒவ்வொரு வீக்எண்டும் தீபாவளி மாதிரி..திங்கக்கெழமைலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் கன்னுக்குட்டி மாதிரி சாதுவா இருப்பானுக.. வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில இருந்து காட்சில்லாவா மாறிருவானுக. 5 மணியில இருந்தே அய்யனார் வேட்டைக்கு கெளம்பற மாதிரி டிசைன் டிசைனா ஆம்பள பொம்பள வித்யாசமில்லாம கெளம்பு வாங்க…வேற எதுக்கு குடிச்சுட்டு கூத்தடிக்கத்தான்.

நம்ப ஊர்ல பொண்ணுக நம்பல கண்டாவே “அதுங்க வந்திருச்சுன்னு” ஜுராசிக் பார்க்ல ஓடற மாதிரி ஓடுவாங்க…இங்க நெலமை நேர்மாறு நாலு பொண்ணுக கூட்டமா வந்தா நாயப்பாத்து ஒதுங்கற மாதிரி தப்பிச்சு ஓடிரனும்..இல்லேனா ஆகற சேதாரத்துக்கு கம்பேனி பொறுப்பில்லீங்க!!

இந்த ஆச்சர்யம், திகைப்பெல்லாம் மொத ரெண்டு வாரத்துக்குத்தான்.. ஐஸ்வர்யாராயே பொண்டாட்டியா வந்தாலும், அந்த பெருமை, சந்தோசமெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்..அப்புறம் அவ ஒழுங்கா சமைக்க மாட்டேங்கறா, ஒரு சைடா நடக்கறான்னு எதாவது கொற சொல்ல ஆரம்பிச்சிருவோம்.பழகப்பழக பாலும் புளிக்குங்கற மாதிரி நம்ப மெக்கானிக்கல் வாழ்க்கை போர் அடிக்க ஆரம்பிச்சிரும். நாம ஊருக்கு திரும்பிப்போற நாள பத்தி கற்பனை பண்ண ஆரம்பிசிருவோம்.
கிட்ட தட்ட நம்ப வந்த வேலை பாதி முடிசிருக்கும். அதுக்குள்ள தம்பி நீ ஆணி புடுங்குன வரைக்கும் போதும், பட்ஜெட் மேல ஏறுது, நீ ஊருக்கு திரும்பி வான்னு சொல்லி வர சொல்லிருவாங்க. அப்பிடியே அந்த கடைசி வீக் என்டுல அந்த ஊருல இருக்குற பெரிய ஷாப்பிங் மால் போய் நம்ப வீட்டு ஆளுங்களுக்கு தேடி தேடி வெளிநாட்டு பொருள்களை (சென்ட், வாக்மேன், ஐ-பேட்) எல்லாம் வாங்கிட்டு சந்தோஷமா ஊருக்கு கிளம்புவோம். எப்படி இந்த ஊருக்கு வரும் போது மனசு சந்தோஷமா இருந்திச்சோ அத விட பல மடங்கு சந்தோஷம் நம்ப சொந்த ஊருக்கு போகும் போது இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்திச்சு. கடைசியில ப்லைட் நம்ப ஊருல லேன்ட் ஆகும் போது கிடைக்கிற திருப்தி இருக்கே. அதையும் அனுபவிக்கணும்.
மொத்ததுல பில்லா அஜித் ஸ்டைல்ல படிங்க....

ஆன்சைட்ன்றது இளைய தளபதி விஜய் படம் மாதிரி, தியேட்டர் உள்ள இருக்குறவன் வெளிய வர பார்ப்பான்,  வெளிய இருக்கறவன் தியேட்டர் உள்ள போகனும் பார்ப்பான். படத்தோட டிரைலர் மட்டும் தான் நல்லா இருக்கும். புல் படத்தை நீங்க ரொம்ப ரொம்ப கஷ்ட பட்டு தான் பார்க்கணும்.... அது.


Monday, March 12, 2012

ஆன்சைட் அனுபவங்கள் - பாகம் -2

திரும்பவும் சொல்றேன் இது என்னோட சொந்த பதிவு கிடையாது. இந்த பதிவின் சொந்தக்காரர் பாலா என்பவர், அவரு அன்பே சிவம் அப்படிங்கற பேருல ஒரு வலைப்பூ எழுதிட்டு வரார். இந்த தொடரின் முதல் பாகத்தில் தான் இந்த பதிவை எழுதினவர் பாலான்னு தெரிஞ்சுச்சு. அப்புறமா அவர் கிட்ட அனுமதி வாங்கி மீதி ரெண்டு பாகத்தியும் வெளியிடுறேன்.பதிவை வெளியிட அனுமதி அளித்த பாலாவுக்கு என் நன்றிகள்........  
அனுபவம் தொடர்கிறது.....

அதுதான் ஆன்சைட் போறதுக்கு எல்லா தடையும் தாண்டிடோமே அப்பறம் என்ன லைட்டான் நம்பிக்கைன்னு கேப்பீங்க. இங்கயும் ஒரு ட்விஸ்ட் இருக்கும். ஏன்னா இந்த மாதிரி சாயங்காலம் ட்ரீட் குடுத்துட்டு சந்தோசமா டாட்டா சொல்லிடு போனவனெல்லாம் காலைல நமக்கு முன்னால ஆபீஸ்ல ஒரு டேப்பரா (டேப்பரான்னா, தவமாய் தவமிருந்து படத்துல சேரனோட மெட்ராஸ் வீட்ல எதிர்பாராம நம்ப ராஜ்கிரண் ஒரு சைசா உக்காந்திருபாப்லல்ல அந்த மாதிரி) உக்காந்திட்டு இருந்த கதையெல்லாம் இருக்கு…அது பெரிய கொடுமைங்க..என்னாச்சு ஏதாச்சுன்னு பாக்கறவங்க எல்லாம் எதோ எழவு விழுந்த மாதிரி விசாரிக்க ஆரம்பிச்சிருவாங்க.. இது பரவால்ல பம்பாய்ல கனெக்க்ஷன் ப்ளைட் ஏறப்போறவன போன் போட்டு கூப்பிட்டு,  தம்பி கிளையன்ட் சைடுல எதோ ஏழரை ஆயிரிச்சு..போனவரைக்கும் போதும் பொட்டாட்ட திரும்பி வந்திருன்னு சொல்லிருவாங்க..அது சேரி நமக்கு நேரம் சரியில்லேனா ஒட்டகத்து மேல ஏறி உக்காந்தாலும் நாய் கடிக்கத்தான செய்யும்…
 இதுனால நமக்குள்ள எப்பவுமே ஒரு பய பட்சி நொண்டி அடிச்சுகிட்டே இருக்கும். இந்த தடவையாவது எல்லாம் சரியா நடக்கனும்னு இல்லாத சாமிய மனசு வேண்ட ஆரம்பிச்சிரும். நம்ப நலம் விரும்பிகள், நண்பர்கள்னு ஒவ்வொருத்தரா வந்து பயணத்துக்கான துணுக்குகளையும், நடந்துக்க வேண்டிய வழிமுறையையும் சொல்லி குடுத்துட்டே கடைசி வரைக்கும் கூட இருப்பாங்க. நீங்க என்னதான் பட்டியல் போட்டு செக் பண்ணிகிட்டாலும் கெளம்பற வரைக்கும் அத வாங்கிட்டியா, இத வாங்கிட்டியான்னு லிஸ்ட் நீண்டுகிட்டே போகும்…கெடைக்கறதெல்லாம் போட்டு அமுக்கி சதுரமா வாங்குன பெட்டி அமீபா மாதிரி ஆயிரும்…

விடியக்காலம் ப்லைட்டுனா ராத்திரி பதினொரு மணி வரைக்கும் மசமசப்பாவே இருக்கும்.. அதுக்கப்றம் தான் நம்ப பெத்தவங்களோட கொஞ்சம் நேரம் மனம் விட்டு பேச முடியும்!     

இதெல்லாம் இப்படி இருக்க ஊர்ல இருந்து நம்ப அப்பத்தா போன போட்டு “உனக்கு தண்ணில கண்டம்னு உடுமல ஜோசியர் சொல்லிருக்காரு, நீ தண்ணி பக்கமே போகாத, போற பக்கம் சூதானமா இருந்துக்கோ, வம்பு தும்புக்கு போகாத சாமின்னு பத்து வருசமா சொல்ற அதே அறிவுரைய சொல்லும். திடீர்னு “என்னைய இப்பவே காடு வா வாங்குது வீடு போ போங்குது.. இன்னிக்கோ நாளைக்கோ நான் போய் சேந்துட்டன்னா..நீ வந்து நெய் பந்தம் புடிச்சாத்தாண்ட என் கட்ட வேகும்னு”  பொசுக்குனு அழுக ஆரம்பிச்சிரும்..”இல்லாத்தா உனக்கு ஒன்னும் வராது, நீ இன்னும் நான் பேரம்பேத்தி எடுக்கற வரைக்கும் இருப்பே”ன்னு நாம்பளும் சமாதானப்படுத்துவோம்.அதுலயும் சில பேரெல்லாம் அவுங்க தாத்தா பாட்டி கிட்ட பேசும்போது கைக்கொழந்தயாவே மாறி அப்புடியே தவுந்திருவாங்க..

மனசெல்லாம் பாரமாகி அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் கண்ணா அசந்தம்ன்னா. “ஏன்டா ப்ளைட்ட நீ புடிக்கனுமா நாங்க புடிக்கனுமா? ப்ளைட்ல போய் தூங்கிக்கலாம் மொதல்ல எந்திரி”ன்னு எக்கோல ஒரு குரல் கேக்கும் முழிச்சு பாத்தா நம்பப்பா சும்மா புது மாப்ள மாதிரி ஜம்முனு கெளம்பி ரெடியா இருப்பாரு! கண் எரிச்சலோட நம்ப நண்பர்கள் புடை சூழ ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே ஏர்போர்ட் போயிருவோம்.

நம்ப பாசக்காரப் பசங்க எப்பவுமே ஸ்வீட் பாக்ஸ கிலோ கணக்குல வாங்கி குடுப்பானுக.. ஏன்னா ப்ளைட்ல போறதுக்கு முன்னாடி இவளோ தான் லக்கேஜ் எடுத்திட்டு போகன்னும்னு ஒரு கணக்கு உண்டு..அதிகம் ஆகி 3  கிலோவ எடுத்திருங்கன்னு சொன்னா,  ”மச்சி அந்த மைசூர் பாகும், பிஸ்தா கேக்கும் சரியா மூணு கிலோ வராதுன்னு? நல்லவனுக மாதிரியே கேப்பானுக!! இதுவும் கூட ஒரு வகையான Give and take policy தான்.
 மணிக்கணக்கு நிமிசக்கணகக்காயி சட்டுன்னு சூழ்நிலை அப்படியே சேது கிளைமாக்ஸ் மாதிரி ஆயிரும்… பெத்தவங்க லைட்டா கலங்கி நிப்பாங்க…பயலுக வேற திடீர்னு எதோ சந்தானம் சூரியாவுக்கு அட்வைஸ் பண்ணற மாதிரி “மச்சி பாத்துக்கோடான்னு ஒரு மாதிரியான வாய்ஸ்ல பேசுவானுக!
நிமிசக்கணக்கு நொடி கணக்காயிடும்…

மௌனத்தின் சத்தம் மட்டுமே கேட்கும் நேரங்கள்!
கடைசி நொடியில் அம்மாவிடம் இருந்து சில வருட இடைவெளிக்குபிறகு ஒரு அன்பு முத்தம்…
ஆருயிர் நண்பர்களின் கதகதப்பன தழுவல்…
யாருக்கும் கண்களில் கண்ணீர் முட்டும் தருணம்…
கனத்த இதயத்துடன் எல்லாருக்கும் கையசைத்து விடை கொடுத்துவிட்டு..

எல்லா செக்யூரிட்டி, எமிகரேசன் சம்பரதாயங்களையும் முடித்து விட்டு Loungeல் ஒரு மணிநேரம் காத்திருப்போம்.அப்போது தான் நாம் தனிமைப்பட்டதை உணர்வோம்..ஒரு வெறுமை வந்து மனதை ஆக்ரமித்து கொள்ளும். சொல்லப்போனால் உண்மையான நம்மை வெளியே தற்காலிகமாக தொலைத்து விட்டு மாயையான புது மனிதனாய், புதிய ஊருக்கு, புதிய கலாச்சாரம், புது உறவுகளுக்கு நம்மை அர்ப்பணிக்க தயாராகி விடுவோம்.நாம் கண்டிப்பாக நிறைய சந்தோசமான தருணங்களை (நண்பர்களின், உறவினர்களின் திருமணம், சொந்த ஊரில் பண்டிகைகள், காலை நேர FM, மாலை நேர சேட்டிலைட் சேனல்கள், முதல் நாள் சினிமா, இரவு நேர அர்த்தமில்லா அரட்டைகள், பைக்கில் நகர்வலம் இப்படி நிறைய) தவறவிடுவோம்… இந்த வரிகளை எத்தனை தடவை படிச்சாலும் எனக்கு அலுக்கவே அல்லுகாது. எனது முதல் ONSITE சைனா பயணத்தில் அந்த கடைசி நிமிடங்களை அப்பிடியே என் கண் முன்னே நிறுத்தும் மேல சொன்ன வரிகள். Hats of Bala. 

கடைசி நேர போன்களில் நேரம் கரைந்து கொண்டிருக்கும். ஒரு வழியாக ப்ளைட்டில் போர்டு ஆகி மேலெழும் போது நகரம் ஒரு புள்ளியாகி பதினைந்தே நிமிடங்களில் வெறும் மேகம் மட்டுமே நம் மனதை போலவே வெறுமையாக புலப்படும்.
(சரி…புரியுது… என்னங்க பண்றது, நமக்குள்ள எப்பவுமே ஒரு சேரன் அலர்ட்டாவே இருக்கான்!!..)   
சில பேரு வெளிய வால்டேர் வெற்றிவேல் மாதிரி வெறப்பா இருந்துட்டு உள்ள வந்து டாய்லெட்ல சென்னை-28 ஜெய் மாதிரி தேம்பித்தேம்பி அழுதிட்டு இருப்பானுக.

சில பேரு ஸ்கூல்ல, மொத நாள் LKG கொழந்தைக உக்காந்த்திருக்குமே அதே மாதிரி கடைசி வரைக்கும் உப்புன்னு உக்காந்திருப்பனுக. 

சில பேரு காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி ஒயின், விஸ்கின்னு கெடைக்கறதெல்லாம் வாங்கி, கலக்க வேண்டாம் நாம் அப்படியே சாப்பிடுவேன்னு ராவடி பண்ணிட்டு இருப்பாங்க..

சத்தமே இல்லாம சில பேரு சைலன்ட்டா இருப்பான், என்னடான்னு பாத்தா பக்கத்து சீட்ல பளிங்கு மாதிரி ஒரு பொண்ணு உக்காந்திருக்கும். ஊர்ல குண்டாவுல ஊத்தி குடிக்கறவனா இருப்பான், ட்ரிங்க்ஸ் சர்வ பண்ணா, ஏதோ வேப்பெண்ணைய குடிக்க சொன்ன மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு “நோ தேங்க்ஸ்.. ஐ யம் நாட் யூஸட் டு இட்”ன்னு சைடுல பாத்தபடியே ஒரு கோல போடுவான். அவ வழக்கம் போல இவன மதிக்காம டான்பிரவுன் புக்க படிக்க ஆரம்பிச்சிருவா.

பாதி தூக்கம், கொஞ்சம் இசை, ஒரு முழு நாவல், ஒரு புரியாத திரைப்படம்னு.. நாம எறங்க வேண்டிய ஊரு வந்திரும் (US ன்னு வெச்சுப்போம் – ஏன் மாஸ்டர் எப்பவும் இதே ஸ்டெப்ப போட்றீங்க….இது ஒன்னுதான எனக்கு தெரியும்..) லக்கேஜ கலெக்ட் பண்ணலாம்னு போனா, கன்வேயர்ல வர எல்லா பொட்டியும் காக்காவாட்டம் ஒரே மாதிரி இருக்கும்..ஒரு வழியா நம்ப பொட்டிய கரெக்டா கண்டுபுடிச்சு எடுத்திட்டு அடுத்த முக்கியமான கட்டத்துக்கு போகணும்.
அந்த ஊரு இமிகரேசன் செக்கிங்..
ஒரு ஜாக்சன் அங்கிள் லோக்கல் ஆக்சன்ட்ல கேள்வி கேப்பாரு..
*****“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
*****(என்னது கொழாய்ல தண்ணி வரலையா? ) பார்டன் மீ..
*****“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
*****(என்னது எம்.ஜி.ஆர் உயிரோட இருக்காரா?) பார்டன் மீ..
*****“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
*****ஓ….ஐ வொர்க் ஃபார்……. (இப்போ தான் இதையே சொல்லிருக்கோம், மொத்தமும் சொல்றதுக்குள்ள.. வெடிஞ்சிரும்.)

பார்டன் மீ, பார்டன் மீன்னு பத்து தடவ பாட்டு பாடி.. ஒரு வழியா கேள்விக்கு பதில சொல்லி அவன் சீல் குத்தறதுக்குள்ள நமக்கு பொறந்த நாள் கண்டுரும். இந்த மாதிரி பார்டன் பாட்டை ஒரு வாட்டி நான் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்ல ஒரு ஜாக்சன் துரை கிட்ட பாடி மாட்டிக்கிட்டு முழிச்ச்சேன். அந்த ஜாக்சன் துரை கிட்ட இருந்து தப்பிச்சு ஏர்போர்ட்ல இருந்து வெளிய வந்து அந்த ஊரை கண்ணு குளிர பார்த்தா தான் நம்ப பல நாள் ONSITE கனவு நிறைவேருன மாதிரி ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்க. அத வார்த்தையால சொல்ல முடியாது. அதை அனுபவிச்சு பார்த்தா தான் புரியும். அந்த பீல கொஞ்சம் நேரம் அனுபவிச்சுட்டு அப்படியே பொட்டிய தூக்கிட்டு டாக்ஸி தேடி அலைய வேண்டியது தான். 

அந்த ஊருல நமக்கு ஏற்படுற அனுபவத்தை அடுத்த கடைசி பதிவுல பார்போம்.