Wednesday, September 03, 2014

சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.

கத்தி பிடித்து ஆபரேஷன் செய்யும் மருத்துவர் அதே கத்தியை எடுத்து சமுதாயத்தில் இருக்கும் விஷ கிருமி ஒன்றை வேட்டையாடும் படம் தான் சலீம். ஐடெண்டிட்டி தெப்ட் என்கிற மைய கருவை கொண்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல பேரையும் வசூலையும் பெற்ற படம் "நான்", அதன் முடிவில் இருந்து சலீமின் தொடர்ச்சியை ஆரம்பம் ஆகிறது. சலீம் (விஜய் ஆண்டனி) நேர்மையாக வாழும் டாக்டர். ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி தருவது, புறா வளர்ப்பது, இல்லாதவர்களுக்கு இலவசமாய் வைத்தியம் பார்ப்பது, காசு கம்மியான மருந்துகளை பரிந்துரை செய்வது போன்ற அக்மார்க் தமிழ் சினிமா நல்லவன் கதாபதிரத்தில் வருகிறார்.


 எந்த வம்புக்கும் போக்காமல் அந்நியன் "ரூல்ஸ் ராமானுஜம்" போல் வாழ்கிறார். தன் காதலியிடம் வீண் வம்பு செய்தவனை கூட மன்னிக்கும் அம்பியாய் இருக்கிறார். தன் வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு எகத்தாளம் பேசும் எதிர்வீட்டு காரனை கூட மன்னித்து விட்டு ஷேர் ஆட்டோவில் வேளைக்கு போகிறார். தவறான ஆபரேஷன் முலம் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற ஆஃபரை கொண்டு வரும் சீனியர் மருத்துவர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைக்கிறார். அது போக தன் காதலி கூப்பிடும் இடத்துக்கு, சரியான நேரத்தில் போக முடியாமல் வேலை வேலை என்று இருந்து விட்டு காதலியிடம் திட்டு வாங்குகிறார். இது போன்ற முதல் பாதியின் காட்சிகளை வைத்தே படம் இரண்டாம் பாதியில் எந்த திசையில் பயணிக்க போகிறது என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
 
 
 நீங்கள் நினைத்தது போல் படம் இரண்டாம் பாதியில் அக்ஷன் பாதையில் பயணம் செய்கிறது. நேர்மையாய் இருந்த காரணத்திலால் தன் காதலி, வேலை, மரியாதை அனைத்தையும் இழந்து நடு ரோடில் நிர்கதியாய் நிற்கும் சலீம் தான் விரும்பும் வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று முடிவு எடுத்து விபரீத காரியம் ஒன்றை செய்ய முற்படுகிறார், அதனால் ஏற்படும் விளைவுகள் தன் பிற்பாதி கதை. சாதுவான சலீம் முர்கமாய் மாறும் காட்சி செம அமர்க்களம். அதன் பின்பு சலீம் எடுக்கும் முடிவுகள் எல்லாமே பர பர ரகம் தான். சலீம் ஏன் இப்படி செய்கிறார் என்கிற முடிச்சு மெதுவாய் அவிழும் போது நமக்குள் பரபரப்பு தொற்றி கொள்கிறது.


 எல்லாம் சரி தான், ஆனால் சலீம் "Big Bang" (2007) என்கிற கொரியன் படத்தின் அப்பட்டமான் தழுவல் என்று கடைசி வரை எங்கேயும் குறிப்பிடவில்லை. "Big Bang" படத்தின் ஹீரோ சலீம் போலவே நேர்மை விரும்பி. ஒருநாள் காலையில் அடித்துப் பிடித்து ஆபிஸுக்கு கிளம்புகையில், அவனது  மனைவி அநியாய பொறுமையுடன் எனக்கு ஒன்று வேணும் என்கிறாள். இவன் என்னவென்று கேட்க அவள் பொறுமையாய் டைவர்ஸ் வேண்டும் என்று கேட்கிறாள். ஹீரோ அதிர்ந்து போய், "ஏன் என்னாச்சு? நான் அப்படி என்ன பண்ணுனேன்?" என்று கேட்க அவள் மிக சந்தமாய் "நீ எந்த தப்புமே பண்றதில்லை. வாழ்க்கை போரடிச்சுப் போச்சு" எனக்கு டைவர்ஸ் குடுத்திரு என்று கேட்க. வந்து பேசுகிறேன் என்று ஓடுகிறான் ஹீரோ. அவனது காரை மறித்தபடி ஒரு கார் பார்க் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அந்த காரின் சொந்தக்காரனுக்கு போன் செய்தால் அவன் ஊரில் இருந்து கொண்டே வெளியூ‌ரில் இருப்பதாக பதில் சொல்கிறான். அதன் பிறகு ஹீரோ பஸ் பிடித்து வியர்வையில் நினைந்து அலுவலகம் சென்றால், இரண்டு நிமிடங்கள் லேட். ஆபிஸ் மொத்தமும் ஆச்ச‌ரியம். ஹீரோ இதுவரை லேட்டாக வந்ததாய் ச‌ரித்திரம் இல்லை.


அடுத்த நிமிடம் உயரதிகா‌ரி ஹீரோவை அழைத்து ஆட்குறைப்பு நடவடிக்கை, இனி உனக்கு வேலையில்லை என்கிறார். மாலையில் பார்ட்டி தர வேண்டும் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மொத்த ஆபிஸும் அவன் வேலை போனதை முன்னிட்டு கொண்டாடி கூத்தடிக்கிறது. நீ இந்த உலகத்தில் வாழ லாயக்கில்லாதவன் என்கிறான் உயரதிகா‌ரி. உயர் அதிகாரியின் கோல்மால் நடவடிக்கைக்கு துணை போகாததுதான் அவன் வேலை இழக்க காரணம். வாழ்கையே வெறுத்து போகும் ஹீரோ குடித்து விட்டு ரோட்டில் அலைந்து பெட்டி கேஸில் ஒரு போலீஸ்காரரிடம் மாட்டி பிறகு தப்பித்து சமுதாயத்தை திருத்த புறப்படுகிறார். நம்ம சலீம் கூட இதையே தான் செய்கிறார். இரண்டாம் பாதியில் மட்டும் இரு படங்களும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கிறது.

 சமுதாயத்தில் நடக்கும் அநியாங்களை கண்டு சலீம் போன்ற படைப்பாளிகள் பொங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அந்த பொங்கலையும் சொந்தமாக யோசிக்காமல் கொரியனிடம் இருந்து திருடி எடுத்தததை தான் ஏற்று கொள்ள முடியவில்லை. திருடி படம் எடுப்பதை கூட போனால் போகுது என்று விட்டு விடலாம், ஆனால் இந்த திருட்டு படைப்பாளிகள் பேஸ்புக்கில் பேசும் பேச்சு இருக்கிறதே அதை தன் பார்க்க முடியவில்லை. சமிபத்தில் வெளியான் புரட்சிகர மற்றும் வித்தியாசமான திரைக்கதைகளை கொண்ட தமிழ்  படங்கள் எல்லாம் கொரியன் படத்தின் அப்பட்ட தழுவல் தன். மூடர் கூடம் தென் கொரியாவின் Attack the Gas Station (1999 ) , விடியும் முன் London to Brighton (2007), ஜிகிர்தண்டா A Dirty Carnival (2006)  மற்றும் Rough Cut (2008). இந்த படங்கள் தன் தமிழ் சினிமாவை மாற்று பாதையில் அழைத்து செல்கிறது என்று ஜல்லி அடித்து கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இது போன்ற திருட்டு படைப்பாளிகளை விட சொந்தமாய் ஸ்கிரிப்ட் ரெடி செய்து படம் எடுக்கும் பேரரசு, டி.ஆர் போன்றவர்கள் எவ்வளவவோ மேல். சலீம்  படத்தைப் பாராட்டியிருக்கும் ஒலக பட இயக்குனர் ராம், இது அறம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றிருக்கிறார். பிறருடைய கதையை திருடுவதில் என்ன அறம் இருக்கிறது? இன்னொரு கொடுமை படத்தை இயக்கிய நிர்மல் குமார் பத்து வருடங்களுக்கு மேலாக பாரதிராஜாவிடம் வேலை பார்த்தவராம். பத்து வருடங்கள் உழைத்து சொந்தமாய் படம் எடுக்க தெரியாத இந்த இயக்குனரை நினைத்து பரிதாபம் தான் பட முடியும்.

 சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.
My Rating : 7.0


Thursday, August 28, 2014

The Call (2013) - சீரியல் சைக்கோ கில்லர்.


ஹாலிவுட் சினிமாக்கள் இரண்டு வகைகளில் முக்கியமானவை. கலாபூர்வமான படங்களை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கும், கமர்ஷியல் படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கும். கலாபூர்வத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் பூர்வஜென்ம பிரச்சனை என்பதால் அதை அப்படியே ஒதுக்கிவிட்டு கமர்ஷியலுக்கு வருவோம்.

ஹாலிவுட்காரர்களின் தொழில் அட்சர சுத்தம். லட்சம் ஆணடுகளுக்கு முன் இயற்கை பேரழிவால் இல்லாமல் போன டைனோசர்களை உயிர்ப்பிப்பது போல் எழுபது எம்எம்மில் ஃபிலிம் காட்டினாலும், அந்த டைனோசரை ஒரு கொசு கடிச்சது, கடிச்ச உடனே ஒரு மெழுகில் அகப்பட்டது, டைனோசரின் டிஎன்ஏ யுடன் அது இத்தனை வருசமா கெட்டுப் போகாமல் அப்படியே இருந்திச்சி என்று சயன்டிபிகலாக நம்மை முட்டாளாக்கி படத்தை ரசிக்க வைத்து கரன்சியை உருவிக் கொள்வதில் கில்லாடிகள்.

அப்படிதான் தொலைபேசி என்ற சாதனத்தை வைத்து ஐம்பது படங்களாவது எடுத்திருப்பார்கள். போன் பூத், செல்லுலார் போன்றவை அதில் பிரபலமானவை. இன்னும் என்னென்ன வகையில் இந்த தொலைபேசி என்ற வஸ்துவை காசாக்க முடியும் என்று மூளையை கசக்கிய ரிச்சர்ட் டி ஓவிடியோ எழுதி திரைக்கதை அமைத்த படம்தான் தி கால். தொலைக்காட்சி தொடருக்காக எழுதியதை எழுத்துப் பட்டறையில் தட்டி குறுக்கி 94 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக்கினார்கள்.   



அமெரிக்காவில் 911 என்ற தொலைபேசி சேவை இருப்பது அமெரிக்கா போகாமல் சென்னை பார்சன் காம்ப்ளக்ஸில் மலிவுவிலை திருட்டு டிவிடி யில் ஹாலிவுட் படம் பார்க்கிறவர்களுக்கும் தெரிந்திருக்கும். ராத்திரி பூனை ஓடுகிற சத்தத்துக்கு பயந்தவர்களும் 911 எண்ணை தட்டி, ஹலோ ஐ யம் இன் ட்ரபிள் என்று சொல்வதை பார்த்திருக்கலாம். எல்லாவித அத்தியாவசியங்களுக்கும் நீங்கள் இந்த 911 எண்ணை பயன்படுத்தலாம். நம்மூர் 108 போல என்று வைத்துக் கொள்ளுங்கள். 108 ல் ஆம்புலன்ஸ் வரும். பதிலாக 911 ல் போலீஸ். 911 ல் பேசுகிற பெண்ணின் குரல் நன்றாக இருக்கே என ஜொள் விடுவதற்காக பேசினால் சட்டப்படி உங்களை உள்ளே தள்ளவும் முடியும்.

911 சேவையில் பணியாற்றும் ஜோர்டன் டர்னருக்கு ஒரு போன்கால் வருகிறது. தன்னுடைய வீட்டிற்குள் மர்ம நபர் நுழைய முயல்வதாக இளம்பெண் ஒருத்தி உயிர் போகிற பதற்றத்தில் பேசுகிறாள். அதை ஜோர்டன் கேட்கும் போதே மர்ம நபர் கண்ணாடியை உடைத்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறான்.

அடுத்து அதிரடியாக டேக்கன் நீயாம் நீஸனின் அவதாரத்தை எடுக்கும் ஜோர்டன் போனில் அந்த பரிதாபத்துக்குரிய பெண்ணிடம் மாடிக்கு போ, பெட்ரூமுக்குள் புகுந்துக்கோ, கட்டிலுக்கு அடியில் படுத்துக்கோ என்று இன்ஸ்ட்ரக்ஷன் தர, அந்தப் பெண்ணும் அப்படியே செய்கிறாள். உள்ளே புகுந்த மர்ம மனிதன் ஆளைக் காணாமல் அடுத்த நாள் கச்சேரியை வச்சுக்கலாம் என்று கிளம்புகிற நேரம்... ஏதாவது ட்விஸ்ட் வேண்டுமே. போன் தொடர்பு துண்டித்துப் போகிறது. ஜோர்டனின் சமயோஜித புத்தி சட்டென்று மழுங்கிப் போக அந்த பெண்ணின் போனுக்கு தொடர்பு கொள்கிறார். போன் ரிங் சத்தம் கேட்டு திரும்பி வரும் மர்ம மனிதனிடம் அந்தப் பெண் சிக்கிக் கொள்கிறாள். நோ... அந்தப் பெண்ணை எதுவும் செய்யாதே என்று போனில் ஜோர்டன் மர்ம மனிதனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அந்த மர்ம மனிதன் அந்த புகழ்பெற்ற பன்ச் டயலாக்கை சொல்கிறான். It's already done.


 இது போன்ற சீரியல் கில்லர் ஹாரர் படங்களின் சிறப்பம்சம் கில்லர் ஆட்களை எப்படி தேர்வு செய்கிறான் என்பதும், போலீஸ்காரர்கள் எப்படி துப்பறிந்து படிப்படியாக கொலையாளியை நெருங்குகிறார்கள் என்பதும்.  

கொலைக்கான காரணம் பெரும்பாலும் சப்பையாகவே இருக்கும். பூனை கண் காதலி ஏமாத்திட்டா அதுனால சைக்கோ பூனை கண் உள்ள பெண்களா தேடிப்பிடித்து கொன்றான் என்றோ, பத்து மணியானா கில்லரின் மண்டைக்குள் மணியடிக்க ஆரம்பிக்கும், யாரையாவது இழுத்துவச்சு கழுத்தை அறுத்தால்தான் மணிச் சத்தம் அடங்கும் என்றோ கதை அளப்பார்கள். இது மாதிரி ஒரு மயிர் பிளக்கும் பிரச்சனைதான் இந்தப் படத்திலும். சும்மா சொல்லலை. உண்மையிலே மயிருக்கு படத்தில் முக்கிய இடம் இருக்கிறது.

நாம் மேலே பார்த்தது சும்மா படத்தின் ஒரு அறிமுகக் காட்சி. பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் சடலம்... 

நான்கு நாட்கள் கழித்து கண்டெடுக்கப்படுகிறது. ஜோர்டன் மூக்கை சிந்தி, தலையை பிடித்து பெண்ணை காப்பாற்ற முடியாத கழிவிரக்கத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க, ஆறு மாதம் கழித்து அதே கில்லரிடம் இன்னொரு பெண் மாட்டிக் கொள்கிறாள். அந்த பலிகடா பெண் கில்லரின் கார் டிக்கியில் பயணித்தவாறே போனில் 911 க்கு தொடர்பு கொள்கிறாள். போனை அட்டெண்ட் செய்வது ஜோர்டன். மீண்டும் அதே டேக்கன்... அதே நியாம் நீஸன். காரின் பின்பக்க விளக்கை உடை, டிக்கியில் என்னென்ன இருக்கிறது பார்... என்ன பெயிண்ட் டின் இருக்கிறதா? அதை உடைத்து அப்படியே அந்த ஓட்டை வழியாக வெளியே ஊற்று... அந்தப் பெண்ணும் தேம்பி கொண்டே எல்லாம் செய்கிறது.  
 
 
இதற்குப் பிறகு கதையைச் சொன்னால் படத்தைப் பார்க்கிறவர்களுக்கு படத்தின் கொஞ்ச நஞ்ச சுவாரஸியமும் போய்விடும். படத்தில் ஜோர்டனாக நடித்திருப்பவர் ஹலே பெர்ரி. 

தொலைக்காட்சி தொடர்களாக எடுத்துத் தள்ளும் பிராட் ஆண்டர்சன்தான் படத்தின் இயக்குனர். பழக்கதோஷத்தில் இழுக்காமல் 94 நிமிடங்கள் பரபரவென படத்தை நகர்த்தியிருக்கிறார். இந்த பரபரதான் படத்தின் வெற்றியே.   

Netflix கில் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது, படத்தை பற்றி எழுதும் முன்பு, யாரவது எழுதி இருகிறார்களா என்று தேடும் போது வெப்துனியாவில் இந்த பதிவு கிட்டியது. அதை தன் இங்கு பகிர்ந்து உள்ளேன்.

நன்றி - வெப்துனியா 


Saturday, May 24, 2014

கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!

ரஜினி என்கிற மாபெரும் நடிகரை மட்டுமே நம்பி மோஷன் காப்ச்சர் தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவில் அறிமுக படுத்தி இருக்கிறார்கள். இது போன்ற புது  தொழில்நுட்பங்களை (ஆரோ 3D)கமல் மட்டுமே அறிமுக படுத்தி வந்துள்ளார். ரஜினிக்கு இதுவரை ஒரு புது தொழில்நுட்பத்தில் முதல் முறையாக அறிமுக படுத்த வாய்ப்பு இல்லாமலே போனது, என்னை போன்ற ரஜினி வெறியர்களுக்கு பெரிய குறையாகவே இருந்து வந்தது. இனி மேல் அந்த கவலை இல்லை. 3டி மோஷன் காப்ச்சர் டெக்னாலஜி என்கிற தொழில்நுட்பத்தை இந்தியாவிற்க்கே அறிமுக படுத்தியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் என்று காலரை தூக்கி விட்டு சொல்லி கொள்ளலாம்.


  2009ம் ஆண்டில் வெளியான "அவதார்" மற்றும் 2011ம் ஆண்டில் வெளியான "அட்வஞ்சர்ஸ் ஆஃப் டின் டின்" போன்ற படங்களை உருவாக்க பயன்படுத்தப்பட அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் உருவாக்கப்பட்ட படம் தான் கோச்சடையான். "அவதார்" "டின் டின்" படங்களை விட கோச்சடையானை உருவாக்குவதில் சிக்கல் அதிகம். பாண்டோரா கிரகத்தில் வாழும் "நாவியையோ" அல்லது டின் டின் கதாபாத்திரத்தையோ யாரும் பார்த்தது இல்லை, அதன் உடல் மொழியை எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. நாவி இப்படி தான் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாவி எப்படி நடந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்கள். ஆனால் ரஜினி எப்படி நடப்பார், எப்படி ஓடுவார், எப்படி சிரிப்பார் என்று , ரஜினியின் அணைத்து உடல்மொழியும் தமிழ் மக்களுக்கு அத்துபடி. இந்த சவாலை திறம்பட சாமாளித்து, நிஜ ரஜினியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்கள் பட குழுவினர்கள். நல்ல தொழில்நுட்பத்துடன் சிறந்த கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை, உலக தரமான இசை என்று அணைத்தும் சரியான விகிதத்தில் சேர்ந்து விஷுவல் விருந்து படைத்தது இருக்கும் சரித்திர சாகசம் தான் கோச்சடையான்.


 ஒற்றை வரியில் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் கதை என்று சொல்லி விட முடியாது. விறு விறு திரைக்கதை முலம் இந்த சாதாரண கதையை அற்புதமாய் செதுக்கி மற்றுமொரு ரஜினி மாஸ் படத்தை நமக்கு வழங்கி உள்ளார் செளந்தர்யா மற்றும் கே.ஸ் ரவிக்குமார் கூட்டணி. இது போன்ற விறுவிறுப்பான திரைகதை கடந்த இருபது ஆண்டுகளில் ரஜினிக்கு அமையவில்லை என்றே நான் சொல்வேன். இது போன்ற எக்ஸ்பிரஸ் வேக கதை கடைசியாய் சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷாவில் வழங்கி ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தினார். அதன் பிறகு இப்பொழுது கோச்சடையான். பரம திருப்தி.
   
  கோட்டையபட்டினம் என்கிற தேசத்து மன்னன் ரிஷிகோடங்கன் (நாசர்). அந்த நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான் (ரஜினி). இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் நல்லவன் யாருக்கும் அஞ்சா மாபெரும் வீரன். அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது  அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார். சதி செய்து கோச்சடையான்னை அழித்தும் விடுகிறார். தன் தந்தையை கொன்ற நாசரை எப்படி ராணா பழிக்கு பழி வாங்குகிறார் என்பதை எக்ஸ்பிரஸ் வேக திரைகதையில் விடை சொல்லி இருக்கிறார் கே.ஸ்.

  
முதல் இருபது நிமிடங்கள் படத்தோடு ஓட்டுவது கொஞ்சம் சிரமம் தான். மோஷன் காப்ச்சர் டெக்னாலஜிக்கு நம் கண்கள் பழக எடுத்து கொள்ளும் நேரம் தான் இது. கண்கள் பழகியவுடன் திரைக்கதை வேகம் எடுக்கிறது. சிறிது கூட தொய்வு ஏற்படாமல் இறுதி வரை டெம்போவை தக்க வைத்த இயக்குனர் செளந்தர்யாவிருக்கு பெரிய சபாஷ். கோச்சடையான், ராணா, சேனா என மூன்று கேரக்டரில் ரஜினி கலக்குகிறார். இவரது உடல் மொழி, ஸ்டைல்கள் படத்திற்கு பெரிய பலம். கோச்சடையான் ரஜினி ஆடும் சிவதாண்டவம் ரசிகர்களை கைதட்ட வைக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள், தத்துவங்களாக அனல் கக்குகின்றன. தீபிகா படுகோனேவை முதல் பாதியில் ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு ஸ்கோர் பண்ணுகிறார். மற்ற நடிகர்கள் தேர்வும் கன கச்சிதம். நாகேஷ்க்கு உடல்மொழியை செய்தவர் ரமேஷ்கண்ணா. மிகவும் நன்றாக செய்து உள்ளார். ஷோபனா, ருக்மணி, சண்முகராஜன் ஆகியோரின் கேரக்டர்களும் அம்சமாக உள்ளது. 
  
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், வைரமுத்து – வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம், ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக ஜெயித்திருக்கிறார்!

கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!
My Rating : 8.8


Thursday, April 17, 2014

மேஜிக் நம்பர் 272 -ஐ பிஜேபியால் தொட முடியுமா ..?? கருத்துக்கணிப்பு முடிவுகள்.


இந்திய திருநாட்டின் தேர்தல் களம் சுடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. மேஜிக் நம்பரான 272 ஐ தொட்டு வெற்றி கனியை பறிக்க போவது, மோடி தலைமையிலான பி.ஜே.பி (NDA) கூட்டணியா இல்ல ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் (UPA) கூட்டணியா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஜெயிக்க போவது மோடி தலைமையிலான அணி தான் என்பதை பெருன்பான்மையான மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் பி.ஜே.பி கூட்டணியால் 272 ஐ தாண்ட முடியுமா இல்லையா என்பதை அலசுவது தான் இந்த பதிவின் நோக்கம். 

தேசிய கட்சிகளில் பி.ஜே.பி மட்டுமே பிரதம மந்திரி வேட்பாளரை தேர்தல் தொடங்குவதருக்கு 8 மாதங்களுக்கு முன்பே அறிவித்து, தேர்தல் வேளைகளில் இறங்கி விட்டது. காங்கிரஸ் கட்சி தன் பிரதம மந்திரி வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்காதருக்கு தோல்வி பயம் தான் காரணம்  என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.  "இது வரை காங்கிரஸ் பிரதம மந்திரி வேட்பாளரை அறிவித்ததே இல்லை" என்ற விளக்கத்தை சப்பைக்கட்டு போல் தான் பார்க்க முடிகிறது. இது காங்கிரஸ் காட்சிக்கு விழுந்த முதல் அடி.


அடுத்த அதி முக்கிய அடி, காங்கிரஸுக்கு கூட்டணி அமைப்பதில் விழுந்தது. இந்தியாவில் தேசிய கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும் என்றாலும், அதற்கு மாநில கட்சிகளின் சப்போர்ட் நிச்சியம் தேவை. யாரும் எதிர்பாரா வண்ணம் எந்த மாநில காட்சியும் காங்கிரசை சீந்தாமல் போனது யாரும் எதிர்பாராது. 2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி மேஜிக் நம்பரான 272 ஐ தாண்டுவதற்க்கு பெரிதும் உதவி செய்தது கூட்டணி கட்சிகள் தான். மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் (19 MP), மு.காவின் தி.மு,க (18 MP) மற்றும் ஒய்எஸ்ஆர் ஒன்று பட்ட ஆந்திராவில் பெற்று தந்த 33 MP சீட் தான் காங்கிரஸ் (UPA) கூட்டணி இரண்டாவது முறை ஆட்சியில் அமர உதவி புரிந்தது. இந்த முறை (2014) மேற்கு வங்காளத்தில் மம்தா கை கழுவி விட, மு.கா இதயத்தில் கூட இடம் இல்லை என்று கையை விரிக்க. பெரிதும் நம்பிய தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதியும் நம்பிக்கை துரோகம் செய்து விட, வேறு வழியே இல்லாமல் அஜித் சிங்கின் ராஷ்டிரீய லோக் தள மற்றும் சரத் பாவரின் NCP (தேசியவாத காங்கிரஸ் கட்சி) மட்டுமே நம்பி களத்தில் இறங்கி உள்ளது. 

2009 ஆண்டு பி.ஜே.பி சொதப்ப முக்கிய காரணம் கூட்டணி தான். சென்ற முறை நிதிஷ்குமாரின் JD(U) தவிர்த்து பலமான கட்சிகள் எதுவும் NDA) கூட்டணியில் சேர வில்லை. சென்ற முறை செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த முறை வழுவான கூட்டணி மற்றும் மிக மிக வழுவான பிரதம மந்திரி வேட்பாளரை கொண்டு களம் இறங்கி உள்ளது. வழுவான வேட்பாளார் மட்டும் போதாது என்று, மிக ஆக்ரோஷமாக பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. "இந்தியா ஒளிர்கிறது" "இந்தியா தேய்கிறது" போன்ற காமெடி விளம்பரங்களை விட்டு, அந்த அந்த மாநிலங்களில் உள்ள லோக்கல் பிரச்சனைகளை முன்னிடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகையை பிரச்சாரத்தின் பலனை பி.ஜே.பி நிச்சியமாக MP சீட்ஸ் முலம் அறுவடை செய்யும் என்றே நான் நம்புகிறேன். தேர்தலில் பி.ஜே.பியின் கூட்டணியின் இலக்கான 272 ஐ தொட உதவி புரியும் முக்கிய மாநிலங்களை பற்றி இப்பொழுது பார்போம்.

பீகார் & ஜார்கண்ட் (54) சீட்ஸ்:
     17 வருடம் கூட்டணியில் இருந்த JD(U)வை மோடி பிரதம மந்திரி வேட்பாளார்  பிரச்சனையில் கழட்டி விட்டு, ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியுடன் சேர்ந்து தேர்தல் களம் காணுகிறது. பாஸ்வான் நம்ம ஊர் ராமதாஸ் போல், எந்த கட்சி வெற்றி பெறுவது  போல் தெரிந்தாலும், போய் ஒட்டி கொள்வார். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்தவர், இன்று பி.ஜே.பியுடன் ஒட்டி கொண்டு உள்ளார். இவருக்கு மாநிலத்தில் பெரிய வாக்கு வங்கி இல்லை என்றாலும், தலித் மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது. பத்து வருடம் ஆட்சியில் இருக்கும் நிதிஷ்குமாரின் JD(U)மீது ஏற்பட்டு இருக்கும் அதிருப்தி ஓட்டுகளையும், மோடி அலையும் சேர்த்து 
பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் முலம் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு விபரம்:

பீகார் - 40
ஜார்கண்ட்-14
குஜராத் (26) சீட்ஸ்:
     என்ன தான் குஜராத் அளவுக்கு அதிகமாக காம்ப்ளான் குடித்து வளர்ந்து விட்டது, இல்லை அது இன்னும் முளைக்கவே இல்லை என்று இணைய போராளிகள் கூப்பாடு போட்டாலும், அந்த ஊர் மக்களுக்கு மோடி தான் பிடித்து இருக்கிறது, மீண்டும் மீண்டும் பி.ஜே.பியை தான் அவர்கள் தங்களை ஆளா இதுவரை தேர்ந்தெடுத்து உள்ளார்கள், இனிமேலும் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்ல. சென்ற லோக்சபா தேர்தலில் 11 சீட்களை இழந்து சிறிய தேகத்தை சந்தித்தாலும். தங்கள் ஊர் முதல்வர் பிரதம மந்திரி வேட்பாளார் என்பதாலும் இந்த முறை சிறு குறை கூட சொல்ல முடியாத படி முழு வெற்றியை தேடி தருவார்கள் என்று நம்புவோம் ஆக. பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் முலம் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு விபரம்:


  
கர்நாடகா (26) சீட்ஸ்:
  பிஜேபி இந்த முறை நல்ல சரிவை  சந்திக்க போகும் மாநிலம் இது தான் என்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. சென்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவை இழந்து, தோல்வியை தழுவிய காரணத்தால், இந்த முறை அவரை மீண்டும் ஆட்டத்தில் சேர்த்து உள்ளார்கள். எடியூரப்பாவின் வருகை மற்றும் மோடி அலை எத்தனை தொகுதியை பெற்று தரும் என்று பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும். கருத்துக்கணிப்பு விபரம்:

கர்நாடகா (26)


மத்திய பிரதேசம் & சத்தீஸ்கர் (40) சீட்ஸ்:
  பிஜேபி ஆளும் மாநிலங்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் விஸ்வரூப வெற்றியை பிஜேபிக்கு தேடி தந்த மாநிலங்கள். சக்திவாய்ந்த லோக்கல் தலைவர்கள் செளகான் & ராமன் சிங் இந்த முறையும் ஏமாற்றாமல் நல்ல வெற்றியை தேடி தருவார்கள் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கிறது.
MP
CHAT
  
  மகாராஷ்டிரா: (48) சீட்ஸ்:
  இரண்டாவது பெரிய மாநிலம். நீண்ட காலமாய் ஆண்டு வரும் ஆளும் காங்கிரஸ் எதிரான உணர்வுகளை ஓட்டாக மற்ற மோடி மற்றும் சிவசேனா அரும்பாடு படுகிறது. மும்பை மற்றும் புனேவில் ஆம் ஆத்மி சிறிது ஓட்டை பிரிக்கலாம். கொங்கன் மற்றும் விதர்பாவில் சிவசேனா மற்றும் பிஜேபி  முறையே நன்றாக செய்வார்கள் என்று நம்புகிறேன். கருத்துக்கணிப்பு முடிவுகளும் அதயே சொல்கிறது.

மகாராஷ்டிரா-48
  ராஜஸ்தான்:  (25) சீட்ஸ்:

 நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜேபி கிளீன் ஸ்வீப் செய்த மாநிலம். சென்ற முறைக்கும் இந்த முறைக்கும் மிக பெரிய சீட் வித்தியாசம் இருக்கும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது.



 மேலே உள்ள மொத்த தொகுதிகளை வைத்து பார்க்கும் போது பிஜேபி கூட்டணி 140/219 இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்கலாம். மேஜிக் நம்பரான 272 டைதொடுவார்களா இல்லையா என்பதையும் உ.பி,மேற்கு வங்கம்,  தமிழ்நாடு பற்றிய விரிவான பார்வையை அடுத்து பகுதியில் பார்போம்.


Monday, February 24, 2014

பிரம்மன் (2014) - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!

சினிமாவின்  மீது தீராத காதலில் வாழும் ஒருவன், தன் சிறு வயது லட்சியத்தின் விளைவாக பழைய தியேட்டர் ஒன்றை லீஸுக்கு எடுத்து படங்களை ஒட்டி வருகிறான். தன் தியேட்டர் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து எப்படி அதனை எப்படி மீட்கிறான் என்பது தான் பிரம்மன் கதை சுருக்கம். 

90 களில் பி.வாசு தாலி செண்டிமெண்டை மையமாக வைத்து படங்களை எடுத்து தள்ளினார். அதில் முதன்மையானது "சின்ன தம்பி". தாலியின் அனாடமியை தமிழ் மக்களுக்கு புரிய வைத்த புரட்சி படம். சின்ன தம்பியில் ஆரம்பித்து பத்தினி வரை தாலி மையபடுத்தி காவியங்களை படைத்தார் வாசு. திராவிட கழக போர் வாளாக, அடுத்து தி.மு.க தலைவியாக குஷ்பு தற்போது வளர்ந்து இருபதருக்கு முக்கிய காரணம் வாசுவின் தாலி செண்டிமெண்ட் படங்கள் தான் என்றால் அது மிகையாகாது.

தாலியின் காப்பிரைட்ஸ் எப்படி வாசு குத்தகைக்கு எடுத்து வைத்து இருந்தாரோ, அதே போல் நட்பு செண்டிமெண்டை சசி குமார் மொத்தமாக வாங்கி வைத்து இருக்கிறார். அவர் நினைப்பும் சரி தான். 90 களில் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் பெருன்பான்மையானவர்கள் தாய்குலங்கள். தற்போது காசு செலவு செய்து தியேட்டருக்கு வருபவர்கள் அனைவருக்கு இளைஞர்களே. அவர்களை கவர நட்பு செண்டிமெண்டடை செலக்ட் செய்தது  ஓகே தான். ஆனால்  எதை பரிமாறினாலும் அளவோடும் சுவையோடும் பரிமாற  வேண்டும், ஆனால்  அதுவே ஓவர் டோஸ் ஆகி விட்டால், கண்டிப்பாய் நம் மக்கள் துப்பி விடுவார்கள். அப்படி பட்ட ஓவர் டோஸ் படம் தான் பிரம்மன்.


படத்தின் முதல் காட்சியில் இயக்குனருக்கு சினிமாவின் மீது இருக்கும் பிரியம் நமக்கு புரிந்து விடுகிறது. இரண்டு சிறுவர்கள் தங்கள் ஊரில் இருக்கும் தியேட்டரில் இருந்து ரீல் பெட்டியைக் திருடி கொண்டு போய் நண்பர்களுக்குப் படம் காட்டும் காட்சி நம்மை நிமிர்ந்து உட்கார செய்து விடும். அந்த இரண்டு சிறுவர்களின் ஒருவன் சிவா (சசிகுமார்) வளர்ந்து மற்றொரு நண்பனுடன் (சந்தானம்) சேர்ந்து அதே ஊரில் உள்ள மாடர்ன் தியேட்டரை லீஸுக்கு எடுத்து நடத்துகிறான். தியேட்டர் பிஸினெஸ் சரியாக போகாத காரனத்தினால உதாவாக்கரை, தண்டசோறு என்று வீட்டில் உள்ளவர்களால் அன்போடு அழைக்க படுகிறார். இன்ட்ரோ முடிஞ்சு பேரு வாங்கியாச்சு, அடுத்து என்ன லவ் போர்ஷன் தானே. வழக்கம் போல் ஹீரோயின் வருகிறார், பார்க்கிறார் காதலில் விழுகிறார். படு திராபையான காதல் போர்ஷன். 

லவ் போர்ஷன் முடிஞ்சு போச்சு, அடுத்து என்ன பிரச்னை தானே.. சீக்கிரம் என்ன பிரச்சனையின்னு சொல்லுங்கபான்னு நீங்க கேட்கிறது புரியுது. ஒரு பிரச்சினை மட்டும் வந்தா அதை ஈசியா சமாளிச்சு ஜெய்ச்சி காட்டிடுவார் நம்ம ஹீரோ. அதனால் ரெண்டு பெரிய பிரச்னை. தியேட்டர் தொடர்ந்து நடத்த 5 லட்சம் பணம் தேவை படுகிறது. காதலிலும் இரு வீட்டார் எதிர்ப்பின் முலம் பிரச்னை வர. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு தேடி சென்னை புறப்படுகிறார். வந்தோரை வாழ வைக்கும் சென்னை, சசியை வாழ வைத்ததா இல்லையா என்பது தான் மீதி கதை.


ஒரு வெற்றிகரமான இயக்குநர், நடிகர் என்கிற அந்தஸ்தை சசி சும்மா அடைந்து விடவில்லை. சசியின் இந்த வெற்றிக்கு பின்பு அவரின் உழைப்பு, மற்றும் அர்ப்பணிப்பு ஒளிந்து இருக்கிறது. யாருடைய பின் புலமும் இல்லாமல் வளர்ந்து சசி, இனி மேல் கதை தேர்விலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. 

அவரின் இந்த கதாபாத்திரம் ஏனோ மனதில் ஒட்டாமல் சசி முகம் போலவே இறுக்கமாக இருக்கிறது. முதல் பாதில் ஒரு திரையரங்கை நடத்தவே கஷ்டப்படும் சசி இரண்டாம் பாதியில் சென்னை சென்று ஒரு திரைபடத்தை இயக்கும் அளவுக்கு போய் மெர்சல் ஆகுகிறார். சசி இயக்குனர் ஆகும் காட்சிகள் இவர்கள் முதல் காட்சியில் ஓட்டும் சன் டிவி சீரியல்களை ஞாபக படுத்துகிறது. 

படத்தை வழக்கம் போல் காப்பாற்றுவது நம்ம சந்தானம் தான். மனிதர் ஒன்-லைனர் காமெடி முலம் கைதட்டல் அள்ளுகிறார். முதல் பாதியில் சந்தானம் காப்ற்றினால், இரண்டாம் பாதியில் சூரி காமெடி என்கிற பெயரில் ஏதோ ஏதோ பேசுகிறார். சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. கதாநாயகி லாவண்யா பார்க்க அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் நன்றாக ஆடவும் செய்கிறார். நடிப்பில் இன்னும் தேறவேண்டும்.


இசை தேவிஸ்ரீ. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை. பின்னணி இசை அதோ கதி தான். இயக்குனர் சாக்ரடீஸ் கமலிடம் திரை பாடம் கற்றவர். கமலின் பள்ளியில் இருந்து வந்த யாரும் இது வரை ஜெயித்தது இல்லை, அந்த ராசி இதிலும் தொடர்கிரறது. சாக்ரடீஸ் வித்தியாசமான பொழுதுபோக்கு படத்தை தர முயற்சித்திருக்கிறார். இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சசி இந்த படத்துடன் நட்பு சென்டிமென்ட்டுக்கு முழுக்கு போட்டால் நலம்.

பிரம்மன் - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!
My Rating: 6.5/10.