Wednesday, February 27, 2013

Amour (2012) - காதலை சொல்லும் உலக சினிமா

Amour (2012) - இந்த வருடத்தின் ஆஸ்கார் வருது வழங்கும் விழாவில் பிற மொழி படங்களுக்கான பிரிவில் சிறந்த படமாக தேர்வு செய்ய பட்ட படம். விருது அறிவிக்கப்பட்டவுடன் படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து சென்ற வாரம் பார்த்து முடித்தேன். உலக சினிமா என்றால் என்னவென்று அறிய விரும்புவர்கள் இந்த படத்தை கண்டிப்பாய் பார்க்கலாம். படத்தை பற்றி விகடன் தளத்தில் அற்புதமாய் எழுதி இருந்தார்கள். அவர்களது விமர்சனத்தை இங்கு பகிர்கிறேன்.
'அமோர்' என்கிற பிரெஞ்ச் வார்த்தைக்கு காதல் (LOVE) என்று அர்த்தம். மரத்தைச் சுற்றியோ, அல்லது பனிபடர்ந்த மலை உச்சியிலோ ஆடிப்பாடும் காதலர்களை முக்கிய பாத்திரமாகக் கொண்ட வழக்கமான காதல் படம் இல்லை இது. ஒரு வீட்டினுள் அடைந்து கிடக்கிற 80 வயது முதிய தம்பதியினரின் காதலை பார்வையாளன் கண்ணில் நீர் வரவரச் சொல்லியிருக்கிற படம்தான் இந்த அமோர்.


ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்தனையோ காதல்களைக் கடந்து செல்கிறான். சிறு வயதில் தன் உலகமாயிருக்கும் தாயின் மீது தோன்றும் காதல், கண்டிப்பானவர் என்கிற வெறுப்பினூடேயும் தன் தந்தையின் மீதுள்ள காதல், பள்ளிப் பருவத்தில் உடன் பயிலும் சக மாணவியின் மீது வரும் காதல், இளம் பருவத்தில் கண்ணில் படும் அழகழகான பெண்கள் அத்தனை பேர் மீதும் பார்த்ததும் அரும்பும் காதல், திருமணத்திற்குப் பின் நம் அனைத்து கனவுகளையும் அடித்து நொறுக்கி விட்டு வந்து வாய்த்திருப்பவள் மீது வேறு வழியின்றி முகிழ்க்கும் காதல், பிறகு பிள்ளைகள் மீதும் அப்புறம் அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும். இப்படி காதல் நம் வாழ்வின் ஒரு சுழற்சியாகவே இருக்கிறது.

தற்காலத்தில் முகம் பார்க்கா இணையதள சாட் காதல், ஃபோட்டோ பார்த்தே வரும் முகநூல் காதல் என்று உலகமயமாக்கலுக்கு ஏற்ப காதலும் தன்னை தகவமைத்துக் கொண்டுவிட்டது. நம் வாழ்வின் சம அங்கமான ஒருவர் மரணப்படுக்கையில் தன் வாழ்வின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருக்க, அவர்மீது நாம் காட்டும் அளவற்ற கருணையும், அக்கறையும் காதல் என்கிற வார்த்தைக்கு இன்னும் அழகையும் இளமையும் சேர்த்துவிடுகிற அற்புதத்தை Michael Haneke-வின் 'அமோர்' சாதித்திருக்கிறது.

சமகால முக்கிய திரைப்பட இயக்குனர்களில் Michael Haneke-வின் இடம் தனித்துவமானது. இன்றுவரை இருண்ட மற்றும் மனதைப் பிசையக்கூடிய கதை சொல்லலுக்குப் பெயர் போனவர் இவர்.'The Seventh Continent’ 1989ல் இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம். 2001ல் வெளியான இவருடைய 'The piano Teacher’உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம். தன்னைவிட வயதில் குறைந்த தனது மாணவன் மீது ஒரு பியானோ டீச்சர் கொண்ட காதலையும் அதன் வலியையும் பதிவு செய்த அப்படம், அந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க கிராண்ட் விருதைப் பெற்றது. தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற படமான 'Blue’ வில் நாயகியாக நடித்த Juliet Binoche-வை வைத்து இவர் இயக்கிய படம் 'Cache' கேன்ஸ் திரைப்பட விழாவில் இவருக்கு மீண்டும் சிறந்த இயக்குனர் விருதைப் பெற்று தந்தது. 

2009ல் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'The White Ribbon'. முதலாம் உலக யுத்தத்திற்கு முன் ஜெர்மனியில் கதை நிகழ்கிறது. ஒரு ஜெர்மனி கிராமத்தில் தொடர்ந்து நடைபெறும் மர்மமான சம்பவங்களும், அக்கிராமத்தில் ஒழுக்கத்தின் பேரால் கண்டிப்புடன் வளர்க்கப்படும் சிறுவர்களும் என இருவேறு தளங்களில் கதை நகர்கிறது. அக்கிராமத்தின் ஒரு பள்ளி ஆசிரியரின் நினைவுகளாய் பயணிக்கும் இந்த கறுப்பு வெள்ளைப் படம் அந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்க பனைமர விருதைப் பெற்றது.


இந்த வருடம் 'அமோர்' திரைப்பபடத்திற்காக இவ்விருதை ஹனக்கே மீண்டும் பெற்றிருப்பன் மூலம் இவ்விருதை மும்முறை வென்ற பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலா உள்ளிட்ட இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் Michael Haneke .

பாரிஸில் நிகழ்கிறது இக்கதை. ஒரு வீடு தாழிடப்பட்டிருக்க வெளியிலிருந்து அதை உடைக்கும் சத்தம் கேட்கிறது. சிறிது போராட்டத்திற்குப் பிறகு கதவு உடைக்கப்பட தீயணைப்ப்பு வீரர்கள் "யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டுக்கொண்டே வீட்டைச் சுற்றி தேடுகிறார்கள். முடிவில் டேப்பினால் அடைக்கப்ப்பட்டிருக்கும் ஒரு அறையைத் திறக்க அதனுள்ளே மலர்கள் தூவிய படுக்கையில் ஆனா ( Anna )படுத்துக் கொண்டிருக்கிறாள் பிணமாக.

ஆனாவின் கணவர் ஜார்ஜ். இருவரும் எண்பதுகளில் இருக்கும் ஓய்வு பெற்ற இசைக் கலைஞர்கள். தங்கள் முன்னாள் மாணவன் ஒருவனின் இசை நிகழ்ச்சியை ரசித்துப் பாராட்டிவிட்டு வீடு திரும்புகின்றனர். அடுத்த நாள் காலை இருவரும் உணவருந்தும்போது ஆனா செயலற்று சிலை போலாகி விடுகிறாள். முதலில் ஜார்ஜ் ஆனா விளையாடுவதாகத்தான் நினைத்துக் கொள்கிறார். ஆனால் பிறகுதான் அவருக்கு விபரீதம் உறைக்கிறது. உடனடியாக ஆனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

மருத்துவமனையில் ஆனாவுக்கு இதய அடைப்பை நீக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவளுக்குச் செய்யப்படும் சிகிச்சை தவறாக முடிய, பக்கவாதம் ஏற்பட்டு உடலின் எந்த ஒரு பாகத்தையும் அசைக்க முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறாள் ஆனா.

ஒரு வீல்சேரில் அடைக்கலமாகிறாள் ஆனா. அவளுக்காக வீட்டில் பல மாற்றங்கள் செய்கிறார் ஜார்ஜ். கீழ் வீட்டினரும் அவருக்கு பல உதவிகள் செய்கின்றனர். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும் ஆனா தன்னை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூடாதென ஜார்ஜிடம் வேண்டிக்கொள்ள அதற்கு அவரும் அதற்கு சம்மதிக்கிறார்.

நாட்கள் நகர்கின்றன. சிறு அசைவிற்கும் தன் கணவனின் உதவியை நாட வேண்டிய நிலை ஆனாவுக்கு. ஜார்ஜ் மனம் கோணாமல் அனைத்துப் பணிவிடைகளையும் செய்து ஆனாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறார். நோய் தீவிரமடைய ஆனாவின் நிலைமை மேலும் மோசமாகிறது. ஆனா தன் மீதே வெறுப்பு கொண்டு பல நேரம் சிறு குழந்தை போல் நடந்து கொள்கிறாள்.

ஆனாவின் மகள் தன் தாய் கஷ்டப்படுவது கண்டு மனம் பொறுக்காமல் ஆனாவை ஓய்வு இல்லமொன்றில் சேர்த்து விடலாம் என்று யோசனை சொல்ல ஜார்ஜ் அதைத் திட்டவட்டமாக மறுத்து விடுகிறார். 'இத்தனை ஆண்டுக்காலம் என்னை அன்போடு பராமரித்தவள் அவள். அவளைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்'. என்கிறார்.


ஆனாவைக் கவனித்துகொள்ள இரண்டு வேலையாட்களை நியமிக்கிறார் ஜர்ர்ஜ். ஆனாவுக்கு அதிலே இஷ்டமில்லை. ஒருநாள் அவர்களின் முன்னாள் மாணவன் அவர்களைக் காண வருகிறான். ஜார்ஜ் ஆனாவை வீல் சேரில் வைத்து அழைத்தது வருகிறார். ஆனாவின் நிலை கண்டு மனம் வருந்துகிறான் வந்தவன். ஆனாவின் ஆசைக்கிணங்க அவளுக்குப் பிடித்த இசைத் தொகுப்பை அவளுக்காக வாசிக்கிறான்.

ஆனாவின் பணியாள் ஒருநாள் பொறுப்பின்றியும் இரக்கமின்றியும் ஆனாவிடம் நடந்துகொள்ள, ஜார்ஜ் அவளை வேலையைவிட்டு நிறுத்தி விடுகிறார். ஒருகட்டத்தில் ஆனா பேசும் சக்தியை முற்றிலுமாக இழந்துவிட, ஜார்ஜ் தினமும் இரவில் பேச வைக்கும் தெரபி என்று தன்னுடன் சேர்ந்து அவளை ரைம்ஸ் பாட வைக்கிறார். 

ஓர் இரவு ஜார்ஜ் ஆனாவுக்கு உணவு ஊட்டிவிட, ஆனா சிறுபிள்ளை போல் சாப்பிட மறுத்து அடம்பிடிக்க ஜார்ஜ் தன்னை மறந்தவராய் கோபத்தில் அவளை அடித்துவிடுகிறார். பிறகு அதற்காக வருத்தப்பட்டு ஆனாவிடம் மன்னிப்புக் கேட்கிறார்.

ஒருநாள் ஆனாவின் மகள் வீட்டிற்கு வரப் போவதாக கடிதம் வர.. ஆனா தன் மகள் அங்கு வருவதை விரும்பவில்லை என்கிறாள். அதையும் மீறி மகள் வந்துவிட, ஜார்ஜ் ஆனாவின் அறையைத் தாளிட்டு மகளிடம் ஆனா உன்னைக் காணத் தயாராயில்லை என்கிறார். ஆனால் மகளோ தன் அம்மாவைப் பார்த்தே தீருவேன் என்று அடம்பிடிக்க வேறு வழியின்றி ஜார்ஜ் கதவைத் திறந்துவிட கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆனாவை அவள் மகள் நெருங்கித் தொட முயல அப்போது விழித்துக்கொள்ளும் ஆனா பேச இயலாமல் கத்திக் கூப்பாடு போட்டு மகளைப் பார்க்க மறுத்து அங்கிருந்து அவளை வெளியேறச் சொல்கிறாள். ஜார்ஜ் தன் மகளிடம் " நீ உன் வாழ்க்கையைப் பாரும்மா; நாங்கள் எங்களுடைய வாழ்க்கையைப் பார்த்துக்கறோம்" என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அன்றிரவு ஜார்ஜ் பல் துலக்கிக்கொண்டிருக்க, கட்டிலில் படுத்திருக்கும் ஆனா நோயின் உச்சத்தில் வலி பொறுக்க மாட்டாதவளாய் வேதனையில் கத்துகிறாள். ஜார்ஜ் அவளுக்கு அருகில் அமர்ந்து ஆறுதலாய் வருடிக் கொடுக்கிறார். வலி தெரியாமலிருக்க தன் சிறு வயதுக் கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனா கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக, முடிவில் ஜார்ஜ் அருகிலிருக்கும் தலையணையை எடுத்து ஆனாவின் முகத்தில் பொத்தி அழுத்தி ஆனாவுக்கு அவளுடைய நோயின் வேதனையிலிருந்தும் இந்த உலகிலிருந்தும் நிரந்தர விடை கொடுத்து அனுப்பி வைக்கிறார். 

மறுநாள் ஜார்ஜ் கண்விழிக்க, ஆனாவின் குரல். சென்று பார்க்க ஆனா வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறாள். ஜார்ஜ் அவளுக்கு கோட் அணிய உதவி செய்து அவளுடனே சேர்ந்து அவரும் கிளம்பி வீட்டை விட்டு வெளியேறிச் செல்கிறார்.

மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரே வீட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். ஆனா மற்றும் ஜார்ஜாக நடித்த EMMANUEL RIVA , JEAN-LOUIS TRINTIGNANT இருவரின் நடிப்பு என்றும் மறக்க முடியாதது. ஜார்ஜாக நடித்த JEAN-LOUIS TRINTIGNANT பல முன்னணிப் படங்களில் நடித்தவர். COSTA GRAVAS என்னும் இயக்குனரின் ' Z ' படத்திற்காக கேன்ஸில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றவர்.

'அமோர்' தன் குடும்பத்தில் நடந்த உண்மைக் கதை என்கிற Haneke-விற்கு 'ஜார்ஜ்' மற்றும் 'ஆனா' என்கிற பெயர்களின் மீது ஏனோ அப்படி ஒரு காதல். தன்னுடைய எட்டுப் படங்களின் முதன்மைக் கதாபாத்திரங்களுக்குமே அவர் ஜார்ஜ், ஆனா என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.

- நன்றி- சினிமா விகடன்


Friday, January 25, 2013

விஸ்வரூபம் (2013) விமர்சனம் - இயக்குனர் கமலின் மாஸ்டர் பீஸ் படம்.

((( நோ ஸ்பாய்லர்கள் - No Spoilers )))

விஸ்வரூபம் படத்தை நான் வசிக்கும் சான் டியகோ நகரில் இன்று இரவு 8:30 காட்சி பார்த்தே விட்டேன். கடந்த ரெண்டு நாட்களாய் என்னுடைய எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி கிடந்தது, படம் அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று. இந்த படத்திருக்கு நான் கிட்ட தட்ட ஆறு மாதமாய் காத்து இருந்தேன், இத்தனை நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா என்றால், நிச்சியம் கண் மேல் பலன் கிடைத்தது. விஷுவல் ட்ரீட், மைன்ட் ப்லோவிங் படம் இது. தமிழில் இது வரை இது போன்ற ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு படம் வெளி வந்து உள்ளது. படம் என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி செய்து உள்ளது என்றே சொல்வேன். கிளாஸ், டெக்னாலஜி, மரண மாஸ் என்ற அணைத்து வஸ்துகளையும் சரியான விகிதத்தில் கலந்து வழங்கி உள்ளார் இயக்குனர் கமல்ஹாசன். நான் பார்ப்பது தமிழ் படமா இல்லை, ஹாலிவுட் படமா என்கிற சந்தேகம் படம் முழுக்க எனக்கு வந்து கொண்டே இருந்தது. கமல் பேசும் தமிழை வைத்து தான் நான் பார்ப்பது தமிழ் படம் என்கிற உணர்வே எனக்கு வந்தது. அப்படி பட்ட படம் இது. வொர்த் வாட்சிங்.


படத்தின் ஒன் லைனர், படத்தின் பாடல் வெளியீடு விழாவில் ஏற்கனவே கமல் சொல்லி இருக்கிறார். விஷ் (கமல்) மற்றும் பூர்ணிமா (பூஜா குமரி) இருவருக்கும் கல்யாணம் நடந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசிக்கிறார்கள். விஷ் கதக் சொல்லி குடுக்கும் மாஸ்டர். பூர்ணிமா அமெரிக்க வருவதருக்கு விஷ்சை திருமணம் செய்ய ஒத்து கொள்கிறார். பூர்ணிமாவிருக்கு விஷ் மீது பெரிய ஈடுபாடு கிடையாது. டைவர்ஸ் வாங்க விஷ்சிடம் எதாவது குறை கண்டுபிடிக்க வேண்டி பூர்ணிமா பிரைவேட் டிடக்டிவ் ஒருவரை அமர்த்தி அவரை பின் தொடர செய்கிறார். அந்த டிடக்டிவ் விஷ்ஷை பின் தொடர்ந்து செல்ல, அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்து இருக்கிறது. கதை அங்கிருந்து அசுர வேகம் பிடிக்கிறது. எதிர்பாரா திருப்பங்களுடன் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அல்கொய்தா, ஜிஹாத், தாலிபான், ஒசாமா பின்லேடன், என்று பயணம் செய்து கடைசியில் அமெரிக்காவில் அதுவும் அடுத்த பாகத்துக்கு ஆச்சாரம் போட்டு அட்டகாசமாய் முடிகிறது.


படத்தின் நாயகன் கமல் ஹாசன், இவரின் நடிப்பை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். மனிதர் அந்த காதபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார். கதக் ஆடும் போது அவர் காட்டும் முக பாவனைகள் அற்புதம். ஏதோ ஒரு நளினமான பெண் தான் கமல் போல் வேடம் பூண்டு உள்ளாரோ என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. உண்மையான பெண் கூட இவர் அளவுக்கு முக  பாவனைகளை தந்துருபமாக காட்டி இருப்பாரா என்பது சந்தேகமே. படத்தில் கமலின் பரிணாம மாற்றம் (Transformation) காட்சி ஒன்று வரும், அந்த காட்சி ஒரு மாஸ் காட்சிக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதருக்கு தக்க சான்று. ஏசி குளிரிலும் எனக்கு கூஸ்பம்ப்ஸ் ஏற்பட்டது. செம சீன் அது. சண்டைகாட்சிகளில் கமல் கடுமையாக உழைத்து உள்ளார். ஆனால் ஆரம்ப காட்சிகளில் கமலின் முக சுருக்கம் நன்றாக தெரிகிறது. படத்தில் வயதான முக தோற்றத்தை ஜஸ்டிபை செய்து இருப்பார் கமல். நிருபமா விஷ்ஸிடம் டைவர்ஸ் கேட்க வயதான முக தோற்றத்தை ஒரு காரணமாக சொல்லி இருப்பார்.


படத்தின் கதாநாயகி நிருபமா (பூஜா குமரி) மற்றும் அஸ்மிதா (அண்ட்ரியா). இருவரில் பூஜா குமாரிக்கு கொஞ்சமே கொஞ்சம் ஹெவி ரோல். அமெரிக்காவில் Phd முடித்த அணு விஞ்ஞானியாக வருகிறார். இவர் பேசும் ஐயர் பாஷை சில நேரங்களில் சிரிப்பை வர வைத்தாலும், நிறைய நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கமல் டச் காமெடி வசனங்கள் இவர் முலம் கேட்கலாம். பெரிய சிரிப்பு வர வில்லை என்றாலும் கண்டிப்பாய் ஸ்மைல் பண்ணலாம். அண்ட்ரியாவிருக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை, ட்ரைலரில் அவர் பேசிய வசனங்கள் தான் படத்தில் பேசி உள்ளார். பெருசாய் ஒன்றும் இல்லை.

வில்லன் ஓமர் (ராகுல் போஸ்), ஆப்கான ஜிஹாத் போராளியாக வருகிறார். நிஜமான ஆப்கான் ஜிஹாத் போராளி ஒருவன் எப்படி இருப்பான் என்று நான் கற்பனை செய்து இருந்தேனோ, அதே போல் தான் இவரும் நடித்து இருக்கிறார். மனிதர் அந்த காதபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார். விஜயகாந்த் படத்தில் வரும் தீவிரவாதி வாசிம்கான் போல் இவர் என்று நீங்கள் கற்பனை செய்தால், ரொம்ப சாரி. இவர் கத்தி கூட பேச மாட்டார். எந்த காட்சியிலும் எரிச்சல் வருவது போல் இவரது ஆக்டிங் இல்லை என்பது பெரிய ஆறுதல். ஒரு காட்சியில் Tall sheikh வேறு வருவார், அவர் யார் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஓமர் ஏன் தமிழ் பேசுகிறார் என்பதருக்கு அவர் ஒரு காரணம் சொல்வர், "நான் கொஞ்சம் காலம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்தேன், அதனால் எனக்கு தமிழ் தெரியும்" என்று சொல்லவர், இந்த காட்சி அவசியம் தேவை, இல்லை என்றால் படம் முழுக்க அவர் உருது தான் பேசி கொண்டு இருப்பார். தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்பு ஒன்று இந்த காட்சிக்கு ஆட்சேபனை செய்து ஓமர் என்கிற போராளி எப்படி இந்தியா வந்து திரும்பி போனார் என்று கமலிடம் ஆதாரம் கேட்கிறது. நெம்ப கஷ்டம் தான்.


படத்தின் பின்னணி இசை மிக பெரிய ஏமாற்றம். டெம்போவை ஏற்றும் இசை என்று எதையும் சொல்ல முடியாது. நிறைய இடங்களில் மொக்கையாய் இருந்தது. கமல் இசை பொறுப்பை ஷங்கர், எசன்லாய்யிடம் குடுத்ததுக்கு பதில், ரஹ்மானிடம் குடுத்து இருக்கலாம். அவருக்கு ஏற்ற ப்ளாட். படம் இன்னும் அட்டகாசமாய் வந்து இருக்கும். படத்தில் வெறும் நிறைகள் மட்டும் தான் உள்ளது, குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம், பெரிய குறை ஒன்று உள்ளது. வழக்கமா கமல் படத்தில் இருக்கும் குறை தான். படம் படித்தவர்களுக்கு தான் புரியும். நிறைய டெக்னிகல் வார்த்தைகள், சிலியும் பாம், ஆட்டாமிக் பவர், ஷீல்ட் பாக்ஸ் என்று பாமரன் கேள்விபடாத வார்த்தைகள் அப்புறம் அவனுக்கு அவ்வளவு தெரியாத அமெரிக்க ஆப்கன் போர் என்று சில விசயங்கள் இருக்க தான் செய்கிறது. ஆனால் ஆப்கான் போர், ஜிஹாத் பற்றி கொஞ்சம் இணையத்தில் படித்தவர்கள் இந்த படத்தை ஹாலிவுட் படத்திருக்கு இணையாக கொண்டாடுவார்கள். 

கடைசியாக இந்த படத்தில் தமிழ்நாடு முஸ்லிம் அமைப்புகள் சொல்வது போல், சர்ச்சைக்குரிய காட்சிகள், முஸ்லிமை இழவுப்படுதும் காட்சிகள் இல்லையா என்று என்னை கேட்டல், இல்லை என்று தான் நான் சொல்வேன். படத்தில் நிறைய இடத்தில அல்லா புகழ் தான் பாடி உள்ளார் இயக்குனர் கமல்ஹாசன். சின்ன ஸ்பாய்லர், படம் ஆரம்பித்த உடன் தெரிந்து விடும், படத்தில் கமல் பிராமன் இல்லை, அவர் "விசிம்" என்கிற முஸ்லிம் என்று. அப்புறம் இந்த படத்தை யார் எல்லாம் எதிர்க்கலாம் என்றால், அல் கொய்தா அமைப்பை சேர்ந்தவர்கள், ஜிஹாத் போராளிகள், வெடி குண்டு வைக்கும் தீவிரவாதிகள் வேண்டும் என்றால் எதிர்க்கலாம். காமன் மேன்னுக்கு இது ஒரு விஸ்வரூப அனுபவம்.
அடுத்த பதிவில் இயக்குனர் கமல் பற்றி எழுதுகிறேன்.

விஸ்வரூபம் - Mind Blowing...

My Rating : 8.4 ....


Thursday, January 24, 2013

விஸ்வரூபம் - இயக்குனர் கமல் - யுஸ் ரீலீஸ் - எகிறும் எதிர்பார்ப்பு !!

கமல் "விஸ்வரூபம்" படத்தை ஆரம்பிக்கும் போது சத்தியமாக கனவிலும் இப்படி ஒரு எதிர்ப்பு வரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். செல்வராகவன் இயக்கத்தில் கமல் - படத்தின் பெயர் "விஸ்வரூபம்" என்கிற அறிவிப்பு வந்தவுடன், எனக்கு பெரிய ஆச்சிரியம், கமல் எப்படி செல்வா இயக்கத்தில் நடிப்பார் என்று, சத்தியமாக ஒத்து வரவே வராது என்று எண்ணினேன். நான் நினைத்தது போலவே படம் ஆரம்பித்த சில நாட்களிலே செல்வா படத்தில் இருந்து விலகினார். படத்தை இயக்கும் பொறுப்பு கமலிடம் வந்து சேர்ந்தது. கமல் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை விட அவர் மிக சிறந்த இயக்குனர், அதற்க்கு சாட்சி அவர் இயக்கிய படங்கள் "ஹேராம்" மற்றும் "விருமாண்டி". ஹேராம் வணிகரீதியான தோல்வி என்றாலும், தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு எடுத்து சென்ற படம் என்கிற பெயர் உண்டு. "விருமாண்டி" வணிகரீதியாக சுமாரான வெற்றி என்றாலும், எனக்கு மிகவும் பிடித்த கமல் படங்களில் ஒன்று. கமலில் கதை சொல்லும் பாணி அட்டகாசமாய் இருந்தது. உலக சினிமா அறிவு (இணைய கூகிள் அறிவு - அது தானே உலக சினிமா அறிவு !! ) எதுவும் தெரியாத வயதில் நான் பார்த்து அசந்து போன படம். 


ஒரே சம்பவங்களை, கொத்தாளத் தேவர் முதலில் சொல்லும் போது தன் வசதிப்படி சுருக்கிச் சொல்வார். விருமாண்டி குறித்த நமது சந்தேகங்கள், தொடர்ந்து விருமாண்டியே தன் கதையை விரிவாகச் சொல்லும் போது அகலுகின்றன. சிறப்பான கதை சொல்லும் உத்தியைக் கடைபிடித்து இருப்பார் இயக்குனர் கமல். மனித உளவியலை தந்துருபமாக காட்டி இருந்தார் கமல். மனிதன் தன்னை தன்னை எப்பொழுதும் நல்லவனாக காட்டி தான் எந்த உண்மையும் சொல்லுவான் என்கிற சித்தாந்தை கொண்ட படம். நம்மில் 99% பேர் "கொத்தலத் தேவர்" கதாபாத்திரம் கதை சொல்வது போல் நம் வாழ்கையில் கண்டிப்பாய் கதை சொல்லி இருப்போம். நான் அடிக்கடி எனது நண்பர்களிடையே சொல்லும் வாசகம் "விருமாண்டி ஸ்டைல் கதை சொல்லாத டா" என்பதே ஆகும். 

விருமாண்டி பார்த்து விட்டு தலைவர் சுஜாதா இது போன்று சொல்லி இருந்தார் ''“சிக்கலான இரண்டு ‘பாயிண்ட் ஆஃப் வியூ’வில் (POV) சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையை மக்கள் புரிந்துகொள்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை என்கிற செய்தி, தமிழ் சினிமாவின் முன்னேற்றத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் அறிகுறி. மேலும், இவ்வகை முயற்சிகளில் ஈடுபட அது தெம்பு அளிக்கும்
விருமாண்டி என்னை பொறுத்த வரை "ரோஷோமான்" படத்தை விட சிறந்த படைப்பு. ரோஷோமான் படத்தில் அகிரோ ஒரே சம்பவத்தை பல கோணங்களில் நான்கு பேர் தங்களை நல்லவர்கள் போல் காட்டி அந்த சம்பவத்தை விவரிப்பது போல் சொல்லி இருப்பார். கேமரா ஆங்கில் ஒவொருவரும் கதை சொல்லும் போது மாறும். ஆனால் கமல் அதை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் பல சம்பவங்களை ஒரே கேமரா ஆங்கிளில் காட்டி இருப்பார். "ரோஷோமான்" பார்க்கும் போது எனக்கு கொட்டாவி தான் வந்தது, படத்தில் விறுவிறுப்பு மற்றும் சுவாரிசியம் மிஸ்ஸிங். ஆனால் விருமாண்டியில் அனைத்தும் இருந்தது.


இப்படி பட்ட நல்ல திரைபடத்தை இயக்கிய கமல், தனது அடுத்த படமான விஸ்வரூபத்தை இயக்க எடுத்து கொண்ட காலம் கிட்ட தட்ட 5 வருடம். கண்டிப்பாய் கதையை நன்றாக செதுக்கி இருப்பார், படம் செம விறுவிறுப்பாய், எந்த பிசிறும் இல்லாமல் இருக்கும் என்று நான் நம்புகிறேன். படம் தமிழகத்தில் 28 தேதி வரை ரீலீஸ் இல்லை, என்கிற செய்தி பார்த்தேன். நான் இருக்கும் சான் டியாகோவில் (CA) இன்று இரவு 8:30 மணிக்கு ரீலீஸ் ஆகிறது. டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் செய்து உள்ளோம். இங்கு தியேட்டர் எல்லாம் குப்பை போல் தான் இருக்கும். நல்ல தியேட்டரில் பிறகு பார்த்து கொள்ளலாம். இப்போதைக்கு படம் பார்த்தால் மட்டும் போதும் என்பது போல் உள்ளது.

படம் பார்த்த ஒருவர், அல்-கொய்தா, LeT போன்ற டெர்ரரிஸ்ட் நெட்வொர்க் எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றிய த்ரில்லர் டாகுமெண்டரி போல் உள்ளது என்று சொல்லி இருந்தார். செம இன்டரிஸ்டிங் ப்ளாட் போல் எனக்கு தெரிகிறது. விஜயகாந்த் படம் போல், தீவிரவாதி பாகிஸ்தான் பார்டரில் நின்று லாரி ஏறி இந்தியாவுக்குள் வந்து பாம் வைத்து விட்டு போவது போல் கண்டிப்பாய் இருக்காது. கமல் எப்படி அவர்கள் நெட்வொர்க் வேலை செய்கிறது என்பதை நம்பும் படி காட்டி இருப்பார். சோ, அவர் சொல்லுவது போல் படம் டெர்ரரிஸ்ட் நெட்வொர்க் பற்றி படம் என்றால், ஞாயமாக அல்-கொய்தா, LeT போன்ற அமைப்புகள் தான், தங்கள் ரகசியங்களை வெளியீட்டு விட்டார்கள் என்று போராட வேண்டும், ஏன் தமிழ் நாட்டு முஸ்லீம்ஸ் போராடுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை.

படம் இங்கு வெளி ஆவது உறுதி, இந்திய நேர படி நாளை மதியம் படத்தை பற்றிய எனது பார்வையை இங்கு பதிவு செய்கிறேன்.


Wednesday, January 23, 2013

சமர் - (2013) காப்பியை கண்டு பிடிக்கும் மேனியா.

நீண்ட காலமாய் தமிழ் பதிவர்களிடம், பேஸ் புக் பயனீட்டாளர்களிடம் ஒரு விதமான மேனியா இருப்பதை காண முடிகிறது, அதை மேனியா என்று சொல்வதும் சரி வராது. வேறு வார்த்தை கிடைக்காதால் இப்பொழுதுக்கு அதை மேனியா என்றே வைத்து கொள்வோம். அது என்ன வென்றால், எதாவது வித்தியாசமா கதையை, திரைகதையை கொண்டு ஒரு சுவாரிசயமான தமிழ் படம் வந்தால், அதன் மூலத்தை ஆராய்வது. அது எந்த ஆங்கில மொழி இல்லையென்றால் பிறமொழி படத்தில் இருந்து தழுவி/காப்பி அடித்து எடுக்க பட்டது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவது. 

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், துப்பாக்கி படம் - தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைகதையை கொண்டு வெளி வந்த படம், நிறைய பதிவர்கள் கண்டிப்பாய் இது ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தில் இருந்து சுட்டு எடுக்க பட்டது என்று எழுதினார்கள். ஆனால் எந்த வெளிநாட்டு படம் என்று இது வரைக்கும் யாராலும் துப்பாக்கி பார்த்தவுடன் சொல்ல முடியவில்லை. நிறைய பேர் துப்பாக்கியின் மூலத்தை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்று "IMDB" தொறந்து வைத்து கொண்டு "டெரரிஸ்ட்" ஆக்டடை பின்னணியை கொண்ட பாரின் படங்களாய் பார்த்து தள்ளுகிறார்கள். என்றாவது ஒரு நாள் துப்பாக்கியின் மூலத்தை கண்டு பிடிக்காமல் விட மாட்டோம் என்று சபதம் பூண்டு உள்ளார்கள். எனக்கு இவர்கள் ஏன் இப்படி செய்து தங்கள் நேரத்தை வீணாக்கி கொள்கிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. இவர்கள் இப்படி செய்வது, தமிழ் இணைய உலகம் தங்களை உத்து நோக்க வேண்டும், தங்களுக்கு நிறைய உலக சினிமா அறிவு உள்ளது என்று ரீடர்ஸ் எண்ண வேண்டும் என்கிற என்னமாய் கூட இருக்கலாம். 

தமிழ் படங்கள் அனைத்துமே ஆங்கில படத்தின் தழுவல் என்கிற எண்ணம் நிறைய பேரிடம் உள்ளது, எந்த அளவுக்கு அந்த எண்ணம் என்றால் "அலெக்ஸ் பாண்டியன்" என்கிற மொக்கை படம் ஆங்கில "டிரான்ஸ்போட்டர்" படத்தின் காப்பி என்று சொல்லும் அளவுக்கு. "டிரான்ஸ்போட்டர்" படத்தில் ஹீரோ வில்லனிடம் காசு வாங்கி கொண்டு ஹீரோயினை கடத்தி கொண்டு போய் விடுவார். அலெக்ஸ் பாண்டியன் படத்திலும் ஹீரோ அதே போல் செய்கிறார், அதனால் "அலெக்ஸ்" "டிரான்ஸ்போட்டர்" படத்தின் காப்பி என்று காரணம் சொல்கிறார்கள். எனக்கு எங்கு போய் முட்டுவதே என்றே தெரியவில்லை. "விஸ்வரூபம்" படத்தின் ஒன் லைனர் (கமல் மனைவிக்கு தெரியாமல் ஸ்பை ஆக இருப்பது) வைத்தே அது ''ட்ரூ லைஸ்" படத்தின் காப்பி என்று சொல்லும் மேதாவிகள் வாழும் சமுகத்தில் தான் நானும் வாழ்கிறேன். 

நாள் ஆக, நாள் ஆக இந்த "காப்பியை கண்டுபிடிக்கும் மேனியா" ஜாஸ்தியா ஆகிறதே ஒழிய, குறைய மாட்டேன் என்கிறது. உண்மையில இது ஒரு விதமான மன நோய் என்றே நினைக்கிறன். இந்த காப்பி கண்டுபிடிக்கும் மேனியா கண்டிப்பாய் நமக்கு ஒரு படத்தை ரசிக்கும் மனநிலையை தராது, இது காட்சி, எந்த ஆங்கில படத்தில் இருந்து எடுக்க பட்டது, என்கிற சிந்தனையிலே அந்த காட்சியை ரசிக்க மாட்டோம். 

நானும் ஒரு காலத்தில் இந்த காப்பி மேனியாவில் அவதி பட்டேன், பிறகு யோசித்து பார்த்தால், நாமே நிறைய படத்தை பைரசி டவுன்லோட் செய்து பார்க்கிறோம், உரியவனுக்கு பணத்தை தராமல் படத்தை ரசிக்கிறோம், அதில் அந்த படம் வேற்று மொழி காப்பியாய் இருந்தால் என்ன, தழுவல் ஆக இருந்தால் என்ன. ஏன் அதன் மூலத்தை ஆராயிந்து மண்டையை குழப்பி சினிமாவின் உண்மையான சுவையை இழக்க வேண்டும் என்று எண்ணி, காப்பி ஆராய்ச்சியை விட்டு விட்டேன். இப்பொழுது முன்னை விட சினிமாவின் சுவை நன்றாக தெரிகிறது. 

சிலரின் காப்பி மேனியா ரொம்ப மோசமாய் இருக்கும், தமிழ் படத்தின் ஏதாவது ஒரு காட்சியின் சாயல் வேறு ஒரு வெளிநாட்டு படத்தில் இருந்து விட்டால். படமே மொத்த காப்பி, படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து உள்ளார்கள் என்று கைக்கு வந்ததை எழுதுவார்கள். அதற்க்கு சமிபத்திய உதாரணம் விஷால் நடிப்பில் வெளி வந்து "சமர்". இது "தி ட்ரூமேன் ஷோ" மற்றும் ''தி கேம்" படத்தின் அப்பட்ட காப்பி என்று சில பதிவர்கள் எழுதி இருப்பதை பார்க்க நேர்ந்தது. 

ஆனால் என்னை பொறுத்த வரை "சமர்" படத்தின் ஒன்று அல்லது ரெண்டு காட்சிகளின் சாயல் மேற்சொன்ன படங்களில் இருக்கலாம், ஆனால் நிச்சியமாக அப்பட்ட காப்பி இல்லை. நன்றாக ரசித்து முடிச்சுகள் தெரியாமல் பார்க்க வேண்டிய படம். நல்ல த்ரில்லர் ரைட் போன அனுபவத்தை குடுக்கும்.

ஊட்டி பாரஸ்ட் ஆபீசர் மகன் விஷால், இவருக்கும் சுனைனாவுக்கும் காதல். சரியான புரிந்துணர்வு இல்லாததால் அந்த காதல் புட்டுக்கொள்ள சுனைனா தாய்லாந்து கிளம்பி போகிறார், அங்கிருந்து விஷாலுக்கு "உன்னை மறக்க முடியவில்லை... உடனே புறப்பட்டு பாங்காக் வா..." என லவ் லெட்டருடன் பிளைட் டிக்கெட்டையும் அனுப்பி வைக்கிறார். முன்பின் விமானத்தில் சென்ற அனுபவமில்லாத விஷால், ஏர்போர்டில் முழிக்க, அங்கு த்ரிஷாவை பார்க்கிறார், அவரிடம் சென்று உதவி கேட்க, த்ரிஷாவும் உதவி செய்கிறார். பாங்காக் வந்து சேரும் விஷாலுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இவர் பெரிய கோடீஸ்வரன் என்று ஒரு கும்பல் சொல்கிறது, இன்னும் ஒரு கும்பல் இவரை கொலை செய்ய துரத்துகிறது என்று ஏகப்பட்ட ட்விஸ்ட். நிறைய முடிச்சுகள் விஷாலை சுத்தி போடபடுகிறது, விஷாலுடன் சேர்ந்து நாமும் குழம்புகிறோம். இறுதியில் போடப்பட்ட அணைத்து முடிச்சுகளும் ஒவொன்றாய் அழகாய் அவிழ்க்க படுகிறது. அந்த முடிச்சுகள் தெரிய படத்தை பார்ப்பது தான் நல்லது. கதை தெரிந்து இந்த படம் பார்ப்பது சுத்த வேஸ்ட். 

படத்தில் அரை மணி நேரம் நீங்களும் விஷாலுடன் சேர்ந்து சுத்துவீர்கள், அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று ஏகத்துக்கும் நம்மை யோசிக்க வைத்து விடுவார் இயக்குனர் திரு. இவர் விஷாலை வைத்து "தீராத விளையாட்டு பிள்ளை" என்கிற மொக்கை படத்தை எடுத்தவர். சண்டைகாட்சிகளில் நிறையவே உழைப்பை பார்க்க முடிகிறது. ஆனால், விஷால் இன்னும் நடிப்பு கற்று கொண்டே வருகிறார் என்று நினைக்கிறன். நிறைய சீரியஸ் காட்சிகளில் இவர் நடிப்பை பார்க்கும் போது எனக்கு கொட்டாவி வந்தது. இவரை விட ஒரு நல்ல நடிகர் இந்த படத்தில் நடித்து இருந்தால் படம் இன்னும் நல்ல ரீச் ஆகி இருக்கும். பாலா பள்ளியில் ஒரு கோர்ஸ் படித்த பிறகும் இவ்வளவு தான் நடிப்பு வரும் என்றால், விஷால் ரொம்ப கஷ்டம் பாஸ்.

த்ரிஷா, அழகாய் வருகிறார், அளவாய் நடிக்கிறார். பாடல் காட்சிகள் மனதில் ஒட்டவே இல்லை. சுனைனாவிருக்கு சில காட்சிகள், மற்றும் ஒரு பாடல், அவ்வளவு தான். பெரிய வேலை இல்ல. படத்தில் காமெடி இல்லவே இல்லை. இது போன்ற சீரியஸ் படங்களுக்கு காமெடி அனாவிசியம் தான். வசங்கள் எஸ்.ரா, அவர் எழுத்தை போலவே, சுலபமாக சொல்லி புரிய வைக்க வேண்டியதை, கடினமாக ஆக்கி உள்ளார். நார்மலா பேச வேண்டிய வசங்களை, சுத்தி வளைத்து கஷ்டமான வார்த்தைகள் கொண்டு கதாபாத்திரங்கள் பேசுகிறார்கள். ஆனால் அவரின் எழுத்தை போலவே நன்றாக உள்ளது. தமிழுக்கு வித்தியாசமான கதையை யோசித்த இயக்குனர், மேக்கிங்கில், மற்றும் ஹீரோ தேர்வில் பெரிய ஓட்டை விட்டு விட்டார் என்றே நாள் சொல்வேன்.

சமர் - சுமார்

My Rating: 6.5/10......


Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013) - கொண்டாட்டம் ..!!!!

"அலெக்ஸ் பாண்டியன்" ஹாங் ஓவர் குறைய கண்டிப்பாய் இன்று "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படம் பார்த்தே தீருவது என்று நேற்றே முடிவு செய்து விட்டேன். இன்று காலை முதல் ஷோ போய் இந்த படத்தை பார்த்தேன். படம் ஆரம்பிக்கும் முன்பு " இன்று போய் நாளை வா" படத்தின் மூல கதையை வழங்கிய இயக்குனர் "திரு.பாக்யராஜ்" அவர்களுக்கு நன்றி என்ற வார்த்தைகளுடன் படம் ஆரம்பித்தது. படம் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றல் ?? நிச்சியம் என்னுடிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், என்னுடைய "அலெக்ஸ் பாண்டியன்" தலைவலியில் இருந்தும் விடுதலை கிடைத்தது. வயறு வலிக்க சிரித்து மகிழ்தேன். சந்தானம் ஏன் இந்த படத்தை "அலெக்ஸ் பாண்டியன்" ரீலீஸ் ஆகி ரெண்டு நாள் கழித்து வெளியிட்டார் என்று இப்பொழுது புரிகிறது. இரண்டு நாட்கள் கழித்து மொத்த கூட்டமும் தன் படத்திருக்கு வந்துவிடும் என்கிற அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது போன்ற கொண்டாட்டமான படத்தை பார்த்து நிறைய நாட்கள் ஆகிறது. 


சரி இப்பொழுது படத்தின் கதையை பார்போம். 1981 வருடம் வெளி வந்த "இன்று போய் நாளை வா" படத்தின் அதே கதை தான். "இன்று போய் நாளை வா" பிடிக்காது என்று தமிழகத்தில் யாரும் சொல்லி இது வரை நான் கேட்டது இல்லை. கே டிவியில் இந்த படத்தை எப்பொழுது போட்டாலும் இருக்கும் வேலையை அப்படியே போட்டு விட்டு படம் பார்க்க உட்கார்ந்து விடுவேன், எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். அட்டகாசமான திரைகதையை கொண்ட படம் இன்று போய் நாளை வா. ஒரு பெண்ணை முன்று கதாநாயகர்கள் லவ்வுவதை செம நகைச்சுவையாக சொல்லி இருப்பார் பாக்யராஜ். அந்த படத்தை சிறு சிறு மாறுதல்கள் உடன் மறுபதிப்பு செய்து சந்தானம், ராக்கிங் பவர் ஸ்டார், சேது மற்றும் விஷாகாவை கொண்டு வழங்கி உள்ளார் இயக்குனர் மணிகண்டன். 

வேலை வெட்டி எதுவும் இல்லாத வழக்கமான தமிழ் ஹீரோ கதாபாத்திரம் சிவா (சேது). இவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் புதுசாய் குடி வரும் சௌமியாவை (விஷாகா ) பார்த்தவுடன் காதல் கொள்கிறார் சிவா. அவருடன் சேர்ந்து அவரின் நண்பர்கள் "கால்கட்டு கலியபெருமாள்" என்கிற கே.கே (சந்தானம்) மற்றும் பவர் குமார் (பவர் ஸ்டார்). முன்று பேரும் எப்படியாவது சௌமியா மனதில் இடம் பிடிக்க போட்டி போடுகிறார்கள். இறுதியில் யார் போட்டியில் வெற்றி பெற்றார் என்கிற கேள்விக்கான விடையை பயங்கர நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.


முன்று கதாநாயர்களின் அறிமுகம் வழக்கமான தமிழ் சினிமா வாய்ஸ் ஓவரில் ஆரம்பிகிறது. அதில் செமையாய் ஸ்கோர் செய்வது பவர் தான். மாஸ் ஹீரோவுக்கு கிடைக்கும் விசில் சத்தம் பவருக்கு கிடைத்தது. நானும் இவரை முதல் முறை பெரிய திரையில் பார்கிறேன். மனிதர் பின்னி பெடல் எடுத்து உள்ளார். நிறைய காட்சிகளில் நானே பவர்க்கு கை தட்டினேன். டான்ஸ் கற்று கொள்வது, சௌமியாவிடம் ப்ரோபஸ் செய்வது, ஹீரோயினை இம்ப்ரெஸ் செய்ய இவர் செய்யும் செண்டிமெண்ட் டிராமா, கிளைமாக்ஸ் டெர்ரர் பைட் என்று பவர் செய்யும் அனைத்து அலப்பறைகளும் சிரிப்பு சர வெடிகள் தான். இவரை மிக சரியாக உபயோக படுத்தி உள்ளார் இயக்குனர். ஆனால் முக எக்ஸ்பரஷன் மட்டும் வரவே மாட்டேன் என்கிறது. போக போக அடுத்த படத்தில் இருந்து பிக் அப் செய்து விடுவார் என்று நம்புவோம் ஆக.

அடுத்து சந்தானம், உண்மையில் இவர் காமெடி சூப்பர் ஸ்டார் தான். இயக்குனர் "ராஜேஷ்" காம்பினேஷனில் தான் இவரிடம் இருந்து இப்படி பட்ட காமெடி ட்ரீட்டை பார்த்து உள்ளேன். இது போன்ற நகைச்சுவை படங்கள் இன்னும் ரெண்டு குடுத்தால் இவருக்கு காமெடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தாராளமாக வழங்கலாம். படத்தில் தேர்ந்த நடிகர் என்பது இவர் மட்டும் தான், அதனால் நிறைய இடங்களில் இவர் தான் படத்தை தாங்கி செல்கிறார். குபீர் சிரிப்பை வரவைக்கும் நிறைய கௌண்டர் அட்டாக்ஸ் காமெடியை படம் நெடுக்க தூவி உள்ளார், அட்டகாசம். இவர் சௌமியாவிடம் ப்ரோபஸ் காட்சியில் கை தட்டல் குறைய நிறைய நேரம் ஆனது. தன் படம் என்பதால் மனிதர் கடுமையாக உழைத்து உள்ளார் என்பது தெரிகிறது.


சேது என்கிற புது முக நடிகர் நடித்து உள்ளார். ஹீரோயின் விவேல் விளம்பரத்தில் நடித்தவர், "டல் திவ்யாவாக, இப்ப தூள் திவ்யா ஆகிடா". பாட்டு வாத்தியாராக VTV கணேஷ், டான்ஸ் மாஸ்டர் ஆக "வரலாறு படத்தில் அஜித்துக்கு டான்ஸ் சொல்லி குடுத்தவர், கோவை சரளா, பட்டிமன்ற ராஜா என்று நிறைய நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.சிறப்பு தோற்றத்தில் "சிம்பு" மற்றும் "கெளதம் மேனன்". இருவரும் VTV-2 படபிடிப்பில் இருப்பது போன்ற காட்சி அமைப்பு.

பாடல்கள் எல்லாமே படத்தில் தேவைக்கு ஏற்ப சரியான நேரத்தில் வருகிறது. பின்னணி இசை தேவையான அளவுக்கு வழங்கி உள்ளார் "தமன்". மொத்தத்தில் ஒரு காட்சியில் கூட நகைச்சுவை குறையாமல், லாஜிக் பற்றி அதிகம் யோசிக்க விடாமல்,  பெரிய குறை எதுவும் சொல்ல முடியாத படி திருப்தியான படத்தை வழங்கிய சந்தானம் மற்றும் பட குழுவினருக்கு என் நன்றிகள்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா - கொண்டாட்டம் ..!!!!

My Rating: 8.0/10......