Tuesday, November 06, 2012

IT ACT SECTION 66 A- தேவை சில மாற்றங்கள்.

முன் குறிப்பு : சமீபத்தில் இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்களின் மீதான, சில நிகழ்வுகளுக்குப் பிறகுதான் இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, அதன் உட்பிரிவு 66A நாம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதில் இருக்கும் ஷரத்துகள் அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளதால், பதிவர் திரு தருமி ஐயாவின் கருத்தில் முழு உடன்பாடு கொண்டு, அந்த சட்டத்தின் 66A பிரிவுக்கான எனது எதிர்ப்பை தெரிவிக்க, நானும் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.
===================================================================================

I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில்,
நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு”
என்று இன்று இந்து தினசரியில் அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்
இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக 
வலியுறுத்தியுள்ளது.
===================================================================================
  • இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில்மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும்என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையேபறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்குவேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.
  • இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.
  •  முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.
===================================================================================

Marx Anthonisamy அவர்களின் பேஸ் புக் ஸ்டேட்ஸ்.அவரின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.....
"நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைப்பதில் உள்ள பிரச்சினைகளுக்கு அப்பால் நீதிமன்றத்தையும் நாம் கடைசி வரை பயன்படுத்த வேண்டியுள்ளது என சமாதானம் செய்து கொண்டு அடுத்த பொது நல வழக்கை நாஙாகள் தொடுத்துள்ளோம். தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் அந்த 66 a பிரிவு, அதை வைத்துத்தானே கார்தி சிதம்பரம் போன்ற ப'பெரிய கைகள்' கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்க முயல்கின்றன. அதை ரத்து செய்ய வேண்டுமென ஒரு வழக்கை நாளை தொடுக்கிறோம். வழக்கறிஞர் ரஜினிதான் அந்த வழக்கையும் நடத்துகிறார்."
===================================================================================
ட்விட்டர்,பேஸ் புக், கூகுள் பிளஸ்ஸில் நிலைச்செய்தியாக பகிர,
"இந்திய அரசே,தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்"
நன்றி!
===================================================================================
வேண்டுகோள்:
கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அனைத்து இணைய ஊடகவியலாளர்களும் இப்பதிவினை பிரதியெடுத்து வெளியிட்டு ஒத்துழைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் பதிவிட்ட பின் இடுகையை தருமி அவர்களின் தளத்தில் இணைக்கவும். நன்றி!


4 comments:

  1. உண்மைதான்! இனி எதையும் எழுத முடியாது! பகிர முடியாது என்ற நிலைக்கு தள்ளுகிறதே அந்த சட்டம்! கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது!

    ReplyDelete
  2. //’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்!//

    புத்தகம் எழுதி ஒருத்தரோட தவற வெளியிடுவது ரொம்ப கஷ்டம்... அப்பிடியே வெளியிட்டாலும் அத இலகுவா தடுத்தரலாம்.. ஆனால் இன்டர்நெட்ல வெளிவாந்தா அது உடனே பரவிடும்.. தடுக்க முடியாதுன்னு பிளான் பண்ணி அரசியல் குள்ளநரிகள் கொண்டுவந்த சட்டம் மாதிரி இருக்கு... கண்டிப்பாக இந்த சட்டப்பிரிவில் மாற்றம் தேவை.. எனது எதிர்ப்பையும் பதிவு செய்கிறேன்..

    ReplyDelete
  3. இந்திய அரசே,தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்"
    நன்றி!

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete