Monday, October 22, 2012

ட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன ?

ராஜன் லீக்ஸ் (rajanleaks) என்கிற பெயரில் ட்வீட்ஸ் எழுதி வரும் ட்விட்டர்/பிளாக்கர் மற்றும் சரவணகுமார்  என்கிற  நிஃப்ட் (NIFT) சென்னை நாகரிக ஆடைகளுக்கான கல்லூரிப் பேராசிரியர் சைபர் க்ரைம் போலீஸ்சாரால் இன்று கைது செய்ய பட்டு உள்ளார். ராஜன் அவினாசியை சேர்ந்தவர். எனக்கு மிகவும் பிடித்த பிளாக்கர் மற்றும் ட்விட்டர். இவர்கள் இருவரையும் சேர்த்து  மொத்தம் ஆறு பேர் மீது பிரபல பின்னணி பாடகி சின்மயி சுமத்திய  குற்றச்சாற்றின் காரணமாக கைது செய்ய பட்டு உள்ளார்கள். அவர்கள் சின்மயி பற்றி அவதுறு பரப்பினார்கள் என்பது தான் குற்றச்சாற்று. பெண்களைத் தொந்திரவு செய்வது தொடர்பான சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழும் சின்மயிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழும் வழக்குக்கள் பதிவாயிருக்கின்றன. இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் சின்மயி சொல்லிய கருத்துக்கு  ராஜன் மற்றும் சில ட்விட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க அதன் தொடர்விளைவாக மோதல் முற்றியது. சின்மயி மற்றும் ராஜன் இருவரிடையே நடந்து கருத்து மோதல்களை ஆரம்பத்தில் இருந்தது பார்த்து வருவதால், யார் மீது தப்பு என்ற பஞ்சாயத்தின் உள்ளே போக விரும்ப வில்லை. ஆனால் இந்த குற்றச்சாற்று மற்றும் அதன் பின்விளைவுகள்குறித்த எனது கருத்தை மட்டும் பதிவு செய்வது தான் இந்த பதிவின் நோக்கம். 

இணையம்: முக்கியமாக பேஸ் புக், மற்றும் ட்விட்டர் நமக்கு நிறைய கருத்து சுதந்திரத்தை வழங்கி உள்ளது. எந்த அளவுக்கு என்றால் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரை வாயுக்கு வந்த படி வசை பாடும் அளவுக்கு, நாட்டின் பிரதமரை கண்டபடி அசிங்கமாய் கேலி பேசும் அளவுக்கு நமக்கு கருத்து சுதந்திரம் வழங்க பட்டு இருப்பதாய் நினைத்து கொள்கிறோம். இந்த மாதிரி இணைய சுதந்திரம் நமக்கு கடந்த இரண்டு வருடங்களாய் (இணைய அசுர வளர்ச்சிக்கு பின்பு) தான் கிடைத்து இருக்கிறது, அதற்க்கு முன்பு நமக்கு இந்த கருத்து சுதந்திரம் இருந்ததா என்றால் பதில் தெரியாது. நிஜமாய் எனக்கு தெரியாது. இந்த இணைய சுதந்திரம் நமக்கு தீடிர் என்று வழங்க பட்டது, இல்லை இல்லை, அந்த இணைய சுதந்திரத்தை நாமாக எடுத்து கொண்டோம். ஆனால் அந்த சுதந்திரத்தின் அளவு கோல் நம்மில் பலருக்கு சரியாக தெரியவில்லை. எந்த அளவுக்கு ஒருவரை பற்றி தரை குறைவாய் பேசுவது, எந்த அளவு ஒருவரை விமர்சனம் செய்வது என்கிற வரைமுறை நம்மில் பலருக்கு தெரியாது. கனிமொழி பற்றி, ராகுல்காந்தி பற்றி, கலைஞரை பற்றி, ஜெயலலிதா பற்றி அசிங்கமாய் எழுதும் பலருக்கு இருக்கும் ஒரே தைரியம் அவர்கள் யாரும் அதை படிக்க மாட்டார்கள் என்பது தான். தப்பி தவறி அவர்கள் யாராவது படித்து விட்டால் ராஜன்க்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும் என்பது என் கருத்து. ஒருவரை பற்றி இணையத்தில் கண்டபடி பேசி ஈஸியாக தப்பிக்க முடியாது என்று இப்பொழுது நிரூபணம் ஆகி உள்ளது. தவறாக பேசினால் அதற்கான பலனை அவர் எதிர் கொள்ள தான் வேண்டும். 

ராஜன் மற்றும் அவரது சில நண்பர்கள் எல்லை மீறி போய் போய் உள்ளதாக சின்மயி குடுத்த சில ஸ்க்ரீன் ஷாட்ஸ் 


இந்த ட்வீட்ஸ் எழுதியவர்கள் கண்டிப்பாய் பகடிக்கு  எழுதியது போல் தெரியவில்லை. நிறைய ட்வீட்ஸ் மிகவும் கீழ்த்தரமாக எழுதி உள்ளார்கள். பெண் தானே என்ன செய்து விட முடியும் என்கிற சிந்தனை தான் மேலோங்கி இருக்கிறது. பல ட்வீட்ஸ் ஆபாசத்தின் உச்சம். இதே போன்ற தாக்குதல் சாதாரண ஒரு ஆள் மீது தொடுக்க பட்டு இருந்தால், அவர் வாயை முடி கொண்டு அமைதியாக இருந்தது இருப்பார். ஆனால் ஒரு பிரபலத்தின் மீது அவர் பார்வையில் படும் படி இப்படி ட்வீட் செய்தால் கண்டிப்பாய் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். 

நிறைய பேர் அவன், அப்படி எழுதுறான், இவன் கிசுகிசு எழுதுறான் என்று சொல்கிறார்கள், என்னை பொறுத்த வரை அவர்கள் அசிங்கமாய் எழுதியதை சம்பந்த பட்டவர் படித்தால், அதுவும் சம்பந்தபட்டவர் பிரபலமாக இருந்தால் இது தான் நடக்கும். கண்டிப்பாய் சைபர் க்ரைமில் தான் புகார்  குடுபார்கள். அதை தான் சின்மயியும் செய்து உள்ளார்கள். சரி பிரச்சினை கை மீறி போய் விட்டதால், சில ட்வீட்டர்ஸ் எடுத்த ஆயுதம், சின்மயி தமிழர்களை பற்றியும், தமிழ் மீனவர்களையும் இழிவாக பேசினார் என்கிற குற்றச்சாற்றை சின்மயி மீது சுமத்தினார்கள்.


சின்மயி மீனவர்களை பற்றி தவறாக பேசியதாக கூறப்படும் ட்வீட் இது தான்..
"மீனவர்கள் மீன்களை கொல்வது உங்களுக்கு பாவமாய் இல்லையா" - சின்மயி
ராஜன் மற்றும் சில ட்விட்டர்ஸ் இதை எப்படி திரித்து கூறி உள்ளார் என்றால் "மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்களே அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம் -(எக்ஸ்ட்ரா பிட்டிங்)" இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது..


"மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்களே அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம்" என்ற இந்த வசனம் 'இந்து' என்.ராம் பேசுவதாக 'வினவு' இணையத்தில் 2009ல் வெளியாகிய 'என் ராமாய ணம்' என்ற வீதி நாடகப் பிரதியில் வருகிறது. இந்த கருத்தை தான் சின்மயி கூறினார் என்று சொல்லி இருக்கிறார்கள்..

அதற்கு விளக்கம் குடுத்து சின்மயி வெளியிட விளக்க பதிவு, மற்றும் ஸ்க்ரீன் ஷாட் .


ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.

நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.

என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன். இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?

அடுத்து “நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லை. நான் நான் சைவம்” என்று பதில் கூறினேன். ”மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கறிதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, ”நான் மீன் சாப்பிடுவதுஇல்ல, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு ":)" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hashடேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன். மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கth தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.

என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு. இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.

அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.

இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

இப்பொழுது ராஜன் தரப்பு நண்பர்கள் சின்மயிடம் சமாதானம் பேச முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆல்தோட்டபூபதி (@thoatta) என்கிற ட்விட்டரின் சமாதான முயற்சி. நண்பர்களால் இது தான் செய்ய முடியும். அவர்கள் முயற்சி வெற்றி பெற்று ராஜன் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வெளியே வர வேண்டும்.

தோட்டா அவர்களுக்கு சின்மயி தாயார் குடுத்த பதில் கீழே.

@selventhiran @thoatta @chinmayi உங்களை முழுக்க முழுக்க நம்புகிறேன். நீங்கள் திருமதி ரேவதியை பற்றி கவலைப்படாத நேரமில்லை என்பது எனக்கு தெரியும். நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். உங்களிடம் நான் முதலில் பேசிய போது உங்களின் தொடர்பு ராஜனுடன் அட்வைஸ் செய்யும் அளவில் இல்லை என்பதால் உங்கள் நண்பர் பரிசலிடம் எத்தனை முறை வாதாடினேன். அவர் நிஜமான நண்பராக இருந்திருந்தால் எங்களுக்காக வேண்டாம் அவர் நண்பருக்காக எடுத்துரைத்து இருக்கலாமில்லையா. இங்கு தோட்டா அவர்களின் முயற்சியை மதிக்கிறேன். பரிசலுக்கு எப்படி இப்படி ஒரு ....? அவர் எனக்கும் சரி ராஜனுக்கும் சரி நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார். திருமண வயதில் பெண்ணை வைத்திருக்கும் ஒரு தாயின் மன வேதனையை நீங்களும் மற்ற சிலரும் புரிந்து கொண்டீர்கள். இன்று தோட்டா அவர்களை retweet செய்த யாரவது பேசி இருப்பார்களா? நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். ? 

ராஜனை உங்கள் மொழியில் உசிப்பெத்தி உசுப்பேத்தி விட்டு சற்று நேர கேளிக்கை அனுபாவித்தர்களே. அன்று சின்மயி மற்றும் அவளைப்பெற்ற நானும், நிஜமான அண்ணன் போல நீரும் மேலும் சிலரும் துடித்தோம். அதையும் கேளிக்கைப் பொருளாக்கியவர்களுக்கு இன்று ராஜனுக்காக வருத்தப்பட உரிமையில்லை. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த குறளை மேற்கோள் காட்டி எத்தனை முறை நான் சின்மயியை சமாதானப்படுத்தினேன் என்று உங்களுக்கு தெரியும். 

எங்கள் பொறுமையை இயலாமை என்றுதானே மிதித்தார்கள்? Please read my tweet reply to @itisprashanth.

நானும் சின்மயியும் இந்த கைதுகளால் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இன்று நீங்கள் கதறும் இதே possible நிலைமையை சுட்டிக்காட்டி ராஜனை புரியவையுங்கள் என்று பரிசலிடம் கதறினேனே அன்று வீணாக இருந்துவிட்டு இன்று குழந்தையை போட்டோ பிடித்து போடலாமா? குழந்தையை வெளியில் காண்பிக்கலாமா. மீண்டும் மக்களை தூண்டிவிட்டு பிரச்னையை பெரிதாக்கும் பரிசலை வன்மையாக கண்டிக்கிறேன். திரு தோட்டாவின் செண்டிமெண்ட்சை மதிக்கிறேன். 

வேறு ஒருவரின் சமாதான முயற்சிக்கு சின்மயி தாயார் T.Padmhasini ‏@Padmhasini  குடுத்த பதில் இங்கே.

இதை பார்க்கும் போது எனக்கு கவுண்டர் காமெடி தான் ஞாபகம் வருகிறது. "தாய் மாமன்" படம் என்று நினைக்கிறன். சம்பந்தமே இல்லாமல் கவுண்டரும் சத்யராஜும் மணிவண்ணன் வீடு வாசலில் நின்று சத்தம் போடுவார்கள், மணிவண்ணன் வெளியே வந்த உடன் கவுண்டர் பம்பி போய் " ஆளை பார்க்காத வரைக்கும் தாங்க சவுண்ட் விடுவோம், ஆள பார்த்தா சாத்திக்கிட்டு போயிடுவோம்" என்று சொல்லுவது தான் ஞாபகம் வருகிறது.


86 comments:

  1. ஒன்னும் புரியல பொருத்திருந்து பாக்கறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல...பொறுத்து பாருங்க... :)

      Delete
    2. ஸ்க்ரீன்ஷாட்ஸ் எல்லாம் பார்த்தேன் கொஞ்சம் ஓவராதான் போய்ட்டாங்க போல, ஆனா கூட இருந்து உசுப்பேத்திவுட்ருக்கானுகன்னு மட்டும் தெரியுது

      Delete
  2. இது எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்று இன்னும் சில நாட்களில் தெரியலாம்... இல்லை அப்படியே மறையலாம்... பார்ப்போம்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன் சார்..உங்க கருத்துக்கு மிக்க நன்றி..

      Delete
  3. ராஜ்,

    துவித்தர் பக்கம் போனதில்லை என்பதால் முழு விவரம் தெரியாது,சில பதிவுகளில் படித்தது வைத்து ,அம்மணி சீண்டியதில் மக்கள் நிதானம் இழந்து வார்த்தைகளை விட்டதாகவே தெரிகிறது.

    ஒரு இணைய தளத்தில் செய்தி வெளியிடுவது, அப்லோட் செய்வது ஆதாரமாக நிலைத்து இருக்கும், அதனை எடுத்து காட்டலாம்.

    துவித்தர், முகநூல், ஒரு செர்வரில் தான் சாட் ஆக பதிவாகிக்கொண்டிருக்கும், டெலிட் செய்துவிட்டால் மீண்டும் அதனை எடுக்க முடியாது ஒரே ஆதாரம் ஐ.பி மற்றும் ஸ்கிரீன் ஷாட் தான்.

    ஸ்கிரீன் ஷாட் ஆதாரத்தினை கோர்ட் ஏற்காது.(எந்த டிஜிட்டல் ஆதாரம் திருத்தம் செய்யப்படவில்லை என்று நிறுபித்தாலும் கோர்ட் ஏற்காது, முன்னுதாரணம் உள்ளது)

    ஐ.பி மட்டும் தான் செர்வரில் பதிவாகி இருக்கும், அதுவும் டைனமிக் ஐ.பி எனில் நாள் ,நேரத்துடன் சரிப்பார்த்தால் தான் அவரது ஐ.பி என நிறுவ முடியும்.

    செர்வரில் மெசேஜ் இல்லை என்பதால் ஐ.பி ஆதாரமும் நிற்காது.

    மேலும் மொபைல் போனில் இருந்து துவித் செய்பவர் எனில் என் போன் காணாமல் போச்சு , நான் துவித்தர் பக்கம் போயே ரொம்ப நாளாச்சுன்னு கையதட்டிவிட்டு போயிடலாம்.

    இந்த வழக்கில் நிறைய ஓட்டைகள் இருப்பதால், நல்ல வக்கீலைப்பிடித்தால் போதும் தப்பிடலாம்.என்ன பணம் தண்டமா செலவாகும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வவ்வால்...
      எனக்கு தெரிந்த வரை வழக்கு நிற்க்காது என்றே தோன்றுகிறது. எதற்கு அனாவிசிய நேர விரயம், பணம் விரயம் என்று உழைப்பை கெடுத்தது கொள்ள வேண்டும் ? யாரை வேண்டுமானாலும் வாய்க்கு வந்த படி பேசுவதற்க்கு இனி மேல கொஞ்சம் யோசிப்பார்கள்.
      சர்ச்சைக்குரிய ட்வீட்ஸ் நேரம் இருப்பின் பாருங்கள். அவர்கள் அப்படி பேசியதற்கு இப்பொழுது பதில் சொல்லி கொண்டு இருக்கீறார்கள்.

      Delete
    2. ராஜ்,

      வாய்க்கு வந்தபடி பேசுவது தவறு தான், ஆனால் லிட்டரலி பல அபத்தமான கருத்துக்களை அந்தம்மணி சொல்லி இருக்கு, அதனை கருத்தியல் ரீதியாக ,இவர்கள் பதில் சொல்லி இருந்தால் ,அந்தம்மாக்கு தமிழ் சினிமா, கலைத்துறையில் இடமே இல்லாம போயிருக்கும் ,பசங்க பாலியல் ரீதியாக பேசிட்டாங்க போல. ஆனால் வழக்கின் அடிப்படையில் நிற்காது, அப்படியே அசமஞ்சமாக மாட்டிக்கொள்வார்களானால் அதன் பின்னால் போலீசின் வன்பிறையோகம் இருக்கு எனலாம்.

      எனக்கு இந்தம்மணி பேசிய துவித்தர் கிடைத்தால் , கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து திரியை பற்ற வைக்கலாம் என பார்க்கிறேன், என்ன நெட் இருக்குன்னு கண்டதும் பேசிட்டு ,பெண் என்ற போர்வையில் தப்பிக்க நினைத்தால் அதுவும் கண்டனத்திற்கு உரியதே.



      Delete
  4. I am really surprised her mom is involved in this completely and reading every tweet posted!!It will be extremely hurtful to her if she read some "tweets about her"!

    The case might be dismissed but..

    I think it is best to plead guilty and apologize to them explaining that we just got carried away and it often happens in arguments! I am no lawyer but I think that is the best way to go for.

    Women in general dont spit their words (or use vulgar words) and so it is hard to find fault on them, imho!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருண்.
      yes..her Mom has been involved in this right from day 1..agreed that case will be dismissed..but the mental stress which the tweeters will undergo in coming days will be horrible and they will never forget that in their life term.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  5. In my opinion, it is better to ignore those who insult her! She should have blocked them. But if these tweeters chose to talk among themselves (tweeters) no one can do anything. At least that is the case here; in India all you need is who makes the complaint and not the complaint per se. Even when Clinton president, he was vulgarly targeted by all late night show hosts; and Conan O'Brien went too far; mind you, the case was ongoing with no judgment yet to be delivered! That is freedom of speech here...
    A side note: what if one of the tweeter is NOT an Indian Citizen?

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி,

      உங்க பதிவில தமிழில் எப்படி கமெண்ட் போடணும்னு ஏன் அடுத்தவருக்கு வகுப்பெடுக்கிறிங்க,இந்த நாசமா போனத தமிழில் தட்டச்சு செய்தால் சுளிக்கிடுமா?

      Delete
    2. ***In my opinion, it is better to ignore those who insult her!***

      I don't think she cares about YOUR OPINION! She already "took them on" and the cops have arrested them, already. Now they need to defend themselves!

      Delete
    3. வாங்க நம்பள்கி...
      நாங்க இருக்கிறது இந்தியா சார்...அமெரிக்கா சட்டம் வேற, இங்க வேற செண்டிமெண்ட்ஸ். I guess Chinmayi blocked some of the tweeters, and the tweeters created a trend something like #asingapattalchinmayi and asked other tweeters to support the trend.
      what if one of the tweeter is NOT an Indian Citizen?
      I heard Chennai commisioner saying that "இணையதளம் மூலம் பெண்களை இழிவுப்படுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் : போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்." this must be applicable to everyone..

      Delete
    4. வாங்க வவ்வால்.. எந்த மொழியாக இருந்தால் என்ன, அவர் சொல்ல வரது நமக்கு புரிஞ்சா போதும்.. :)

      Delete
  6. கருத்து மோதல் என்பதை தாண்டி ஆபாசமாக பேசியது தான் இங்கே பிரச்சினை.

    ராஜன் எனக்கும் மிகவும் பிடித்தவர். இந்த பிரச்சினைகளில் இருந்து அவர் வெளிவர வேண்டும் என்பதே என் விருப்பமும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிரபு..நானும் அதை தான் எதிர்பார்கிறேன்.

      Delete
  7. நம்பள்கி: நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். அமெரிக்காவிலும் ஒருவரை "கற்பழிப்பேன்" கொலை செய்வேன் என்று பேசுவது சட்டப்படி குற்றம்! ஒரு இந்தியனை பிடிச்சு உள்ள போட்டுட்டானுக..பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் பற்றி தவறான புரிதல்கள்!

    ReplyDelete
  8. ***In my opinion, it is better to ignore those who insult her! She should have blocked them. But if these tweeters chose to talk among themselves (tweeters) no one can do anything. At least that is the case here; in India all you need is who makes the complaint and not the complaint per se. Even when Clinton president, he was vulgarly targeted by all late night show hosts; and Conan O'Brien went too far; mind you, the case was ongoing with no judgment yet to be delivered! That is freedom of speech here...
    A side note: what if one of the tweeter is NOT an Indian Citizen?***

    ஐயா: நீங்க பில் க்ளிண்டனோ இல்லைனா டேவிட் லெட்டர்மேனோ, இல்லை ஓப்ரா வின்ஃப்ரீ யோ இல்லை. அவங்களுக்கெல்லாம் எதைச் சொல்லனும் எதைச் சொல்லக்கூடாதுனு தெரியும். அவங்க பேசுறாங்களேனு நீங்களும் எதையாவது சொல்லிப்புடாதீங்க! :)

    ReplyDelete
  9. வன்முறை, ஆபாசம் என்று அளவுக்கு மீறி சிலர் செயல்படுகிறார்கள். நாகரீகமில்லாத வார்த்தைகளாலும் அசைபோடுகிறார்கள். தப்பு செஞ்சவன் தண்ணி குடிச்சே ஆகணும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரைடேனியல்...
      விமர்சனம் எல்லை மீறும் போது இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாய் நடைபெறும்...உங்க கருத்துக்கு மிக்க நன்றி..

      Delete

  10. Mr. வவ்வால், Please read again what I have said in my section box. Please read it again, sir..If I did not put a comment in Tamil there may be several reasons that I don't have to explain to every one..! The blog owner is empowered to remove my comments in English...I have no problems with it; he is welcome to remove it.

    I also believe that Varun did not understand what I have said and the context in which I said. This sidetracks the issue and having seen what all were said about Clinton in Monica's case (when hearing was going on and even when he was testifying), these are peanuts.

    Did they say they would rape her and murder her? I did not know that.
    But I stand by what I have said and NOT the way you interpret. period.

    [[வவ்வால்11:55 PM, October 22, 2012

    நம்பள்கி,

    உங்க பதிவில தமிழில் எப்படி கமெண்ட் போடணும்னு ஏன் அடுத்தவருக்கு வகுப்பெடுக்கிறிங்க,இந்த நாசமா போனத தமிழில் தட்டச்சு செய்தால் சுளிக்கிடுமா?]]]

    ReplyDelete
    Replies
    1. **** Did they say they would rape her and murder her? I did not know that.***

      Well, apparently you dont seem to know all the abusive tweets she is talking about. You have just come forward to lecture, "Everything falls in the freedom of speech" .

      Why don't LEARN about all the "abusive tweets they twitted" before giving your suggestions to them?

      Delete
    2. நம்பள்கி,

      //.If I did not put a comment in Tamil there may be several reasons that I don't have to explain to every one..! //

      நீங்க சொல்வதும், உங்க பதிவில் சொல்லி இருப்பதும் புரிகிறது, ஆனால் இதே போல அடுத்தவர்களுக்கும் தமிழில் ,அல்லது முழுதும் ஆங்கிலத்தில் கருத்து சொல்ல முடியாத நிலை இருக்கலாம் அல்லவா?

      அடுத்தவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கும் போது ,இப்படி ஒரு கேள்வி எழுவது இயல்பே,அதனை சுட்டிக்காட்டவே சொன்னது. மற்றபடி இது உங்களுக்கும், பதிவருக்கும் உள்ள வசதியை பொறுத்து.

      எல்லாரும் தமிழில் எழுதும் போது இடையில் ஆங்கிலத்தில் வருவதை பெரும்பாலோனோர் படிக்க விரும்புவதில்லை,அதனை அப்படியே தாண்டி சென்றுவிடுவார்கள் என்பதை மட்டும் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

      Delete
    3. எல்லாரும் தமிழில் எழுதும் போது இடையில் ஆங்கிலத்தில் வருவதை பெரும்பாலோனோர் படிக்க விரும்புவதில்லை,அதனை அப்படியே தாண்டி சென்றுவிடுவார்கள் என்பதை மட்டும் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.
      --------------------------------------------------------

      Super வவ்வால் ji

      Delete
  11. இந்தியாவில் சைபர் கிரைம் சட்டம் ரொம்ப வீக், டிவிட்டரின் சர்வர் இந்தியாவிலேயே கிடையாது, அதனால் அதில் வரும் கருத்துக்கு ஒருவரை கைது செய்து வழக்குப் போட்டாலும் நிற்காது, இணையத்தில் இன்னவை தான் பேச வேண்டும், இன்னவை தான் பேசக் கூடாது எனவோ, இது தான் எல்லை என்றோ வரன்முறை பல நாடுகளில் இல்லை, இருக்கும் நாட்டில் ஒன்று கருத்துரிமை செத்துப் போயிருக்கும், அல்லது குழப்பமாகவே இருக்கும் .. கருத்துரிமையை நசுக்க ஆரம்பித்தால் அனைத்தையும் நசுக்க வேண்டி வரும், நாளை நீங்கள் எதையும் எழுதவே முடியாதுங்க ... ! அத்தோடு கடல் போலக் கிடக்கும் இணையத்தை எளிதில் மட்டறுக்கவும் முடியாது .. ஒன்னு இந்திய அரசு டிவிட்டரை தடை செய்ய வேண்டும், தடை செய்ய எந்தவித சட்ட முகாந்திரமும் இல்லை, இல்லை என்றால் டிவிட்டில் போடும் கருத்துக்கு எல்லாம் கைது செய்ய முடியாதுங்கோ.. நல்ல வக்கீலாப் பார்க்க சொல்லுங்க, இந்த கேஸ் நிற்காது ... !

    ஆனால் வர்பல் அபுஸ் - வார்த்தை வன்முறை சட்டப் பிரிவில் ஒருவேளை உள்ளே வைக்கலாம், ஆனால் அதுவும் இணையத்தில் சொன்னதுக்கு இந்திய சட்டம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது நீதிபதியின் கையிலே இருக்கு !!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இக்பால்.
      என்னோட கருத்து, கண்டிப்பாய் ட்வீட்ஸ்க்கு சென்சார் மாதிரி ஏதாவது கொண்டு வரணும், இணைய புரட்சியாளர்கள் பண்ணுற அலும்பு தாங்க முடியல பாஸ்..
      ///இந்த கேஸ் நிற்காது ... ! /// எனக்கும் இது தான் தோன்றுகிறது, ஆனால் எனக்கு தெரிந்த வரை இது தான் தமிழ்நாட்டில் முதல் கேஸ், முதல் கைது.

      Delete
  12. @வவ்வால்
    /துவித்தர், முகநூல், ஒரு செர்வரில் தான் சாட் ஆக பதிவாகிக்கொண்டிருக்கும், டெலிட் செய்துவிட்டால் மீண்டும் அதனை எடுக்க முடியாது ஒரே ஆதாரம் ஐ.பி மற்றும் ஸ்கிரீன் ஷாட் தான்./

    டிவிட்டரில் பப்ளிக்காக ஒன்றினை வெளியிட்டுவிட்டு டெலிட் செய்வது என்பதெல்லாம் சாத்தியமில்லை.நீக்கப்பட்ட டிவிட்களை பல இணையதளங்கள் சேகரித்து வருகின்றன. உதாரணமாக அமெரிக்காவின் பாராளுமன்ற நூலகத்தில் அனைத்து டிவிட்டுகளும் சேகரிக்கப்படுகின்றன. போன வருடம் ஹாரிஸ் என்பவரின் டெலிட் செய்யப்பட்ட டிவிட்களை தரும்படியும் இல்லாவிடில் டிவிட்டருக்கு பைன் போடுவதாக மிரட்டி அமெரிக்க மான்ஹட்டான் கோர்ட் வாங்கியது. இணைய புரட்சியாளர்கள் இணையத்தில் வாந்தி எடுக்குமுன் சற்றே எதிர்காலத்தை பற்றி யோசிப்பது நல்லது. ஏனெனில் பிறகு மனம்மாறி எப்படி கழுவிவிட்டாலும் நாத்தம் போகாது.

    இங்கு சின்மயியை மட்டும் அசிங்கப்படுத்தியிருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் ஒருவேளை எஸ்கேப் ஆகியிருக்கலாம். ஆனால் வருங்கால முதல்வர் கனிமொழி, அதைவிட தற்கால முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வரைக்கும் போய் நமக்கு நாமே திட்டத்தில் பெரிய ஆப்பாக சொருவி கொண்டிருக்கிறார்கள். இப்போது சின்மயி விட்டாலும் அதிகாரவர்க்கம் விடுமா என்பது சந்தேகமே. கேஸ் தோற்றாலும் ஒருவழி பண்ணித்தான் விடுவார்கள் என நினைக்கிறேன். இணையத்தில் அறச்சீற்றம் கொள்வோருக்கு ஒரு பாடமாக்க போலிஸ் எண்ணியிருப்பாதாக சொல்கிறார் ஒரு பத்திரிக்கை நண்பர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நந்தவனத்தான்,
      //இணைய புரட்சியாளர்கள் இணையத்தில் வாந்தி எடுக்குமுன் சற்றே எதிர்காலத்தை பற்றி யோசிப்பது நல்லது.//
      அப்படியே ஒத்து போகிறேன், எந்த அளவுக்கு ஒருவரை பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் என்கிற வரைமுறை தெரியாமல் இருப்பது தான் பிரச்சனையே..
      // கேஸ் தோற்றாலும் ஒருவழி பண்ணித்தான் விடுவார்கள் என நினைக்கிறேன். /// இது தான் நடக்கும், நடந்து கொண்டு இருக்கிறது.

      Delete
    2. நந்தவனம்,

      துவித்தர் செர்வரில் இருந்து பழைய துவித்தர்கள் எடுக்கப்பட்டால் மட்டுமே,சம்பந்தப்பட்டவர்களின் ஐ.பியுடன் காட்ட முடியும், மற்றவர்கள் அக்ரிகேட் செய்வதில் சம்பந்த்தப்பட்டவர்களின் ஐ.பி பதிவாகாது, துவித்தரின் செர்வர் ஐ.பி தான் இருக்கும்.

      துவித்தர் 3 மாதங்களுக்கு மேல் பழைய செய்திகளை வைத்திருப்பதில்லை எனப்படித்தேன், அவர்கள் நடைமுறை தெரியவில்லை.

      மற்றபடி ஸ்கிரீன் ஷாட் மட்டுமே ஆதாரம் என்பது ஆரம்ம்பத்தில் வழக்கினை எடுத்துக்கொள்ள மட்டுமே உதவும் ,தண்டனைப்பெற்று தர உதவாது.

      மேலும் முன்னரே சொன்னது போல மொபைல் மூலம் துவித்தர் போட்டிருந்தால் ,மொபைல் காணாமல் போய்விட்டது,நான் துவித்தரில் கமெண்ட் போடவில்லை என்று சொல்லி ,எளிதாக தப்பிவிடலாம்.

      ஆபாசமாக கமெண்ட் போட்டதை சரி என சொல்லவில்லை, ஆனால் பிரபலங்களாக இருப்பவர்கள், பொதுவான பிரச்சினைகளின் மீது மனம் போன போக்கில் பேசுவதற்கும் எல்லை இருக்கிறது.

      மீன்களை கொல்கிறார்கள் அது மட்டும் பாவமில்லையா என்பது ஒரு குரூரமான சொல்லாடல் இல்லையா?

      மீனின் உயிரும்,மீனவனின் உயிரும் சமம் என்பது இதன் பொருள். இதற்கு அன்பார்லிமெண்டரி சொற்கள் இல்லாமல் தகுந்த பதிலடி கொடுத்திருக்கலாம்.

      ஆனால் இந்த மக்கள் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிக்கொண்டான் போல பேசி பிரச்சினையை திசை திருப்பிவிட்டார்கள்.

      தீப்பொறி,வெற்றிக்கொண்டான் மேடை பேச்சில் இதனை எல்லாம் விட ஆபாசமாக பேசுவார்கள், இத்தனைக்கும் உளவு துறை அதனை குறிப்பும் எடுக்கும்,பேசியதின் முழுவிவரம் கொடுக்கமாட்டார்கள் . அதிக பட்சம் அவதூறு வழக்கு எனப்போடுவார்கள், பல மேடைப்பேச்சாளர்கள் மீது இத்தகைய அவதூறு வழக்குகள் நிலுவையில் இருக்கும், கைதெல்லாம் செய்வதில்லை.

      Delete
    3. //மற்றபடி ஸ்கிரீன் ஷாட் மட்டுமே ஆதாரம் என்பது ஆரம்ம்பத்தில் வழக்கினை எடுத்துக்கொள்ள மட்டுமே உதவும் ,தண்டனைப்பெற்று தர உதவாது.//

      மிக சரி வவ்வால்.. நானும் அப்படி தான் நினைக்கிறேன். ஜெயில் தண்டனை அவர்களுக்கு கிடைப்பது கடினமே. அனால் இந்த லிங்க்கை படித்து பாருங்கள். போலீஸ் சரியாக சரவண குமார் பெருமாள் என்பவரை ஐபி நம்பர் வைத்து லாக் செய்து உள்ளார்கள்....
      https://twitter.com/thanigaivelan/status/260525094764421121/photo/1/large
      தண்டனை என்பது வெறும் ஜெயில் தண்டனை மட்டும் அல்ல, அவர்களுக்கு ஏற்பட போகும் மன உளைச்சல், நேர வீரியம், சமுகத்தில் அவமானம், குடும்பத்தினருக்கு வேதனை இவை எல்லாம் தான் பெரிய தண்டனை. ஜஸ்ட லைக் தட் என்று யாராலும் எடுத்து கொள்ள முடியாது.

      "மீனவர்கள் மீன்களை கொல்வது உங்களுக்கு பாவமாய் இல்லையா" - சின்மயி
      சில ட்விட்டர்ஸ் இதை எப்படி சின்மயி சொன்னது போல் திரித்து கூறி உள்ளார் "மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்களே அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம்" இரண்டுக்கும் எனக்கு வித்தியாசம் இருப்பது போல் தெரிகிறது.

      மற்றபடி நீங்கள சொல்லுவது போல் ஆபாசமான வார்த்தைகளை இவர்கள் தவிர்த்து இருக்கலாம். உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி..

      Delete
    4. அந்தம்மாக்கு பாடத் தெரியும். ஏதோ கடவுள் கடவுள்னு சொல்லிண்டே இருக்கு. கூடவே அவங்க அம்மா வேற இருக்காங்க..

      மீனவர், ஈழத்தமிழர், இட ஒதுக்கீடு சம்மந்தமாகவெல்லாம் திறம்படப் பேச அதற்கு தகுதியோ அனுபவமோ கெடையாது.. ஏதோ சின்னப்பொண்ணு விபரம் அறியாமல் பேசுதுனு விட்டுட்டுப் போயிடலாம்.

      எனக்கென்னவோ நெறையா பேசி பஞ்சாயத்து வைக்க முயற்சித்ததுபோல இருக்கு. "பரிசல்" பேரெல்லாம் இதிலே வருது!!! இருந்தும் இவர்கள் அந்தப் பெண்ணோட மனநிலையை புரிந்துகொள்ளவில்லை. வேற வழிதெரியாமல் போலிஸிடம் சென்றிருக்கலாம்..

      இப்போ போலிஸிடம் போனபிறகு உடனே பரிதாபப்பட்டு வித்ட்ரா பண்ணினாலும் பிரச்சினை.

      * நம்ம ஆளுக ஒண்ணும் எங்களை கிழிக்க முடியலைனு பேச ஆரம்பிப்பார்கள்

      * போலிஸ் வேற எதுக்கு சும்மா வந்து கம்ப்ளையின் கொடுத்து எங்க நேரத்தை விரயம் செய்ற.. அப்புறம் வித்ட்ரா பண்ணூறனு எரிச்சல் அடையலாம்.

      See, if someone is not able to take it, you should leave her alone! That is the basic decency. Her political views are half-baked. SO WHAT? I dont think that we have many forward class people who accepts reservation. They wont accept but they keep quiet. Because she is immature she spit out words.

      நம்மாளுக இப்போ ரொம்ப அநாகரிகமாக நடந்துவிட்டு, அதைக் காரணமாகக் காட்டி ஊரைக்கூட்டி நியாயம் கேட்பதெல்லாம் எடுபடாது. She can have her opinion and share her opinion even if her opinion is "not correct". That is not a crime! But getting personal and threatening her is not the correct way to deal with that! Women get scared at times. They would not know how to deal with it. May be that is the case here.

      I dont believe it gives her good publicity. It will only give her bad publicity. But people claim that she uses this to get "publicity". I disagree on that! :)

      Delete
  13. இவ்ளோ மேட்டர் நடந்திருக்கா.... என்னதான் நடந்திச்சுய்யா என்று என்னைப்போன்றவர்களுக்கு அறிய தந்தமைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. வாங்க துஷ்யந்தன்,
      இந்த பஞ்சாயத்து ரொம்ப வருஷமா நடந்து கிட்டு இருக்கு பாஸ்.. இப்ப தான் போலீஸ் கேஸ் வரைக்கும் போய் இருக்கு.

      Delete
  14. Varun:
    As far as I have seen the tweets I did not see these...
    "that they would rape her and murder her." If they have said it is wrong!

    If these were NOT said by tweeters then you can not assume that I "meant those words" and then drag the argument further; and argue about freedom of speech. You just cannot bring a clause and tell me that I meant those.

    I am surprised by your WAY of argument! It looks as if you have to criticize me somehow and that too...for what I have NOT said.

    My question to you: Could you please point the tweet that "they would rape her and murder her." I would like to read it. If not let us put an end to this silly argument.

    Again, and finally, I stand by what I have said and NOT what you imagine!



    ReplyDelete
  15. ///Varun:

    1) As far as I have seen the tweets I did not see these...
    "that they would rape her and murder her."

    If they have said it is wrong!

    2) If these were NOT said///

    So, now ARE YOU ASSUMING (2) she is just making it up? They DID not say that???

    It seems to me you are ASSUMING and you are IMAGINING ..

    ---------------

    You also said in CPS blog that "there is five, where is the sixth one"

    Did you get the answer for that NOW? or NOT YET??

    ReplyDelete
  16. தம்பி வருண் நான் ஆத்துக்கு வந்திட்டேன்; அந்த ' rape her and murder her." ட்வீட் காட்டுங்கோ! மேலே பேசுவோம்!

    ReplyDelete
    Replies
    1. In her police complaint filed on October 18, Ms Sripada alleged that since January last year, "a few individuals have threatened to kill, rape and assault me on Twitter".

      http://www.ndtv.com/article/cities/chennai-professor-arrested-for-tweets-about-singer-chinmayi-283070

      Delete
  17. //ஆனால் அதுவும் இணையத்தில் சொன்னதுக்கு இந்திய சட்டம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது நீதிபதியின் கையிலே இருக்கு !!!//

    இக்பால், இப்பொழுது பரிந்துரையில் இருக்கும் புதிய மசோதா குறித்து வாசித்ததில், பெண்களை இழிவு படுத்தும் வீடியோக்களை (scam வீடியோக்கள் போன்றவை) இணைய/அலைபேசி வழியாகக் கடத்தினால் குற்றம் என்றிருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தணல்,
      இணையதளம் மூலம் பெண்களை இழிவுப்படுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் : போலீஸ் கமிஷனர் ஜார்ஜ். நீங்கள் சொல்லும் மசோதாவும் வர வேண்டும்..

      Delete
  18. இங்கு நிறைய பேர் என்னவோ சின்மயி சொன்ன கருத்துக்கு இவர்கள் எதிர்கருத்தை முன்வைத்ததும் அவர் வழக்கு தொடுத்துவிட்டார் என்பதைப் போல உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதையும் உளருவதற்கு முன் கொஞ்சம் அவர்கள் ஆபாசமாக என்னென்னவற்றை பேசியிருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வந்தால் தேவலாம். ராஜன், முதல்வர் குறித்து சொன்ன ஒரே ஒரு சாம்பிள் தருகிறேன். அந்தக் கேவலமான இலங்கை கார்ட்டூனை வைத்து, புரட்சித் தலைவிக்கு என்ன கலரில் இருக்கும் என்று மன்மோகன் சிங்கை கேட்டால் தெரியும் என்று ட்விட்டியிருந்தார்.

    அதுவும் இந்த பரிசல்காரன் செய்வதெல்லாம் படு கேவலமாக இருக்கிறது. குழந்தையைக் காட்டி பரிதாபம் சம்பாதித்து பிச்சை எடுப்பார்கள் இல்லையா அந்த மாதிரி பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அறிவு முன்பே இருந்திருக்கவேண்டும். சின்மயி குறித்து அசிங்கமாக ட்விட்டுகள் வெளியான போது இவரெல்லாம் என்னத்தைப் புடுங்கிக்கொண்டிருந்தார்? இன்று தனக்கு தனக்கு என்றவுடன்---

    பேசித் தீர்க்கலாம் என்று சின்மயியின் தாயார் இவர்களை தொடர்பு கொண்டதையடுத்து அவரையும் ஆபாசமாகப் பேசியிருந்தார்கள். இன்று என்னவோ அரெஸ்ட் என்றதும் நாளைக்கே அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்துவிட்டது போன்று கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

    All of these should undergo the stress and pressure of arrest and jail. Sinmayi may or may not win the case. But these guys and their families should undergo that pain and humiliation that they were trying to incite on sinmaiyi and her family - at least for this moment of time! Let this incident serve as a check on those who continuously target and pass such vulgar comments against a particular person in a public place!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தணல்,
      உங்க கருத்து தான் என் கருத்தும்...அப்படியே ஏற்று கொள்கிறேன்..

      Delete
  19. Mr. Varun:A question from your comment:
    Who is Ms Sripada? A new name surfaces here!
    Is Sripada and Shinmayi are two names for one person; please clarify!



    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ராஜ்:

      அந்த வாக்கியம் இப்படித்தான் போகுது..

      In her police complaint filed on October 18, Ms Sripada alleged that since January last year, "a few individuals have threatened to kill, rape and assault me on Twitter". She added that "there are aspersions cast on my character as well as a chronic steam of vulgar references and innuendoes even about my mother".

      மிஸ் ஸ்ரிபதா என்பது மிஸ் சின்மயி ஸ்ரிபதா தான். அவர் அம்மா இல்லை!

      Delete
    3. தவறு தான் வருன்..சின்மயி தாயார் பெயர் T.Padmhasini @Padmhasini.... தவறாக சொல்லி விட்டேன்..

      Delete
  20. நம்பள்கி, வருணைக் கேட்ட கேள்விக்கு நான் பதிலளிக்கலாம் தானே? சின்மயி ஸ்ரீபதா என்பது அவரது முழுப்பெயர்.

    ReplyDelete
  21. Thanks தணல் for your response!
    All I want is just someone to point the tweet here in this forum where she is "alleged to be raped and murdered."
    Please point that tweet here!
    Thanks!

    ReplyDelete
  22. "சில ட்வீட்டர்ஸ் எடுத்த ஆயுதம், சின்மயி தமிழர்களை பற்றியும், தமிழ் மீனவர்களையும் இழிவாக பேசினார் என்கிற குற்றச்சாற்றை சின்மயி மீது சுமத்தினார்கள். அதற்கு விளக்கம் குடுத்து சின்மயி வெளியிட விளக்க பதிவு, மற்றும் ஸ்க்ரீன் ஷாட் ."

    நீங்கள் முற்றும் முழுதாக சின்மயி பக்க பிழைகளை நியாயப்படுத்தி பதிவு போட்டிருக்கிறீர்கள். மீனவர்கள் குறித்தும், இட ஒதுக்கீடு தொடர்பாகவும் சின்மயி உதிர்த்த முத்துக்களுக்கு ஆதாரம் உண்டு.
    அதை நீங்கள் மறைத்து அந்த குற்றசாட்டுக்கு சின்மயி, சின்மயி அம்மா சொன்ன சல்லாப்புகளை போட்டு மறைத்திருக்கிரீர்கள்.
    அவர்கள் சொன்ன கருத்துகளை ஆதரிக்கிறீர்களா?
    ராஜன் லீக்ஸ் அண்ட் கோ இன் வார்த்தையாடல்களை நாம் எவரும் ஆதரிக்கவில்லை. கண்டிக்கிறோம்.

    ஆனால் அதேவேளை தான் ஒரு பிரபலம் என்றபடியால் எதையும் சொல்லலாம் என்ற சின்மயியின் திமிர்த்தனத்தையும் கண்டிக்கவேண்டும்.

    " இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். "

    என்னவொரு அப்பட்டமான பொய். "மீனவன் மீனை கொல்லுறான். மற்றவன் மீனவனை கொல்லுறான்" இதில் என்ன பிரச்சினை என்று போடிருந்தார்.(என்ன வக்கிரமான மனநிலை)

    சின்மயி போராட்டத்தில் இணைவது அல்லது இணையாதது அவர் விருப்பம். ஆனால் "மீனவன் மீனை கொல்லுறான். மற்றவன் மீனவனை கொல்லுறான்" என்று போடுவது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.

    இதேசமயம் ராஜன் அண்ட் கோ இன் வார்த்தைகள் மிக மோசமானவை. கண்டிக்கத்தக்கவை.

    முதலில் ஓரளவிற்கேனும் நடுநிலையாக எழுத முயலுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க Ethicalist E...
      சின்மயி மீனவர்களுக்கு எதிராக கூறியதாக சொல்லப்படும் கருத்துகள் தான் ஸ்க்ரீன் ஷாட் ஆக குடுத்து உள்ளேன், அதில் தவறு இருப்பது போல் எனக்கு தெரியவில்லை, தவறு இருப்பதாக சட்டம் கருதினால் நடவடிக்கை எடுக்கட்டும்.
      // "மீனவன் மீனை கொல்லுறான். மற்றவன் மீனவனை கொல்லுறான்"/// இது ராஜன் பரப்பிய பொய், ஸ்க்ரீன் ஷாட் காட்ட சொல்லுங்கள், பார்க்கலாம்..\
      யாரை வேண்டும் என்றாலும் அசிங்கமாய் பேசலாம் என்கிற பலரது என்னத்துக்கு இந்த சம்பவம் சம்மட்டி அடி..

      Delete
  23. // "மீனவன் மீனை கொல்லுறான். மற்றவன் மீனவனை கொல்லுறான்" இதில் என்ன பிரச்சினை என்று போடிருந்தார்.(என்ன வக்கிரமான மனநிலை)//

    முதலில் சின்மயி என்ன போட்டிருந்தார் என்று நேரடியாகப் படித்துவிட்டு வாரும். இன்னார் சொன்னார் அன்னார் சொன்னார் என்று கேட்டதை இங்கே போடாதீர்கள். சின்மயியின் ட்விட்டுகளை யாரும் இங்கே நியாயப்படுத்தவில்லை. அதற்கு பதிலாக போடப்பட்ட திமிர்த்தனம் நிறைந்த பாலியல் வக்கிரங்களையே பதிவர் கண்டித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. "மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்களே அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம்" என்ற இந்த வசனம் 'இந்து' என்.ராம் பேசுவதாக 'வினவு' இணையத்தில் 2009ல் வெளியாகிய 'என் ராமாய ணம்' என்ற வீதி நாடகப் பிரதியில் வருகிறது.

      Delete
  24. ***All I want is just someone to point the tweet here in this forum where she is "alleged to be raped and murdered."
    Please point that tweet here!
    Thanks!***

    I cant pull out the tweets for you if you expect me to. I can only show the accusation. It is clearly said what I claimed has been said /alleged by Chinmayi.

    If you dont believe her, SAY IT LOUD, please!

    Can you SAY that YOU DONT BELIEVE her????

    ReplyDelete
  25. துள்ளிய மாடு பொதி சுமக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க Rizi..அது தான் இப்பொழுது நடக்கிறது..

      Delete
  26. இந்தாங்க நீங்க கேட்ட ஸ்க்ரீன் சாட்

    http://twitter.com/MaruPurujothTha/status/260190510096982017/photo/1/large

    ReplyDelete
    Replies
    1. பாஸ்,
      நான் அவங்களுக்கு சப்போர்டா எழுதுறேன் என்று நினைக்க வேண்டாம்.. நீங்கள் குடுத்த ஸ்க்ரீன் ஷாட்டின் மொழி பெயர்ப்பு இது தான் என்று நினைக்கிறன்
      "மீனவர்கள் மீன்களை கொல்வது உங்களுக்கு பாவமாய் இல்லையா" - சின்மயி
      ராஜன் இதை எப்படி திரித்து கூறி உள்ளார் என்றால் "மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்களே அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம்" இரண்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரிகிறது..

      Delete
    2. இரண்டும் வித்தியாசம் தான். ஒன்று நெஞ்சில் குத்துவது மற்றையது முதுகில் குத்துவது.

      Delete
    3. இரண்டும் வித்தியாசம் தான். ஒன்று நெஞ்சில் குத்துவது மற்றையது முதுகில் குத்துவது.

      சின்மயி முதுகில் குத்தியதை ராஜன் நெஞ்சில் குத்தியதாக பொய் கூறியுள்ளார். (இரண்டு குத்திலும் உயிர் போகும் )

      Delete
    4. சாரி பாஸ்...நீங்க இந்த பிரச்சனையை வேற கண்ணோட்டத்தில் பார்க்கிறீங்க..என்னோட பார்வைக்கும் உங்க பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. :)
      உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி.. :)

      Delete
  27. maamallan விமலாதித்த மாமல்லன்
    நான் சைவம். அதனால மீனை சாவடிக்கிறவன் இல்லை. மீனவன் மீனை சாவடிக்கிறான். எனவே மீனவனை இலங்கைக்.@awpoet ங்கோத்தா போடாங்கோ #TNfishermen

    சொன்னது அதாவது தற்குறிப்பேற்ற அணியாக சொன்னது மாமல்லன் என்பவர்... சின்மயி அந்த சமயம் ஏதோ மெக்சிகன் உணவு விடுதியில் தன் பாடலைக் கேட்டுக் கொண்டே உணவருந்திக் கொண்டு இருந்திருக்கிறார் அப்போது வந்து மீனவர் பிரச்சினை பற்றி சொன்னதும் அவர் காமெடியாக தான் சொல்லி இருப்பார் என நம்பிக்கை !

    ReplyDelete
    Replies
    1. ஸ்க்ரீன் ஷாட்டின் மொழி பெயர்ப்பு இது தான் என்று நினைக்கிறன்
      "மீனவர்கள் மீன்களை கொல்வது உங்களுக்கு பாவமாய் இல்லையா" - சின்மயி
      ராஜன் இதை எப்படி திரித்து கூறி உள்ளார் என்றால் "மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்களே அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம்" இரண்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரிகிறது..

      Delete
  28. "மீனவர் பிரச்சினை பற்றி சொன்னதும் அவர் காமெடியாக தான் சொல்லி இருப்பார் என நம்பிக்கை !"

    நீங்கள் இழவு வீட்டில் நகைசுவை பேசுவீகளா?
    http://twitter.com/TheMidZone/status/259847954318364672/photo/1/large

    ReplyDelete
  29. ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்

    ReplyDelete
  30. "மீன்களை கொல்கிறார்கள் அது மட்டும் பாவமில்லையா என்பது ஒரு குரூரமான சொல்லாடல் இல்லையா?

    மீனின் உயிரும்,மீனவனின் உயிரும் சமம் என்பது இதன் பொருள்."

    I agree with you

    ReplyDelete
  31. இந்த விவகாரம் குறித்து இந்த பதிவின் மூலமும் பின்னூட்டங்கள் மூலமும் தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜி..உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி..

      Delete
  32. உன் சாதி என்ன என்று விபரம் கெட்டவர்கள் நேரடியாக கேட்பார்கள். விவரமானவங்க நேரடியா கேட்காம சுற்றி வளைத்து கேட்டு என்ன சாதி என்பதை கண்டுகொள்வார்கள். நேரடியா கேட்கவில்லை என்பதற்காக விவரமானவனை தூக்கி வைச்சு கொண்டாடுவது எவ்வளவு தவறோ, அதே போன்று தான் சின்மயியும் மன்னிக்க ஸ்ரீபதாவும் செய்துள்ளார். கைது என்பது மோசமான நடவடிக்கை யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று மறைமுகமாக மிரட்டுவது. ஐயங்காருக்கு எதிரா "இப்போ" யாரும் கருத்து சொல்லாதிங்கப்பா.

    ReplyDelete
  33. வாங்க குறும்பன்...
    இங்க பதிவுல ஜாதி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை..நீங்க பொதுவா சொல்லி இருக்கிறதா நான் எடுத்து கொள்கிறேன்..உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ராஜ், சாதி பற்றி கூறியது எப்படி விவரமா பேசறது என்பதை கூறத்தான். அதே போன்று தான் தான் மீன்கள் தின்பதில்லை, அதை வெட்டுவதுமில்லை என்று விவரமா கூறியிருக்கிறார் (ஒப்பீட்டுக்காக கூறியது). ஐயங்கார் என்பது தெரிந்தே பயன்படுத்தியது. அவர் தன் சாதியை சொல்ல காரணம் என்ன? ஜெயலலிதாவும் ஐயங்கார் நானும் ஐயங்கார் நாங்க ஒரே சாதி காரங்க என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்தத்தான் (நேரடியாக சொல்லாமல் குறிப்பால் உணர்த்தி விட்டார், விவரமானவங்க இல்லையா). எனக்கு அவர் இன்ன சாதி என்று எப்படி தெரியும்? அவர் தான் தான் ஐயங்கார் வீட்டுப்பெண் என்று இந்த விவகாரத்துக்குப்பின் சொல்லியிருந்தார். சின்மயி மாற்றான் படத்தில் அகர்வாலுக்கு குரல் கொடுத்தவர் என்று படித்தேன் இதற்கு முன் அவரை பற்றி அவ்வளவு தான் எனக்கு தெரியும்.

      Delete
    2. ஆகவே இது அய்யங்கார் vs அய்யங்காரல்லாதோர் பிரச்சினை மாதிரி தெரியுது.

      Delete
    3. வாங்க ஐயா..உங்க கருத்துக்கு மிக்க நன்றி...

      Delete
  34. ராஜ் said
    //"மீனவர்கள் மீன்களை கொல்வது உங்களுக்கு பாவமாய் இல்லையா" - சின்மயி
    ராஜன் இதை எப்படி திரித்து கூறி உள்ளார் என்றால் "மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்களே அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம்" இரண்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரிகிறது..//

    ராஜ் உங்கள் புரிதலில் சிறு தவறு உள்ளது. தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் அதை தடுக்க கையொப்பம் இடுங்கள் என்று கூறும்பொழுது //"மீனவர்கள் மீன்களை கொல்வது உங்களுக்கு பாவமாய் இல்லையா" // என்று சின்மயி கூறுவதன் பொருள் உங்களுக்கு புரிகிறதா இல்லையா? அது ராஜன் திரித்து கூறுவதாக கூறப்படும் " அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம்" என்று பொருள் தருவதாகத்தானே உள்ளது?
    ----
    சின்மயி இவ்வாறு கூறியதும் தவறுதான் ......அவர்கள் ஆபாசமாக எழுதியதும் தவறுதான்.
    --மற்றொரு தளத்தில் இது பற்றி நான் இட்ட பின்னூட்டம்..
    =====
    யார் ஒருவரையும் ஆபாசமாக பேசுவது தவறுதான். ஆனால் இது தமிழகத்தில் மேடைகளிலும் சரி இணையத்திலும் சரி சில இடங்களில் சர்வ சாதாரணமாக நடக்கின்றது. இதை அனைவருமே நிறுத்த வேண்டும்.

    சின்மயி பற்றி ஆபாசமாக எழுதியவர்களை கண்டிக்கும், காவல் துறையின் உதவியுடன் தண்டிக்கும் உரிமை அவருக்குண்டு.

    ஆனால் அவர்களுக்கு எப்படியாவது தண்டனை வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிற பிரபலங்களையும் ஆபாசமாக திட்டியதை இங்கே ஆதாரமாக காட்டுவது போல் காவல் நிலையத்திலும் அவர்கள் காட்டியிருந்தால் இது நல்ல செயல் அல்ல. இது கண்டனத்திற்கு உரியது. அவர்கள் சின்மயி சம்பந்தமான ஸ்க்ரீன்ஷாட் தான் கொடுக்கவேண்டுமே தவிர மற்றவற்றை அல்ல. இது பொது நல வழக்கு அல்ல. பிரபலங்களை ஆபாசமாக திட்டியதாக கைது செய்யவேண்டும் என்றால் பலரை கைது செய்யலாம்.

    தமிழக மீனவர்கள் கொலைகளை பற்றி பேசும்பொழுது சின்மயி "மீன்களை கொல்வது பாவம் இல்லையா" என்று கூறியதும்
    "நாங்கள் மீன்களை துன்புருத்துபவர்களும் இல்லை,வெட்டி சாப்பிடுபவர்களும் இல்லை" என்று கூறியதும் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. விருப்பம் இருந்தால் அதில் கையொப்பம் இடலாம் அல்லது விட்டுவிடலாம் அதற்காக இந்த கருத்து சரியானது அல்ல.

    ஆபாசமான வார்த்தைகளை அனைவரும் அறவே தவிர்க்க வேண்டும். இணையத்திலும் சரி, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி. இதுவே நாட்டிற்கும், வீட்டிற்கும், தமிழிற்கும் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. @ R.Puratchimani உங்க கருத்துக்கு மிக்க நன்றி..
      //ஆனால் அவர்களுக்கு எப்படியாவது தண்டனை வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிற பிரபலங்களையும் ஆபாசமாக திட்டியதை இங்கே ஆதாரமாக காட்டுவது போல் காவல் நிலையத்திலும் அவர்கள் காட்டியிருந்தால் இது நல்ல செயல் அல்ல.///
      எந்த ஸ்க்ரீன் ஷாட்ஸ் சின்மயி தரப்பில் இருந்து குடுக்க பட்டது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கருத்து சுதந்திரத்திற்க்கும் ஆபாசத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளது..அது தெரியாதல் தான் இந்த பிரச்சனையே. நிறைய பேர் நான் பார்த்த வரையில் இணைய சுதந்திரத்தை மிகவும் தவறாகக் பயன்படுத்திகிறார்கள்.. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல்.. :)
      சின்மயி கூறிய கருத்தில் தவறாக இருந்தால் அதுவும் கண்டிக்கத்தக்கது தான்..

      Delete
  35. மீனவர்கள் மீன்களை கொல்வது உங்களுக்கு பாவமாய் இல்லையா"- கொல்லப்படும் மீனவர்களுக்கு ஆதரவு கேட்டு வருபவர்களிடம் இப்படி ஒரு சொல்லாடல் முன்வைக்கப் படுகிறது....
    இதை அந்த சூழ்நிலையில் எப்படி அர்த்தப் படுத்திக் கொள்ளவேண்டும்?
    ஜீவ காருண்ய சங்கத்தின் ஏதேனும் ஒரு விழாவில் அவர் இப்படி பேசியிருந்தால் அது நியாயம்...

    நான் கேட்பது..... அவரின் இந்த சொல்லாடலை இந்த பதிவிட்ட நீங்கள் எப்படி அர்த்தப் படுத்திக் கொண்டீர்கள் என்பதுதான்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க அறந்தாங்கியான்...
      சின்மயி கருத்தை அவர் அவர் பார்வைக்கு எப்படி தெரிகிறதோ அப்படி வைத்து கொள்ளட்டும்.. என்னை பொறுத்த வரை அந்த கருத்தில் தவறு இருப்பதாய் தெரியவில்லை.. சரியாக தான் சொல்ல பட்டு உள்ளது...எந்த உள்நோக்கமும் அந்த கருத்தில் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை...உங்க கருத்துக்கு மிக்க நன்றி..

      Delete
    2. Raj.... you seem to be very silly. By the way, we know what is your motive of writing such a biased one sided post....

      Delete
  36. வாங்க Unknown...உங்க கருத்துக்கு மிக்க நன்றி...
    இந்த விவகாரத்தில் நீங்கள் முன்று விதமான நிலைபாட்டை எடுக்கலாம்..
    1) சின்மயி மீனவர் பற்றியும், இட ஒதுக்கீடு பற்றியும் தவறாக பேசினார். அதனால் அவர் செய்தது பெரிய தவறு. ட்விட்டர்ஸ் பேசியது தவறே இல்லை..
    2) சின்மயி சில கருத்துகளை சொன்னார்.. அதற்கு சில ட்விட்டர்ஸ் ஆபாசகமாக பதில் கூறினார்கள். அதற்க்கு சின்மயி போலீஸில் புகார் குடுத்து உள்ளார். ட்விட்டர்ஸ் ஆபாசமாக பேசியது தவறு. பொதுவில் பேசும் போது சிறிது நாகரிகமாக பேச வேண்டும். - இது தான் நான் எழுதியது..
    3) சின்மயி, ட்விட்டர்ஸ் இருவர் மீதும் தவறு. சின்மயி போலீஸ்யிடம் போய் இருக்க கூடாது. சவுக்கு தளத்தில் இப்படி தான் எழுதி உள்ளார்கள்..

    நான் எடுத்த நிலைப்பாடு 2).. நான் எடுத்த நிலைப்பாடு உங்களுக்கு பிடிக்கவில்லை போல..sorry for that.. :(
    பிறகு நாகரிமாக உங்க கருத்தை கூறியதற்கு மிக்க நன்றி...

    நான் ஏன் 2) நிலைப்பாட்டை எடுத்தேன் என்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நான் http://hollywoodraj.blogspot.in/2012/08/blog-post_29.html பதிவை எழுதிய நாளில் இருந்தது தினமும் ஒருவன் IST டைம் ராத்திரியில் வந்து மிகவும் ஆபாசமாக என்னுடிய பதிவில் கமெண்ட் போட்டு கொண்டு இருந்தான். fake id கொண்டு தான் ஆபாசமான கமெண்ட் போடுகிறான், என்னால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை.. உண்மையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. வெறும் blogger profile id வைத்து ஒருவனை கண்டு பிடிக்க முடியவில்லை..comment moderation வைத்தாலும் அந்த ஆபாச கமெண்ட்ஸ் நான் படிக்க வேண்டியது உள்ளது. அதனால் தான் ஆபாசமாக பேசிய சில ஆட்கள் மீது நடவடிக்கை பாய்ந்த உடன் மிகவும் சந்தோஷ பட்டேன்.. என் பதிவில் கமெண்ட் போடுபவன் நிறுத்துவான் என்று. கடந்த நான்கு நாட்களாக கமெண்ட் எதுவும் வருவது இல்லை...

    ReplyDelete
    Replies
    1. Dear Raj,

      Thank your responsible reply. I thought you would be annoyed with my views hence i have not expressed my thoughts on your article fully. I am aware of the fact that how people harass and cause depressive mental agony when they differ from one's thoughts and concepts. I still feel that your post is one sided and biased despite with the fact that there is nothing exists like neutral (nadunilai). You have failed to see the nuance of such an upper handed imperialistic power politics of the people who dominate the society and cause all silent evils that keeps them in safe zone.

      However, the reactive expression of Rajan and his peers has to be seen as a moral rage or the LOUD CRY of the voice of the suppressed for centuries when such attacks are given in such irresponsible way. The singer and her mother keep saying that they have helped the education of the Eelam victims and generated money etc... but have you ever heard about such events or have they provided any authentic evidence for their claims (when they provide screen shots of irrelevant matters like - the abusive comments against PM and CM to supplement their stand to construct that Rajan and co are the filthy people).

      Do you agree HIGHyangar concept projected by the singer? Dont you see the poisonous impact of such silent notorious noxious descriptions on her blog? Dont you think this is such an abusive atrocity against the suppressed people who were/are not treated equally for thousands of years?

      I firmly say that I support Rajan, because, he has not given abusive attacks in an anonymous way. Most of the screen shots given by them are not related to the other person who was arrested. So what this mean? Any one who supports Rajan would be also sent to jail. Dont you think such a message is a social threat which is so many folds more serious than the abusive words used by Rajan and co?

      Finally, have you ever know the Rajan's community? Nobody knows because he has no pride on his caste but in contrary, look into the statement of the singer and how she try to portray her majestic background? She is not a tamilian (please look her second name). However, that is not an issue here. Why should she need to establish "maravar seemaiyil vantha" "tamil valartha".

      By now there are several articles available in the blog world that gives the ground reality? Will you write an analytical article based on these realities? You wont, because, your thoughts are one sided.

      PS:
      My apologies for not writing this in tamil.
      I also belong to the so called upper class but there is nothing to portray
      Have you heard the vindictive talk of the singer's mother?
      Have you seen the twits of Mahesh Murthy and he openly declare that the singer is a liar.
      Constructing illuminating image with ornamental lies are always alluring this world. You are not an exception.
      My apologies, if you were hurt with any of my above views. I mean it because I deeply realized them.

      Delete
  37. சின்மயியின் மீனவர்கள் தொடர்பான கருத்துக்கு ஆதாரம்
    http://goo.gl/ACN6I

    ReplyDelete
  38. நானும் டிவிட்டரில் இருக்கிறேன் அவர்களின் ட்விட்களை சில காலமாக பார்த்து வருகிறேன் ....சிலபேர்களின் கருத்துக்கள் ஆபாசத்தின் உட்சம் தான் ,இந்த நடவடிக்கை அனைவருக்கும் நல்ல பாடாமாக இருக்கும் என நம்புகிறேன் ...

    ReplyDelete
  39. மீண்டும் ஒரு நற்பணியை செய்து உள்ளீர்கள்...ராஜ்.
    நன்றி.

    இனி ஆபாச,வக்கிர சிந்தனை படைத்த போலி ஐ.டி. கிரியேட்டர்களுக்கு மரண பயம் இருக்கும்.

    ReplyDelete
  40. எதுக்காக இப்படி ஒரு முட்டால் தனமான தவறுகளை செய்கிறோம் நாம்..? எந்த ஒரு விசயத்தையும் இப்படி தேவைக்கு என்றில்லாமல் வீணாக விரையம் செய்துகொண்டிருக்கிறோம்..

    இணையம் ஒரு நல்ல படைப்பு,,
    இப்படி வீண் பிரச்சனைகளை இதனால் நடத்துவது ஒரு முட்டாள் தனமான விசயம்,,

    அவல் தின்னத்தான் லாயாக்கா நாம்..?

    வருத்தமாக இருக்கிறது சகோ,,

    இரு தரப்பிலும் நடந்த விசயங்களை கண்டாவது, இனி சமூக வலைத்தளங்களையும், வலைப்பூவையும் சரியாக பயன்படுத்த விளிப்புணர்வு எழ வேண்டும்,,,

    ReplyDelete
  41. நான் டிவீட்டரில் இல்ல நண்பா..இந்த விஷயம் பற்றி ஆங்காங்கே படித்தாலும், இங்கதான் விளக்கமா படிக்கிறேன்..ஒரு நல்ல காரியம் பண்ணிருக்கீங்க ராஜ்..வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete
  42. ராஜ்: நீங்கள் ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
    கிடைக்கும் பதில்: யோவ்! நீ ஏன் அந்த தளத்திற்கு போற? போய்யா வந்துட்டான் பெரிசா?

    ஜனநாயக நாட்டில் எல்லோர் கம்ப்ளைன்ட் மேலேயும் நடவடிக்கை உண்டு...இந்தியாவில் அது இல்லை...

    ReplyDelete