Friday, August 16, 2013

555 (2013) - உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது !!!

கண்ணாமுச்சி ஆட்டம் காட்டும் முகம் தெரியாத வில்லனிடம் இருந்து தனது காதலை கதாநாயகன் காப்பாற்றும் கதை தான் 555.

மோசமான கார் விபத்தில் மாட்டும் அரவிந்த் (பரத்) மன ரீதியாக பாதிப்பு அடைகிறார். விபத்திருக்கு முன்பு தனக்கு லியானா என்கிற காதலி இருந்ததாகவும், விபத்தில் அந்த காதலி இறந்து விட்டதாகவும் நம்பி வாழ்கிறார். அவரை சுற்றி இருக்கும் சைக்கியாட்டிரிஸ்ட் டாக்டரும், அவரது அண்ணன் சந்தானமும் லியானா என்கிற பெண் இல்லவே இல்ல, பரத்  இல்லாத ஒன்றை இருப்பாதாய் கற்பனை செய்து கொண்டு வாழ்கிறார் என்று அடித்து சொல்கிறார்கள். அவர்களது கருத்திருக்கு வலு சேர்ப்பது போல நிறைய சம்பவங்கள் நடைபெறுகிறது. 

சிறிது சிறிதாக பரத் தனக்கு ஏதோ பிரச்னை என்பதை உணர்கிறார். தன் பிரச்சனையை உணர்ந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பும் போது தன்னை சுற்றி நடப்பது எல்லாமே நாடகம் என்பதை அறிந்து கொள்கிறார். யார் அந்த நாடகத்தை நடத்துகிறார்கள் என்பதை தேடி செல்லும் போது அவருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. தன்னை சுற்றி பின்ன பட்ட முடிச்சுகளை பரத் அவிழ்க்கும் போது முகம் தெரியாத வில்லன் கும்பல் அவருக்கு இடைஞ்சல் குடுக்கிறது. யார் அந்த வில்லன், அவன் ஏன் பரத் வாழ்கையில் விளையாட வேண்டும் என்பதை பர பரப்பாய் சொல்ல ஆசை பட்டு ஏனோ தானோ என்று சொல்லும்  படம் தான் 555.


படத்தில் வரும் சில தீடீர் திருப்பங்கள் நம்மை அட போட வைக்கின்றன. ஆனால் படத்தின் மிக பெரிய லெட் டவுன் வில்லன் மற்றும் அவனது படு மொக்கையான பிளாஷ்பேக் தான். நிறைய ஹைப் ஏற்றி விட்டு கடைசியில் படத்தை சப் என்று முடிந்து விடுவது தான் இயக்குனர் செய்த மாபெரும் தவறு. இதே குறை தான் "சமர்" படத்திலும் இருந்தது. இதிலும் அதே தவறு இருப்பதால் நல்ல படமாக வந்திருக்க வேண்டிய படம் சுமாருக்கும் கீழ் லிஸ்டில் சேர்ந்து விட்டது. 

இயக்குனர் சசி, சொல்லாமலே,ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ போன்ற மென்மையான படங்களை குடுத்தவர். முதல் முறையாக அக்ஷன் த்ரில்லர் முயற்சி செய்து உள்ளார். கதையை சரியாக தான் தெரிவு செய்து உள்ளார், ஆனால் கதைக்கான கதாபாத்திர தேர்வில் ஆரம்பிகிறது இவரது முதல் சறுக்கல். முதல் மற்றும் இரண்டாம் கதாநாயகி, வில்லன் மற்றும் அவனது அடியாட்கள் கூட்டம் என்று படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மிகவும் மோசமான தேர்வு.

 ஹீரோ மற்றும் செகண்ட் ஹீரோயின் காபி டேயில் சந்திக்கும் அந்த காட்சி டென்ஷனை ஏற்றி பர பரப்பாய் முடிந்து இருக்க வேண்டியது, ஆனால் இயக்குனர் அந்த காட்சியை படு மொக்கையாய் ஆரம்பித்து சப்பென்று முடித்து இருப்பார்.அதே போல் கிளைமாக்ஸ் சண்டை காட்சி, எப்படா சண்டை முடியும் என்று ஏங்க வைத்து இருப்பார் இயக்குனர். இவருக்கும் அக்ஷன் படங்களுக்கும் வெகு தூரம் என்பதை இந்த படம் நிருபித்து உள்ளது.


பரத் - 8 பேக்ஸ் வைத்து உள்ளார், படத்தின் ப்ரோமோஷனுக்கு மட்டுமே பயன்படுத்த பட்டு இருக்கிறது. படத்தின் கதைக்கு அந்த உடம்பு தேவையே இல்ல. முதல் பாதியில் காலேஜ் ஸ்டுடென்ட் போல் வருகிறார். ஒரு காட்சியில் மொட்டை வேறு அடித்து நடித்து உள்ளார்.  உடம்பை வளர்க ஜிம்யில் செலவு செய்த நேரத்தில் எங்காவது கூத்து பட்டறையில் சேர்ந்து நன்றாக நடிக்கவும் பயற்சி எடுத்து இருக்கலாம். "சின்ன தளபதி" என்று டைட்டிலில், இயக்குனர் பேரரசு படங்கள் முலம் டெரர் அப்நார்மல் படங்கள் 
குடுத்து கொண்டு இருந்தவர், இந்த படத்திருக்கு பிறகு நார்மல் படங்கள் குடுப்பார் என்று நம்புவோமாக. அடுத்த படத்தில் சன்னி லியோனியோட ஜோடி சேர மட்டுமே அவரது 8 பேக்ஸ் உதவி செய்து உள்ளது. 

கதாநாயகி மிருத்திகா. இவரை பற்றி நாம் சொல்லும் முன்பு சந்தானமே சொல்லி விடுகிறார். வழக்கமான் தமிழ் லூசு பெண் கதாபாத்திரம். நடிப்பு எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்பார் போல். வாய் அசைப்பும் படு மோசம். சீவிங் கம் மென்று கொண்டு இருந்திருப்பார் போல. இந்த சுமார் முஞ்சி பிகர்க்கு தான் படத்தில் இவ்வளவு அலப்பறை என்று என்னும் போது அட போங்கபா என்கிற எண்ணம் தான் வருகிறது. 


இவர் மீது பரத்திருக்கு காதல் வருவதற்கான் காரணம் ஒன்றுமேயில்லை. அதே போல் பரத்திடம் அதிசிய சக்தி இருப்பதாய் நம்புவதலாம் டூ மச். இப்படிப்பட்ட அறிவாளியை விழுந்து விழுந்து காதலிப்பார் ஹீரோ.

அடுத்து சந்தானம், பல படங்களை காத்தது போல் இந்த படத்தையும் காப்பற்றி உள்ளார். முதல் முறையாக குணசித்திர நடிப்பை முயற்சி செய்து உள்ளார் என்று எண்ணுகிறேன். தன்னுடைய ட்ரேட்மார்க் டயலாக் டெலிவரி முலம் நிறைய இடங்களில் ஸ்கோர் செய்கிறார். 

கடைசியாக வில்லன், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மிகவும் தவறான தேர்வு. பாடல்கள் படம் எப்போது எல்லாம் நொண்டி அடிக்கிறதோ அப்பொழுது எல்லாம் கரெக்டாக வந்து நமது பொறுமையை சோதிக்கும். அதுவும் அந்த இழவு பாடல், கொடுமை ரகம். பரத் உடம்பை ஏற்ற எடுத்து கொண்ட நேர்த்தில் சசி திரைக்கதை இன்னும் நன்றாக செதுக்கி இருந்தால்,நமக்கு மற்றும்மொரு கஜினி கிடைத்து இருக்கும், திரைகதையில் சறுக்கி சமர் லிஸ்டில் சேருகிறது "555"

555 (2013) - உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது !!!

My Rating: 6.4/10.


Friday, August 09, 2013

தலைவா (2013) - சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!!

தலைவா பல தடைகளை (!!) தாண்டி தமிழ்நாட்டுல ரீலீஸ் ஆகாம வெளிநாட்டில் ரீலீஸ் ஆகி இருக்கிறது. ஒரு படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்ப இப்ப படக்குழுவினர் எத்தனையோ புது புது ஐடியாவுல ஸ்டன்ட் அடிச்சு பார்த்து இருக்கேன், சமிபத்தில் தங்க மீன்கள் ராம் கூட புது விதமா "படம் ரீலீஸ் பண்ண காசு இல்லைங்கிற" மாதிரி டீசர் வெளியீட்டு இருந்தார், ஏதோ இப்ப தான் அவருக்கு படம் எடுக்க காசு தேவை என்கிற ரகசியம் தெரிஞ்ச மாதிரி. ஆனா அது கூட நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பற்றிய ஆர்வத்தை உண்டு பண்ணியது. ஆனா தலைவா பட குழுவினர் அடிச்ச ஸ்டன்ட் பழைய எம்.ஜி.யார் காலத்து "தியேட்டர்ல பாம் வைப்போம்" டெக்னிக், அதை பார்த்தவாது நாங்க கொஞ்சம் உஷார் ஆகி இருக்கனும், ஆனா விதி யாரை விட்டுச்சு. பப்ளிசிட்டி ஸ்டன்ட் மட்டும் பழைய எம்.ஜி.யார் காலத்து டெக்னிக் இல்ல, படமும் அரத பழசான கதையை கொண்டு வெளி வந்து இருக்கு. நாங்களா வான்டட்டா போய் வண்டியில ஏறுனது எங்க தப்பு தான். 


நான் பெரிய விஜய் பேன்னாக இல்லாட்டியும், விஜய்யோட எல்லா படத்தையும் முத நாள் பாத்திருவேன், கடந்த அஞ்சு வருஷமா ரீலீஸ் ஆனா எல்லா விஜய் படத்தையும் முத நாள் பார்க்கிற பாக்கியம் கிடைச்சு இருக்கு. துப்பாக்கி மட்டும் மிஸ் ஆகிருச்சு, அதுக்கு காரணம் அப்ப நான் சொந்த கிராமத்துல இருந்தேன், படத்துக்கு தாறுமாறான கூட்டம். எங்க ஊருல ஹவுஸ் புல் போர்டு மாட்டுன வெகு சில படங்களில் துப்பாக்கியும் ஒன்னும். வில்லு, வேட்டைக்காரன், சுறான்னு விஜய் மொக்கை மொக்கையா படம் குடுத்துகிட்டு இருந்தப்பவும் நான் விடாம விஜய் மேல நம்பிக்கை வச்சு படத்துக்கு போய்கிட்டே இருந்தேன். கடைசியா காவலன், நண்பன், துப்பாக்கின்னு நல்ல படங்கள் குடுக்க ஆரம்பிச்ச விஜய் மறுபடியும் பேக் டூ ஸ்குயர் ஒன் மாதிரி, அவர் அப்பாவோட அரசியல் பேராசையில மோசமான மொக்கை படத்தை "தலைவா" மூலமா குடுத்து இருக்கார். நான் இது வரை பார்த்த விஜய் படங்களிலே "தமிழன்" என்கிற காவியத்தை தான் டாப் வொர்ஸ்ட் லிஸ்ட்ல வச்சு இருந்தேன், இப்ப அந்த இடத்தை அன்ன போஸ்ட்ல "தலைவா" பிடிச்சு இருக்கு. வாழ்த்துக்கள் விஜய்.

 இன்னைக்கு கூட சாண்டியாகோவுல "தலைவா" ரீலீஸ் ஆகுமா இல்லையா என்கிற சந்தேகம் இருந்தது, கடைசி நேரத்துல தான் படம் ரீலீஸ் என்கிற அறிவிப்பு தியேட்டர்ல இருந்து வந்தது. எங்க கம்பெனி தமிழ் மக்கள் மொத்த கூட்டமும் தியேட்டர்ல தான் இருந்தது, இத்தனைக்கும் நாளைக்கு ஆபீஸ் வேற. விஜய்க்கு இங்க இருக்கிற ரசிகர் கூட்டம் உண்மையிலே பெரிய ஆச்சிரியமா விஷயம் தான். அவங்களை மனசுல வச்சுகிட்டாவது விஜய் இது மாதிரியான படங்களை தவிர்ப்பது நல்லது. 


படத்தோட கதையை கொஞ்சம் சினிமா ஞானம் உள்ளவங்க ட்ரைலர் வச்சே சொல்லிருவாங்க. விஜய் அப்பா அண்ணா (சத்யராஜ்) மும்பையில வாழுற ஏழைகளின் காப்பாளன், விடிவெள்ளி, கலியுக கர்ணன், ரொம்ப குழம்பாதீங்க சினிமா பாஷையில பெரிய டான். அவரோட பையன் தான் விஷ்வா (விஜய்). அப்பாவோட பிஸினெஸ் பத்தி தெரியாம ஆஸ்திரேலியாவுல வாழுறார். அங்க டான்ஸ் குரூப் வச்சு நடத்திகிட்டு ஜாலியா ப்ரிண்ட்ஸ் கூட சந்தோஷமா இருக்கிறார். தமிழ் பெண்னான் அமலாபாலை லவ்வி, தன்னோட கல்யாணத்தை பத்தி பேச இந்தியா வரார். வந்த எடத்துல அவர் கண்ணு முன்னாலே "அண்ணாவை" வழக்கம் போல் சமூக விரோதிகள் கொன்று விடுகிறார்கள். வழக்கம் போல் விஜய் விரோதிகளை அழித்து மும்பை தமிழர்களை காப்ற்றி, விஷ்வாவில் இருந்து எப்படி விஷ்வா "பாய்" ஆகிறார் என்பதை இழு இழு என்று ஜவ்வு போல் இழுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் "விஜய்".

இளைய தளபதி விஜய் அட்டகாசமாய் எல்லாம் நடிக்கல, தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செஞ்சு இருக்கார். அவருக்கு நல்லா வரது டான்ஸ் மட்டும் தான். செமையா டான்ஸ் ஆடி இருக்கார். உணர்ச்சி பூர்வமான் இடத்துல இவர் பேசுற நிறைய வசனம் சிரிப்பை தான் வரவழைக்குது, டிவி சீரியல கூட வர லாயக்கு இல்லாத வசனங்கள். "தம்பி நல்லா படிச்சா பரீட்சையில் நல்ல மார்க் எடுக்கலாம்" டைப் வசனங்கள். இந்த மாதிரி மொக்கை வசங்களை விஜய் என்ன தான் எமோஷனலா பேசினாலும் அது நம்ம பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. வசனம் எழுதுன ஆளுக்கு கையிலே ரெண்டு போடு போடணும்.


இளைய தளபதி விஜய் ஏன் எல்லா படத்திலும் ஒரே மாதிரியான கெட் அப்ல வராரு, கெட் அப் சேன்ஜ் பண்ணுறதே இல்லைன்னு கேட்கிற ஆளுகளுக்கு கிளைமாக்ஸ் காட்சியில ஒரு கெட் அப் போட்டுக்கிட்டு வராரு பாருங்க. சுறா சிங் கெட் அப் தோத்தது. தியேட்டரே விழுந்து விழுந்து சிரிச்சது. படத்தோட பெஸ்ட் காமெடி சீன் அது தான். சுறாவுக்கு முன் வந்த விஜய் படங்க மாதிரி பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி நம்மளை வதைக்கிறது இந்த படத்துல இல்லாதது பெரிய ஆறுதல்.படத்தோட கதையை ஓகே பண்ணுனது எஸ்.ஏன்னு படிச்சேன். தளபதி ஒரு அஞ்சு வருஷம் அவங்க அப்பாவை ஊரை விட்டு தள்ளி வச்சுறது நல்லது. சனியை கூடவே வச்சுகிறது ரொம்ப ரொம்ப ஆபத்து. 

படத்தோட கதாநாயகி அமலா பால். நடிப்பை வெளிபடுத்த பெரிய வாய்ப்பெல்லாம் இல்லை. வழக்கமான் தமிழ் பட ஹீரோயின் வேலையை சரியா செஞ்சு இருக்காங்க. நிறைய காட்சியில மேக் அப் இல்லாம வந்து மரண பயத்தை உண்டு பண்ணுறாங்க. இடைவேளைக்கு முன்னாடி வர ட்விஸ்டுக்கு பயன்படுத்த பட்டு இருக்காங்க. மற்ற படி  பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. சத்யராஜ் போன்ற நல்ல நடிகரை வேஸ்ட் செஞ்சு இருக்காங்க. இவர் பேசுற வசனங்கள் கொட்டாவியை தான் வர வைக்குது. ஏதோ ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாதிரி வந்துட்டு போறார். 

படத்தை முதல் பாதியில் அப்புறம் இரண்டாம் பாதியில பாதிக்கு மேல வந்து படத்தையும் நம்மளையும் காப்பாதிறது சந்தானம் மட்டும் தான். இயக்குனர் விஜய்க்கு இந்த படத்திலும் சந்தானம் தான் கை குடுத்து இருக்கார். ஒரு டபிள் மீனிங் வசனம் தவிர சந்தானம் ரொம்பவே அடைக்கி வாசித்து இருக்கார். ஒரு காட்சியில் "சாம்  ஆண்டர்சன்" வேற வராரு, சாம் வர காட்சியை கொஞ்சம் சுவாரிசியமா குடுத்து இருக்கலாம்.


படத்துல பின்னணி இசை ரொம்பவே கொடூரமாய் இருந்தது. விஜய் பாடும் "வாங்கன்னா" பாட்டு தவிர எந்த பாட்டுமே மனதில் பதியவில்லை. "தலைவா தலைவா" பாட்டு ஒரு மாஸ் பாட்டை எப்படியெல்லாம் படம் ஆக்க கூடாது என்பத்ருக்கு நல்ல எடுத்துகாட்டு.

 "பாட்ஷா+நாயகன் = தலைவா", இது தான் நம்ம படத்துக்கு பார்முலான்னு சொல்லி தான் இயக்குனர் விஜய் தளபதியை ஏமாத்தி இருப்பார்ன்னு நினைக்கிறன். டைரக்டரோட சுடுற திறமை ஊர் அறிஞ்சது தான், தனக்கு என்ன வருமோ அதை சரியா செஞ்சா வெற்றி நிச்சியம், ஊர் சொல்லுறதுகாக நம்மளை மாத்திக்கிட்டு நமக்கு தெரியாதை வராததை செஞ்சா பல்பு தான் கிடைக்கும். இயக்குனர் விஜய் பேசமா சர்க்கார் இல்லாட்டி காட் பாதர் படத்தை சுட்டு எடுத்து இருக்கலாம், சொந்தமா சீன் யோசிச்சு எடுத்தா இப்படி தான் மண்ணை கவ்வ வேண்டியது வரும். அடுத்த படத்தையாவது உருபடியா சுட்டு எடுங்க விஜய் சார்.

இளைய தளபதி விஜய்க்கு ஒரு வேண்டுகோள், உங்க அப்பா பேச்சை கேட்டு நடிக்காம நல்ல இயக்குனர் மற்றும் நல்ல கதைகளில் நடிங்க, இல்லாட்டி சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!! நாங்க பாவம்.

My Rating: 5.5/10.


Saturday, July 20, 2013

மரியான் (2013)- மரிச்சு போயி !!!

நான் வசிக்கும் சாண்டியாகோவில் ககிட்டத்தட்ட எல்லா வாரமும் தமிழ் அல்லது தெலுங்கு படம் ஒன்று ரீலீஸ் ஆகி விடும். இந்த வாரமும் மரியான் ரீலீஸ் ஆகி இருந்தது. படத்தை வாங்கி ரீலீஸ் செய்வது எங்களை போன்ற பொறியாளர்கள் தான். எங்கள் கம்பெனியில் பணிபுரியும் சிலர் பார்ட் டைம் பிசினஸ் மாதிரி நன்றாக இருக்கும் என்று நம்பி சில தமிழ் படங்களை விலை குடுத்து வாங்கி தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஏரியாவில் தியேட்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டுவார்கள். தமிழ் படம் என்றால் சில நூறு டாலர் லாபம் பார்ப்பார்கள். இதே ஆட்கள் தான் தெலுங்கு படத்தையும் ரீலீஸ் செய்வார்கள் தெலுங்கு படம் எவ்வளவு மொக்கையாய் இருந்தாலும் பலா பழத்தில் ஈ மொய்ப்பது  போல் கூட்டம் அம்மும். முன்று ஷோகளும் கிட்ட தட்ட புல் ஹவுஸில் தான் ஓடும். தெலுங்கு மக்களின் சினிமா வெறி உலக அறிந்ததே. ஆனால் தமிழ் படங்களுக்கு கால் வாசி அரங்கு கூட நிரம்பாதது. பரதேசி படத்தை வெறும் 10 பேர் அமர்ந்து பார்த்தோம். விஸ்வரூபம் மட்டும் முக்கால் அரங்கு நிறைந்தது. 

மற்ற முக்கிய படங்கள் ரீலீஸ் ஆனாலும் தமிழ் மக்கள் விரும்புவது "ராஜ் தமிழ்" மற்றும் "einthusan" மட்டுமே. ஆனால் நாங்கள் எந்த தமிழ் படம் வந்தாலும் போய் விடுவோம். காரணம் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தராவிடில் யார் தருவார்கள் என்கிற எண்ணம் தான். அதே காரனத்திருக்கு தான் "மரியான்" படத்திற்க்கும் போனோம். தனுஷின் ராஞ்ஜனா படத்தினால் நாங்கள் ரொம்பவே நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்தோம். இருந்தாலும் தனுஷ் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் கூட்டனியில் படம் பார்க்கும் படியாவது இருக்கும் என்று நம்ம்ம்பி போன எங்களை படம் ரொம்ம்ம்ம்ம்பவே சோதித்து விட்டது. சாரு தன்னுடைய வலைபதிவில் (அவர் புக் எல்லாம் படிக்கிற அளவுக்கு நான் கேஞ்சு பிடிச்சு அலையவில்லை) அடிக்கடி வதை வதை என்ற ஒரு வார்த்தையை சொல்லுவார் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை நேற்று தான் புரிந்து கொண்டேன். மரியானின் அர்த்தம் மரணம் இல்லாதவன் என்று இயக்குனர் "பரத் பாலா" சொன்னார், அது தனுஷ் கதாபாத்திரத்துக்கு வேண்டும் என்றால் பொருந்தும், ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு பொருந்தாது.


மரியான் (தனுஷ்) மீனவ கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் காதலி பனிமலர் (பூ பார்வதி). பனிமலர் மீது காதல் வராமல் இருப்பதருகு தனுஷ் ஒரு மொக்கை காரணம் சொல்கிறார். பிறகு திடிரென்று பனிமலர் மீது காதல் கொள்கிறார். குப்பத்து வில்லன் புல்லெட் ராஜாவிற்கும் பனிமலர் மீது காதல். தமிழ் வில்லனின் அகராதியை மீறாமல் இவர் பனிமலரை ஒரு தலையாய் காதலிக்கிறார். பனிமலரின் அப்பா (!!) வில்லனிடம் வாங்கிய கடனிருக்கு அவன் பனிமலரை கேட்கிறான். பனிமலர் மீது காதலில் விழுந்த தனுஷ் அந்த கடனை அடைக்க இரண்டு வருட காண்ட்ராக்டில் சூடான் நாட்டிருக்கு வேலைக்கு செல்கிறார். செல்லும் இடத்தில் அவரை சூடான் தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். அங்கிருந்து தப்பித்து மீண்டும் இந்தியா வந்து பனிமலரை கரம்பிடித்தாரா இல்லையா என்பதை விருப்பம் இருந்தால் தியேட்டரில் போய் பாருங்கள், இல்லை என்றால் இரண்டு மாதங்களில் "இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக" போடுவார்கள் அப்பொழுது பார்த்து கொள்ளுங்கள்.

இந்த கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்று சொல்கிறார்கள். தனுஷும் கதையை கேட்டவுடன் நடிக்க ஒத்துக்கொண்டு இருப்பார் என்று நினைக்கிறேன் தனுஷிருக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள படம். அவர் மட்டுமே படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நிறைய காட்சிகளில் வெறும் உடல்மொழியில் தான் சொல்ல நினைப்பதை சொல்லி விடுகிறார். ஆனால் நல்ல உழைப்பு இப்படி வீணாய் போய் விட்டதே என்கிற கவலை வருவதை தவிர்க்க முடியவில்லை.

 3, மயக்கம் என்ன, ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களில் தனுஷ் தான் ஒரு கிளாஸ் பெர்பார்மர் என்பதை நிருபித்து இருக்கிறார். அவரின் நடிப்பு 3, மயக்கம் என்ன போன்ற படங்களில் வீணாய் போய் உள்ளது. இந்த படமும் அந்த லிஸ்டில் கண்டிப்பாய் சேரும், சேர்ந்துவிட்டது. தனுஷ் இனியாவது நார்மல் ஆடியன்ஸுக்கு பிடிக்கும் படியான படங்களில் நடிக்க வேண்டுகிறேன். 


சூடான் காட்சிகளில் இவர் காட்டும் மேனரிசத்தை பார்க்கும் போது புதுபேட்டை படம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்த படத்திலாவது நார்மல் தனுஷை எதிர்பார்கிறேன். எத்தனை நாட்கள் தான் தனுஷை மெண்டல் மற்றும் சைக்கோ கதாபாத்திரங்களில் காதலியின் கழுத்து பிடித்து பல்லை கடித்து வசனம் பேசுவதை மட்டுமே பார்ப்பது. போர் அடித்து விட்டது. முடியல பாஸ்..!! தீவிரவாதிகள் ஒரு காட்சியில் தனுஷை சித்திரவதை செய்வார்கள், அந்த காட்சியில் முதுகு காட்டி ஒட்கார்ந்து இருப்பது தனுஷ் இல்ல என்று சின்ன குழந்தை கூட சொல்லி விடும். அதே போல் கிளைமாக்ஸ் காட்சியில் கடல்கரையில் தனுஷின் டூப் நடப்பது போன்ற காட்சியும் அது தனுஷ் இல்ல என்று அப்பட்டமாய் காட்டி குடுக்கும். 

ஹீரோயின் பூ பார்வதி நன்றாக நடிக்க முயற்சி செய்கிறார், தனுஷ் அளவிருக்கு இவர் என்னை ஈர்க்கவில்லை. நிறைய காட்சிகளில் இவர் பேசும் தமிழ் புரியவில்லை. புயல் அடிக்கும் போது தனுஷ் கடலுக்கு சென்று திரும்பி வரும் காட்சிகளில் இவர் பேசும் தமிழ் வசனங்களை "இங்கிலீஷ்" சப்டைட்டில் உதவியுடன் தான் புரிந்து கொள்ள முடிந்தது. தேவையில்லாத காட்சிகளில் கிளீவேஜ் காட்டியுள்ளார். இரண்டாம் பாதியில் தனுஷ் சூடானில் மாட்டி கொண்ட பிறகு கனவு காட்சிகளில் மட்டும் வந்து மொக்கை பாட்டுக்கு ஆடி விட்டு செல்கிறார். 

சூடான் தீவிரவாதிகள் தான் காமெடி இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார்கள். என்ன மொழி பேசுகிறார்கள் என்று கடைசி வரை புரியவேயில்லை. தமிழ்நாட்டில் இந்த வாத்து மடையர்கள் பேசுவதையாவது சப்டைட்டில் போட்டார்களா என்று யாராவது சொல்லுங்க..ப்ளீஸ். ஒன்று சுட்டு கொண்டே இருக்கிறார்கள், இல்ல பேசியே மொக்கை போடுகிறார்கள். இயக்குனர் -பரத் பாலா, இவர் தான் "வந்தே மாதரம்" விளம்பரம் எடுத்தவராம். இவருக்கு ஆடியன்சை இரண்டரை மணி நேரம் காட்டி போட வைக்கும் கலை சுத்தமாய் தெரியவில்லை. உண்மை கதையை யதார்த்தமாய் எடுப்பதா இல்ல கமெர்ஷியலாய் எடுப்தாய் என்ற குழப்பத்தில் ரொம்பவே தடுமாறி உள்ளார்.


காஸ்டிங் படு மட்டமாய் செலக்ட் செய்து உள்ளார். தனுஷின் அம்மாவாக வரும் உமா ரியாஸ், பேசும் வசனங்கள் ஒட்டவே இல்லை. நல்ல நடிகையை வீண் அடித்து இருக்கிறார். அதே போல் பார்வதியின் அப்பா (!!) வாக வரும் "சலீம் குமார்" பேசும் தமிழ்...யப்பா காதில் ஈயத்தை காச்சி ஊற்றுவது போல் இருந்தது. இவர்கள் பேசும் தமிழ் ஹிந்தி டப்பிங் சீரியல் பார்த்த எபெக்ட்டை குடுத்தது.

இசை ரஹ்மான். முதல் பாடல் மற்றும் தனுஷ் மீன் பிடிக்க கடலில் இறங்கும் போது வரும் பின்னணி இசை மட்டுமே கேட்கும் படி இருந்தது. மற்றவை எல்லாம் ரஹ்மான் இசை அமைத்த மாதிரியே தெரியவில்லை. எடிட்டிங் ரொம்பவே மட்டமாக இருந்தது. காட்சி முடியும் முன்பே, அடுத்த காட்சியின் வசனம் ஆரம்பித்து விடுகிறது. 3 படத்தில் தனுஷ் கழுத்தை அறுத்து சாகும் காட்சியில் தியேட்டரே ஆரவாரமாய் கை தட்டியது. அதே போன்ற ரெஸ்பான்ஸ் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் காண முடிந்தது. படம் முடிந்து விட்டதே என்று.

மரியான் (2013)- மரிச்சு போயி !!! 

My Rating: 5.9/10.


Sunday, July 07, 2013

Lila Says - (2004) பிரெஞ்ச் படம்- Erotic But Not Vulgar !

Lila Says (2004) பிரெஞ்சு மொழி படம். 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இன்டர்நேஷனல் பெஸ்ட் செல்லிங் பிரெஞ்சு நாவலான "Lila dit ça" (Lila Says) தழுவி எடுக்க பட்ட திரைப்படம். இந்த நாவலை பற்றி சுவாரிசியம் ஒன்று உள்ளது, அதாவது இன்று வரை இந்த நாவலை எழுதியவர் யார் என்று தெரியாது. 1996 ஆம் வருடம் பிரான்ஸின் இருக்கும் ஒரு முக்கிய பதிப்பகம் முன்பு இரண்டு டைரி குறிப்புகள் கிடந்தன. அவைகளை புரட்டி பார்த்த பதிப்பக ஊழியருக்கு பெரிய அதிர்ச்சி. சிமோ என்கிற 19 வயது வாலிபனின் தனது சொந்த காதல் அனுபவங்களை படிபவர்களின் மனதை உருகும் விதமாக விவரித்து இருந்தான். படித்து முடித்த பிறகு அவர் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் வந்தது. இதை கண்டிப்பாய் நாவல் வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்து அதை முடித்தும் காட்டினார்.

எழுதியவர் பெயர் என்று ஒன்றும் இல்லாமல் வெளி வந்த இந்த நாவல், எவ்வளவோ கலாச்சார அணுகுண்டுகளை அல்வா சாப்பிடுவது போல் ஜீரணிக்கும் பிரெஞ்ச் குடி மக்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் குடுத்தது. அதன் அமோக விற்பனை, மற்றும் வரவேற்பைப் புரிந்து கொண்ட அமெரிக்காவின் ஸ்க்ரிப்னர் பதிப்பகம் நாவலை ஆங்கிலத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியிட்டது. ஜியாத் டோரி(Ziad Doueiri) இந்த நாவலின் திரை வடிவத்தில் 2004 ஆம் ஆண்டு பிரெஞ்ச் மொழியில் தீட்டினார்.


வாய்ஸ் ஓவரில் சிமோ தனது அனுபவங்களை டைரியில் பதிந்து கொண்டிருக்கும் காட்சி தான் படத்தின் முதல் காட்சி. எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பத்திலே எழுத ஆரம்பிக்கிறான். நேற்றைய லிலாவின் சந்திப்பை பற்றி நமக்கு விவரிக்கிறான். லிலா திரையில் தோன்றுகிறாள். அவள் பேசும் வசங்கள் கீழே வருமாறு.

      “  என் முடி எப்படி இருக்கு? சூப்பரா இல்ல ?
          என் கண்ணப் பாரு. ப்ளூ கலர் ஸ்படிகம் போல் இல்ல ?
          என் உடல் பால் போல் வெள்ளை கலர்ல இருக்குதானே ?
          எங்க அத்தை சொல்வாங்க. நான் ஒரு தேவதை.
          சரி. இப்போ
           DO YOU WANT SEE MY PUSSY? "

சிமோவுடன் சேர்ந்து நாமும் ஷாக் ஆகும் போது திரையில் படத்தின் பெயர் "LILA SAYS" என்று வரும். நிற்க, இது மாதிரியான முதல் காட்சியை பார்த்தவுடன் இதை கில்மா பட லிஸ்டில் சேர்த்து விடாதீர்கள். லிலா சொல்லுவது தான் ஆபாசமாய் இருக்கும். செயலில் புனிதத்தன்மை இருக்கும். 

சிமோ 19 வயது நிரம்பிய அரேபிய முஸ்லிம் வாலிபன். பிரான்ஸில் இருக்கும் சிறு ஊரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பில் அவன் அம்மாவுடன் வசித்து வருகிறான். வேலை எதுவும் இல்லாத காரணத்தினால் மற்ற முன்று முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியாய் பொழுதை கழித்து வருகிறான். சிமோவின் உற்ற நண்பன் மௌலாத் (Mouloud). இவர்கள் நால்வரும் சேர்ந்து சிறு சிறு திருட்டு காரியங்களில் தங்கள் பிழைப்பை ஓட்டுகிறார்கள். அந்த குடியிருபிருக்கு தன் வயதான அத்தையுடன் வருகிறாள் 16 வயதே நிரம்பிய கத்தோலிக்க அழகு தேவதை "லிலா". சிமோ யாரிடமும் அதிகம் பேசாத, ஆனால் கூர்ந்து கவனிக்க கூடிய, தன் மனதிற்குள் பேசும் சுபாவம் உடையவன். 


கதை மட்டுமே எழுத தெரிந்த சிமோவிருக்கு அவனது பிரெஞ்ச் டீச்சர் பாரிஸில் இருக்கும் ஒரு எழுத்தாளர் பள்ளியில் இடம் வாங்கி தருவதாய் சொல்ல்கிறார். ஆனால் அந்த பள்ளியில் சேர சொந்த அனுபவ கட்டுரை ஒன்றை சிமோ எழுத வேண்டும் என்று வேறு சொல்கிறார். சிமோவின் நண்பர்கள் எழுத்தாளர் பள்ளி எல்லாம் வேளைக்கு ஆகாது, நீ அங்கு எல்லாம் போகதே என்று அட்வைஸ் செய்கிறார்கள். சிமோவின் வாழ்கை இப்படியாக செல்கிறது,

தன் நண்பர்கள் பட்டாளத்துடன் அமர்ந்து இருக்கும் ஒரு மாலை வேளையில் லிலா தன் சைக்கிளின் பின்னால் உயரமான செடிக் கன்றுடன் அவள் அவர்களைக் கடக்கிறாள். அவளை பார்க்கும் சிமோவின் நண்பர்கள் அனைவரும் அவளை காதலிக்க தொடங்குகிறார்கள். மௌலாத் ஒரு படி மேலே போய் அவளை கற்பனையில் கல்யாணம் செய்து குழந்தை வரை சென்று விடுகிறான். சிமோ மட்டும் எதுவும் பேசாமல் இருக்கிறான். லிலா திரும்பும் போது கடைசியாய் சிமோவை மட்டும் பார்த்து  புன்னகையை வீசி விட்டு நகர்கிறாள். சிமோ எதிர் கொள்ளும் முதல் ஆடம் டீசிங் !!

அந்த ஒரு நொடி புன்னகை சிமோவின் இதய துடிப்பையே நிறுத்தி விட்டதாய் பிறகு அவனது டைரி குறிப்பில் குறிப்பிடுக்கிறான். அதன் பிறகு சிமோவும் லிலாவும் சந்திக்கும் காட்சி மேலே சொன்ன முதல் காட்சி. அந்த காட்சி முடிவில் லிலா தான் சொன்னதை செய்தும் காட்டுவாள். ஊஞ்சலில் ஆடியபடி லிலா தான் சொன்னதை சிமோவிடம் காட்டும் காட்சி துளியும் ஆபாசம், கவர்ச்சி இல்லாத அழகிய கவிதை. அதன் பிறகு லிலாவும் சிமோவும் சந்திக்கும் காட்சிகளில் லிலா மட்டும் தான் பேசுகிறாள். தன் செக்ஷுவல் பண்டசி , செக்ஷுவல் கனவுகள் பற்றி  கூசாமல் பேசுகிறாள். தொடர்ந்த சந்திப்புகளில் அவள் சொல்லும் கலர் கலர் செக்ஸ் அனுபவக் கதைகளை, கனவுகளைக் கேட்கிறான் சிமோ. சில நேரங்களில் தவறாக எண்ணும் அளவுக்கு அவளது கதைகள், வார்த்தைகள் ஆபாசமாக நீள்கின்றன. இருந்தாலும் அவளது கதைகளையும் மீறி சிமோவிருக்கு அவள் மீது காதல் வருகிறது. 


தனது காதலை அவளிடம் சொல்ல பல சந்தர்பங்கள் கிடைத்த போதும் ஏதோ ஒன்று சிமோவை தடுக்கிறது. அது லிலாவின் பேச்சு தான் காரணம் என்று நம்மால் ஊகிக்க முடியும். இப்படியாக நகரும் கதையில் மௌலாத்திருக்கு லிலாவின் மேல காமம் வெறி வந்து விடுகிறது, அவளை அடைய முயற்சிகள் எடுக்கிறான். ஆனால் லிலா மௌலாத்தை துளியும் சட்டை செய்யாமல் நகர்ந்து சென்று விடுகிறாள். இறுதியில் சிமோ-லிலா சொல்ல படாத காதல் என்னவானது, மௌலாத்தின் காம வெறி எதில் போய் முடிந்தது என்ற முடிச்சுகளை இயக்குனர் கனத்த மனதுடன் திரையில் அவிழ்த்து இருப்பார். 

படத்தின் இயக்குனர் ஜியாத் டோரி க்வென்டின் டரான்டினோ பள்ளியில் படித்தவர். க்வென்டினிடம் கேமரா மேன் ஆக பணி புரிந்தவர். அதனாலே என்னமோ படத்தில் நிறைய காட்சிகளை வசனங்கள் முலமே நகர்த்தி சென்றிருப்பார். லிலா பேசும்  வசனங்கள் சொல்லும் கதைகள் எதுவுமே நமக்கு அருவெருப்பை ஏற்படுத்தாது. லிலாவாக நடித்த தேவதையின் பெயர் Vahina Giocante.இந்த தேவதையை தவிர இந்த படத்தில் வேறு யார் பேசி இருந்தாலும் இந்த படம் போர்ன் மூவி லிஸ்டில் சேர்ந்து இருக்கும். ஆனால் அது போன்ற என்னத்தை துளியும் நமக்கு ஏற்படாதவாறு லிலா பார்த்து கொள்கிறாள். சிமோ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நபர் "Mohammed Khouas". இவர் சிமோ வேடத்துக்கு அட்டகாசமாய் பொருந்தி இருப்பார். அவ்வபோது மனதிற்குள் பேசும் பாணி கதைக்கு அருமையாய் பொருந்தி வரும். கிளைமாக்ஸ் காட்சியில் இவரின் நடிப்பு பிரமாதமாய் இருக்கும். 

படத்தின் ட்ரைலர் :



படத்தில்  சிமோ லிலாவை மோட்டார் பைக்கில் முன்னால் வைத்து கொண்டு பயணம் செய்யும் காட்சி அழகான கவிதை. அந்த காட்சியில் வரும் பின்னணி இசை மனதை விட்டு அகல வெகு நேரம் ஆகும் என்பது உறுதி. சிமோ மட்டும் லிலா ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்து மௌலாத் மற்றும் நண்பர்களுடன் பேசும் காட்சி கிட்ட தட்ட முன்று நிமிடம் ஒரே ஷட்டில் படமாக்கி இருப்பார் இயக்குனர் ஜியாத் டோரி. நல்ல திரைப்படங்களை விரும்பும் அனைவரும் இந்த படத்தை தவற விட கூடாது.

Lila Says - Erotic But Not Vulgar ! 

My Rating: 7.9/10.


Friday, July 05, 2013

சிங்கம்-II (2013)- பர பர பட்டாசு !!

இன்று அமெரிக்க சுதந்திர தினம் என்பதால் இங்கு அணைத்து அலுவல்களும் விடுமுறை. அதனால் என்றுமே வெள்ளிக்கிழமை ரீலீஸ் ஆகும் படங்கள் இன்று விடுமுறை என்பதால் இன்றே அதாவது வியாழன்று ரீலீஸ் ஆனது. அதில் சிங்கம்-II படம்மும் ஒன்று. ஊரே அமெரிக்க சுதந்திரத்தை கொண்டாடி கொண்டு இருக்க நாங்கள் மட்டும் சிங்கம்-II ஓடும் திரைஅரங்குக்கு சென்றோம். சிங்கம்-II படத்தின் முதல் டீசர் மட்டும் பார்த்து விட்டு விழுந்து புரண்டு சிரித்தேன். அந்த சமயத்தில் தான் சூது கவ்வும், நேரம் போன்ற நல்ல தமிழ் படங்கள் வந்து கொண்டு இருந்தன. ரசிகர்களின் ரசனை சூது கவ்வும் போன்ற படங்களினால் மாறி கொண்டு வரும் வேலையில் எப்படி தான் இப்படி தைரியமா "ஆ...ஊன்னு கத்திகிட்டே பஞ்ச் டயலாக் பேசி படம் எடுக்கிறாங்களோ என்று ஹரி மீது ஆச்சிரியம் வந்தது.

அது போக சூர்யாவின் கடைசி ரெண்டு மொக்கை படங்களினால் ஏகத்துக்கும் நொந்து போய் இருந்த காரணத்தினால் சிங்கம்-II மேல் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் ஏற்படாமல் போனது. ஹரி எல்லாம் என்னத்த படத்தை எடுத்து கிழித்து விடுவார் என்கிற எண்ணத்திலே தியேட்டர் சென்று அமர்ந்தேன். ஆனால் என்னுடைய என்னத்தை தவிடுபொடியாக்கி அட்டகாசமான பர பர அக்ஷன் படத்தை வழங்கி உள்ளார் ஹரி. படம் கிட்ட தட்ட ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடுது, ஆனால் நேரம் போனதே தெரியவில்லை.


சிங்கம் முதல் பாகத்தில் முடிந்த கதை அப்படியே இதில் தொடர்கிறது. வழக்கமான தமிழ் படத்திற்கே உண்டான பார்முலா படி சூர்யா அஞ்சலி  குத்து பாடலுடன்  படம் தொடங்குகிறது. துரைசிங்கம் (சூர்யா) தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு துத்துக்குடி டவுனில் ஒரு பள்ளியில் NCC மாஸ்டராக வேலை செய்கிறார். அவ்வபோது அந்த ஊரில் நடக்கும் கடத்தல்களை பற்றி உளவு வேலை வேறு செய்கிறார். 

அதே பள்ளியில் +2 படிக்கும் மாணவி திவ்யா (ஹன்சிகா). அந்த ஊரில் பெரிய புள்ளியான "பாய்" வெளிநாட்டில் இருந்து வரும் போதை மருந்தை கடல் வழியாக இந்தியாவிற்குள் கடத்துகிறான். அதருக்கு உடந்தை ஹன்சிகவின் சித்தப்பா தங்கராஜ் (ரஹ்மான்). இவர்களுக்கு ஊரில் உள்ள அணைத்து போலீசும் உடந்தை. போதை மருந்தை சப்ளை செய்யும் இன்டர்நேஷனல் கிரிமினல் டேனி. அண்டர் கவர் போலீஸ் ஆக இருக்கும் துரைசிங்கம் உள்துறை அமைச்சருக்கு மட்டும் அவப்போது ரிப்போர்ட் அனுப்புகிறார். 


ஒரு கட்டத்தில் பெண் கடத்தல் பிரச்சனையில் துத்துக்குடியில் இரண்டு பிரிவினரிடையே ஜாதி கலவரம் ஏற்படும் நிலைமை வருகிறது. அந்த நேரத்தில் மீண்டும் சார்ஜ் எடுத்து DSP வேலையில் சேருகிறார் துரைசிங்கம். பெண் கடத்தல் எபிசோடு தான் படத்தின் உண்மையான் ஆரம்பம். ஹரியின் அக்மார்க் பர பர காட்சிகளால் நாம் நிமிர்ந்து உட்கார்வோம், அதில் இருந்து நம்மை யோசிக்கவே விடமால் படம் வேகம் எடுக்கும். வேறு ஒரு கட்டத்தில் டேனியை யார் என்றே தெரியாமல் துரைசிங்கம் அரெஸ்ட் செய்யும் நிலைமை ஏற்படும், பிறகு டேனி யார் என்று தெரிய வரும் பொழுது அவன் தப்பித்து இருப்பான். தப்பித்த டேனியை மீண்டும் துரைசிங்கம் பிடித்தாரா இல்லையா என்பதை ஓவர் டோஸ் அக்ஷன் காட்சிகள் முலம் சொல்லி  முடித்து இருக்கிறார்கள்.

படத்தின் பெரிய பலமே சூர்யா தான். மனிதர் சில காட்சிகளில் ஓவராக கத்தி பேசினாலும் அது எரிச்சலை வர வளைப்பது இல்லை. தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து உள்ளார். இரண்டு தொடர் தோல்விகளுக்கு இந்த படத்தின் முலம் முற்றுபுள்ளி வைத்து உள்ளார். அதி புத்திசாலி போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் சூர்யா. இவர் அனுஷ்காவுடன் பேசும் காட்சிகள் தவிர்த்து அனைத்திலும் நிறுத்தாமல் முச்சு விடமால் பேசுகிறார். நிறைய வசங்கள் நானாக அர்த்தம் புரிந்து கொண்டேன். டயலாக் டெலிவரி அவ்வளவு  பாஸ்ட். அக்குஸ்ட் இப்ப அந்த டவர் சிக்னல்ல இருக்கான், இப்ப இந்த டவர்ருக்கு மூவ் ஆகிட்டான், இன்னும் பத்து நிமிசத்துல ஸ்பாட்க்கு வந்துருவான், போன்ற ட்ரேட்மார்க் ஹரி வசனங்களை படம் முழுக்க நிரம்பி வழிகிறது. 

ரொமான்ஸ் காட்சிகளில் அளவான நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார், முதல் பாகத்தில் இருந்த சூர்யா அனுஷ்கா கெமிஸ்ட்ரி இதில் சுத்தமாய் மிஸ்ஸிங். என்ன எந்த வசனம் பேசும் போதும் பல்லை கடித்து கொண்டு பேசுவதை தவிர்த்து இருக்கலாம் சூர்யா. அது போக முதல் பாகத்தில் கோப பட வேண்டிய நேரத்தில் முறைத்து பார்க்கும் அதே தப்பை இதிலும் தொடர்ந்து இருக்கிறார். முதல் பாகம் போலவே படத்தின் லாஜிக் மிஸ்டேக்சை பற்றி யோசிக்கவே விடாமல் படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணம் செய்து முடிந்து விடும்.


பிரதான கதாபாத்திரம் சூர்யா தவிர்த்து படத்தில் நிறைய துணை கதாபாத்திரங்கள் வருகிறது. படத்தின் மார்க்கெட் வேல்யுவிற்கு மற்றும் காமெடிக்கு சந்தானத்தை பயன்படுத்தி உள்ளார்கள். ஹரியின் எந்த படத்திலும் காமெடி வொர்க் அவுட் ஆனது இல்லை, இதிலும் அந்த ரெகார்ட் வெற்றிகரமாக தொடர்ந்து உள்ளது. காமெடி காட்சிகள் அனைத்தும் மொக்கை ரகம். விவேக்கிருக்கு சுட்டு போட்டாலும் காமெடி வரது என்பது மறுபடியும் நிருபணம் ஆகி உள்ளது. ஹன்சிகாவிற்க்கு படத்தில் பெரிய ரோல் இல்ல, துரைசிங்கத்தை ஒன் சைடு லவ் பண்ணும் கேரக்டர். வில்லன் டேனி சரியான தேர்வு. நல்ல முகபாவம் காட்டி நடித்து உள்ளார். ரஹ்மான் மற்றும் பாய்யாக வரும் முகேஷ் ரிஷி தங்கள் கதாபாத்திரங்கள் உணர்ந்து நடித்து உள்ளார்கள்.

படத்தில் கேமராமேன் பிரியனின் உழைப்பு பாராட்டுக்குரியது. படத்தில் நிறைய ஹெலிகாப்டர் ஷாட்ஸ் உண்டு, எல்லாமே அட்டகாசமாய் காட்சி படுத்த பட்டு உள்ளது. படத்தில் பின்னணி இசை பெரிய லெட் டவுன் என்றே நான் சொல்லுவேன். பரபரப்பான காட்சிகளின் டெம்போவை குறைப்பது போல் இருந்தது பின்னணி இசை. பாடல்கள் தியேட்டரில் கேட்க்கும் படி இருந்தன. சாதாரண கதையை தனது திரைக்கதை முலம் மெருகேற்றி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் ஹரி. 

சிங்கம்-II - பர பர பட்டாசு !!
My Rating: 8.0/10......