Friday, December 16, 2011

க்வென்டினின் மாஸ்டர் பீஸ் -Inglourious Basterds (2009)

இன்னைக்கு நான் உங்களுக்கு அறிமுக படுத்த போகும் படம் Inglourious Basterds. படம் வெளி வந்த ஆண்டு 2009. படத்தோட டைரக்டர் என்னோட ஆல் டைம் பேவரைட் க்வென்டின் டரென்டினோ (Quentin Tarantino). எனக்கு பிடிச்ச டாப் 5 படங்களில் இவரு படம் 2 இருக்கும், அது Pulp Fiction & Kill Bill. க்வென்டினின் கதை சொல்லும் பாணி மிகவும் வித்தியாசமானது, இவரின் அனேக படங்களில் நான்-லீனியர் பாணி கையாள பட்டு இருக்கும். சரி நான்-லீனியர்னா என்ன? நம்ப ஒரு நாவல் வாங்குறோம், எப்படி படிப்போம்? முதல் அத்தியாத்தில் இருந்து கடைசி அத்தியாயம் வரைக்கும் படிச்சா அது லீனியர் (Linear) வகை. அதே நாவலை கடைசி அத்தியாயத்தின் சில பத்திகளை, எடுத்தவுடன் படித்து விட்டு மீண்டும் முதல் அத்தியாயத்திலிருந்து படிக்கத் துவங்கி, நடுவில் நான்காவது அத்தியாயத்தை மூன்றாவதாகவும், மூன்றாவதை நான்காவதாகவும் படித்து விட்டு, மீண்டும் கடைசி அத்தியாயத்தை முழுமையாகப் படித்து முடித்தால் அதுதான் நான்-லீனியர் (Non-Linear). க்வென்டின் நான்-லீனியர் ஆக கதை சொல்லுவதில் வல்லவர். அவரின் அனேக படங்கள் நான்-லீனியர் வகையை சேர்ந்தவை. ஒரு நல்ல நாவல்னா எப்படி படிச்சாலும் புரியணும். அதே போல தான் நல்ல திரைகதை-ஆசிரியர் எழுதிய திரைக்கதையும் நமக்கு புரியணும். க்வென்டின் ஒரு நல்ல திரைகதை-ஆசிரியர். ஆனால் Inglourious Basterds படத்தை சற்று மறுபடத்தி லீனியர் வகையில் எடுத்திருப்பார். படம் நேர் கோட்டில் போகும்.

க்வென்டினின் படங்களுக்கு என்று சில விதிமுறைகள் இருக்கும். படத்தில் கதை சொல்லும் பாணியை நாவலில் வருவது போல் அத்தியாயம் (Chapter) வரியாக பிரித்து இருப்பார். நீநீநீநீண்ட மற்றும் கூர்மையான வசனங்கள், அளவை மீறிய வன்முறை, மெல்லிய நகைச்சுவை, நான்-லீனியர் பாணி போன்றவை க்வென்டினின் படங்களில் தவறாமல் இடம் பெறுபவை. ஆனால் இந்த படம் அவரின் மற்ற படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும். ஏன் என்றல் இந்த படத்தில் க்வென்டினின் லீனியர் பாணியில், அதாவது நேர் கோட்டில் கதை சொல்லி இருப்பார். திரைக்கதையில் ஒரு ஐந்து நிமிடம் கூட தொய்வு இல்லாமல் படம் செல்கிறது. படத்தில் ஒரு முக்கியமான் கதாபாத்திரத்தில் அமெரிக்க உளவாளியாக ப்ராட் பிட் (Brad Pitt) நடித்து இருப்பார். மற்றும் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஜெர்மன் ராணுவ அதிகாரியாக க்ரிஸ்டஃப் வால்ட்ஸ் (Christoph Waltz) நடித்து இருப்பார். இப்படத்தில் நடித்ததற்காக க்ரிஸ்டஃப் வால்ட்ஸ்க்கு 2010 ஆம் ஆண்டு சிறந்து துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்க பட்டது. சரி இப்போது இந்த படத்தின் கதை என்னவென்று பார்போம்.
Chapter-1: Once Upon a Time in Nazi-Occupied France: 
இரண்டாம் உலக போர் நடக்கும் காலகட்டத்தில் “Once Upon a Time in Nazi-Occupied France” என்ற வரிகளுடன் படம் ஆரம்பிக்கும். வால்ட்ஸ் (Waltz) ஒரு பிரெஞ்சு விவசாயின் வீட்டுக்கு வந்து, அவனது வீட்டில் யூதர்கள் யாரையாவது ஒளிந்து கொண்டு இருக்கிறார்களா என்று விசாரணை செய்வார். அந்த விசாரணை, சுமார் 7 நிமிடங்கள் நடக்கும். க்வென்டின் ஸ்டைல் நீண்ட உரையாடல்கள், சும்மா அதகளமாய் இருக்கும், விசாரணையின் முடிவில் அந்த விவசாயி தன் வீட்டில் ஒரு யூத குடும்பம் ஒளிந்து இருப்பதை ஒத்துகொள்வார். வால்ட்ஸ் (Waltz) சிறிதும் இரக்கம் இல்லாமல் அந்த மொத்த குடும்பத்தை சுட்டு கொன்று விடுவார். அந்த குடும்பத்தில் இருந்து ஒரு பெண் மட்டும் தப்பி ஓடி விடுவார். பெண்ணின் பெயர் ஷோசான்னா (Shosanna). நிற்க....
Chapter-2: Inglourious Basterds: 
இந்த அத்தியாயத்தில் அமெரிக்கன் உளவாளி ப்ராட் பிட் (Brad Pitt) தனது Inglourious Basterds படைகளுடன் அறிமுகம் ஆவார். இந்த படை படையின் முக்கிய குறிக்கோள் ஜெர்மன் நாட்டில் இருக்கும் ஜெர்மன் படை வீரர்கள் மனதில் அச்சத்தை விதைப்பது. அதற்காக இந்த படை கையில் அகப்படும் ஜெர்மன் வீரர்களின் கபாலத்தைக் கொய்வது, அவர்களை மிகவும் கொடுரமான முறையில் கொலை செய்வது போன்ற நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். இதில் ப்ராட் பிட் (Brad Pitt) பேசும் அசென்ட், மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த ரெண்டு அத்தியாயத்தில் முடிவில் வால்ட்ஸ் (Waltz) மற்றும் ப்ராட் பிட் (Brad Pitt) இரு வேறு துருவங்கள் என்று நாம் உணர்ந்து விடுவோம்....
Chapter-3: German Night In Paris: 
இப்பொழுது முதல் அத்தியாயத்தில் வால்ட்ஸ்யிடம் (Waltz) இருந்து தப்பித்த யூத பெண் ஷோசான்னா (Shosanna), பாரிஸ் நகரத்தில் ஒரு சினிமா தியேட்டர்ரை நிர்வகித்து வருவார். இரவு கட்சிக்கு தயார் ஆகி கொண்டிருக்கும் போது அங்கு வரும் ஒரு ஜெர்மன் ராணுவ வீரன் ஷோசான்னாவை (Shosanna), முதல் பார்வையிலே காதலிக்க ஆரம்பத்து விடுவார். ஜெர்மன் ராணுவ வீரனின் பெயர் பெட்ரிக் (Fredrick Zoller). இவர் ஜெர்மனியின் பெருமையை எடுத்து விளக்கும் Nation's Pride என்ற போர் திரைபடத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பார். அந்த திரைபடத்தின் முதல் காட்சி பாரிஸ் இருக்கும் ஒரு பெரிய திரைஅரங்கில் வெளியிட பட இருக்கும். பெட்ரிக்கு ஷோசான்னாவின் மேல் இருக்கும் காதலால் தன் கனவு திரைபடத்தை ஷோசான்னாவின் திரைஅரங்கிலே முதல் காட்சியை வெளியிட முடிவு செய்து விடுவான். அதற்கான அனுமதியையும் ஜெர்மன் உயர் அதிகாரியிடம் பெற்று விடுவான். அந்த உயர் அதிகாரி வேறு யாரும் இல்ல, நம்ப முத அத்தியாயத்தில் பார்த்த வால்ட்ஸ் (Waltz) தான்.
Chapter- 4 & 5: Operation KINO & Revange of the Gaint Face:
அந்த திரைபடத்தை பார்பதற்கு ஜெர்மனியின் மிக முக்கிய புள்ளிகள், உயர் ராணுவ அதிகாரிகள் முதல், ஹிட்லர் வரை அனைவரும் பாரிஸ் உள்ள ஷோசான்னாவின் தியேட்டர்க்கு வர இருப்பார்கள். ஹிட்லரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு வால்ட்ஸ்யிடம் (Waltz) தர பட்டு இருக்கும். ஷோசான்னாவிற்கு தன் குடும்பத்தை கொன்ற ஜெர்மானியர்களை கொல்ல அருமையான் சந்தர்ப்பம்.... ப்ராட் பிட்னின் (Brad Pitt) Inglourious Basterds படையும் ஹிட்லரை கொல்ல நல்ல சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருப்பார்கள்... ஹிட்லர் பாரிஸில் ஒரு தியேட்டர்க்கு வருவது தெரிந்ததும், மொத்த தியேட்டர்ரை வெடி குண்டு முலம் தகர்க்க திட்டம் தீட்டி விடுவார்கள்... அந்த திட்டத்தின் பெயர் “ஆபரேஷன் கினோ” (Operation Kino).

ஷோசான்னா தியேட்டர்ரை மொத்தம்மாக தீயிட்டு எரித்து விட திட்டம் தீட்டி இருப்பாள்... இதற்கு இடையே வால்ட்ஸ் (Waltz) Basterds படையின் திட்டத்தை கண்டு பிடித்து விடுவார்..
வால்ட்ஸ் (Waltz) Basterds படையின் சதியை முறியடித்தாரா..?? ஷோசான்னா ஜெர்மனியார்களை பழி வாங்கினாளா..?? Basterds என்ன ஆனார்கள்…..?? போன்ற பல கேள்விகளுக்கு க்வென்டின் தனது பாணியில் பதில் சொல்லி இருப்பார். வேகமான நகரும் திரைக்கதையை விரும்பும் அனைவரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்....

படத்தின் கடைசி இரண்டு அத்தியாயங்கள் தான் படத்தின் பலமே. அடுத்து என்ன, அடுத்து என்ன என்று உங்களின் டெம்போவை ஏற்றி விடும். 

ப்ராட் பிட் (Brad Pitt) , இது தான் என் “மாஸ்டர் பீஸ்” என்று படம் முடிந்தும் சொல்லுவார். உண்மையில் அவருக்கு இது “மாஸ்டர் பீஸ்” தான்.

வால்ட்ஸ் (Waltz) சும்மா வாழ்ந்து இருப்பார். இரண்டு இடத்தில் இரு வேறு ஆட்களை விசாரணை செய்வார். பார்க்கும் நமக்கே பயமாக இருக்கும்.. அந்த இரண்டு காட்சிக்கு மட்டுமே அவருக்கு ஆஸ்கார் குடுக்கலாம். சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை 2010 ஆம் ஆண்டு பெற்றார் வால்ட்ஸ்.

My Rating: 8.2/10......


Saturday, December 10, 2011

க்ளாசிக்கல் கொலைகாரன்- No Country For Old Men(2007)

இந்த பதிவு முலமாக நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த போகும் படம் No Country for Old Men. படம் வெளி வந்த ஆண்டு 2007. இது சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையை சேர்ந்த படம். ஏதாவது படம் பார்க்கலாம்ன்னு தேடுனப்போ No Country for Old Men என்னோட கண்ணுல பட்டுச்சு. 2008 ஆம் ஆண்டு 4 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வாங்கி குவிச்ச படம் இது. அதுவும் சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த டைரக்டர் மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் விருது வாங்கி இருந்தது. அதுவும் இல்லாம இது No Country for Old Men என்ற த்ரில்லர் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட விஷயத்தை அறிய முடிந்தது. நாவலை நான் படிக்க வில்லை, அதனால் நான் படத்தை பற்றிய என்னுடைய அனுபவத்தை மட்டும் பகிர்கிறேன்.
அப்படி என்ன தான் படத்துல இருக்குன்னு பார்த்தா, படம் பார்த்த என்னை ரொம்பவே மற்றும் ரொம்ப நேரம் யோசிக்க வச்சிருச்சு. என்ன யோசனையினா “ங்கொயால என்ன படம் டா இது” அப்படிங்கிற மாதிரி. என்ன மாதிரி சராசரி சினிமா ரசிகனுக்கு இந்த படம் ஒரு ரொம்ப வித்தியாசமான அனுபவம். ஏனா ஹாலிவுட்டின் நிறைய பார்முலாவை இந்த படம் ஒடச்சு இருக்கும். சாதாரனமா ஒரு படத்துல, ஹீரோ இருப்பார், வில்லன் இருப்பார், ஹீரோயின் இருப்பாங்க. ஆனா இதுல்ல அந்த மாதிரி நம்ப யாரையும் பாகு படுத்தி பார்க்க முடியாது. மொத்தம் முன்று முக்கியமான கதாபாத்திரங்கள், அதுல நமக்கு யார புடிச்சுருக்கோ, அவங்களையே நம்ப ஹீரோவா வச்சுக்கலாம். பிடிக்காதவங்களை வில்லனா வச்சுக்கலாம். நம்ப இஷ்டம். அந்த மூன்னு கதாபாத்திரங்கள் யாரு யாரு..?? அப்புறம் படத்தோட கதை என்னன்னு இப்போ பார்போம்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் நடைபெறும் சில சம்பவங்களின் தொகுப்பே இந்த திரைப்படம். மரண தண்டனை விதிக்க பட்ட ஒரு கொலையாளி போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிப்பதில் இருந்து படம் ஆரம்பிக்கும். அந்த கொலையாளி தான் நம்ப Javier Bardem. இவரு கேரக்டர் நம்பர் 1, பேரு ஆண்டன் சிகுரு (Anton Chiguru). இவருக்கு தான் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது குடுக்க பட்டது. மனுஷன் சும்மா மிரட்டி இருப்பாரு. இந்த ஆளு அதிகமா பேச மாட்டாரு, ஆனா இவரு வர எல்லா காட்சிகளிலும் பார்க்குற நமக்கு ஒரு மாதிரியான திகல் அனுபவத்தை குடுக்கும். பயம் கலந்த மிரட்சியோடு தான் நாம் இவர பார்போம். ஏன்னா இவரு ஒரு சைக்கோ கொலைகாரன்.

ஆண்டன் 14 வயசு பொண்ண கொலை பண்ணிட்டாரு, என்பது தான் அவரு மீது சுமத்த பட்டுள்ள குற்றச்சாட்டு. “ஏன்யா கொன்னேணு” ?? ஷெரிப் (Sherif) கேட்டா, “எனக்கு யாரையாவது கொலை பண்ணனும்ன்னு ரொம்ப நாளா ஆசை, அதனால தான் கொன்னனே” அப்படின்னு வித்தியாசமான பதில்லை குடுப்பார். இதுலயே நமக்கு ஆண்டன் (Anton) ஒரு மரம் கழண்ட கேஸுன்னு தெரிஞ்சுடும். கொலை குற்றத்திற்காக, ஷெரிப் (Sherif) அவருக்கு மரண தண்டனை குடுத்து இருப்பார். இங்க ஷெரிப் பேரு எட டாம் (Edd Tom). இவரும் நான் முன்னாடியே சொன்ன 3 முக்கிய கதாபாத்திரங்களில் ஒருத்தர். கேரக்டர் நம்பர் 2. ஆண்டன்யை ஜெயிலுக்குள் போடறதுக்கு முண்ணாடி அங்க இருக்குற ஒரே ஒரு போலீஸ்காரரை ரொம்ப ரொம்ப கொடூரமான முறையில் கொலை செஞ்சுட்டு அங்கிருந்து தப்பிச்சுடுவார்.
அடுத்து டெக்சாஸ் பாலைவனத்துல ஒரு வேட்டைக்காரன் (நம்ப டாக்கூடர் விஜய் இல்லேங்க, இவரு Hunter), சில விலங்குகளை வேட்டையாடிகிட்டு இருக்காரு. அவரு பேரு மோஸ் (Moss). அவரு தான் கேரக்டர் நம்பர் 3.இவரு தான் சுட்ட மானை எடுக்க போன எடத்துல ஒரு அசம்பாவித்தை பார்க்க வேண்டியதா போகுது. அங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி ரெண்டு போதை மருந்து கடத்தல் கும்பல்கிடையே பெரிய துப்பாக்கி சண்டை நடந்து முடிந்து இருக்கும். கடத்தல் கும்பலில் எல்லோரும் செத்து போய் இருப்பாங்க. ஒருத்தருக்கு மட்டும் உயிர் ஒட்டி கிட்டு இருக்கும். அந்த ஆள் தண்ணிக்கு தவித்து பாவமாய் மோஸ்யை (Moss) பார்பார். மோஸ் அதை எல்லாம் கண்டுக்காம அந்த எடத்தை தேடுவார். அங்க ஒரு டிராக்கில் போதை பொருட்களும், வேறு ஒரு பெட்டியில் 2 மில்லியன் டாலர் பணம் இருக்கும். அதை எடுத்து கொண்டு தன் வீட்டுக்கு போய் விடுவார்.    
அந்த எடத்துக்கு வரும் ஒரு போதை மருந்து கும்பல், தங்கள் பணம் திருட பட்டு இருப்பதை பார்த்து, பணத்தை மீட்கும் பொறுப்பை நம்ப சைக்கோ கொலைகாரன் ஆண்டன் சிகுரு (Anton Chiguru) கிட்ட தராங்க. பொறுப்பை வாங்குன அடுத்த நிமிஷமே ஆண்டன் அந்த ரெண்டு பேரை கொன்னுடுவார். சும்மா டைம் பாஸுக்கு கொலை செஞ்சவர் நம்ப ஆண்டன், இப்போ அவருக்கு நல்ல வேலைவேற கிடைச்சிருக்கு, விடுவாரா என்ன ? அந்த 2 மில்லியன் டாலர் பண பெட்டியில ஒரு டிரன்சிமிட்டர் (Transmitter) பொறுத்த பட்டு இருக்கும். ஆண்டன் தன் கிட்ட இருக்குற ரிசிவரை (Receiver) வச்சு பண பெட்டிய தேடுவாறு. இங்க இருந்து படம் வேகம் எடுக்கும். மோஸ் (Moss) பண பெட்டிய தூக்கிட்டு ஊர் ஊரா ஒடுவாரு. சைக்கோ ஆண்டன் (Anton) மோஸ் (Moss) போற எடத்துக்கு எல்லாம் வருவாரு. இவங்க ரெண்டு பேர தேடி நம்ப ஷெரிப் எட டாம் (Edd Tom) வேற அலைவார். இப்படியாக போகும் படம்.
பண பெட்டிய கடைசியில் யார் கைப்பற்றினார்கள் ?? ஷெரிப் எட டாம் (Edd Tom) ஆண்டனை (Anton) பிடிச்சாரா ?? மோஸ் (Moss) என்ன ஆனாரு ?? இது போல பல கேள்விக்கான விடையை டைரக்டர் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்து சொல்லி இருப்பார். இந்த படம் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
  • சைக்கோ ஆண்டன் சிகுரு (Anton Chiguru) ஒரு வித்தியாசமான துப்பாக்கி உபயோக படுத்துவார். ஏர் கன் (Air Gun) மாதிரி ஒரு வஸ்து. அந்த கன்யை அவரு தூக்கிட்டு வர காட்சியை பார்த்தாலே நமக்கு பீதி ஆகும். ஆண்டன் அத வச்சுக்கிட்டு படம் பூரா யாரையாவது கொன்னுகிட்டே இருப்பாரு. 
  • படத்தோட கிளைமாக்ஸ் தாங்க, படத்தை தூக்கி நிறுத்தும். கண்டிப்பா அதுக்கே ஆஸ்கார் குடுக்கலாம். நிறைய பேருக்கு கிளைமாக்ஸ் புரியாது. என்னக்கும் புரியல. அப்புறம் திரும்ப திரும்ப பார்த்து தான் எனக்கு கிளைமாக்ஸ் புரிந்தது.
  • ஷெரிப் எட டாம் (Edd Tom) ரொம்ப நல்லா நடிச்சு இருப்பார். ஊரில் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியாமல் அவர் கஷ்ட படும் காட்சிகள் மிகவும் அழகாக இருக்கும்.
  • ஆண்டன் சிகுரு (Anton Chiguru) மற்றும் மோஸ் (Moss) இடையே நடக்கும் துப்பாக்கி சண்டை மிகவும் நேர்த்தியாக இருக்கும். அந்த கட்சிகளை நீங்கள் முச்சு விட மறந்து பார்ப்பீர்கள்.
வித்தியாசமான ஹாலிவுட் படங்களை பார்க்க விரும்பும் நீங்கள் கண்டிப்பாக தவற விட கூடாத படம் தான் No Country for Old Men.

My Rating: 8.4/10......


Monday, November 21, 2011

டின்டினின் சாகசங்கள் The Adventures of Tintin-The Secret of the Unicorn (2011)

படத்தை பற்றி பார்பதற்கு முன்பு டின் டின் யார் என்று பார்போம். 17 வயது நிரம்பிய துப்பறியும் கார்ட்டூன் கதாபாத்திரம் தான் டின் டின். இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவரின் பெயர் Hergé. இவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த கார்டூனிஸ்ட். டின்டினின் சாகசங்கள் என்ற தலைப்பில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை எழுதி தள்ளினார். சுருக்க சொல்லவேண்டு என்றால் டின்டின் ஜேம்ஸ் பாண்டு போன்று ஒரு கற்பனை பாத்திரம். டிண்டின் காமிக்ஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் விதமாக எழுத பட்டு இருக்கும்.
டின்டினின் அணைத்து காமிக்ஸ்கலிலும் அவனுக்கு உற்ற தோழனாக வருவது அவனது நாய் ஸ்னோவி (Snowy). மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் ஹேடாக் (Haddock), இவர் ஒரு கப்பல் கேப்டன். சதா எந்த நேரமும் தண்ணியில் மிதப்பவர். பிறகு ப்ரொஃபஸர் கால்குலஸ் (calculus), இவர் ஒரு விஞ்ஞானி. காமிக்ஸில் வரும் முக்கிய விஞ்ஞான புதிர்களை அவிழ்ப்பதற்க்கு இவர் பயன் படுவார். இது போக இரட்டைப் போலீஸ்காரர்கள் "தாம்ஸன்" & "தாம்ப்ஸன்" (Thomson & Thompson). இந்த படத்தில் ஸ்னோவி, ஹேடாக் மற்றும் "தாம்ஸன்" & "தாம்ப்ஸன்" மட்டுமே உள்ளனர். ஏனோ கால்குலஸ் இல்லை. வில்லனாக வரும் கதாபாத்திரத்தின் பெயர் ஸாஹரின் (Sakharine).
      
மொத்தம் 23 டின்டின் காமிக்ஸ்கள் வெளிவந்துள்ளன. இந்த திரைப்படம் முன்று காமிக்ஸ்களின் கதையை கலவையாக்கி வெளிவந்துள்ளது. The Secret of the Unicorn (1943), The Crab with the Golden Claws (1941) மற்றும் Red Rackham's Treasure (1944) ஆகிய மூன்று காமிக்ஸ் கதைகளையும் சேர்த்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படமே இந்தப் படம்.  
படம் ஆரம்பித்தவுடன்  நாம் கதைக்குள் நுழைந்து விடுவோம். டின்டின் ஒரு பொம்மை கப்பலை (Unicorn) ஒரு பவுண்ட் விலை குடுத்து வாங்குவார். அங்கு வரும் ஸாஹரின் அந்த கப்பலை தனக்கு குடுக்கும்மாறு டின்டினை மிரட்டுவார். ஆனால் டின்டின் அதற்கு மறுத்து கப்பலை தன் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார். வீட்டில் நாய் ஸ்னோவிக்கும் ஒரு பூனைக்கும் நடக்கும் சண்டையில் அந்த பொம்மை கப்பல் உடைந்து விடுகிறது. அதில் இருந்த ஒரு ரகசிய பேனா வெளி வந்து மேசை அடியில் சென்று ஒளிந்து கொள்கிறது.

டின்டின் வெளியில் சென்ற நேரம் பார்த்து ஸாஹரின் ஆட்கள் வந்து டின்டினின் வீட்டை சோதனையிட்டு அந்த கப்பலை திருடி சென்று இருப்பார்கள். அபொழுது தான் டின்டின்க்கு அந்த கப்பலில் ஏதோ மர்மம் இருப்பது புரிய வரும். தவறி மேசைக்கு அடியில் விழுந்த பேனாவை நாய் ஸ்னோவி கண்டுபிடித்து விடும். அந்த பேனாவின் உள்ளே ஒரு காகிதம் இருக்கும். படித்து பார்த்தால் ஏதோ புதையல்க்கு ஆனா ரகசிய குறியீடு போல் தோன்றும்.
மறு நாள் டின்டின் வீட்டுற்கு வரும் ஒரு மர்ம ஆசாமி ஸாஹரின் ஆட்களால் சுட்டு கொல்ல படுகிறார். பிறகு அந்த மர்ம ஆசாமி ஒரு போலீஸ்காரர் என்று தெரிய வருகிறது. அவர் டின்டினிடம் ஏதோ ஒரு ரகசியத்தை சொல்ல வந்து இருப்பார், ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்து விடுவார். அதன் பிறகு அங்கு நடக்கும் கலாட்டாவில் டின்டின் ஸாஹரின்  ஆட்களால் தாக்கப்பட்டு காரபௌட்ஜின் (Karaboudjan) என்ற கப்பலுக்கு பெட்டியில் அடைத்து எடுத்து செல்ல படுகிறான். அந்த கப்பலில் இருந்து நாய் ஸ்னோவியின் உதவியுடன் தப்பிக்கும் டின்டின், அதே கப்பலில் சிறைவைக்கப்பட்ட கேப்டன் ஹேடாக்கை (Haddock), சந்திக்கிறான்.
டின்டின்னும் கேப்டன் ஹேடாக்வும் இனைந்து காரபௌட்ஜின் (Karaboudjan) கப்பலில் இருந்து தப்பிக்கிறார்கள். தப்பித்த டின்டின் பஹார் (Bagghar) என்ற ஊரில் புதையல்க்காண ரகசியம் மறைந்து இருப்பதை அறிகிறான். ஹேடாக், டின்டின் மற்றும் ஸ்னோவி  பஹார் (Bagghar) செல்கிறார்கள். புதையலை ரகசியத்தை தேடி வில்லன் ஸாஹரின் மற்றும் அவனது ஆட்கள்களும் அங்கு வருகிறார்கள்.

ஸாஹரின் கேப்டன் ஹேடாக்கை மற்றும் டின்டினை ஏன் கடத்தினான். புதையல் ரகசியம் என்ன ? டின்டின் அந்த புதிர்களை எப்படி அவிழ்த்தான் ? புதையல் இருந்ததா ? அதை யார் கை பற்றினார்கள் ? என்ற பல கேள்விகள்க்கு டின்டினின் சாகசங்கள் முலம் படம் பதில் சொல்கிறது.

இதை படம் என்று சொல்வதை விட ஒரு அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் 3D அனுபவம். படத்தின் இறுதியில் வரும் துரத்தல் கட்சிகள் உங்களை மெய் சிலிர்க்க வைத்து விடும்.
      
படத்தை இயக்கியவர் ஸ்பீல்பெர்க் (Spielberg). இவரை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. இவரே தான் ஒரு டின்டின் காமிக்ஸ் ரசிகன் என்று கூறி உள்ளார். அதனால் படத்தை பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார்.

இந்த அளவு தந்துருபமான கிராபிக்ஸ் கட்சிகளை நான் வேற எந்த படத்திலும் பார்த்ததில்லை, அவதார் தவிர்த்து.
டின்டின் காமிக்ஸ் பிரியர்கள் மட்டும் அல்லது அணைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக படம் வெளிவந்துள்ளது.

My Rating: 7.8/10......


Saturday, November 19, 2011

போரின் கொடுரத்தை உணர்த்தும் Black Hawk Down-(2001)

இந்த இடுகையின் முலமாக நான் உங்களுக்கு அறிமுக படுத்த போகும் படம் Black Hawk Down. படம் வெளிவந்த ஆண்டு 2001. இந்த படம் சோமாலியாவில் நடந்த உள் நாட்டு போரை மையமாக கொண்டு எடுக்க பட்டு இருக்கும். நான் போரை மையபடுத்தி எத்தனையோ படங்களை பார்த்து இருந்தாலும் இந்த படம் ஏற்படுத்திய பாதிப்பை வேற எந்த படமும் எனக்குள் ஏற்படுத்தியது இல்லை.
இந்த படம் 1999 ஆம் வெளிவந்த Black Hawk Down: A Story of Modern War என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்டு இருக்கும். அந்த நாவல் 1993 ஆம் ஆண்டு சோமாலியாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுத பட்டு இருக்கும்.

எனக்கு போரின் அறிமுகம் சின்ன வயசுல நடந்துச்சு. சின்ன வயசுல DD National மட்டுமே இருந்த காலத்தில, ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு கடவுள் கிருஷ்ணர் சங்கு ஊதி போரை ஆரம்பிப்பார். பாண்டவர்கள் பக்கத்தில் இருந்து அர்ஜூனன் அம்பை விடுவர். அந்த ஒரு அம்பு பத்து அம்பா மாறி கெட்டவாங்களை போய் குத்தும். சில நேரத்துல அம்பு பக்கத்துல வந்த உடனே வில்லன் மறைஞ்சி போய்டுவார். பார்க்க நல்லா இருக்கும். நான் வளர வளர போர்ன்னா அது இல்லை, அது ரொம்ப மோசமானதுன்னு தெரிஞ்சது.
இந்தியாவில் நான் வாழும் காலத்தில் நடந்த போர்னா அது கார்கில் போர் தான். அப்புறம் கொஞ்சம் வருஷம் கழிச்சு அமெரிக்கா தனது கண்டுபிடிப்புகளை பரிசோதனை செய்ய மற்றும் பெட்ரோல் கொள்ளைக்காக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மேல போர் தொடுத்தது. அப்போ கூட போரை பற்றியும், அதன் உண்மையான பாதிப்புகளையும் நான் உணரவில்லை. இலங்கையில் நாம் ஈழமக்கள் மீது போர் தொடுக்க பட்டதே, அப்பொழுது தான் போரின் கொடுமையை நான் உணர்தேன்.

இந்த படம் நமக்கு போரின் தாகத்தை அதன் வலியை நமக்கு உணர்த்தும். போர் காட்சிகள் மிகவும் தந்துருப்பமாக படமாக்க பட்டு இருக்கும். இளகிய மனம் படைத்தவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது. சரி படத்தை பற்றி பார்போம்.
ஆண்டு 1993: சோமாலியாவில் உள்நாட்டு போர் நடந்து கிட்டு இருக்கு. இப்போ சமீபத்தில் EGYPT & LIBIYA வில் நடந்துச்சே, அதே மாதிரி. எந்த ஏழை நாட்டுல உள்நாட்டு போர் அல்லது புரட்சி நடந்தாலும் அமெரிக்காவுக்கு முக்கு வேர்துடுமே. அவன் கண்டுபிடிச்சு வச்சு இருக்குற நவீன ஆயுதங்கள் பரிசோதனை பண்ண ஒரு இடம் கிடைச்சாச்சுன்னு அங்க கிளம்பிறுவான். இங்கேயும் கிளம்பி வரான். அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு நாள் உண்மை சம்பவமே இந்த திரைப்படம்.

போரில் மாட்டி கஷ்ட படுற சோமாலியா மக்களுக்கு U.N உணவு பொருட்களை அனுப்புறாங்க. அந்த உணவு பொருட்கள் எல்லாம் மக்களுக்கு போய் சேர விடாம பண்னுறது, உள் நாட்டு போர் நடக்க முக்கிய காரணமாக இருக்கும் தலைவன். அவன் பேரு, விடுங்க பேரா முக்கியம். இந்த படத்தை பொறுத்தவரை அவன் தான் வில்லன். அவனுக்கு ரெண்டு தளபதிகள், நம்ப இளைய தளபதி இல்லேங்க, அந்த ரெண்டு பேரும் போர் படை தளபதிகள். அந்த ரெண்டு படை தளபதிகளை பிடிச்சுட்டா போர் முடிவுக்கு வந்துடும்.
அதனால அமெரிக்கன் வீரர்கள் 123 பேர் அவங்களை பிடிக்க போறாங்க. அவங்க போற போர் ஹெலிகாப்டர் பேரு தான் Black Hawk. அந்த ரெண்டு பேரை பிடிப்பது ரொம்ப சுலபமான வேலைன்னு எல்லா வீரர்களும் நெனைச்சுக்கிட்டு அந்த மிஷன்க்கு கிளம்புவாங்க. ஆனா அவங்களுக்கு அங்க ஒரு அதிர்ச்சி காத்துக்கிட்டு இருக்கும். அமெரிக்கன் வீரர்கள் நெனச்சதுக்கு மேலையே தளபதிகள் (புரட்சி படை)கிட்டே இருந்து எதிர்ப்பு இருக்கும். 

அமெரிக்க படைகளுக்கும் சோமாலியா கிளர்ச்சி/புரட்சி படைக்கும் நடக்கும் சண்டை தான் படமே. புரட்சி படை சுமார் ஆயரம் பேர் இருப்பார்கள். புரட்சி படை ரெண்டு அமெரிக்கன் போர் ஹெலிகாப்டர்ன்னா ப்ளாக் ஹாக்யை (Black Hawk) சுட்டு விழித்தி விடுவார்கள். தப்பி பிழைத்த மீதம் இருக்கும் அமெரிக்கன் படைக்கும் புரட்சி படைக்கும் இடையே மிகவும் உக்கிரமான சண்டை நடக்கும்.
அதன் பிறகு தான் போரின் கொடுரத்தை நாம் உணர ஆரம்பிப்போம். போர் நடக்கும் அந்த இடத்தில மாட்டி கொண்ட மீதம் இருக்கும் அமெரிக்கன் வீரர்கள் UN மற்றும் NATO படையினர்களால் எப்படி மீட்க்க பட்டனர் என்பதே மிதி படம். இறுதி காட்சி வரை விறுவிறுப்பு குறையாமல் போகும் படம். 

இந்த படம் 2 ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ளது. ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல விருந்து. 
பலம்:
  • படத்தில் ஹீரோ கிடையாது. அதனால் கதை ஒருவரை சுற்றி நகராது. 
  • படத்தில் காதல் கிடையாது. ஹாலிவுட் போர் படங்களில் வருவது போல் இதில் செண்டிமெண்ட் சுத்தமாக கிடையாது. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆக்சன் தான். 
  • இந்த அளவு போர் காட்சிகள் தந்துருப்பமாக வேறு எந்த படத்திலும் காட்ட பட வில்லை. நீங்களே அந்த இடத்தில இருப்பது போல் உணர்வீர்கள்.· 
பலவீனம்
  • அமெரிக்கனின் பார்வையில் படம் சொல்ல பட்டு இருக்கும். சோமாலியாவில் உள்நாட்டு போர் ஏன் நடக்குது என்று சொல்ல பட்டு இருக்காது.
My Rating: 7.5/10.........


Saturday, November 05, 2011

மர்ம முடிச்சு - பிரெஞ்சு படம்- Les Diaboliques (1955)

இந்த பதிவு முலமாக நான் உங்களுக்கு அறிமுக படுத்த போகும் படம் Diabolique. படம் வெளிவந்த ஆண்டு 1955. இது ஒரு பிளாக் அன்ட் ஒயிட் திரைப்படம் அதுவும் இல்லாமல் இது பிரெஞ்சு மொழி படம். என்னடா நமக்கு பிரெஞ்சு எல்லாம் தெரியாதே, படம் புரியாமான்னு சந்தேகமே வேண்டாம் சப்-டைட்டில் சேர்த்து பார்த்தா படம் கண்டிப்பா புரியும். இந்த படம் சஸ்பென்ஸ்/த்ரில்லர் வகையை சேர்ந்தது.

இந்த படம் ஒரு பிரெஞ்சு நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்டு இருக்கும்.நமக்கு நாவலை (அதுவும் ஃப்ரென்ச்) விமர்சனம் செய்யும் அளவுக்கு தகுதி இல்லாதனால், நேரடியாக படத்தை பத்தி பார்போம். படம் கொஞ்சம் மெதுவாக போகும். ஆனா ரொம்ப நல்ல சஸ்பென்ஸ் கதை, அதை இயக்குனர் அப்படியே படமா எடுத்து இருப்பாரு.
கதை ரொம்ப சாதாரணமானது. கதையை விளக்குவது ரொம்ப சுலபம். பிரான்சில் ஒரு சின்ன கிராமத்தில், ஒரு ஸ்கூல் (School) இருக்கு. அந்த ஸ்கூல்ல ஹாஸ்டல் வேற இருக்கு. நிறைய பசங்க அங்க படிக்கிறாங்க. ஸ்கூல்ல மொத்தம் 4 ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் நம்ப கதைக்கு ரொம்ப தேவையான ஆளு. அவருக்கு 2 பொண்டாட்டி, தப்பு தப்பு ஒரு மனைவி, ஒரு துணைவி.

நம்ப ஊருலத்தான் ரெண்டு பொண்டாட்டி இருந்த அதுல ஒன்னு பேரு மனைவி, இன்னொன்னு பேரு துணைவி ஆச்சே, அதுனால தான் அப்படி சொன்னனே !!!!! சரி இப்போ கதைக்கு வருவோம். தலைமை ஆசிரியரின் மனைவி மற்றும் துணைவி ரெண்டு பேருமே அதே ஸ்கூல்ல ஆசிரியர்களாக வேலை பார்ப்பாங்க. இவங்களை தவிர இன்னும் ரெண்டு ஆசிரியர்கள் அதே ஸ்கூல்ல வேலை பார்கிறாங்க.
தலைமை ஆசிரியர் பேரு மைக்கேல். மனைவி பேரு கிறிஸ்டியானா . துணைவி பேரு நிக்கோல். மைக்கேல் ரொம்ப மோசமானவர். ஹாஸ்டல்ல பசங்களுக்கு சாப்பாடு சரியா போடாமல் அவங்களை ரொம்ப கொடுமை படுத்துறாரு.

அவரு மனைவி மற்றும் துணைவி ரெண்டு போரையும் மதிக்கவே மாட்டார். மனைவி (கிறிஸ்டியானா) .ரொம்ப சின்ன வயசு பொண்ணு. கடவுள் நம்பிக்கை உள்ளவங்க. ரொம்ப பயந்த சுபாவம் உடையவங்க. மைக்கேல் அவரைத்தான் ரொம்ப ரொம்ப கொடுமை படுத்துவார். துணைவி (நிக்கோல்) கொஞ்சம் தைரியமானவ... இருந்தாலும், அப்பப்போ மைக்கேல் அவளையும் கொடுமைப்படுத்தறான். நிக்கோல் & கிறிஸ்டியானா ரெண்டு பேரும் தினமும் மைக்கேல் கிட்ட திட்டு வாங்கறதுனால, அவன் மேல கடுப்புல இருக்காங்க... மைக்கேலிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று ரொம்ப தீவரமா யோசிக்கறாங்க. கடைசியில் மைக்கேலை கொலை செய்வது என்று முடிவு எடுக்குறாங்க. மனைவி (கிறிஸ்டியானா) ரொம்ப பயபடுறாங்க. துணைவி (நிக்கோல்) தான் ரொம்ப தைரியசாலி ஆச்சே, அதனால் அவங்க தான் எல்லா ப்ளானும் பண்ணுறாங்க. மனைவி ரொம்ப பயந்தாலும், அதுக்கு உடன்படறா.
ஸ்கூல்க்கு சம்மர் லீவு வருது. மைக்கேலை கொல்றதுக்கு ப்ளான் ரெடி. மனைவியும் துணைவியும் சேர்ந்து வெளியூர் போன மாதிரி எல்லார்கிட்டேயும் காட்டிகிட்டு, மைக்கேலை பாத்ரூம் தொட்டியில அழுத்தி கொலை பண்ணிட்டு, பள்ளிக்கூட நீச்சல் குளத்துல டெட்பாடியை போட்டுடறாங்க.

எல்லோரும் மைக்கேல் காணாம் போய்ட்டுடாருனு நெனச்சுக்கவாங்க. இப்போ ஸ்கூல் நம்ப மனைவி கண்ட்ரோல்க்கு வந்துருச்சு. ரெண்டு மூன்று நாளுக்கு அப்புறம் மனைவியும் துணைவியும் சேர்ந்து அந்த நீச்சல் குளத்தை தூர் வாற முடிவு செஞ்சு, ஒரு ஆளை வைச்சு குளத்துல உள்ள தண்ணியை எல்லாம் வெளிய எடுத்து போடுவாங்க. தண்ணி எல்லாம் காலி ஆனதுக்கு அப்புறம் பார்த்தா அங்க டெட்பாடியைக் காணோம். அங்க இருந்து டென்ஷன் ஆரம்பம் ஆகும். அடுத்த நாளு பார்த்தா மைக்கேல் சாகும் போது போட்டுருந்த கோட்-சூட் அவங்களுக்கு பார்சல்ல வருது. டெம்போ ஏறும்.....
ஸ்கூல்ல படிக்கற பையன் ஒருத்தன், ஹெட்மாஸ்டர் மைக்கேலை இப்பதான் பார்த்தேன்னு அடிச்சு சத்தியம் பண்ணறான். நமக்கோ டென்ஷன் ஏறும். ரெண்டுநாள் கழிச்சு, நிர்வாணமான நிலையில டெட்பாடி ஒரு ஆத்தங்கரையில ஒதுங்கி இருக்குன்னு நியூஸ் பேப்பர்ல ஒரு நியூஸ் வருது. மனைவி பயந்து போய் போலீஸ் ஸ்டேஷன் போய் பார்த்தா அது மைகேல் இல்லை. அங்க இருக்குற ஒரு வயசான போலீஸ்காரர் தானாகவே வந்து நான் மைக்கேலை கண்டுபிடிச்சு தரேன்னு அவரும் ஆட்டத்துல சேர்ந்துப்பார். மோர் டென்ஷன்........

அடுத்த நாள் ஸ்கூல்ல குரூப் போட்டோ எடுப்பாங்க, அந்த போட்டோவுல பார்த்த மைக்கேல் முஞ்சி மாதிரியே ஒரு முஞ்சி தெரியும். மறுபடியும் டெம்போ ஏறும். மைக்கேல் ஆவியா வந்துட்டார்னு துணைவி (நிக்கோல்) ரொம்ப பயந்துபோய் ஊரை விட்டே ஓடி போயிருவாங்க. அன்னைக்கி நைட் தான் திக் திக் கிளைமாக்ஸ்.........நான் அந்த கிளைமாக்ஸ் பார்த்து ரொம்ப பயந்துட்டேன் . இந்த படத்தோட கிளைமாக்ஸ் எங்க தேடினாலும் கிடைக்காது. அது தெரியணும்னா படத்த டவுன்லோட் செஞ்சு பாருங்க.


பலம்:

  • கதையை ரொம்ப நேர்த்தியாக சொல்லி இருப்பாங்க. கிளைமாக்ஸ் நம்மால யூகிக்க முடியாத படி படமாக்க பட்டு இருக்கும்.
  • ஹாலிவுட் த்ரில்லர் படங்கள்ல இருக்கற பயமுறுத்தற இசை, எக்குத்தப்பான கேமிரா கோணம் இதுல இல்லை. ஆனாலும் நம்ப பயப்படுவோம்.
  • எல்லோரும் ரொம்ப நல்லா நடிச்சு இருப்பாங்க.

பலவீனம்:

  • படம் கொஞ்சம் மெதுவாக போகும். அதுவும் மைக்கேலை கொலை செய்ற வரைக்கும் தான்.
நீங்க இந்த படத்தை பார்க்காம விட்டுட்டா, சினிமா உலகின் முக்கியமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணுன மாதிரி ஆகிரும்... மிஸ் பண்ணாதீங்க.

My Rating: 8.5/10 ......