Sunday, September 29, 2013

ராஜா ராணி (2013) - த்ரிஷா இல்லைனா திவ்யா !!

காதல் தோல்வியோடு வாழ்க்கையும் முடிந்து விடுவது இல்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்ற உயரிய சிந்தனையை உரக்க சொல்லும் படம் தான் "ராஜா ராணி". ஜான் (ஆர்யா) ரெஜினா (நயன்தாரா) இருவரும் விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்கிறது. இருவருக்கு திருமணத்தில் ஏன் விருப்பம் இல்லை, என்ற கேள்விக்கான விடையை பிளாஷ்பேக் மூலம் சொல்கிறார்கள். இருவரும் காதலில் தோல்வி அடைந்தவர்கள். பெற்றோர் விருப்பதிருக்கு தான் இந்த திருமனத்திருக்கு ஒத்து கொண்டு இருக்கிறார்கள். காதலை பறிகொடுத்த இருஜோடியும்  தங்கள் பழைய பாதிப்பில் இருந்து மீண்டு, இவர்களின் தற்போதை திருமண வாழ்க்கையை எப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான் மீதி கதை. 


படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நசிம், சந்தானம், சத்யராஜ் என்று ஏகப்பட்ட நடிகர் கூட்டம். அனைவரும் தங்கள் பணியை மிக சிறப்பாய் செய்து இருக்கிறார்கள். ஆர்யா அதிகம் அலட்டிக்கொல்லாமல் நடித்து இருக்கிறார். டெய்லி குடித்து விட்டு வந்து  ரெஜினாவையும் பக்கத்து வீட்டுகாரர்களையும் கடுப்பு ஏதும் காமெடி எபிசோடு செம. தனக்கு எது நன்றாக வருமோ அதை மிக சரியாய் செய்து இருக்கிறார். திருமணம் செய்தபிறகு தன்னை மதிக்காத நயன்தாரவை வெறுப்பேற்றும் காட்சியிலும், நஸ்ரியாவை விழுந்து விழுந்து காதலிக்கும்போதும், சந்தானத்துடன் இணைந்து காமெடி பண்ணுவதிலும் கலக்கியிருக்கிறார்.

நயன்தாராவின் கம் பேக் மூவி. யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நாம் பார்த்து பழகிய மேல் டாமினேட்டிங் கேரக்டர். மிகவும் தந்துருப்பமாய் நடித்து இருக்கிறார். இந்த ஊரில் தமிழ் படம் ஓடும் தியேட்டர்களில் பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. சீட் நம்பர் என்று எதுவும் கிடையாது. சீக்கிரம் போய் இடம் பிடித்தால் பின்னாடி சீட் கிடைக்கும், லேட்டாக போனால் முன்னாடி சீட் தான் கிடைக்கும். தெரியாத்தனமாய் நாங்கள் லேட்டாய் போய் விட்டோம். இரண்டாவது ரோவில் தான் சீட் கிடைத்தது. நயன் பிளாஷ்பேக்கில் கதறி அழும் கொடூர காட்சியை மிக அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த கொடூரமான் காட்சியை தவிர அவர் நடிப்பை குறை சொல்ல முடியவில்லை. நயன் கொஞ்சம் டயட் கன்ட்ரோல் செய்தால் நல்லது, இல்லை என்றால் க்ளோஸ் அப் காட்சிகளை அறவே தவிர்ப்பது நலம்.


ஜெய்யின் நடிப்பு என்னை பெரிதாய் கவரவில்லை. நிறைய ஓவர் ப்ளே செய்து இருந்தார். இவருக்கும் நயனுக்கும் காதல் வரும் காட்சிகளில் அழுத்தமே இல்லை. அதனாலே இவர்களின் காதல் தோல்வி அடைந்தவுடன் பெரிய பச்சாதாபம் வர வில்லை. அது போக ஜெய்-நயன் கதையில் வரும் காமெடியும் படு மொக்கை. சத்யனுக்கு காமெடி சுட்டு போட்டாலும் வரது என்பதை மறுபடியும் நிருபித்து இருக்கிறார். முதல் பாதியில் நயன்தாராவின் முன்கதை, இரண்டாம் பாதியில் ஆர்யாவின் முன் கதை என்று படம் நகர்கிறது. 

இந்த இரண்டு ப்ளாஷ் பேக்களில் என்னை கவர்ந்தது ஆர்யா-நஸ்ரியா எபிசோடு தான். நாங்கள் ரொம்பவே ரசித்து பார்த்தோம். காரணம் வேறு யாரும் இல்லை, சந்தானம் தான். மனிதர் கலக்கி இருக்கிறார். நஸ்ரியா செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கிறது. சமயத்தில் காஜால் அகர்வாலின் மானரிஸம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டு அடி ஹீல்ஸ் போட்டும் அம்மணியால் ஆர்யாவின் தோள்பட்டையை கூட தொட முடியவில்லை. முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் படத்தை சோர்வு அடையாமல் அழைத்து செல்லும் பணியை செய்து இருக்கிறார் சந்தானம். இவரின் கழுத்தின் கீழே இருக்கும் சதை இவரின் மொரட்டு தீனியை நமக்கு எடுத்து சொல்கிறது. உடம்பை பார்த்துக்காங்க பாஸ். இல்லாட்டி கேப்டன் மாதிரி ஆகிருவீங்க. 


சத்யராஜ் இப்படத்தில்  இளமையாக தெரிகிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார். நயன்தாராவுக்கு அப்பாவாக மட்டுமல்லாமல், அவருக்கு நல்ல நண்பராகவும் தோன்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் வழக்கம் போல் மொக்கை வாங்கி உள்ளது. ஆர்யா-நஸ்ரியா பாடல் தவிர எதுவுமே மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை எங்கள் காதை பதம் பார்க்கிறது. ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி என்பவர் தான் இயக்கியிருக்கிறார். காட்சிகளை தெளிவாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். நம்முடைய பழைய வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு தற்போது கிடைக்கும் வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது என்பதை ரொம்பவே தெளிவாக சொல்லி இருக்கிறார். இடை இடையே எனக்கு மௌன ராகம் மற்றும் வாரணம் ஆயிரம் படத்தின் நிறைய காட்சிகள் ஞாபகம் வந்து தொலைத்தது. காதலித்த பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை காதலிக்க பழகிக்கொள்ளுங்கள் என்று ஒரு எதார்த்தமான கதையை எடுத்துக் கொண்டு அதை, அழகாகவும் அதிகம் குழப்பாம்மலும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அட்லி.

டிஸ்கி: படத்தின் இடைவேளையில் அடுத்த இந்த தியேட்டரில் ரீலீஸ் ஆகும் இரு படத்தின் ட்ரைலர் போட்டார்கள். ஒரு தல அஜித்தின் "ஆரம்பம்" , தீபாவளி ரீலீஸ். அடுத்த படம் தான் எங்களுக்கு பெரிய ஆச்சிரியம். பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே யுஸ்ஸில் ரீலீஸ் ஆகும் என்கிற மாயயை உடைத்து எரிவது போல் இருந்தது அந்த ட்ரைலர். அந்த படம் "சுமார் மூஞ்சி குமாரின் "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா". அடுத்த வாரம் இங்கு ரீலீஸ். வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.

My Rating: 7.0/10.
சமிபத்தில் எழுதியது : B.A Pass (2013)


Saturday, September 28, 2013

B.A Pass (2013) - டெல்லி சவிதா ஆண்ட்டி ???

'Delhi Noir' என்ற சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற The Railway Aunty என்கிற கதையை தழுவி எடுக்க பட்ட படம் தான் BA Pass. வேற்று மொழிகளில் மட்டுமே சாத்தியமான "உலக சினிமா" கதைகளை ஹிந்தியில் குடுக்க விளைந்து, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். நான் அறிந்தவரையில் இந்தியாவில் சிறுகதைகளை தழுவி எடுக்க பட்ட படங்கள் மிகவும் குறைவே. அப்படியே எடுக்க பட்டு இருந்தாலும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தை திரையில் கொண்டு வருவது மிகவும் கடினம். வாசிப்பு அனுபவம் தரும் சுகத்தை கமெர்ஷியல் திரைப்படங்களினால் குடுக்க முடியாது என்கிற என்னத்தை உடைத்த எறிந்தது BA Pass. சிறுகதையின் மூலம் கெடாமல், அதன் தாக்கத்தை கொஞ்சமும் குறைக்காமல், சரியாய் சொன்னால் அதன் வீரியத்தை கூட்டி திரையில் விருந்து படைத்தது இருக்கிறார் இயக்குனர் அஜய் பாஹ்ல்.


 டெல்லியில் நடைபெறும் கதையின் கதாநாயகன் முகேஷ். பெற்றோரை இழந்த முகேஷ் தன் படிப்பிருக்காக டெல்லி வந்து தன் அத்தை வீட்டில் தங்குகிறான். தன் இரண்டு தங்கைகளை ஹாஸ்டலில் தங்க வைத்து விட்டு அத்தை வீட்டில் அவர்கள் சொல்லும் எடுபுடி வேலைகளை செய்து தன் படிப்பையும் தொடர்கிறான். அந்த வீட்டிருக்கு வரும் சரிகா ஆண்ட்டியின் அறிமுகம் அவனுக்கு கிடைக்கபெறுகிறது. ஆப்பிள் கூடை வாங்க சரிகா வீட்டிருக்கு போகும்போது ஒரு பலவீனமான தருணத்தில் முத்தத்தில் ஆரம்பித்து உறவில் போய் முடிகிறது.

 அதன் பின்பு முகேஷ் சரிகா ஆண்ட்டி சொல்லும் வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறான். அந்த வேலை இந்தியாவிருக்கு அதிகம் பரிச்சியம் இல்லாத "ஜிகோலோ" வேலை. கிளியராக சொல்ல வேண்டுமென்றால் ஆண் விபச்சாரம். பணம் பெற்றுக்கொண்டு பெண்களின் தாம்பத்திய தேவைகளை பூர்த்தி செய்யும் வேலையை செய்ய ஆரம்பிக்கிறான். அந்த வேலை அவன் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது, எதில் போய் முடிகிறது என்பதை கொஞ்சமும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதார்த்தமாய் சொல்கிறார்கள். முடிவு பார்பவர்களை உலுக்கி எடுத்து விடும் என்பதில் மட்டும் எனக்கு சந்தேகமேயில்லை. 


முதலில் இது போன்ற கதையை தேர்வு செய்த இயக்குனர் பாஹ்ல்க்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கத்தி மீது நடப்பது போன்ற கதைக்களம். இம்மியளவு பிசகினாலும் இரண்டாம்தர B கிரேடு படத்தில் சேர்ந்து விடும். சரிகா ஆண்ட்டி சவிதா பாபியாய் மாறி விட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பே தராமல் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சியை காண்பித்து அட்டகாசமான உலக சினிமாவை குடுத்து இருக்கிறார் இயக்குனர். டெல்லியின் சமூக அவலங்கள் அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார். படம் நகர வாழ்கையில் பெருகி வரும் "கே" கலாச்சாரம், ஆண் எஸ்கார்ட்டை, நம்பிக்கை துரோகம் என்று பல விஷயங்களை தொடுகிறது. 
  
முகேஷாக நடித்த இளைஞரின் பெயர் சதாப் கமல். அட்டகாசமான நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார். முதல் பாதி முழுக்க இவரின் வாய்ஸ் ஓவரில் தான் படம் நகருகிறது. டெல்லியின் வேகதிருக்கு ஈடு குடுக்க முடியாமல் இவர் முதிலில் தடுமாறி, ஒரு கட்டத்தில் சரிகாவின் மாய வலையில் விழுந்து, பிறகு சொன்ன வேலைகள் வேண்டா வெறுப்பாய் செய்து, பிறகு அதே வேலையை ரசித்து செய்கிறார். இவர் செஸ் மற்றும் செக்ஸில் ஒரு சேர தேர்ச்சி பேரும் காட்சி கவிதை. சரிகாவின் ட்ரைனிங் மூலம் கன்றுகுட்டியில் இருந்து பொலி காளையாய் மாறுகிறார். விரக்தியின் உச்சியில் கேவாக மாறி நைட் அவுட் போய் விட்டு வந்து காலையில் நடக்க முடியாமல் நடந்து வரும் காட்சியில் நம்மால் பரிதாப படாமல் இருக்க முடியாது.
  

சரிகாவாக நடித்து இருப்பவர் "ஷில்பா சுக்லா". ஆம்பிளை முக தோற்றம் கொண்டவர் போல் எனக்கு தோன்றியது. முகம் மட்டுமே அப்படி, ஆனால் நடிப்பில் குறை சொல்ல முடியாத படி செய்து இருக்கிறார். கண்களில் ஒரு வித போதையுடன் தான் படம் முழுக்க வலம்வருகிறார். பின்னணி இசை பிரமாதம். துணை கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சரிகாவின் வீட்டில் இருக்கும் பாட்டி, முகேஷின் செஸ் பார்ட்னர், கணவன் மரண படுக்கையில் இருக்கும் போது முகேஷை தேடி வரும் ஒரு ஆண்ட்டி என் அணைத்து கதாபாத்திர தேர்வும் அருமை. ட்ரைலர் மற்றும் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்து விட்டு கில்மா படம் அல்லது சூப்பர் மேட்டர் படம் என்று நம்பி போனால் நீங்கள் ஏமாற மாட்டீர்கள். படத்தில் செக்ஸும் உள்ளது, அழுத்தமான கதையும் உள்ளது. ஆனால் செக்ஸ் தீனிக்க பட்டது இல்லை. நல்ல சினிமாவை பார்க்க விரும்புவர்கள் கண்டிப்பாய் பார்க்கலாம்.

The Railway Aunty சிறுகதையை தமிழில் படிக்க மதுரை மல்லி 
ஆங்கிலத்தில் படிக்க Delhi Noir

My Rating: 7.8/10.


Thursday, September 19, 2013

மூடர் கூடம் (2013) - கொரியன் படத்தின் தழுவல் !!

வாழ்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்த நான்கு நண்பர்கள் சீட்டு கம்பெனி நடத்தி மக்கள் பணத்தை சுருட்டிய பணக்காரனின் வீட்டில் கொள்ளை அடிக்க செல்லும் நகைச்சுவை கலாட்டா தான் மூடர் கூடம். அடுத்தவனை வாய்க்கு வந்ததை சொல்லி ஓட்டுவது தான் நகைச்சுவை என்று இன்னும் நம்பி கொண்டிருக்கும் மக்கள், இது போன்ற "பிளாக் காமெடி" வகை படங்களையும் ரசிப்பது மாற்று சினிமாவிருக்கான நல்ல தொடக்கம் என்றே நம்ப தோன்றுகிறது. "பிளாக் காமெடி/டார்க் காமெடி" தமிழ்சினிமாவிருக்கு புதுசு. "சூது கவ்வும்" இந்த வகையில் வந்த மாஸ்டர் பீஸ். அதன் பிறகு நான் பார்த்த சிறந்த டார்க் காமெடி படம் "மூடர் கூடம்".


நான்கு பேர் நவீன், குபேரன், சென்ட்ராயன் மற்றும் வெள்ளையன் தமிழ் சினிமா மரபு மாறமால் வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். வாழ்கையில் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற முடிவிருக்கு வந்து குருட்டு தைரியத்தை மட்டுமே முதலீடாக கொண்டு வெள்ளையனின் மாமாவான சீட்டு கம்பெனி முதலாளி வீட்டில், அவர்கள் வெளியூர் சென்ற நேரம் பார்த்து திருட செல்ல, அந்த குடும்பமோ காலை 3 மணிக்கு பதில் மதியம் 3 மணி தான் கிளம்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. வேறுவழியின்றி அவர்களை வீட்டுக்காவலில் பிணைய கைதிகளாய் வைத்து அந்த வீட்டில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்க நினைகிறார்கள். அவர்கள் முயற்சி வென்றதா. அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்களா என்பதே மீதி கதை.

நான்கு நண்பர்கள் ஒவொருவரும் ஒரு விதம். சமூகத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டவர்கள், ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்தவர்கள். அனைவரது கடந்த காலத்தையும் பிளாஷ்பேக் முலம் பார்வையாளர்களுக்கு சொல்கிறார்கள். ஒவ்வொரு பிளாஷ்பேக்கையும் வித்தியாசப்படுத்தி ரசிக்கும் படி குடுத்தது கூடுதல் சிறப்பு. வீடு புகுந்து திருடுவதற்கு ஐடியா குடுப்பது நவீன். இவர் தான் படத்தின் இயக்குனர். தீவிர "சிவப்பு" கம்யூனிஸ்ட் பிரியர் போல் தெரிகிறது. போகிற போக்கில் "சிவப்பு" தத்துவங்களை தூவி செல்கிறார். ரொம்பவே எளிமையாக, ரசிக்கும் படி மற்றும் முக்கியமாக புரியும் படி வசனங்களை செதுக்கி உள்ளார். சிவப்பு மீது தீராத வெறுப்பில் இருக்கும் எனக்கே சில வசனங்கள் பிடித்து இருந்தன. அலட்டல் இல்லாத நடிப்பின் முலம் நம் மனதை கவருகிறார். 


"ரெண்டு வருஷம் முன்னாடி ரெண்டு ரூபாய் வித்த டீ இப்ப ஆறு ரூபாய். அதைக் கேட்கவே ஆளில்லை. கஞ்சா 400 ரூபாய்ன்னா மட்டும் தட்டி கேட்டுருவாங்களா?" என்று அறிமுகம் ஆகிறார் சென்ட்ராயன். இவர் பேசும் "பு" வசனங்கள் அதகளம். வெள்ளைக்காரன்கிட்ட தமிழிலே பேசுறீங்களாடா? அப்புறம் ஏன் தமிழன்கிட்ட மட்டும் இங்கிலீஷிலே பு ? என்று இவர் கேட்பது ஞாயமாக படுகிறது. ஆனால் நிறைய காட்சிகளில் இவரின் நடிப்பு ஓவர் டோஸ் மற்றும் எரிச்சலை வரவழைக்கிறது. 

தன்னை பச்சை பச்சையாய் திட்டியவனை விட்டுவிட்டு முட்டாள் என்று சொன்னவனை புரட்டி எடுப்பதிலே தெரிந்து விடுகிறது குபேரனின் வீக்னெஸ் என்னவென்று. குபேரனுடைய இளம் வயது முட்டாள் பிளாஷ்பேக்கை கார்ட்டூனாக காட்டியிருப்பது படத்தின் ஸ்டைலை மாற்றுகிறது. கடைசியாக வெள்ளையன். இவருக்கு மட்டும் காதலி உண்டு. 

படத்தில் வரும் நாய்க்கு கூட ரசிக்கும்படியான பிளாஷ்பேக். ஓவியா, ஜெயப்ரகாஷ், குண்டு சிறுவன், தாவூத்தின் சென்னை பிராஞ்ச்சை எடுத்து நடத்தும் சேட், ஜப் எத்திக்ஸ் திருடன் என்று அனைவருமே சிறப்பாய் நடித்து உள்ளார்கள். குறை என்று சொன்னால் பின்னணி இசை மற்றும் பிற்பாதியில் படத்தின் நீளம்.


 "Attack the Gas Station!" என்கிற கொரியன் படத்துல இருந்து   தழுவி எடுக்க பட்ட நிறைய காட்சிகளை நம்மால் மறைக்க முடியல. படத்தின் மூல கதை,  தலைகீழ் தண்டனை, சென்ட்ராயன் சேட்டைகள், கிளைமாக்ஸ் காட்சி என்று நிறைய காட்சிகள் கொரியன் படத்தை ஞாபக படுத்துகிறது. பிற மொழியில் இருந்து தழுவி எடுக்கிற தமிழ் படங்கள் என்னைக்குமே எனக்கு ஓகே தான். டோரன்ட்ல டவுன்லோட் பண்ணி அந்த கொரியன் படத்தை பார்த்த யாருக்கும் தழுவல்/கதை திருட்டை பத்தி பேசுற யோக்கியதை இல்லை என்பது என்னுடைய உறுதியான எண்ணம். எந்த மொழி படமாக இருந்தாலும் என்னை பொறுத்த வரை பார்வையாளர்களை கதையோடு கட்டி போட வேண்டும், படத்தை சுவாரிசியமாக குடுத்து இருக்க வேண்டும். வெற்றிக்கான மந்திரம் அது தான். அந்த வகையில் மூடர் கூடம் வெற்றி கோட்டை அசால்ட்டாக கடக்கிறான்.

மூடர் கூடம் - வெற்றி கூடம் 
My Rating: 8.0/10.


Monday, September 02, 2013

தங்க மீன்கள் (2013)- தூர்தர்ஷன் செண்டிமெண்ட் டிராமா

சராசரிக்கும் கீழ் புத்தி (IQ) உடைய குழந்தைக்கும், சரியான் படிப்பு இல்லாமல் நிலையான வேலைக்கு போகாமல், பணம் சம்பாரிக்க தெரியாத அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டம் தான் "தங்க மீன்கள்". கற்றது தமிழ் "ராமின்" இரண்டாவது படைப்பு இது. தமிழில் குழந்தைகளில் வாழ்வை யதார்த்தமாய் எடுத்து சொல்வது போல் வந்த படங்கள் ரொம்பவே குறைவு. மணியின் "அஞ்சலி" மற்றும் பாண்டியராஜனின் "பசங்க" படங்கள் குழந்தைகளின் நகர மற்றும் கிராம வாழ்கைகையை சாதாரண ரசிகனும் ரசிக்கும் படி படம் பிடித்து காட்டியிருந்தார்கள். 

அதே போன்று ராமுக்கு குழந்தைகளின் உலகை படம் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்துள்ளது. அது மாதிரி எண்ணம் வந்தது தவறு என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தான் என்ன சொல்ல வருகிறோம் என்று தெளிவாய் முடிவு செய்து இருக்க வேண்டும். மந்த புத்தி பெண் குழந்தை மற்றும் அதன் அப்பாவுக்கு இடையே இருக்கும் பந்தத்தை சொல்லவதா,  இல்ல தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் மேல்லானவை என்பதை சொல்வதா, இல்ல தனியார் பள்ளி ஆசிரியர்கள் குரலாய் ஒலிக்க வேண்டுமா என்பதில் ரொம்பவே குழம்பி விட்டார் ராம். படத்தின் முடிவில் போட்ட வார்த்தைகள் "போதுமான வசதிகள் இல்லையென்றாலும், போதிய வருமானம் கிடைக்கவில்லையென்றாலும், தன்னார்வத்தால் மாணவர்களுக்காகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு" என்கிற வாக்கியங்கள் நம்மை ரொம்பவே குழப்பி விட்டன. 


படத்தின் மையின் கதாபாத்திரம் செல்லம்மாவாக சிறுமி சாதனா. கதையின் ஆணிவேர் இவருடைய கதாபாத்திரம்தான். படம் முழுக்க ஒரு அப்பாவி மகளாக நெஞ்சை நெகிழ வைக்கிறார். விருது வாங்கும் அளவுக்கு நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார். செல்லமா பேசும் கொஞ்சும் தமிழை கேட்டுகொண்டே இருக்கலாம். "நிஜமா தான் சொல்றீயா" சிறு வயது அஞ்சலி போன்று எனக்கு தோன்றியது. இந்த குழந்தை‘எம்’முக்கும், ‘டபிள்யூ’வுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும் போது, ஆஹா, "தாரே ஜமின் பர்" போன்ற டிஸ்லெக்சியா (கற்றல் குறைபாடு) பற்றி பேச போகும் நல்ல படம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்த காட்சியில் ராம் பணம் இல்லாமல் வறுமையின் நிறம் சிவப்பு போல் கஷ்டபடுகிறார். கடைசியாக குழந்தை வோடபோன் நாய் வேண்டும் என்று கேட்டு அதை வாங்க பிற்பாதி முழுக்க கஷ்டபடுகிறார். இப்படி திக்கில்லாமல் அலைகிறது கதை.

அடுத்த முக்கிய கேரக்டர் கல்யாணி (ராம்). கற்றது தமிழ் ஜீவாவின் மறு பதிப்பு. நார்மல் மனநிலையில் யோசிக்காத கதாபாத்திரம். இவர் "பெருசிடம்" சம்பளம் இல்லாமல் வேலை செய்வதருக்கு சொல்லும் காரணம் செல்லமாவிடம் நேரம் செலவிட வேண்டும் என்பது தான். அந்த அளவு பாசம் வைத்து இருப்பார். குழந்தையை இவர் மனைவி சூடு போட்டு விட்டார் என்று அறிந்து, கதறி அழும் காட்சியில் தனக்கு நடிக்கவும் வரும் என்று நிருபித்து இருக்கிறார். வெள்ளைகார தம்பதியிடம் இவர் லேப்டாப் பிடுங்கி கொண்டு ஓடும் காட்சிகள் நாடக தனமானவை. ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் கடன் கேட்டு போகும் நண்பனிடம் அசிங்கபடுவது, தனியார் பள்ளி டீச்சரிடம் போய் ஹை பிட்சில் கத்தி பேசி, பின்பு பிரின்சிபாலிடம் கெஞ்சி பேசி, கடைசியாய் அப்பாவிடம் அடி வாங்குவது என்று அக்மார்க ராம் டைப் செண்டிமெண்ட் காட்சிகள். இது போன்ற காட்சிகள் இப்பொழுது தூர்தர்ஷன் சீரியலில் கூட வருவது இல்லை. 


கூலி வேலை தான் செய்வது என்று முடிவு செய்தவுடன், அதை கொச்சின் சென்று தான் செய்யவேண்டுமா ?? அதே கூலி வேலை அவர் இருக்கும் ஊரில் கிடைக்காதா ?? பிரிவை காட்ட வேண்டும் என்று வேண்டுமென்றே திணிக்க பட்ட காட்சிகள் நிறைய உள்ளது. தியேட்டர் கிடைக்கலன்னு மட்டும் ஒப்பாரி வச்சா போதாது, கொஞ்சம் முளையை யோசிச்சு சீன் எடுக்கவும் செய்யவும். ராம் மட்டும் இல்லாமல் செல்லமாவை சுற்றியே முழு கதையும் பின்னி இருந்தால் படம் கண்டிப்பாய் பேச பட்டு இருக்கும். அப்படியே ராம் இருந்தாலும், அவரை நார்மலாக உலாவ விட்டு இருக்கலாம். 

கற்றது தமிழில் செய்த அதே பிழையை தான் இதிலும் செய்து உள்ளார் ராம். அதில் கதாநாயகனுக்கு தமிழ் படித்தால் வேலை கிடைக்கவில்லை. தமிழ் படித்தால் வேலை கிடைப்பது கஷ்டம் என்று தெரிந்தே தானே படித்தார் ? தவறை தான் செய்துவிட்டு சமூகத்தை குறை கூறுவார். மெண்டல் தனமாய் ஐடி துறையில் வேலை செய்யும் ஒருவனை பிடித்து டார்ச்சர் செய்வார். பாலா கூட இது போன்ற மெண்டல் கதாபாத்திரங்களை பல படங்களில் காட்டி உள்ளார். அதை பார்க்கும் எனக்கு பயம் அல்லது பரிதாபம் வரும். ஆனால் ராம் படங்களில் வரும் மெண்டல் கதாநாயகர்களை பார்க்கும் எனக்கு எரிச்சல் தான் வருகிறது. ஊரோடு ஓத்து வாழ முடியாதவனை எங்கள் ஊரில் கிறுக்கன் என்று சொல்வோம். இதிலும் ஊரோடு ஓத்து வாழ தெரியாதவனின் வாழ்க்கையை தான் பதிவு செய்து உள்ளார் ராம். அவனின் கிறுக்குதனங்களுக்கு குறைவேயில்லை. சோ, எரிச்சல் தரும் காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை.


பணம் இல்லாதவர்கள் மட்டுமே ரொம்ப நல்லவர்கள், பாசத்துக்கு எதுவும் செய்பவர்கள். பள்ளி படிப்பு படிக்காதவர்கள் உண்மையில் அறிவாளிகள், ஆனால் சமுகத்தின் பார்வையில் முட்டாள்கள் என்கிற கருத்தை இந்த படத்தின் மூலமும் திணிக்க பார்க்கிறார் ராம். வெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் என்பது போல் இருக்கிறது, இவர் சொல்ல வந்த கருத்து. படித்தவன் எல்லாம் முட்டாள்கள், வாத்தியார் முட்டாள், ஆஸ்திரேலியாவில் இருந்து ஊருக்கு வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் முட்டாள், அவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாமே அபத்தமானவை. ராம் எடுக்கும் முடிவுகள் மட்டுமே சரியானவை என்பது போல் பல காட்சிகள் வைத்து இருக்கிறார். 

நிறைய இடங்களில் படத்தை தாங்கி நிற்பது யுவனின் பின்னணி இசை தான். நீண்ட நாட்கள் கழித்து வெகுநாட்கள் மனதில் தங்கும் இசையை கொடுத்துள்ளார் யுவன். ராமின் மனைவியாக ஷெல்லி கிஷோர், அப்பா, ‘பூ’ ராமு, அம்மா ரோகிணி, பூரிக்காக தன் சாவை தள்ளி போடும் சிறுமி என மற்ற அணைத்து கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து செதுக்கிய ராம், முக்கிய கேரக்டரான கல்யாணி மற்றும் செல்லமாவை ரொம்பவே குழப்பமாக வடிவைமைத்து, ரொம்பவே குழப்பமாக திரையில் காட்டி இருக்கிறார். அது தான் படத்தின் மிக பெரிய மைனஸ்.

தங்க மீன்கள் - தூர்தர்ஷன் செண்டிமெண்ட் டிராமா

My Rating: 6.5/10.