Sunday, July 22, 2012

HR மேனேஜர் -நாய் வாடகைக்கு -ரெண்டு மாங்காய்

Dark Knight Rises ஹாங்ஓவரில் இருந்தது வெளி வர நெட்டில் மேய்ந்த போது கிடைத்த சில சுவாரிசியமான ஜோக்ஸ்.....!!!!
------------------------------------------------------------------------------------------------------------------
ஐடி HR மேனேஜர்:
ஒரு பெரிய IT கம்பெனியின் HR மேனேஜர் இறந்தபின் சொர்க்கம் போனார். வாயிலில் தடுக்கப்பட்டார். உங்களுக்கு நரகத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.
நரகத்துக்கு போய் ஒரு நாள் சோதனை ஓட்டமாக தங்கியிருப்பேன். பிடித்தால் தொடர்ந்து இருப்பேன். இல்லாவிட்டால் இங்கு வருவேன். இடம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் நரகம் போனார் மேனேஜர்.
அங்கு போய் பார்த்தால், நரகமா, சொர்க்கமா என்று இருந்தது. அருவிகள், பூங்காக்கள், மான்கள், மயில்கள், இன்னிசை, ரம்பை, ஊர்வசி ஆட்டம் என்று ஜெகஜ்ஜோதியாக இருந்தது.
மகிழ்ந்த மேனேஜர், திரும்ப சொர்க்க வாயிலோனிடம் வந்து, நரகத்திலேயே வசிப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.
மறுநாள்.. நரகம்..!
எங்கும் மரண ஓலம், சாம்பலும் புகையும் சூழ, கிங்கரர்கள், பாவிகளை கொத்து பரோட்டா போட்டுக்கொண்டிருக்க, மேனேஜர் பரிதாபமாகக் கேட்டார்..
"நேத்து பார்த்தது ஸ்கிரீன் சேவரா..?"
பதில் உடனே வந்தது,,,
இல்லை..அது ஸ்கிரீன் சேவர் கிடையாது.... நேற்று உன்னை நாங்கள் ரெக்ரூட் (Recruit) செய்தோம்..... ஆபீஸில் முதல் நாள் அப்படி தான் இருக்கும்...... இன்று முதல் நீ எங்கள் பணியாள்.....!!!!
------------------------------------------------------------------------------------------------------------------
எப்ப முடியும் ???? 
ஒரு முடிதிருத்தும் நிலையத்துக்கு ஒரு இளைஞன் வந்தான்.. அப்போது முடி திருத்துபவர் வேறொருவருக்கு முடி திருத்திக் கொண்டிருந்தார்.. இளைஞன் கேட்டான்..
"இவருக்கு முடிவெட்டி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்..?'
"இரண்டு மணி நேரம்.."
இளைஞன் போய்விட்டான்.. மீண்டும் ஒருவாரம் கழித்து வந்தான்.....
" இந்த வேலை முடிய் எவ்வளவு நேரம் ஆகும்..?"
" இரண்டு மணி நேரம்.."
போய்விட்டான்.. மீண்டும் ஒரு வாரம் கழித்து வந்து...
" இவருக்கு முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்..?'
" ஒன்றரை மணி நேரம்.."
இளைஞன் வழக்கம்போல கிளம்பிப்போக.. முடி திருத்துநர் தன் மகனிடம் சொன்னார்...
"இந்த கிறுக்குப் பய எங்க போறான்னு பாத்துட்டு வாடா.."
அரைமணி நேரம் கழித்து பயல் திரும்பி வந்தான் வாய்கொள்ளாத சிரிப்புடனும் கையில் மசால் வடையுடனும்........
"அப்பா..அந்த கிறுக்குப்பய நம்ப வீட்டுக்குள்ளதான் போனான்.. அக்கா காசு குடுத்து என்ன வடை வாங்கிக்க சொன்னா...!"
------------------------------------------------------------------------------------------------------------------
நாய் வாடகைக்கு !!!!!
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி......
“இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”
“முதலில் செல்வது எனது மனைவி.”
“என்ன ஆயிற்று அவருக்கு?”
“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”
“இரண்டாவது பிணம்?”
“அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”
உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், “இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”
அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய் நில்லுங்கள்...!!!”
------------------------------------------------------------------------------------------------------------------
Deforestation
ரெண்டு மாங்காய்:
நம்ம பா.சிதம்பரமும் மன்மோகன் சிங்கும்  ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே நமது சிதம்பரத்துக்கும், அந்த பொண்ணுக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது. உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.
ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
பாட்டி மனதிற்குள் நினைத்தார், "அந்த ஆளுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு. என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."
மன்மோகன் சிங் மனதிற்குள், "இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோண்லையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"
அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு. அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!"
நம்ம சிதம்பரம் என்ன நினைச்சார் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, மன்மோகன் சிங்கை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"
அந்த பொண்ணு தான் 2G ஸ்பெக்ட்ரம்ன்னு நான் சொல்ல மாட்டேன்...
------------------------------------------------------------------------------------------------------------------


43 comments:

  1. அமலா பால் வீட்டு நாய் நல்லாவே மேக் அப் போட்டிருக்கு :))

    இன்னொரு புகை படத்தில் இருப்பது திரிஷாவா என்ன? நம்பவே முடியலை

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார்.....பெயிண்ட் அடிச்சு இருக்கறது நம்ம திரிஷா தான்...

      Delete
  2. நண்பா அனைத்தும் சூப்பர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் இதை போல ஜோக்ஸ் போடுங்கள்....குவண்டின் கமலை பார்த்து தான் கில் பில் காட்சி அமைத்தாராம்...இத்தனை காப்பி செய்தால் தான் நம்முடையதும் ஒருத்தன் காப்பி பண்ணுவான் போல...கில் பில் ஹீரோயின் ஒரு பெட்டியில் போட்டு உயிரோடு புதைக்கும் ஸின் நம்ம ஆக்சன் கிங் அவர் படத்தில் கொஞ்சம் கூட மாறாமல் காப்பி அடித்ததை நினைத்தால் செம்ம காமெடி....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா சின்னா....அப்ப அப்ப இது மாதிரியும் எழுத/பகிர முயற்சி செய்கிறேன்.. :)
      காப்பி அடிப்பதை தப்புன்னு நான் சொல்லவே மாட்டேன்....அதையாவது சரியாக செய்தால் பரவாயில்லை..
      அர்ஜுன் வேறு ஒரு படத்தில் Gladiator படத்தை அப்படியே எடுத்து இருப்பார்...பார்க்க கன்றாவியாய் இருக்கும்......அதே போல் எடுக்க வேண்டாம்....அட்லீஸ்ட் பார்க்கிற மாதிரி எடுத்தால் பரவாயில்லை..

      Delete
  3. எல்லாம் செம காமெடி பாஸ். ஃபேஸ்புக்கில் அண்மையில் அமலா பால், அமலா காபின்னு ஒரு போட்டோ போட்டிருந்தாங்க. முதல் படம் பார்த்ததும் அது தான் ஞாபகம் வந்துச்சு.

    கடைசி ஜோக் செம :) :)

    ReplyDelete
  4. ரெண்டு மாங்காய் ஜோக் ஆல்ரெடி கேள்விப்பட்டிருக்கிறேன். ப.சி க்கு பதில் ஒரு சாப்ட்வேர் கத்துக்குட்டி, ம.மோ.சிங்கிற்கு பதில் அவனது மேனேஜர் என்று. ஆனாலும் இந்த வெர்ஷன் அருமை :-)

    ReplyDelete
  5. The Dark Knight Rises fever அவ்ளோ தானா? 2 பாகம் ஒரு விமர்சனத்தோட நிறுத்திட்டீங்க?

    ReplyDelete
    Replies
    1. இல்லை தல...இந்த வாரம் IMAX ல படம் பார்த்த அப்புறம்..அதை பத்தி எழுதலாம்ன்னு நினைக்கிறன்....
      நீங்களும் உங்க அனுபவத்தை எழுதுங்க..... :)
      அப்புறம் உங்க FB ஐடி எனக்கு தட்டி விடுங்க...

      Delete
  6. கடைசி ஜோக் சூப்பர் .. facebook ல போட்டுவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. தல..இதையெல்லாம் நீங்க கேட்கவே வேண்டாம்....நானே எல்லாம் இணையத்துல இருந்தது தான் எடுத்தேன்...

      Delete
  7. நல்ல மேக்-அப்....
    இரண்டு மற்றும் மூன்றாவது ஜோக்ஸ் ஹா... ஹா...
    நன்றி நண்பா... (த.ம. 3)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்....

      Delete
  8. செம செம ! படங்களும் பதிவும் இரசிக்கும்படி இருந்தது ... !

    ReplyDelete
  9. எல்லாமே சூப்பர் ஜோக்ஸ் ..
    இதே மாதிரி நிறைய எழுதுங்க

    ReplyDelete
  10. // அது ஸ்கிரீன் சேவர் கிடையாது.... நேற்று உன்னை நாங்கள் ரெக்ரூட் (Recruit) செய்தோம்..... ஆபீஸில் முதல் நாள் அப்படி தான் இருக்கும்...... இன்று முதல் நீ எங்கள் பணியாள்..// எனக்கு முற்றிலும் புதிய ஜோக் நண்பா

    //"அப்பா..அந்த கிறுக்குப்பய நம்ப வீட்டுக்குள்ளதான் போனான்.. அக்கா காசு குடுத்து என்ன வடை வாங்கிக்க சொன்னா...!"// ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    // ஹா ஹா ஹா ஹா ஹா // செம்ம

    பாஸ் அப்போ அந்த பாட்டி கனிமொழியா சோனியாவா

    ReplyDelete
  11. எல்லாமே செம..செம..செம...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மணிமாறன்...

      Delete
  12. நண்பரே உங்கள் தளத்துக்கு இன்றுதான் முதன் முதலாக வருகிறேன். அருமையாக எழுதி இருக்கிறீகள். இந்த பதிவில் நகைச்சுவைகள் அருமை. Deforestation படம் செம. தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலா...முதல் வருகைக்கு மிக்க நன்றி....
      உங்கள் தளத்துக்கு நான் நிறைய முறை வந்து உள்ளேன்...ஏன்னோ கமெண்ட் இட வில்லை.... :)

      Delete
  13. அந்த ரயில்-குகை கதை சாதாரண வேர்ஷனாத்தான் படிச்சிருந்தேன்.. இப்படி அரசியலையும் இழுத்து பல்புகொடுத்தீங்களே! மற்றைய நகைசசுவைகள் புதிது.. ரசித்தேன்! (திரிஷா அட்- செம!)

    ReplyDelete
  14. வெட்டப்பட்ட மரம்..ஸ்டில். மனதை சுட்டது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவகுமார் ... அந்த ஸ்டில் நெட்டில் பார்த்தேன்... Source யாரென்று தெரியவில்லை.

      Delete
  15. ///அப்பா..அந்த கிறுக்குப்பய நம்ப வீட்டுக்குள்ளதான் போனான்.. அக்கா காசு குடுத்து என்ன வடை வாங்கிக்க சொன்னா...!"///

    செமயா இருந்திச்சு அண்னே சிரிச்சு முடியல!

    ReplyDelete
  16. அமலா பாலை கொச்சை படுத்தியதற்கும் , அண்ணன் ராஜேந்தரை அவமானம் செய்ததற்கும் ராஜ் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்!

    ReplyDelete
    Replies
    1. வோய்..நான் எங்கேயா அமலா பால்ல அவமான படுத்துனேன்.....அந்த அம்மா வீட்டு நாய் போட்டோ தானே போட்டேன்.....
      அண்ணன் டி.ஆர் ஏற்கனவே 6 பாக் வச்சு இருக்கார்....அதனால அதுக்கு சரி பட்டு வர மாட்டார் தல....இது குத்தமா....!!!

      Delete
    2. செல்லாது ! செல்லாது! இந்த வீண் வாதம் செல்லாது! எலேய் எல்லோரும் கேட்டுக்கோங்கடே... இப்போ சொல்லுறன்டா தீர்ப்பு...... இனிமே யாரும் இந்த ராஜ் பயலு கூட பின்னூட்டம், லைக் பொழங்க கூடாது! மீறி பொழங்கினா அவய்ங்கள இண்டர்னெட்ட விட்டு தள்ளி வச்சிருவேன்!

      Delete
  17. http://lion-muthucomics.blogspot.in/

    நண்பரே இதுதான் லயன் காமிக்ஸின் வலைத்தளம்.
    மற்றும் நான் தொடரும் வலை பூக்களை ஒரு நோட்டம் விட்டால் இன்னும் பல காமிக்ஸ் பதிவர்கள் பற்றி அறியலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா....அதில் சேர்ந்து விடுகிறேன்.....

      Delete
  18. சூப்பர் ஜோக்ஸ்.கடைசி செம!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...

      Delete
  19. அமலா பால் வீடு நாயா ? நான் அமலா பாலுனே நினைத்து விட்டேன் ராஜ்.2G மேட்டர் அருமை.

    ReplyDelete
    Replies
    1. கிட்ட தட்ட ரெண்டுக்குமே பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்ல தல...

      Delete
  20. அந்த கிறுக்குப்பய ஜோக் சூப்பர்ங்க அண்ணா...

    ReplyDelete
  21. செம்மையான ஜாக்ஸ் பாஸ்..மனசு கொஞ்சம் லேசா இருக்குது..நன்றிங்க.

    ReplyDelete
  22. எல்லாமே சம கலக்கல்......அப்போ அப்போ இது மாதிரி கலாசல் ஜோக் போடுங்க.

    ReplyDelete